search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mango"

    • சேலம் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு.
    • இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, காரிப்பட்டி, குப்பனூர், கூட்டாத்து ப்பட்டி, வரகம்பாடி, அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டா புரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த மாம்பழங்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைனிலும் உலகம் முழுவதும் இந்த மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    வழக்கமாக மார்ச் மாதம் மாத மத்தியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்டுகளுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாங்காய் வரத்து குறைவாக இருந்தது.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது சீசன் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் சேலம் கடை வீதிகளில் உள்ள கடைகளில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக சேலம் -பெங்களூரா, சேலம் குண்டு, அல்போன்சா, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி , செந்தூரா, கிளிமூக்கு, குதாதத், உள்பட பல ரகங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளது.

    சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 40 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. இதனால் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ வாசம் வீச தொடங்கி உள்ளது.

    சேலம் மாநகர தெருக்கள், ஏற்காடு சாலை, செவ்வாய்ப்பேட்டை கடை வீதி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கடைகளிலும், தெருவோர தள்ளுவண்டிகளிலும் மாம்பழ விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் கடை வீதிகளிலும், சேலம் மாநகர தெருக்களிலும் மாம்பழ வாசம் கம, கமக்க தொடங்கி உள்ளது.

    ேசலம் கடை வீதியில் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டை விட விலை சற்று அதிகமாக இருந்தாலும் கடந்த வாரத்தை விட தற்போது விலை குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த ஆண்டு இதே நாளில் 50 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 40 டன்னாக உள்ளது. தற்போது மாம்பழ சீசன் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது விலை குறைந்துள்ளது, இனி வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
    • குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும்.

    தேவையானவை :

    பால் - 2 1/2 கப்

    தோல் நீக்கிய கனிந்த மாம்பழ துண்டுகள் - ஒரு கப்

    சர்க்கரை - 1/4 கப்

    பிஸ்தா - 5

    பாதாம் - 4

    ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

    குங்குமப்பூ - சிறிது

    செய்முறை:

    1. முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்துத் விட்டு பிறகு இறக்கி அதில் பாதாமை போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து, பின் அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

    2. பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துத் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

    3. பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு , அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

    4. பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்துத் பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

    5. பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்துத் , ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்துத் கிளறி பரிமாறினால், சுவையான மாம்பழ ரப்ரி ரெடி!!!

    • வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்த உதவும்.
    • மாங்காயில் இருக்கும் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

    பழுத்த மாம்பழங்களை விட மாங்காயில் வைட்டமின் சி மற்றும் அமிலத்தன்மை அதிகம் இருக்கிறது. அத்துடன் நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது. செரிமான ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதற்கும், குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டுக்கும் நார்ச்சத்து அவசியமானது.

    வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு தன்மையை அதிகப்படுத்த உதவும். மேலும் மாங்காயில் இருக்கும் அமிலத்தன்மை செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். புற்றுநோய் மற்றும் இருதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் அவை கொண்டிருக்கின்றன.

    • செரிமானம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் மாங்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
    • இனிப்பு பண்டங்களை விருப்ப தேர்வாக கொண்டவர்களுக்கு மாற்றுத்தேர்வாகவும் இது அமையும்.

    * பழுத்த மாம்பழங்களை விட மாங்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்கள் உணவில் மாங்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

    * பழுத்த மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளின் அளவு அதிகம் இருப்பதால் அதிக நன்மை பயக்கும். அதனால் ஆன்டி ஆக்சிடென்டுகள் சார்ந்த குறைபாடு கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிடுவது சிறந்தது.

    * மாங்காய் மற்றும் மாம்பழம் இரண்டிலுமே நார்ச்சத்து இருக்கிறது. இருப்பினும் செரிமான ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் தன்மை மாங்காயில்தான் அதிகம் இருக்கிறது. அதனால் செரிமானம் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் மாங்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

    * சுவையை விரும்புபவர்களுக்கு மாம்பழங்கள் சிறந்த தேர்வாக அமையும். இனிப்பு பண்டங்களை விருப்ப தேர்வாக கொண்டவர்களுக்கு மாற்றுத்தேர்வாகவும் இது அமையும்.

