என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்பேட்டைக்கான இடம் தேர்வு
- ராஜபாளையத்தில் மாம்பழக்கூழ் பதப்படுத்தும் தொழிற்பேட்டைக்கான இடத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- 27 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் இன்று காலை மாம்பழம் மற்றும் தேங்காய் விவசாயிகளின் நலன்கருதி சிட்கோ மூலம் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்ய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் ராஜபாளையம்- தென்காசி ரோடு இளந்தோப்பில் உள்ள பி.ஏ.சி.ஆர். அரசு மருத்துவமனை முன்பிருந்து சின்மயா பள்ளி வழியாக 3 கி.மீட்டர் தொலைவில் வருவாய் கிராமம் அயன் கொல்லங்கொண்டான்-II -ல் 27 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டது.
இதில் 2 கி.மீ பாதையாகவும், 1 கி.மீ பட்டா நிலமாகவும் உள்ளது. இந்த பட்டா நில உரிமை யாளர்களிடம் எம்.எல்.ஏ. பேசி ராஜபாளையத்திற்கு பெயர்போன சப்பட்டை மாங்காய்க்கு தொழிற்பேட்டை அமைப்பதன் முக்கியத்து வத்தை கூறினார். இதையடுத்து 1 கி.மீட்டர் தூரத்திற்கு பாதை அமைக்க நில உரிமையாளர் சம்மதம் தெரிவித்தனர்.பின்னர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. கூறுகையில், ராஜபாளையம் தொகுதியில் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை அமைக்க சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதன் விளைவாக இடம் கண்டறியும் பணி தொடங்கி தற்போது இடம் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதியில் மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்துதல் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க அறிவிப்பு வெளியிட தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன்.
மாம்பழக்கூழ் மற்றும் பதப்படுத்தும் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் அமைந்தால் இந்த பகுதியை சுற்றியுள்ள பல்லாயிரக்கனக்கான மாம்பழச்சாகுபடி, தேங்காய் சாகுபடி விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார்.
இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிளை செயலாளர் அங்குராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்