search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் எலுமிச்சை பழங்கள் விலை சரிவு
    X

    சேலத்தில் எலுமிச்சை பழங்கள் விலை சரிவு

    • சேலம் மார்க்கெட்டுகளுக்கு எழுமிச்சை பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.
    • இதனால் எலுமிச்சை விலை சரிவு ஏற்பட்டு உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எலுமிச்சை மரங்கள் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் எலுமிச்சை பழங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் விற்பனை குறைந்துள்ளது. மேலும் எலுமிச்சை பயிர் செய்யப்பட்ட இடங்களில் அதன் விளைச்சல் அதிக–ரித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு எலுமிச்சை பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது.

    சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 டன் வரை எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இங்கிருந்து மாவட்–டத்தில் உள்ள பல்வேறு பகுதி களில் இருந்து சில்லறை வியா பாரிகள் வாங்கிச் சென்று அவர்கள் இடங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மார்கழி மாத குளிரை தொடர்ந்து தை, மாசி மாதங்களிலும் தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால் எலுமிச்சை பழங்களின் தேவை குறைந்த காரணத்தால், அவற்றின் விலை சரிந்துள்ளது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.6-க்கு விற்ற பழம் தற்போது ரூ.3-க்கு விற்கப்–படுகிறது. ரூ.4-க்கு விற்ற பழம் ரூ.2-க்கு விற்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் மாசி மாதம் தொடங்கவுள்ளது. அப்போது கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். மேலும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகால சீசன் ஆரம்பிக்கும் போது தேவை அதிகரித்து, அதன் காரணமாக எலுமிச்சை பழங்கள் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×