search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Copper"

    • அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று.
    • களாக்காயை அப்படியே சாப்பிடலாம்.

    தென்னிந்தியாவில் சுரைக்காய், தாய்லாத்தில் ஈரரம்பா, அங்கத்தில் திராட்சை வத்தல், மலேசியாவில் கெரெண்டா, விஞ்ஞான ரீதியாக கரோண்டா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் களாக்காய், தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.

    இது புளிப்பு, இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்ட பொரி பழத்தை ஒத்த வடிவத்தில் இருக்கும். தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் களாக்காய் மரங்கள் அதிகம் வளர்கின்றன. ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று. இதன் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    களாக்காயில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், ஜிங்க், காப்பர், ஆன்டிஆக்சிடன்டுகளான பிளேவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டான்னின்ஸ், கரீஸ்சோன், ட்ரை டெர்பினாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. களாக்காயை அப்படியே சாப்பிடலாம். அதை அரைத்து முகத்தில் மாஸ்க் போல் போட சருமத்தின் நிறமிழப்பை குறைத்து. கருந்திட்டுக்களை போக்கி, முதிர்வைத் தடுக்கும். சரும பிரச்சினைகளை போக்க இயற்கை மருத்துவத்தில் களாக்காய் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

    களாக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலில் நீரேற்றத்தை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது. மேலும், உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுத்து, உடலின் உள்உறுப்புகளுக்கு தேவையான சத்துக்களும், ஆக்சிஜனும் கிடைக்க உதவுகிறது.

    களாக்காயில் உள்ள புரதச்சத்துக்கள், தலைமுடியின் வேர்க்கால்களை வலிமையாக்குவதுடன், கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் வளர உதவுகிறது. முடி உதிர்வு, முடி உடைவு போன்ற பிரச்சினைகள் வருவதையும் தடுக்கிறது. களாக்காயில் உள்ள புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதுதவிர, சீரற்ற மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து கருப்பை புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்து செயல்படுகிறது.

    களாக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பெக்டின் எனும் ஸ்டார்ச் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி, மலச்சிக்கல், செரிமானமின்மையால் உண்டாகும் வாயுத்தொல்லை, எரிச்சல் மற்றும் வலியை தீர்க்கிறது. மேலும், குடலின் இயக்கத்தை சீராக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் ஏற்படும் இடையூறுகளையும் சரிசெய்கிறது.

    களாக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. நோய்த்தொற்றுகள், கிருமித்தொற்று, வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் உடல் உபாதைகளையும், அழற்சிகளையும் சரி செய்கிறது. களாக்காயில் உள்ள வைட்டமின்கள். பார்வைத் திறன் மற்றும் செவித்திறனை மேம்படுத்துகிறது. மூட்டு எலும்புகளை பலப்படுத்தி, தசைகளையும் வலுப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் உண்டாகும் மற்ற உடல் பிரச்சினைகளையும் சரி செய்ய உதவுகிறது.

    களாக்காயில் உள்ள மெக்னீசியம் மற்றும் ட்ரிப் டோபான் சத்துக்கள் செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, நரம்பியல் மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. ஹேப்பி ஹார்மோன் சுரப்பை தூண்டுவதுடன், மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை உண்டாக்குகிறது.

    • செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகும் வழக்கமும் அதிகரித்து இருக்கிறது.
    • செம்பு தண்ணீரை எவ்வளவு பருக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

    கொரோனா ஏற்படுத்தி சென்ற படிப்பினை காரணமாக முன்னோர்கள் பின்பற்றி வந்த வாழ்வியல் பழக்கங்களை பலரும் பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் ஏற்படுத்தும் கேடுகளை உணர்ந்து அலுமினியம், களிமண், மூங்கில், செம்பு போன்றவற்றில் தயாராகும் பாட்டில்களை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    செம்பு பாத்திரத்தில் தண்ணீர் பருகும் வழக்கமும் அதிகரித்து இருக்கிறது. வெளி இடங்களுக்கு செல்லும்போது செம்பு பாட்டிலில் தண்ணீரை நிரப்பி பருகுகிறார்கள். ஆனால் செம்பு பாத்திரத்தில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை அடிக்கடி பருகுவது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    செம்பு பொருட்களை உபயோகப்படுத்துவது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குவதிலும் செம்பு முக்கிய பங்கு வகிக்கிறது. நரம்பு செல்கள் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். கொலாஜன் உற்பத்தி, எலும்புகள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும். மேலும் செம்பு சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாக செயலாற்றக்கூடியது.

    டி.என்.ஏ மற்றும் செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிரீ ரேடிக்கல்களின் வீரியத்தை கட்டுப்படுத்தக்கூடியது. உடல் போதுமான அளவுக்கு இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கும் செம்பு உதவுகிறது. இத்தகைய காரணத்திற்காக செம்பு பாட்டிலில் தண்ணீர் பருகுவது நல்லது என்று மருத்துவ நிபுணர்களும் பரிந்துரைக்கிறார்கள்.

    ஆனால் செம்பு பாட்டில் தண்ணீரை அதிகம் பருகுவது ஆபத்தானது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் ஆப் டயட்டரி சப்ளிமெண்ட்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவின்படி, செம்பு பாட்டில் தண்ணீரை பருகுவது உடலுக்கு சாதகமாக இருக்கும். ஆனால் எப்போதாவது பருகினால் மட்டுமே அதன் நன்மைகளை அனுபவிக்க முடியும். அடிக்கடி செம்பு பாட்டிலில் தண்ணீரை நிரப்புவது நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். சரியாக பராமரிக்காவிட்டால் துருப்பிடிக்க வழிவகுக்கும். இது சிக்கலை அதிகப்படுத்திவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

    செம்பு இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. தினமுமோ, அடிக்கடியோ செம்பு பாட்டில் தண்ணீரை பருகும்போது ரத்தத்தை சுத்திகரிக்கும் செயல்முறை இயல்பை விட அதிகமாக நடைபெறும். அதன் காரணமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்படையக்கூடும். செம்பு துகள்கள், படிகங்களை சுவாசிக்கும்போது தொண்டை, மூக்கு பகுதிகளில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். தலைவலி, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம்.

    செம்பு தண்ணீரை எவ்வளவு பருக வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதனை முழுமையாக பின்பற்றுவதன் மூலமே பக்கவிளைவுகள் இல்லாமல் செம்புவின் நன்மைகளை பெற முடியும். இரவில் 6 முதல் 8 மணி நேரம் தண்ணீரை செம்பு பாத்திரத்தில் சேமித்து வைத்து மறுநாள் பருகுவதுதான் சரியான வழிமுறை. இந்த தண்ணீரையும் ஒரு நாளைக்கு இரண்டு டம்ளர் மட்டுமே பருக வேண்டும். நாள் முழுவதும் பருகக்கூடாது.

    காலையில் வெறும் வயிற்றில் பருகுவது சிறந்த பலனை கொடுக்கும். உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துபடி, ஒரு கப் தண்ணீரில் 0.47 மில்லி கிராம் மட்டுமே செம்பு கலந்திருக்க வேண்டும். அதாவது ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி கிராம் செம்பு மட்டுமே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு 10 மில்லி கிராமுக்கு மேல் செம்பு உடலில் சேர்ந்தால் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். அதனால் செம்பு பாத்திரத்தில் சேமிக்கப்படும் தண்ணீரை அளவோடு பருகுவதுதான் நல்லது.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×