search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Magnesium"

    • தினை சிறுதானியங்களில் முக்கியமானது.
    • உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள்.

    தினை சிறுதானியங்களில் முக்கியமானது. தானியங்களில் அதிகம் பயிரிடப்படுவதில் இரண்டாவது இடம் இதற்கு உண்டு என்றும் சொல்லலாம். இதை உயிர்ச்சத்து கொண்ட தானியம் என்று அழைக்கிறார்கள். இதை சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். தினையில் கால்சியம். புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் போன்றவை உண்டு.

    தினைக்கு உள்ள சிறப்பு மற்ற தானியங்களை காட்டிலும் இதில் கால்சியம் அதிகமாக உள்ளது. அரிசி, கோதுமை, கேழ்வரகை காட்டிலும் இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கோதுமையில் இருப்பதை விட குறைவாக புரதம் இருந்தாலும் மற்ற பொருட்களோடு கலந்து உண்னும் போது இவை சமன் செய்யப்படுகிறது.

    இன்று குழந்தைகளும் கால்சியம் பற்றாக்குறை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். பெண்களுக்கு இயல்பாகவே மெனோபாஸ் காலங்களில் கால்சியம் பற்றாக்குறை உண்டாகும். தற்போது இது அதிகரித்துவருகிறது. தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகமாகவே உண்டு என்பதால் இதை அடிக்கடி சேர்த்து வந்தால் எலும்புகள் வலிமை அடையும். பற்கள் உறுதியாகும்.

    வளரும் குழந்தைகளுக்கு தினை அரிசியை அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும் வளர்ந்த பிறகும் எலும்பு தேய்மானம் உண்டாக்காது. இதில் பீட்டா கரோட்டின் இருப்பதால் கண்பார்வையும் கூர்மை அடையும்.

    தேவையானவை:

    தினை மாவு - ஒரு கப்

    பொட்டுக்கடலை மாவு - அரை கப்

    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்

    வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்

    நெய் - கால் கப்

    தேன் - கால் கப்.

    செய்முறை:

    தினை, பொட்டுக்கடலை மாவு வகைகளுடன் ஏலக்காய்த்தூள், வெள்ளரி விதை மற்றும் தேன் கலந்து பிசைந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு உருக்கிய நெய் சேர்த்து பிசைந்து எலுமிச்சை அளவுக்கு சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். இப்போது சுவையான தினை தேன் உருண்டை தயார்.

    • தினமும் பழங்கள், காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    • ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவும்.

    உடல் உள் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போலவே வாய்வழி ஆரோக்கியத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும். பற்களையும், ஈறுகளையும் சீராக பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வலுசேர்க்கும். ஒருசில உணவு பழக்கத்தை தவறாமல் பின்பற்றுவது வாய் வழி ஆரோக்கியத்தை பேணவும், பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவும்.

    * தினமும் பழங்கள், காய்கறிகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவற்றில் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. உதாரணமாக ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவும்.

    * கொழுப்பு நிறைந்த மீன்களும் ஈறுகளுக்கு வலு சேர்க்கும். சால்மன், டுனா, கானாங்கெளுத்தி போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன்கள், ஈறுகளை நோயில் இருந்து பாதுகாக்க உதவும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.

    * பற்களை வலுவாக்குவதில் பால் பொருட்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளன. அவை பற்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளன. மேலும் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் வாய்வழி ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். தயிர், மோர், வெண்ணெய், நெய், பால், பாலாடைக்கட்டி என ஏதாவதொரு வகையில் பால் பொருட்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.

    * நட்ஸ் வகைகளை சாப்பிடுவதும் வாய் வழி ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அவை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் தாதுப்பொருட்களை கொண்டுள்ளன. வாய் பகுதியில் பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகமானால் பற்கள் மற்றும் ஈறுகளில் பிளேக் படர தொடங்கும். அதனை அகற்றாவிட்டல் மஞ்சள் பற்கள், பல் சிதைவு, ஈறு

    சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும். பற்களில் இருந்து பிளேக் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற நட்ஸ்கள் உதவும். உதாரணமாக பாதாமில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளடங்கி இருக்கிறது. இவை இரண்டும் வலுவான பற்களுக்கு அவசியம்.

    * தேநீரில் உள்ள புளோரைடு பற்களை வலுப்படுத்தவும், துவாரங்களைத் தடுக்கவும் உதவும். மேலும் அதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்டுகள் ஈறு நோயைத் தடுக்க உதவி புரியும். குறிப்பாக கிரீன் டீயில் புளோரைடு மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. எனவே கிரீன் டீ பருகி வரலாம்.

    * சர்க்கரை கலக்காத சுவிங்கத்தை சுவைப்பதும் வாய் வழி ஆரோக்கியத்தை பாதுகாக்க வழிவகை செய்யும். ஏனெனில் சூயிங்கம் உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டும். உணவுத் துகள்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்ற உதவும். ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் ஈறுகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    * தண்ணீர் நிறைய பருகுவதும் அவசியமானது. வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க உமிழ்நீர் அவசியம். இது உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். மேலும் பற்சிதைவில் இருந்து பாதுகாக்கும் தாதுக்களும் நீரில் உள்ளன.

    ×