என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மார்க்கெட்"

    • சேலத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
    • தற்போது பண்டிகை சீசன் காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதேபோல சேலத்தில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக திருமண நிகழ்ச்சிகள், பல்வேறு விஷேசங்கள் மற்றும் திருவிழாக்களையொட்டி தேவை அதிகரித்து பூக்கள் விலை உயர்ந்தது. தற்போது பண்டிகை சீசன் காலம் முடிந்ததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது.

    குறிப்பாக கடந்த சில மாதங்களாக ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்த குண்டு மல்லிகை இன்று கிலோவுக்கு ரூ.900 வரை விலை குறைந்து ரூ.320 என விற்கப்பட்டு வருகிறது.

    அதே போல கடந்த காலங்களில் ரூ.600-க்கு விற்ற முல்லை பூ ரூ.400 வரை விலை குறைந்து இன்று ரூ.200 என விற்கப்படுகிறது. மற்ற ரக பூக்களின் விலையும் கணிசமாக சரிந்துள்ளது.

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்) :-

    மல்லிகை-ரூ.320, முல்லை-ரூ.200, ஜாதி மல்லி, காக்கட்டான்-ரூ.160, கலர் காக்கட்டான்-ரூ.100, மலை காக்கட்டான்-ரூ.160, ஏற்காடு மலை காக்கட்டான்-ரூ.160, சம்மங்கி-ரூ.20, சாதா சம்மங்கி-ரூ.50, அரளி-ரூ.100, வெள்ளை அரளி-ரூ.100, மஞ்சள் அரளி-ரூ.160, செவ்வரளி-ரூ.160, ஐ.செவ்வரளி-ரூ.120, நந்தியா வட்டம்-ரூ.300, சின்ன நந்தியா வட்டம்-ரூ.400, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    எதிர்வரும் வைகாசி, ஆனி மாதங்களில் முகூர்த்த நாட்கள் வருவதால் அந்த சமயத்தில் பூக்கள் விற்பனை நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது.
    • கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.

    சேலம்:

    சேலம் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது தித்திக்கும் சுவையான மாம்பழங்கள் தான். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1-ந் தேதி தொடங்கும் இந்த மாம்பழம் சீசன் தொடர்ந்து ஜூலை மாதம் வரை நீடிக்கும். இந்தக்கால கட்டத்தில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு மாம்பழங்கள் வரத்து அதிகரித்து காணப்படும்.

    சேலம் மாவட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், கூட்டாத்துப்பட்டி, வரகம்பாடி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் சேலம்-பெங்களூரா, இமாம்பசந்த், குண்டு, மல்கோவா, நடுசாலை, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகிறது. இந்த தோட்டங்களில் இருந்து அறுவடை செய்யப்படும் மாம்பழங்கள் தினமும் சேலத்தில் உள்ள பல்வேறு குடோன்களுக்கு கொண்டு வரப்படுகிறது.

    பின்னர் ஊழியர்கள் மூலம் ரகம் வாரியாக மாம்பழங்கள் பிரிக்கப்படுகிறது. தொடர்ந்து தரமான பெரிய அளவில் உள்ள மாம்பழங்கள் வெளியூர்களுக்கு பார்சல்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர சேலத்தில் உள்ள தெருவோர கடைகள், சிறிய, சிறிய, தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் அதிகளவில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடைவீதிகளில் மாம்பழம் வாசம் கமகமவென வீசுகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகளவில் மாம்பழம் விளைந்து உள்ளதால் விலையும் குறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சேலத்தில் வசிக்கும் மக்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பார்சல்கள் மூலமும் தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மாம்பழங்களை அனுப்பி வைக்கின்றனர். இதனால் மாம்பழங்கள் தேக்கம் அடையாமல் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படுகிறது.

