search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protein"

    • சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    வளர்பருவம்:

    இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

    சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

    ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

     வைட்டமின் சி:

    குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.

     இரும்புச்சத்து:

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.

    வைட்டமின் டி:

    குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.

     புரதம்:

    வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.

    ஆரோக்கியமான கொழுப்பு:

    சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

    • கோழி கால்கள் இரும்புச்சத்து நிறைந்தவை.
    • ஏராளமான "கொலாஜன்" கால்களில் நிரம்பி உள்ளன.

    நாம் பெரிதும் கண்டுகொள்ளாமல் விடப்படுவது கோழியின் கால்கள்தான்... ஆட்டுக்கால்கள் அனைவராலும் விரும்பப்படும் அளவுக்கு சிக்கன் கால்கள் விரும்பப்படுவதில்லை... உடைந்துபோன எலும்புகளை விரைவில் ஒன்று சேர ஆட்டுக்கால் எந்த அளவுக்கு உதவுகிறதோ, அதுபோல, சில உள்சார்ந்த கோளாறுகளை தீர்க்க இந்த கோழிக்கால்களும் உதவுகின்றன.

    கோழிக்கால்கள்:

    கோழிக் கால்கள் அதிக கொழுப்பு சத்து இருப்பதாக சொல்கிறார்கள்.. ஆனால், இது முழுவதுமே உண்மை கிடையாது.. நமது உடலின் நலமானது பாதுகாக்கப்படுகிறது. கோழியின் மார்பகத்தில் உள்ள கொழுப்பு மற்றும் கலோரிகளானது, கோழி கால்களில் உள்ளதை விட குறைவாக இருந்தாலும், கோழி மார்பகங்களை தோலுரித்த பிறகு கோழி கால்களில் உள்ள கொழுப்பின் அளவு, மாட்டிறைச்சி மற்றும் செம்மறி ஆட்டு இறைச்சியைவிட குறைவாகவே உள்ளதாம்.

    கோழி கால்கள் இரும்புச்சத்து நிறைந்தவை. அத்துடன், ஏராளமான "கொலாஜன்" இந்த கால்களில் நிரம்பி உள்ளன. இந்த கொலாஜன்தான், நம் உடலில் ஏற்படும் வயதான சுருக்கத்தை தள்ளி போடுகிறது. சருமத்தை பாதுகாக்கிறது. நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்ற உதவுவதே கொலாஜன்தான்.

    ரத்த சிவப்பணுக்கள்:

    அடிக்கடி கோழிக்காலை சமைத்து சாப்பிட்டு வந்தால், சருமம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கிவிடும். நமக்கான ரத்த சிவப்பணுக்கள் அளவை அதிகரிக்கவும் செய்கின்றன. அதுமட்டுமல்ல, கோழியின் கால்களில், புரோட்டீனும், கால்சியமும் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. உடலில் ஏற்படும் காயங்களை விரைந்து குணமாக்க இந்த கால்கள் உதவுகின்றன. மற்ற சிக்கனை போலவே, இந்த கோழியின் கால்களில், குழம்பு செய்யலாம், சிக்கன் ௬௫ செய்யலாம். ஆனால், சூப் செய்து குடிப்பதையே பலரும் விரும்புவார்கள்.

    கால் சூப்:

    இந்த சூப் செய்வதற்கு, முதலில் கோழியின் கால்களை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். இதற்கு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கோழி கால்களை அதில் போட்டு, எடுக்க வேண்டும். பிறகு, கோழியின் கால்களில் உள்ள மெல்லிய மஞ்சள் நிற தோலை கையாலேயே உரித்து எடுத்து கொள்ள வேண்டும். அடுத்ததாக, கால் விரல்களை வெட்டித்தள்ளி விட்டு, கால்களை மட்டும் சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

    கோழிக்கால் குழம்பு:

    இப்போது, ஒரு வாணலில், எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், கல் உப்பு சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், குழம்பு மசாலா தூள் சேர்த்து தண்ணீர் + கோழி கால்களை அதில் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் கொதித்தபிறகு, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கினால், கோழிக்கால் சூப் ரெடி. அதேபோல, வெறும் கோழிகால்களை சுத்தம் செய்து, வெறும் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், மிளகுதூள் சேர்த்தும் சூப் செய்து குடிக்கலாம்.

    • புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை.
    • ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம்.

    புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை. இது தசைகளுக்கு வலுசேர்க்கிறது. செல்களை புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன், வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை. நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம். சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துக்கள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச்சத்தை பெறலாம்.

    இயற்கை உணவைச் சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது போன்ற மற்ற சத்துக்களும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். செயற்கை பானங்களில் இருக்கிற புரதத்தை உடல் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரதச்சத்து சம்பந்தப்பட்ட பவுடரை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதுவும் தவறு.

    உடற்பயிற்சி கூடத்துக்கு செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.

    • புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.
    • புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும்.

