என் மலர்
நீங்கள் தேடியது "பொட்டாசியம்"
- புரதம், நார்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது.
- பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.
வெள்ளை பூசணி பெயரை கேட்டவுடனேயே அமாவாசைக்கு திருஷ்டி சுத்தி நடுரோட்டில் உடைப்பதும், பூசணிக்காயில் முகம் வரைந்து வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுவதும் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். மார்கழி மாதத்தில் இதன் பூவை வாசலில் கோலத்தின் மீது வைப்பர். கல்யாண வீடுகளில் 'காசி அல்வா' எனப்படும் இந்த வெள்ளை பூசணி அல்வா மிகவும் பிரபலம் பெற்றது. தரையில் படர்ந்து எந்த பெரு முயற்சிகளும் இல்லாமல் நாம் எதிர்பாராமலே காய்க்கும். இதற்கும் மவுசு சற்று குறைவுதான். ஆகவேதான் மக்கள் அலட்சியப்படுத்தும் இந்த சத்துமிக்க காய்கறிகளின் முக்கியத்து வத்தினைப் பற்றி இங்கு எழுதப்படுகின்றது.
* வெண் பூசணி செரிமானத்தினை கூட்டும். மலச்சிக்கலை நீக்கும்.
* நார் சத்து மிகுந்த காய். ஆகவே எடை குறைப்பிற்கு உகந்தது.
* வைட்டமின் 'டி' சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது.
* வெள்ளை ரத்த அணுக்கள் அதிகரிக்க உதவுகின்றது.
* மன அழுத்தம் நீங்க உதவுகின்றது.
* புண்களை ஆற்றும் சக்தி கொண்டது.
* பொட்டாசியம், சி சத்து, நார்ச்சத்து இருதய ஆரோக்கியத்தினைக் கூட்டுகின்றது.
* உடலில் நீரிழப்பு தடுக்கப்படுகின்றது.
* தொடர்ந்து தினமும் 100 மி.லி. அளவு வெள்ளை பூசணி ஜூஸ் குடித்தால் உடலில் நச்சுகள் நீங்கும்.
* உடற்பயிற்சி செய்வோர் பயிற்சி முடிந்த பிறகு வெள்ளை பூசணி ஜூஸ் அருந்தலாம்.
* இதன் விதைகள் இதயம், எலும்பினைக் காக்கின்றது.
* நல்ல தூக்கம் இருக்கும்.
* சர்க்கரை அளவு கட்டுப்படும்.
* பூசணி விதை வீக்கங்களை குறைக்க வல்லது. * சத்து நிறைந்தது.

* சில வகை புற்று நோய்களின் பாதிப்பினை தவிர்க்க வல்லது.
* சிறு நீரக பை, ப்ராக்ட் ரேட் இவற்றினை பாதுகாக்கும்.
* நிறைந்த மக்னீசியம் சத்து கொண்டது.
அவரைக்காய்
அநேக வீடுகளில் கொத்து கொத்தாய் சர்வ சாதாரணமாய் காய்த்து கிடக்கும் காய்கறி. பலருக்கு காசு செலவு கூட இல்லை. பறித்து உடனே செய்யலாம். இதுதான் ஆரோக்கியம். இதுதான் மகிழ்ச்சி. புரதம், நார்சத்து இரும்பு சத்து, பொட்டாசியம் வைட்டமின் ஏ, சி சத்து நிறைந்தது. அடிக்கடி அவரைக்காயினை உணவில் சேர்த்துக் கொண்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
* புரதச் சத்திற்கும் உதவும். இன்று அநேகரது பிரச்சினையே புரதம் தேவையான அளவு இல்லாததுதான்.
* நார்சத்து கொலஸ்டிரால் அளவினை கட்டுப்படுத்தும். சீரண சக்தியினைக் கூட்டும்.
* வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இது எடை குறைப்பிற்கும் உதவும்.
* இரும்பு சத்து ரத்த சோகையினை தவிர்க்கின்றது.
* பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தினைக் குறைக்கின்றது.

கமலி ஸ்ரீபால்
* வைட்டமின் ஏ,சி உடல் ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுகின்றது.
* சிங்க் செல் பாதுகாப்பிற்கு உதவுகின்றது.
* இதிலுள்ள குறைந்த உப்பு, நார்சத்து, பொட்டாசியம் போன்றவை இருதய பாதுகாப்பிற்கு உதவுகின்றன.
* தாது சத்துகள் நிறைந்தது. வலுவான எலும்புகள் உருவாகின்றன.
* நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது.
* சர்க்கரை அளவு கட்டுப்படுகின்றது.