    மாம்பழம், மாங்காய் இரண்டுமே உடலுக்கு நன்மை சேர்க்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. எனினும் நீரிழிவு உள்ளிட்ட இணை நோய் கொண்டவர்கள் மருத்துவர்களின் பரிந்துரையின்படி இவற்றை உட்கொள்வது நல்லது.

    • மாம்பழத்தில் உள்ள அமிலேஸ் மற்றும் புரோட்டீஸ் போன்ற நொதிகள் செரிமானத்தை ஊக்குவிக்கின்றன.
    • மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. கண்களை ஆரோக்கியமாக பராமரிக்கிறது.

    இது மாம்பழ சீசன். அதன் தனித்துவமான சுவை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ருசிக்க வைத்துவிடுகிறது. மாம்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நிரம்பி இருக்கின்றன.

    மாம்பழத்தை அப்படியே சாப்பிடத்தான் பலரும் விரும்புவார்கள். மாங்காயை சமையலில் சேர்த்து பல்வேறு ரெசிபிகள் தயாரித்து உட்கொள்பவர்களும் இருக்கிறார்கள். எதனை சாப்பிடுவது சிறந்தது என்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கிறது.

    பழுத்த மாம்பழங்களில் பீட்டா கரோட்டின் போன்ற சில ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. அவை மாம்பழத்திற்கு ஆரஞ்சு-மஞ்சள் நிறத்தை அளிக்கின்றன. அத்துடன் ஆன்டிஆக்சிடென்டுகள் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் ஆபத்தையும் குறைக்கின்றன. கரோட்டினாய்டுகள் வயது தொடர்பான தசை சிதைவை கட்டுப்படுத்துகின்றன.

    * மாம்பழத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் நார்ச்சத்து அதிகம். நார்ச்சத்து உடலை முழுமையாகவும் திருப்தியாகவும் உணர வைக்கும். அதனால் அதிகமாக சாப்பிடும் வாய்ப்பை குறைத்து உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

    * மாம்பழத்தில் உள்ள அமிலேஸ் மற்றும் புரோட்டீஸ் போன்ற நொதிகள் செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கின்றன.

    * மாம்பழத்தில் ப்ரீபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படுகிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வித்திடுகிறது.

    * மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்டுகள் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சரும நிறத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

    * மாம்பழங்களில் பொட்டாசியமும் நிறைந்துள்ளது. அது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.

    * மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் இருக்கிறது. கண்களை ஆரோக்கியமாக பராமரிக்கவும், வயது மூப்பு தொடர்பான பார்வை பிரச்சனைகளைத் தடுக்கவும் இது அவசியமானது.

    * மாம்பழத்தில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமும் உள்ளது. இது செரோடோனின் அளவை அதிகரிக்கவும், மனநிலையை மேம்படுத்தவும் உதவும்.

    * மாம்பழத்தில் குர்செடின், ஐசோகுவர்சிட்ரின் மற்றும் அஸ்ட்ராகலின் போன்ற ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்ற உதவுகின்றன. உடல் எடை குறைவதற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கின்றன.

    • மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
    • உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    கோடை காலம் வந்துவிட்டாலே மாம்பழ சீசன் தான் நினைவுக்கு வரும். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு என்னதான் மாம்பழம் பிடித்திருந்தாலும் அதனை சுவைத்து சாப்பிட முடியாது. ஏனென்றால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடும் போது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    எனவே தான் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடுவதற்கு பல முறை யோசிப்பார்கள். மாம்பழம் சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு அதிகமாகாமல் எப்படி தவிர்ப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

    ஒரு மாம்பழத்தில் குறிப்பாக 50 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும் போது ஒரு நாளைக்கு அரை மாம்பழம் சாப்பிடுவதால் எந்தவித சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.

    சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் அதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அதற்காக மாம்பழத்துடன், சியா விதை, வால்நட், ஊறவைத்த பாதாம் அல்லது எலுமிச்சை தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு நடைபயிற்சி செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாம்பழத்தை அப்படியே வெட்டி சாப்பிட வேண்டும். ஜூசாகவோ அல்லது ஸ்மூத்தி, ஐஸ்கிரீம், மூஸ் போன்றவையாகவோ சாப்பிடக்கூடாது. இதில் தான் அதிகளவு சர்க்கரை உள்ளது.

    உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் மாம்பழத்தை தவிர்த்து விடுவதே நல்லது. அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

    அதேபோல மாம்பழத்தை உணவுக்கு பிறகு அல்லது இனிப்பாக உட்கொள்ளவோ கூடாது. உணவுக்கு இடையில் ஒரு சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். தயிர், பால், நட்ஸ் போன்ற பாகங்களுடன் இதை சேர்த்து சாப்பிடலாம்.

    மாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது தான். ஆனாலும் தினமும் மாம்பழச்சாறு குடிக்கக்கூடாது.

    மாம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாம்பழ மில்க்ஷேக் போன்றவற்றை எடுத்துக்கொள்ள கூடாது. இதனால் செரிமான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாம்பழத்தை காலை அல்லது மதியம் சாப்பிடலாம். மாம்பழத்தை தனியாக சப்பிடுவதை விட ஓட்ஸ் அல்லது சாலட்டாக செய்து சாப்பிடலாம்.

    இருப்பினும் மாம்பழம் நமது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. மாம்பழத்தில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம், தயாமின், காப்பர், ஃபோலேட், வைட்டமின் பி6, ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. எதனையும் அளவாக எடுத்துக்கொள்வதே சிறந்தது. அதுவும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

    • அரைத்ததை டம்ளரில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிரூட்டவும்.
    • சாப்பிடுவதற்கு முன் பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    மாம்பழம் - 1

    பால் - 1/4 கப் (பாலுக்கு மாற்றாக தேங்காய் பால் (அ) ஊற வைத்து அரைத்த பாதாம் விழுது பயன்படுத்தலாம்)

    தயிர் - 4 ஸ்பூன்

    சர்க்கரை - 3 ஸ்பூன்

    தேன் - 2 ஸ்பூன்

    ஏலக்காய் - சிறிதளவு

    பாதாம், முந்திரி துருவியது

    செய்முறை:

    மிக்சியில் மாம்பழத்தை துண்டுகளாக்கி சேர்க்கவும். அதனுடன் பால் அல்லது தேங்காய் பால் சேர்க்கவும்.

    பின்னர் சர்க்கரை, தயிர், தேன் சேர்த்து கலக்கவும். அதனுடன் ஏலக்காயை தூளாக்கி போடவும். அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.

    அரைத்ததை டம்ளரில் ஊற்றி ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து குளிரூட்டவும். சாப்பிடுவதற்கு முன் பாதாம், முந்திரியை தூவி அலங்கரிக்கவும். கோடையில் குழந்தைகள் விரும்பும் சுவையான மாம்பழ ஸ்மூத்தி ரெடி. 

    • நீங்கள் எந்தவகை மாம்பழம் வாங்கினாலும் அதில் சுவையான மாம்பழமாக பார்த்து வாங்க வேண்டியது அவசியம்.
    • மாம்பழத்தை ஊறவைக்காமல் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    கோடைகாலம் வந்தாலே பல சிக்கல்களும், ஆரோக்கிய பிரச்சினைகளும் இலவச இணைப்புகளாக வரும். கோடைகாலத்தின் வெகுசில நன்மைகளில் ஒன்று ருசியான மாம்பழங்கள். கோடைகாலத்தில்தான் சுவையான மாம்பழங்கள் சாப்பிட கிடைக்கும். மாம்பழங்கள் கிடைத்தாலும் அதில் சரியானவற்றை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது கடினமான விஷயமாகும்

    பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழம் கோடைகாலத்தின் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. நீங்கள் எந்தவகை மாம்பழம் வாங்கினாலும் அதில் சுவையான மாம்பழமாக பார்த்து வாங்க வேண்டியது அவசியம். இந்த பதிவில் பகிரப்படும் குறிப்புகள் நீங்கள் மாம்பழம் வாங்கும் போது ஏமாறாமல் சுவையான மாம்பழத்தை வாங்க உதவும்.


