search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "olive oil"

    • ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று.
    • உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது.

    தற்போது சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்றால் வித்தியாசமான பழங்களைக் காண்போம். ஆனால் அவற்றை நாம் வாங்க மாட்டோம். இதற்கு அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததோடு, அந்த பழங்களின் வெளித்தோற்றம் விசித்திரமாக இருப்பதும் காரணம். அதுமட்டுமின்றி அவை விலை அதிகமானதும் கூட. ஆனால் அவைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவற்றை உட்கொண்டால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பலனைப் பெறலாம்.

    மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நன்மைகளை உள்ளடக்கியது. இருப்பினும் கருப்பு மற்றும் பச்சை நிற ஆலிவ்கள் தான் மிகவும் சிறந்தது. இவைகளை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும் மற்றும் புற்றுநோய்கள் தடுக்கப்படும்.

    ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று. அங்கிருந்துதான், உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது. இதன் சுவை தனித்துவமானது என்பதால், பீட்சா உள்பட பல இத்தாலிய உணவுகளில் மிக முக்கிய அங்கமாக சேர்க்கப்பட்டு, சுவைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட, ஆலிவ் பழங்களின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

    * அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆலிவ்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இதை தடுத்து நிறுத்துகின்றன. ஆலிவ்களில் கொழுப்பும் உள்ளது. ஆனால் இது நல்ல வகையான கொழுப்பு. ஆலிவ்களில் இருக்கும் ஒலிக் அமிலம் (மோனோசாச்சுரேட்டர் கொழுப்பு அமிலம்) வீக்கத்தை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

    * ஆலிவ்களில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வைட்டமின்-ஈ மற்றும் பாலிபினால்களுடன் சேர்ந்து வீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காயங்களுக்கு எதிராக போராடுகின்றன.

    * ஆலிவ்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஹைட்ராக்சிடைரோசோல் எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது. இது எலும்புகளின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்புச்சிதைவு நோய் அறிகுறிகளுக்கு இதுசிறந்த தீர்வாக செயல்படுகிறது.

    * இவை புரோபயாடிக் ஆற்றலை கொண்டுள்ளன. இது செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியமானது. ஆலிவ் புளிப்பு தன்மை கொண்டது. இது குடலுக்கு நன்மை செய்யும் லாக்டோபாகிலஸ் பாக்டீரியாவை உள்ளடக்கி உள்ளது.

    * இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உடல் பருமன் அபாயத்தை குறைக்கும்.

    * ஆலிவ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான எடை பராமரிப்புக்கு உதவுகிறது.

    * மூளை பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களால் ஆனது. ஆலிவ்களில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. ஆலிவ் உட்கொள்வது மூளை உயிரணு இறப்பை தடுக்கவும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    * ஆலிவ்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் உதவுகின்றன. சருமத்தை புற ஊதாக்கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. சுருக்கங்களை தடுக்க உதவுகிறது.

    ஆலிவை எப்படி சேர்ப்பது?

    கருப்பு பழுத்த ஆலிவ், பச்சை ஆலிவ், இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட ஆலிவ் என பல்வேறு வகையான ஆலிவ் பழங்கள் உள்ளன. ஆலிவ் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம். இதை சிற்றுண்டிகளிலும் சேர்க்கலாம்.

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் ஆலிவ் பழத்திற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 ஆலிவ் பழங்கள் வரை சாப்பிடுவது நல்லது.

    • அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    பொதுவாக, வயதாகும்போது நமது உடலில் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதில் ஒன்று தான் தோல் சுருக்கும். இது வயதாகும்போது வருவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கி போய் காட்சியளிக்கும். இதற்கு காரணம் உடலில் நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவை ஆகும். இருப்பினும், சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது கிடையாது.

    ஏனென்றால், முகம் அழகாக தெரிந்தால் போதும் என்று நினைப்பது தான். அதுமட்டுமல்லாமல், அதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியிருக்குமே என்றும் நினைப்பார்கள். பார்லருக்கு போய் அதையும் இதையும் பண்றதுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தியே கைகளில் இருக்கும் சுருக்கங்களை போக்கி அழகான சருமத்தை பெற முடியும். மேலும் உங்க சருமத்தை மினுமினுப்பாகவும் பொலிவுடனும் வைத்துக்கொள்ளும். இவ்வாறு இயற்கை பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்தவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.

    எலுமிச்சை ஸ்க்ரப்

    நமது சருமத்தில் இருக்கும் அழுக்கு, இறந்த செல்களை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த எலுமிச்சை ஸ்க்ரப் தான். அதற்கு ஒரு கப்பில் 3 அல்லது 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர், கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவிவிட்டு, இந்த கலவை கைகளில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். காய்ந்தவுடன் சாதாரண தண்ணீரில் கைகளை கழுவிடுங்கள். இதை வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வர மென்மையான கைகளை பெறலாம்.

    பால்

    பால் ஒரு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துக்கு ஈரப்பதம் கிடைக்கவும் உதவும். முதலில் எலுமிச்சை ஸ்க்ரப் செய்துக் கொள்ளவும். பின்னர், ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கலவையில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு கைகளை அப்படியே வைத்திருக்கவும். பின் கைகளை வெளியே எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 அல்லது 5 முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கங்கள் மறையத் தொடங்கும்.

    அன்னாசி கூழ்

    வைட்டமின் சி சத்து நிரம்பியுள்ள அன்னாசி பழத்தை சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கக்கூடியது. முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்துக் கொள்ளவும். அந்த கூழை கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவி விடவும். மென்மையான மற்றும் சுருக்கமில்லாத கைக்கு இந்த ஹேண்ட் மாஸ்க்கை தினமும் பயன்படுத்தலாம்.

    ஆலிவ் ஆயில்

    தினமும் இரவில் தூங்க செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயைக் கொண்டு கைகளை மசாஜ் செய்துக் கொள்ளுங்கள். பின்னர், பருத்தி கையுறைகளை அணிந்து அவற்றை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். இதை தினமும் செய்துவர கைகளை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

    வாழைப்பழம்

    மேற்கூறிய எதுவும் செய்ய முடியாதவர்கள் வாழைப்பழத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தில் ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, அவை சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கு ஏற்றதாக அமைகின்றன. வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அந்த கூழை உங்கள் கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவிவிடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர மென்மையான கைகளை பெறலாம்.

    ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
    ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நேச்சுரல் ஃபேட்டி ஆசிட்டுகள் அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சருமபராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன், முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவினால், ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.

    * ஆலிவ் ஆயிலில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே தினமும் இரவில் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.

    * முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்தால் தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள். இதனால் அவ்விடத்தில் புதிய செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும். மேலும் இச்செயல் மூலம் நாளடைவில் தழும்புகளும் மறையும்.

    * தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள வைட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும். மேலும் ஆலிவ் ஆயிலில் உள்ள ஸ்குவாலின் அமிலம், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.

    * உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஆலிவ் ஆயிலைக் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம், சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.
    ×