கவனம்
G6PD குறைபாடு உள்ளவர்கள் அவரைக்காயினை தவிர்க்க வேண்டும்.
* அறுவை சிகிச்சை என்றால் 2 வாரம் முன்பே அவரைக்காய் எடுக்க வேண்டாம்.
* பிஞ்சு அவரை, அவரை விதை இவையெல்லாம் இயற்கை (எ) இறைவனின் அருளே.
இன்றைக்கே அவரைக்காய் சாப்பிட ஆரம்பிக்கலாமே.
இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகின்றது. இருதய பாதிப்பு அபாயம் குறைகின்றது. எலும்புகள் வலுவாய் இருக்கும். சர்க்கரை அளவு கட்டுப்பட உதவும். சக்தி, மனநிலை சீராவது, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
பூசணிக்காயை விதவிதமாய் சமைக்கத் தெரியும். தினம் ஒரு டீஸ்பூன் பூசணி விதை அநேக நன்மைகளைத் தரும்.
ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க மருத்துவ ஆலோசனைப் பெற்று பழக்கத்தில் கொண்டு வரலாமே.
- உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது.
- குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கிறது.
உங்களுக்கு ஜவ்வரிசி எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா? நம்முள் பலருக்கு அதை எதில் இருந்து தயாரிக்கிறார்கள் என்பதே தெரியாது. மரவள்ளிக் கிழங்கில் இருந்து எடுக்கப்படும் மாவில் இருந்துதான் ஜவ்வரிசி தயார் செய்யப்படுகிறது.
இதை சபுதானா, சாகோ என்றும் அழைக்கிறார்கள். முற்றிலும் ஸ்டார்சால் நிறைந்துள்ள சவ்ரிசியில் ரசாயனங்கள், செயற்கை இனிப்புகள் போன்ற எதுவும் இல்லாததால் பரவலாக அனைவரும் இதை விரும்புகின்றனர். உடல்நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த உணவை தாராளமாக அளிக்கலாம். ஏனென்றால் ஜவ்வரிசி உடனடி ஆற்றலையும் செரிமான சக்தியையும் ஒருவருக்குக் கொடுக்கிறது. மேலும் உடலை குளிர்ச்சிப்படுத்துவதிலும் இது பங்குவகிக்கிறது.
உடலில் அளவுக்கு அதிகமாக பித்தம் உள்ளவர்களுக்கு ஜவ்வரிசி கஞ்சி கொடுக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அதிக அளவில் இருக்கிறது. எனவே ஒருவர் உடல் எடை அதிகரிக்க விரும்பினால், ஜவ்வரிசி சிறந்த உணவாக இருக்கும். இதில் கணிசமான அளவு பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. இதனால் ரத்த நாளங்கள் வழியே ரத்த ஓட்டம் சீராக பாய வழிவகுப்பதால், ரத்த அழுத்தம் குறைந்து, இதயத்திற்கான சிரமத்தை குறைக்கிறது.
தசை வளர்ச்சிக்கு தேவையான சிறந்த மூலமாக ஜவ்வரிசி திகழ்கிறது. இது உடலில் சேதமடைந்த திசுக்கள் மற்றும் செல்களை குணப்படுத்த உதவி, மற்ற செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. செரிமான ஆரோக்கியத்தை நிர்வகிப்பதில் ஜவ்வரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இது உதவுகிறது.
இதில் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற முக்கிய தாதுக்கள் நிறைந்துள்ளதால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து மூட்டு வலி அபாயத்தை குறைக்கிறது. வளரும் குழந்தைகளின் உணவில் ஜவ்வரிசியை சேர்ப்பதால் அவர்களின் எலும்பு பலப்படுகிறது. இதில் எளிய சக்கரை மற்றும் மாவுச்சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.
உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சிக்கு பிறகு சாப்பிடுவதற்கான சிறந்த உணவாக ஜவ்வரிசியை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் அதிக ஆற்றல் இருப்பதால் உடல் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி போன்றவற்றை தடுக்கிறது. உதாரணத்திற்கு ஒரு கப் ஜவ்வரிசியில் 540 கலோரிகள் நிறைந்துள்ளது. இதில் 152 மில்லிகிராம் மெக்னீசியம், 87 கிராம் கார்போஹைட்ரேட், 135 கிராம் மாவுச்சத்து, 30 மில்லி கிராம் கால்சியம், 16 மில்லி கிராம் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இதை தவிர புரதம், கொழுப்பு மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் சிறிதளவு உள்ளது.
- அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று.
- களாக்காயை அப்படியே சாப்பிடலாம்.