    பெரும்பாலான மக்கள் காலை முதல் இரவு உணவு வரை இட்லி, தோசை, ரொட்டி, பூரி, உப்மா, பொங்கல், சப்பாத்தி, சாதம், பிரியாணி போன்ற கார்போஹைட்ரேட்கள் நிறைந்த உணவையே எடுத்துக்கொள்கிறார்கள். நாம் திருவிழா நேரங்களில் செய்யும் தின்பண்டங்கள், கோவிலில் வழங்கப்படும் புளியோதரை போன்ற பிரசாதங்களும் அரிசியால் மட்டுமே செய்யப்படுகின்றன.

    சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதால் தான்  என மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்போஹைட்ரேட் அளவைக் குறைத்து, புரதங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே வித்தியாசமாக வரகு அரிசியை கொண்டு புளியோதரை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    வரகரிசி- ஒரு கப்

    மல்லி (தனியா)- ஒரு டீஸ்பூன்

    எள் - ஒரு டீஸ்பூன்

    வெந்தயம் - கால் ஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 10

    புளி - பெரிய எலுமிச்சை அளவு

    வேர்க்கடலை - 5 தேக்கரண்டி

    கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன்

    உளுந்தம்பருப்பு, கடுகு- ஒரு ஸ்பூன்

    கறிவேப்பிலை- தாளிக்க

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

    எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    வரகு அரிசியை சுத்தம் செய்து 10 நிமிடம் ஊறவைத்து, தண்ணீர் அளவு ஒருகப் அரிக்கு இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். ஒரு வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து ஆறவிட்டு, மிக்சியில் போட்டு பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். பின்னர் புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.

    அதன்பிறகு, அரைத்து வைத்திருக்கும் பொடியை சேர்த்துக் கிளறி, எண்ணெய் நன்கு பிரிந்துவரும் போது இறக்கினால். புளிக்காய்ச்சல் தயார். தேவையான அளவு புளிக்காய்ச்சலை எடுத்து வரகு அரிசி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

    • கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன.
    • புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும்.

    பாலுக்கு விலை என்பது பாலில் அடங்கியுள்ள சத்துக்களின் அளவை கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை உயர்த்த சரியான தீவன மேலாண்மையை கையாள வேண்டும்.

    பாலில் தண்ணீர், கொழுப்பு, புரதம், சர்க்கரை, சாம்பல் சத்து ஆகியவை உள்ளன. இதில் புரதம், சாம்பல் சத்து, சர்க்கரை ஆகியவை கொழுப்பற்ற திடப்பொருட்கள் ஆகும். இவற்றை தவிர கொழுப்பின் அளவை கொண்டு பாலுக்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக, பசும்பாலில் 3.5 சதவீதம் கொழுப்பும், 8.5 சதவீதம் கொழுப்பற்ற திடப்பொருட்களும் இருக்க வேண்டும். பாலில் கொழுப்பு மற்றும் இதர சத்துக்களை தீவனம் உள்பட சில வழிகளில் அதிகரிக்கலாம். மாடுகளில் 1 லிட்டர் பால் உற்பத்திக்கு 400 கிராம் கலப்புத் தீவனம் கொடுக்கலாம்.

    மேலும், கலப்புத் தீவனத்தில் மாவுச்சத்துக்களின் அளவு அதிகரித்தால், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும். மாடுகளின் பாலில் இதர சத்துப் பொருட்கள் அதிக அளவில் இருக்க 12 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக பால் கறக்க வேண்டும். மடியில் பாலை சேர விடக்கூடாது. சினை மாடுகளுக்கு 8 மாத சினைக்காலம் முதல் 2 கிலோ அடர்தீவனம் கொடுத்தால் பாலின் உற்பத்தியும், பாலில் கொழுப்பற்ற திடப்பொருட்களின் அளவு அதிகரிக்கும்.

    பாலில் கொழுப்பின் அளவை அந்த மாடுகளின் மரபு கூறுகள் தீர்மானிக்கின்றன. சில மாடுகளின் பாலில் குறைந்த அளவு கொழுப்பு சத்து இருப்பது அதன் மரபு பண்பாக இருந்தால் அதை நாம் மாற்ற முடியாது. எரிசக்திக்கான தீவனம் மற்றும் நார்ச்சத்து தீவனங்களை அளிப்பதால் கொழுப்புச் சத்தை அதிகரிக்கலாம்.

    பொதுவாக, கன்று ஈன்றவுடன் பசுவின் உடலில் உள்ள கொழுப்பு சத்து பால் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு விடுவதால் மாடுகளின் உடலில் கொழுப்பு சத்து குறைந்து மாடுகள் மிகவும் மெலிந்து இருக்கும்.

    பாலில் கொழுப்பும் குறைவாக இருக்கும். இது போன்ற பாதிப்பு வராமல் தடுக்க, மாடுகள் கன்று ஈனுவதற்கு 2 முதல் 3 வாரங்களுக்கு முன்பிருந்து மாடுகளுக்கு பருத்தி கொட்டை, சோயா, சூரியகாந்தி போன்ற எரிசக்தி மிகுந்த தீவனங்களை அளிக்க வேண்டும்.