    சேலம் மாவட்டத்தின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சித்திரை மாதம் 1-ந் தேதி முதல் சீசன் தொடங்கினாலும் இன்று முதல் 45 நாட்களுக்கு மாம்பழ சீசன் உச்சத்தில் இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சேலம் மாவட்டம் மட்டுமின்றி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் மாம்பழங்கள் அதிகளவில் சேலம் மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக கிளிமூக்கு மாங்காய்களை பொதுமக்கள் ஊறுகாய் போட அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். சீசன் களை கட்டியுள்ளதால் விலையும் குறைந்த அளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள். சேலம் நகரின் அனைத்து தெருக்களிலும் மாம்பழங்கள் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • சேலம் மார்க்கெட்டுகளுக்கு எழுமிச்சை பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
    • இதனால் எலுமிச்சை விலை சரிவு ஏற்பட்டு உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எலுமிச்சை மரங்கள் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் எலுமிச்சை பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் விற்பனை குறைந்துள்ளது. மேலும் எலுமிச்சை பயிர் செய்யப்பட்ட இடங்களில் அதன் விளைச்சல் அதிக–ரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து மாவட்–டத்தில் உள்ள பல்வேறு பகுதி களில் இருந்து சில்லறை வியா பாரிகள் வாங்கிச் சென்று அவர்கள் இடங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மார்கழி மாத குளிரை தொடர்ந்து தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்த காரணத்தால், அவற்றின் விலை சரிந்துள்ளது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.6-க்கு விற்ற பழம் தற்போது ரூ.3-க்கு விற்கப்–படுகிறது. ரூ.4-க்கு விற்ற பழம் ரூ.2-க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் மாசி மாதம் தொடங்கவுள்ளது. அப்போது கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். மேலும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால சீசன் ஆரம்பிக்கும் போது தேவை அதிகரித்து, அதன் காரணமாக எலுமிச்சை பழங்கள் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி பூக்கள் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று மாலை கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் பூக்கள் தேவை அதிகரித்தது.

    மேலும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் பூக்கள் செடியிலேயே கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களின் வரத்து மார்க்கெட்டுக்கு பாதியாக குறைந்துள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பூக்கள் வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நேற்று 800 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ இன்று 1200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல நேற்று 600 ரூபாயாக இருந்த முல்லைப்பூ இன்று 800 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்ற ஜாதி மல்லி 360 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற காக்கட்டான் 500 ரூபாய்க்கும், 140 ரூபாய்க்கு விற்ற நந்தியாவட்டம் இன்று 500 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி 140 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆனாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    • சமையலில் முக்கிய பொருளாக தக்காளி உள்ளதால் அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
    • தக்காளி செடிகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டுகளுக்கு மேச்சேரி, மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, வீரபாண்டி மற்றும் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், ஓசூர், ஒட்டன்சத்திரம், ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனை சேலம் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். சமையலில் முக்கிய பொருளாக தக்காளி உள்ளதால் அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

    இந்த நிலையில் சேலம் மார்க்கெட்டுகளில் கடந்த வாரம் 40 ரூபாய்க்கு விற்ற தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து தற்போது ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் தேவையை விட குறைந்த அளவே பொது மக்கள் தக்காளியை வாங்கி செல்கிறார்கள். மேலும் இந்த திடீர் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    விலை உயர்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகள் கூறுகையில், தக்காளி விளைச்சல் அதிகம் உள்ள கர்நாடக மாநிலம் பெங்களூரு சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு தக்காளி செடிகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடையும் என்பதால் விலை குறைய வாய்ப்பில்லை என்றனர். தற்போது 20 கிலோ எடை கொண்ட ஒரு கிரேட் தக்காளி ரூ.2ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது. இதை வியாபாரிகள் வாங்கி தரம் வாரியாக பிரித்து ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    சேலம் மார்க்கெட்களில மற்ற காய்கறிகளின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு-

    உருளை கிழங்கு ஒரு கிலோ 55, சின்ன வெங்காயம் 50, பெரிய வெங்காயம் 50, பச்சை மிளகாய் 65, கத்திரி 80, வெண்டைக்காய் 35, முருங்கைக்காய் 110, பீர்க்கங்காய் 45, சுரக்காய் 30, புடலங்காய் 40, பாகற்காய் 75, தேங்காய் 35, முள்ளங்கி 35, பீன்ஸ் 80, அவரை 90, கேரட் 100, மாங்காய் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    ×