தென்னிந்தியாவில் சுரைக்காய், தாய்லாத்தில் ஈரரம்பா, அங்கத்தில் திராட்சை வத்தல், மலேசியாவில் கெரெண்டா, விஞ்ஞான ரீதியாக கரோண்டா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் களாக்காய், தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.
இது புளிப்பு, இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்ட பொரி பழத்தை ஒத்த வடிவத்தில் இருக்கும். தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் களாக்காய் மரங்கள் அதிகம் வளர்கின்றன. ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று. இதன் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
களாக்காயில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், ஜிங்க், காப்பர், ஆன்டிஆக்சிடன்டுகளான பிளேவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டான்னின்ஸ், கரீஸ்சோன், ட்ரை டெர்பினாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. களாக்காயை அப்படியே சாப்பிடலாம். அதை அரைத்து முகத்தில் மாஸ்க் போல் போட சருமத்தின் நிறமிழப்பை குறைத்து. கருந்திட்டுக்களை போக்கி, முதிர்வைத் தடுக்கும். சரும பிரச்சினைகளை போக்க இயற்கை மருத்துவத்தில் களாக்காய் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
களாக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலில் நீரேற்றத்தை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது. மேலும், உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுத்து, உடலின் உள்உறுப்புகளுக்கு தேவையான சத்துக்களும், ஆக்சிஜனும் கிடைக்க உதவுகிறது.
களாக்காயில் உள்ள புரதச்சத்துக்கள், தலைமுடியின் வேர்க்கால்களை வலிமையாக்குவதுடன், கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் வளர உதவுகிறது. முடி உதிர்வு, முடி உடைவு போன்ற பிரச்சினைகள் வருவதையும் தடுக்கிறது. களாக்காயில் உள்ள புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதுதவிர, சீரற்ற மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து கருப்பை புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்து செயல்படுகிறது.
களாக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பெக்டின் எனும் ஸ்டார்ச் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி, மலச்சிக்கல், செரிமானமின்மையால் உண்டாகும் வாயுத்தொல்லை, எரிச்சல் மற்றும் வலியை தீர்க்கிறது. மேலும், குடலின் இயக்கத்தை சீராக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் ஏற்படும் இடையூறுகளையும் சரிசெய்கிறது.
களாக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. நோய்த்தொற்றுகள், கிருமித்தொற்று, வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் உடல் உபாதைகளையும், அழற்சிகளையும் சரி செய்கிறது. களாக்காயில் உள்ள வைட்டமின்கள். பார்வைத் திறன் மற்றும் செவித்திறனை மேம்படுத்துகிறது. மூட்டு எலும்புகளை பலப்படுத்தி, தசைகளையும் வலுப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் உண்டாகும் மற்ற உடல் பிரச்சினைகளையும் சரி செய்ய உதவுகிறது.
களாக்காயில் உள்ள மெக்னீசியம் மற்றும் ட்ரிப் டோபான் சத்துக்கள் செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, நரம்பியல் மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. ஹேப்பி ஹார்மோன் சுரப்பை தூண்டுவதுடன், மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை உண்டாக்குகிறது.
- உடம்பில் உள்ள சத்துக்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்க வேண்டும்.
- வாழைப்பழம் ரத்த சிவப்பணுக்களை அதிகமாக்குகிறது.
உடல் சோர்வடையாமல் இருப்பதற்கு நம் உடம்பில் உள்ள சத்துக்களில் பொட்டாசியம் சத்து அதிகம் இருக்க வேண்டும்.
வாழைப்பழத்தில் பொட்டாசியமும், கலோரிகளும் அதிகம் இருக்கிறது. ஆகவே நம் உடலில் சோர்வு நிலையை தவிர்ப்பதற்கு தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.
வாழைப்பழம் ரத்த சிவப்பணுக்களை அதிகமாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் நரம்பு மண்டலத்தை சீராக வைப்பதற்கு உதவுகிறது.
உடலில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அமினோ அமிலங்களை வளர்ச்சிதை மாற்றம் செய்யவும் பயன்படுகிறது.
வாழைப்பழம் செரிமானப்பிரச்சினைக்கு தீர்வாக இருக்கிறது. இரைப்பை மற்றும் குடல் பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் எரிச்சல் மற்றும் வலிகள் அதிகமாக இருக்கும். வாழைப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதனால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மாதவிடாய் நேரத்தில் வரும் வலிகளில் இருந்து விடுபடலாம்.
வாழைப்பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். வாழைப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
வாழைப்பழத்தில் பலவகையான ரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வாழைப்பழத்திலும் எண்ணமுடியாத அளவுக்கு நோய்களை பாதுகாக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது.






