search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Antioxidant"

    • அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும். மேலும் உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

    எலுமிச்சை ஸ்க்ரப்

    நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.

    பால்

    பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.

    அன்னாசி கூழ்

    வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.

    ஆலிவ் ஆயில்

    தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

    வாழைப்பழம்

    மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.

    • அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று.
    • களாக்காயை அப்படியே சாப்பிடலாம்.

    தென்னிந்தியாவில் சுரைக்காய், தாய்லாத்தில் ஈரரம்பா, அங்கத்தில் திராட்சை வத்தல், மலேசியாவில் கெரெண்டா, விஞ்ஞான ரீதியாக கரோண்டா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் களாக்காய், தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.

    இது புளிப்பு, இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்ட பொரி பழத்தை ஒத்த வடிவத்தில் இருக்கும். தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் களாக்காய் மரங்கள் அதிகம் வளர்கின்றன. ஆகஸ்டு மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை அதிகம் கிடைக்கும் வகையிலான சீசன் பழங்களில் களாக்காயும் ஒன்று. இதன் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

    களாக்காயில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம், ஜிங்க், காப்பர், ஆன்டிஆக்சிடன்டுகளான பிளேவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டான்னின்ஸ், கரீஸ்சோன், ட்ரை டெர்பினாய்ட்ஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன. களாக்காயை அப்படியே சாப்பிடலாம். அதை அரைத்து முகத்தில் மாஸ்க் போல் போட சருமத்தின் நிறமிழப்பை குறைத்து. கருந்திட்டுக்களை போக்கி, முதிர்வைத் தடுக்கும். சரும பிரச்சினைகளை போக்க இயற்கை மருத்துவத்தில் களாக்காய் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

    களாக்காயில் உள்ள நீர்ச்சத்து உடலில் நீரேற்றத்தை அதிகரித்து உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்துகிறது. மேலும், உடல் முழுவதும் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழிவகுத்து, உடலின் உள்உறுப்புகளுக்கு தேவையான சத்துக்களும், ஆக்சிஜனும் கிடைக்க உதவுகிறது.

    களாக்காயில் உள்ள புரதச்சத்துக்கள், தலைமுடியின் வேர்க்கால்களை வலிமையாக்குவதுடன், கூந்தல் ஆரோக்கியமாகவும், நீளமாகவும், பளபளப்பாகவும் வளர உதவுகிறது. முடி உதிர்வு, முடி உடைவு போன்ற பிரச்சினைகள் வருவதையும் தடுக்கிறது. களாக்காயில் உள்ள புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகியவை கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதுதவிர, சீரற்ற மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்து கருப்பை புற்றுநோயை உண்டாக்கும் செல்களை எதிர்த்து செயல்படுகிறது.

    களாக்காயில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பெக்டின் எனும் ஸ்டார்ச் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், அடிக்கடி ஏற்படும் வயிற்றுவலி, மலச்சிக்கல், செரிமானமின்மையால் உண்டாகும் வாயுத்தொல்லை, எரிச்சல் மற்றும் வலியை தீர்க்கிறது. மேலும், குடலின் இயக்கத்தை சீராக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் ஏற்படும் இடையூறுகளையும் சரிசெய்கிறது.

    களாக்காயில் உள்ள ஆன்டிஆக்சிடன்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. நோய்த்தொற்றுகள், கிருமித்தொற்று, வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் உண்டாகும் உடல் உபாதைகளையும், அழற்சிகளையும் சரி செய்கிறது. களாக்காயில் உள்ள வைட்டமின்கள். பார்வைத் திறன் மற்றும் செவித்திறனை மேம்படுத்துகிறது. மூட்டு எலும்புகளை பலப்படுத்தி, தசைகளையும் வலுப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பை கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் உண்டாகும் மற்ற உடல் பிரச்சினைகளையும் சரி செய்ய உதவுகிறது.

    களாக்காயில் உள்ள மெக்னீசியம் மற்றும் ட்ரிப் டோபான் சத்துக்கள் செரோடோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து, நரம்பியல் மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது. ஹேப்பி ஹார்மோன் சுரப்பை தூண்டுவதுடன், மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை உண்டாக்குகிறது.

    ×