    நன்றாக பழுத்த மற்றும் இனிப்பு மாம்பழங்களைப் பறிப்பதற்கான எளிதான வழி பாரம்பரிய வழியில் செல்வது. மாம்பழத்தை எடுத்து உங்கள் கைகளால் உணருங்கள். பழுத்த மாம்பழம் மென்மையாகவும், பழுக்காத மாம்பழம் உறுதியான தோலுடனும் இருக்கும். நீங்கள் மாம்பழத்தை மெதுவாக அழுத்தலாம் ஆனால் அளவிற்கு அதிகமாக அழுத்த வேண்டாம். எல்லா பக்கங்களிலிருந்தும் பழங்களை மெதுவாக அமுக்கி, அனைத்து பக்கங்களிலும் மென்மையான மாம்பழங்களைத் தேர்ந்தெடுங்கள். வாசனை சோதனை மாம்பழத்தின் பழுத்த தன்மையை சரிபார்க்க மற்றொரு எளிதான சோதனை வாசனையை சோதனை செய்வதாகும். முழுமையாக பழுத்த மாம்பழம் எப்போதும் தண்டுக்கு அருகில் வலுவான மற்றும் இனிமையான வாசனையுடன் இருக்கும், அதே சமயம் பழுக்காத மாம்பழத்தில் வாசனை இருக்காது அல்லது மிகவும் குறைவாக இருக்கும்.

    நல்ல மாம்பழம் பந்து வடிவத்தில் இருக்க வேண்டும், எனவே நீங்கள் முழுமையான, குண்டான மற்றும் வட்டமான மாம்பழங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், குறிப்பாக தண்டைச் சுற்றி. சில நேரங்களில் பழுத்த மாம்பழங்களில் பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும், இது முற்றிலும் இயல்பானது.

    தட்டையான அல்லது மெல்லிய மாம்பழங்களை எடுக்க வேண்டாம், ஏனெனில் அவை சுவையற்றதாக இருக்கும். அதேசமயம் சுருக்கம் அல்லது சுருங்கிய தோல் கொண்ட மாம்பழங்களைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை இனி பழுக்காது.

    பெரும்பாலான மக்கள் மாம்பழங்களை வாங்கும் போது நிறத்தைப் பார்த்தே வாங்குகிறார்கள். இது மாம்பழத்தின் முதிர்ச்சியை சரிபார்க்க சரியான வழி அல்ல. வெவ்வேறு மாம்பழ வகைகள் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளன, மேலும் மாம்பழம் பழுத்ததா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள நிறம் எந்த விதத்திலும் பயனுள்ளதாக இருக்காது.


    சாப்பிடுவதற்கு முன் மாம்பழங்களை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டியது அவசியம். இந்த பழமையான தெர்மோஜெனீசிஸ் செயல்முறை மூலம் மாம்பழங்களில் இருந்து வெப்பத்தை அகற்ற உதவுகிறது. மாம்பழத்தை ஊறவைக்காமல் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

    பழுத்த மாம்பழங்களை சேமிப்பதற்கும், பழுக்கும் செயல்முறையை மெதுவாக்குவதற்கும் சிறந்த வழி, அவற்றை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பதாகும். பழுத்த மாம்பழங்கள் குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 4-5 நாட்களுக்கு புதியதாக இருக்கும். நீங்கள் பழுக்காத மாம்பழங்களை வாங்கியிருந்தால், அவற்றை ஒரு காகித பையில் அல்லது செய்தித்தாளில் போர்த்தி அறை வெப்பநிலையில் சேமிக்கவும். இது அவற்றின் பழுக்க வைக்கும் செயல்முறையை துரிதப்படுத்தும், அதன்பிறகு அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.

    • கடந்த சில நாட்களாக அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளன.
    • தினசரி 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 250 டன் அளவிலான மாம்பழங்கள் குவிந்து வருகிறது.