    மாடுகள் கறவையில் உள்ள போது கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற எரிசக்தி மிகுந்த தானியங்களை தரவேண்டும். கலப்பு தீவனத்தில் 33 சதவீதம் பிண்ணாக்கு, 30 சதவீதம் தவிடு கலந்து ஒவ்வொரு 3 லிட்டர் கறவைக்கு 1 கிலோ கலப்பு தீவனம் என்ற அளவில் தர வேண்டும். இதன் மூலம் கறவை மாடுகளின் பாலில் கொழுப்பின் அளவை சீராக தக்க வைக்கலாம்.

    மாடுகளின் தீவனத்தில் நார்ச்சத்து குறைவாக இருந்தால் பாலில் கொழுப்பின் அளவும் குறையும். எனவே ஒரு மாட்டிற்கு அன்றாடம் 15 கிலோ பசுந்தீவனம், 4 முதல் 5 கிலோ காய்ந்த தீவனம் அளிக்க வேண்டும்.

    இது தவிர கலப்பு தீவனத்தில் மக்காச்சோளம், கம்பு போன்ற தீவனங்கள் பெரிய அளவு துகள்களாக இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

    ஒரு மாட்டிற்கு 30 சதவீதம் என்ற அளவில் தாது உப்பு கலவையை தீவனத்துடன் கலந்து அளித்தால் சத்து குறைபாடுகள் நீக்கப்படும். இத்துடன், ஒரு மாட்டிற்கு 15 முதல் 20 கிராம் அளவில் சோடா உப்பை தீவனத்தில் கலந்து கொடுக்கும் போது வயிற்றில் அமிலத் தன்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

    இதனால் பாலில் கொழுப்பு அதிகமாகும். இது போன்ற பராமரிப்புகளை கால்நடை விவசாயிகள் கடைப்பிடித்தால் பாலில் கொழுப்பும், இதர சத்துக்களும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.

    உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
    உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்க உதவுவது புரதம். உடல் வளர்ச்சிக்கும் தசை வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் புரதத்தை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

    1. நகம், கூந்தல் மற்றும் சரும பிரச்சனைகள்


    கூந்தல், நகம் மற்றும் சருமம் ஆகியவற்றிற்கு புரதம் மிகவும் முக்கியமானது. உடலில் புரதச் சத்து குறைந்தால் சருமம் சிவந்து போதல், நகம் உடைதல், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    2. தசை இழப்பு

    தசைகளின் வளர்ச்சிக்கு புரதம் இன்றியமையாதது. உடலில் புரத குறைபாடு ஏற்பட்டால், முதலில் நீங்கள் தசைகளை இழக்க ஆரம்பிப்பீர்கள். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

    3. எலும்பு முறிவு ஏற்படும்

    எலும்புகளின் வலிமை மற்றும் அடர்த்தியை பராமரிக்க புரதம் மிகவும் அத்தியாவசியமானது. போதுமான அளவு புரதத்தை உட்கொள்ளாவிட்டால் எலும்புகள் வலுவிழந்து முறியும் வாய்ப்பு உள்ளது.

    4. அதிகபடியான பசி ஏற்படும்

    நாள் ஒன்றுக்கு தேவையான புரதம் கிடைத்துவிட்டால் , அடிக்கடி பசியுணர்வு ஏற்படாமல் இருக்கும். புரத குறைபாடு இருக்கும்போது நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு கொண்டே இருப்பீர்கள் இதனால் உடலில் கலோரிகள் சேர்த்து உடல் பருமானாகிவிடும்.

    5. நோய் தொற்றின் அபாயம் ஏற்படும்

    உடலுக்கு முக்கியமாக தேவைப்படுவது புரதம். புரத குறைபாட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். இதனால் மிக எளிதில் நோய் தொற்று ஏற்படும்.

    6. ஃபேட்டி லிவர்

    புரத குறைப்பாட்டின் மற்றொரு அறிகுறி கல்லீரலில் கொழுப்பு தேக்கமடைவது. கல்லீரல் செல்களில் கொழுப்பு குவிந்து ஃபேட்டி லிவர் நோய் அபாயத்தை உண்டாக்கும்.

    7. குழந்தைகளில் வளர்ச்சியில் தாமதம்

    குழந்தைகளில் தசை மற்றும் எலும்பு வளர்ச்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் துணையாய் இருப்பது புரதம். எனவே வளரும் குழந்தைகளுக்கு புரதத்தை அதிகம் கொடுக்க வேண்டும்.

    கடல் உணவுகள், சோயா, முட்டை, பீன்ஸ், பால், சீஸ், யோகர்ட், பாதாம், ஓட்ஸ், கோழி, காட்டேஜ் சீஸ், ப்ரோக்கோலி, மீன், சிறுதானியம், பருப்பு வகைகள், பூசணி விதை, ஆளிவிதை, சூரியகாந்தி விதை, இறால், கடலை மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உணவில் சேர்த்து கொண்டு புரத குறைபாட்டை விரட்டலாம்.
    ×