    போரூர்:

    மாம்பழம் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதனால் சென்னையில் சாலையோரங்களில் மாம்பழக்கடைகள் அதிக அளவில் முளைத்து உள்ளன. அதிக அளவில் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அதிக அளவில் மாம்பழங்கள் வருகிறது. கடந்த சில நாட்களாக அதிகளவில் மாம்பழங்கள் விற்பனைக்கு வரத் தொடங்கி உள்ளன. தினசரி 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 250 டன் அளவிலான மாம்பழங்கள் குவிந்து வருகிறது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை 150 டன் மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வந்த நிலையில் தற்போது அதன் வரத்து 2மடங்காக அதிகரித்து உள்ளது. காலையிலேயே வெயில் வாட்டி எடுத்து வருவதால் மார்க்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் மாம்பழம் விற்பனை மந்தமாகவே நடந்து வருவதாக வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மாம்பழம் விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    பங்கனபள்ளி-ரூ.50-ரூ.80வரை, மல்கோவா-ரூ.120, இமாம்பசந்த்-ரூ.130-ரூ.170வரை, ஜவாரி-ரூ.60-ரூ.80வரை, செந்தூரா-ரூ.80, அல்போன்சா-ரூ.170.

    • வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும்.
    • சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் விளையும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூர், வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி, வரகம்பட்டி, காரிப்பட்டி, குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், எடப்பாடி மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள். மேலும் ஆன்லைன் விற்பனையும் நடைபெறுகிறது.

    வழக்கமாக மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை மாம்பழங்கள் வரத்து சேலம் மார்க்கெட்களுக்கு அதிக அளவில் இருக்கும். ஆனால் இந்தாண்டு பருவம் தவறி பெய்த மழையால் மாங்காய் உற்பத்தி கடுமையாக குறைந்தது. இதனால் சேலம் மார்க்கெட்களுக்கு கடந்த மாதம் மாங்காய் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து சேலம் மார்க்கெட்களுக்கு மாம்பழங்கள் வரத்து சற்று அதிகரித்துள்ளது. குறிப்பாக சேலம் பெங்களூரா, சேலம் குண்டு, மல்கோவா, நீலம், இமாம்பசந்த், பங்கணப்பள்ளி உள்பட சில ரகங்கள் மட்டும் மார்க்கெட்களுக்கு வருகிறது.

    சேலம் மார்க்கெட்டுக்கு தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் அளவிற்கு மாம்பழங்கள் வரத்து உள்ளது. ஆனாலும் சேலம் மாநகர தெருக்களில் மாம்பழ விற்பனை அதிக அளவில் வரவில்லை. இதனால் மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் பொது மக்கள் குறைந்த அளவே மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த மாம்பழ வியாபாரி ஒருவர் கூறுகையில், சேலம் மார்க்கெட்களில் கடந்த ஆண்டு இதே நாளில் 30 முதல் 40 டன் வரை மாம்பழங்கள் வரத்து இருந்தது. ஆனால் இந்தாண்டு தற்போது மாம்பழ வரத்து 10 டன்னாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான மாமரங்களில் பூத்த பூக்கள் உதிர்ந்துள்ளது. இதனால் தற்போது மாம்பழ வரத்து உடனடியாக அதிக அளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை, அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மாம்பழ வரத்து சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது விலையும் குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தயிர் ஒரு குளிரூட்டியாக அறியப்படுகிறது.
    • மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    கோடை காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும், உடலில் குளிர்ச்சித்தன்மையை தக்கவைப்பதற்கும் பலரும் மதிய உணவுடன் தயிரையும் சேர்த்து உட்கொள்ள விரும்புவார்கள். தயிரில் உள்ள பாக்டீரியாக்கள் செரிமான செயல்பாட்டுக்கு உதவக்கூடியவை.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் வைட்டமின்களும், தாதுக்களும் தயிரில் நிறைந்துள்ளன. உண்ணும் மற்ற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகளையும் உடல் விரைவாக உறிஞ்சுவதற்கு தயிர் உதவும். அதே வேளையில் தயிருடன் சில உணவுகளை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். தயிருடன் தவிர்க்கவேண்டிய அத்தகைய உணவுகளில் சில உங்கள் கவனத்திற்கு...

     மாம்பழம்:

    மாம்பழம் வெப்பத்தன்மை கொண்டது. தயிர் குளிரூட்டியாக அறியப்படுகிறது. இவை இரண்டையும் ஒன்றாக சேர்க்கும்போது செரிமான செயல்பாட்டில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். சரும பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். மேலும் இந்த இரண்டு உணவுகளும் சேர்ந்து உடலில் நச்சுகளை உண்டாக்கும்.

     பால்:

    பால் மற்றும் தயிரை சேர்த்து உட்கொள்வது அசிடிட்டி, நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த இரண்டு பால் பொருட்களிலும் கொழுப்பு மற்றும் புரதம் உள்ளன.

     மீன்:

    மீனுடன் தயிர் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இரண்டும் புரதச்சத்து நிறைந்தவை. மீன் விலங்கு வகை புரதமாகவும், தயிர் காய்கறி வகை புரதமாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு புரதங்களும் ஒன்றாக இணைந்தால் அதனை ஜீரணிப்பது உடலுக்கு கடினமாகிவிடும். அத்துடன் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் வயிறு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும்.

     எண்ணெய் உணவுகள்:

    பூரி உள்பட எண்ணெயில் பொரித்த உணவுகளுடன் தயிர் சேர்த்து உட்கொள்வது, செரிமான செயல்முறையை மெதுவாக்கும். நாள் முழுவதும் சோம்பலாக உணர வைக்கும். அதனால் எண்ணெய் வகை உணவுகள் மற்றும் தயிரை ஒருபோதும் ஒன்றாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டாம் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

     வெங்காயம்:

    மாம்பழத்தைப் போலவே, வெங்காயமும் இயற்கையாகவே சூடான பொருளாக அறியப்படுகிறது. இந்த இரண்டு உணவுகளையும் ஒன்றாக சேர்க்கும்போது பலருக்கு ஒவ்வாமை பிரச்சினைகளை உண்டாக்கும். சொறி, தோல் அழற்சி, சொரியாசிஸ் போன்ற தோல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

    • இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும்
    • பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது தித்திக்கும் சுவையுடய மாம்பழங்கள் தான், அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உற்பத்தி யாகும் மாம்ப ழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.

    குறிப்பாக சேலம் மாவ ட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், குப்பனூர், காரிப்பட்டி அயோத்தியாப்பட்டனம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, எடப்பாடி பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. இந்த மாம்பழங்கள் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படும்,

    மேலும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இங்கு விளையும் மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு என்பதால் உலகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் அதனை போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் மாம்பழ சீசன் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மாம்பழங்கள் வரத்து இருக்கும், இந்தாண்டு பருவம் தவறிய மழை பெய்ததால் மாம்பழம் வரத்து 20 நாட்கள் காலதாமதமாகி உள்ளது.

    தற்போது தான் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழ வரத்து தொடங்கி உள்ளது. குறிப்பாக இமாம்பசந்த், சேலம்-பெங்களூரா, சேலம் குண்டு, கிளிமூக்கு பழங்கள் மா ர்க்கெட்டுகளுக்கு வரதொடங்கி உள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 டன் வரை மாங்காய்கள் சேலம் மார்க்கெட்களுக்கு வரத்தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் மாங்காய் வரத்து படிப்படியாக அதிகரித்து மார்ச் மாத இறுதியில் அதிக அளவில் மாங்காய்கள் வரத்து இருக்கும், அப்போது குறிப்பாக சேலம் சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி, ஏற்காடு ரோடு, செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட பல பகுதி களில் மாம்பழங்கள் கடைகளிலும் தள்ளுவண்டிகளிலும் வைத்து விற்கப்படும். இதனால் எங்கு பார்த்தலும் மாம்பழ மனம் வீசும்.

    தற்போது கடை வீதி மற்றும் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள், பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் மாங்காய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த மாம்பழங்கள் ஒரு கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. இனி வரும் நாட்களில் மாம்பழ வரத்து படிப்படியாக அதிகரிக்கும்.

    இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், நடப்பாண்டில் காலம் கடந்து பெய்த மழையால் 20 நாட்கள் காலதாமதமாக மாம்பழ சீசன் தொடங்கி உள்ளது. இன்னும் 20 நாட்களில் மாம்பழ சீசன் உச்சம் பெறும். ஆனாலும் வழக்கத்தை விட இந்தாண்டு மாந்தளிர் தான் அதிகம் உள்ளது. பூக்கள் குறைவாகவே பூத்துள்ளது. இதனால் மாம்பழ வரத்து கடந்த ஆண்டை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×