search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் எடை குறையும்"

    • மனிதனை இந்த எந்திரங்கள் சோம்பேறி ஆக்கிவிட்டது.
    • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன.

    அந்த காலத்தில் சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் பெரிய மனிதர்கள். அதாவது பணக்காரர்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது கார்கள், டூவீலர்கள் என்று போக்குவரத்து வசதி பெருகிவிட்டது. இதனால் சொகுசு ஒருபுறம் இருந்தாலும், அதனால் வெளிப்படும் கரியமில வாயுவால் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்சம், நஞ்சமல்ல.

    மேலும், மனிதனை இந்த எந்திரங்கள் சோம்பேறி ஆக்கிவிட்டது, அவர்களின் உடலில் நச்சுக்களை சேர்க்க வைத்து, கொல்ல ஆரம்பித்துவிட்டது. சைக்கிள் ஓட்டிய காலம் வரையில் மனிதனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இப்போது மருத்துவமனைகளுக்கு செல்லும் கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் வாகன ஓட்டிகள் தான் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    சைக்கிள் ஓட்டுவதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. இதனால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது. சீராக சைக்கிளை ஓட்டுவதால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது தெரியுமா?

    * ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.

    * இதய நோய் ஏற்படும் அபாயம் காணாமல் போகிறது.

    * மனதை திசைதிருப்பி பதற்றத்தை தணிக்க உதவுகிறது. சாலையில் பார்க்கும் காட்சிகளால் மன இறுக்கமும் தளர்கிறது.

    * ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைக்கப்படுகிறது.

    * உடல் எடை சீராக்கப்படுகிறது.

    * தோளின் நிறம் மேம்படுகிறது.

    * உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

    சைக்கிளை ஓட்டுவதால் மேற்கண்ட பலன்கள் கிடைக்கின்றன என்று அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தற்போது மேலை நாடுகளில் மக்களின் உடல் நலனை மேம்படுத்துவதுடன், போக்குவரத்தால் ஏற்படும் கார்பன் வெளிப்பாட்டை குறைப்பதற்காக சைக்கிள்களுக்கு பெருமளவில் வரியை குறைத்து அதன் விற்பனையை ஊக்குவித்து வருகின்றன.

    ஏராளமான நிறுவனங்கள் சைக்கிள் வாடகை கடைகளை நவீன முறையில் ஆரம்பித்துள்ளன. அதாவது நாம் வசிக்கும் இடத்தில் இருந்து சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, செல்லும் இடத்தில் உள்ள கடையில் அதை ஒப்படைத்துவிட்டு, அதற்கான வாடகையை மட்டும் செலுத்திவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

    இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் சைக்கிள் பரண்களுக்கு போய் நாட்களாகிவிட்டது. இனியாவது அதனை சுத்தம் செய்து பயன்படுத்த ஆரம்பிப்போம்.

    • யோகா என்பதற்கு ஒன்றிணைதல் என்பது அர்த்தம்.
    • கிரியா என்பதற்கு உள்நிலை செயல்பாடு என்பது அர்த்தம்.

    யோகா என்பதற்கு ஒன்றிணைதல் என்பது அர்த்தம். யோகா செய்யும்போது நம் உடல், மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவை ஒன்றிணைந்து மன அழுத்தங்களை குறைத்து மனதில் அமைதி நிலவச்செய்யும். யோகாவில் கர்ம யோகா, ஞான யோகா, கிரியா யோகா, பக்தி யோகா என நான்கு வகை உள்ளன. இதில் கிரியா யோகா பற்றி இப்பதிவில் பார்ப்போம்.

    கிரியா என்பதற்கு உள்நிலை செயல்பாடு என்பது அர்த்தம். கிரியா யோகா செய்யும்போது உங்கள் உள்நிலை செயல்பாட்டை மட்டுமே உள்ளடக்கி செய்தலாகும். கிரியா யோகாவை மேற்கொள்ளும்போது ஆன்மீகப் பாதையில் நடப்பது சக்தி வாய்ந்தது. ஆனால் உங்கள் ஈடுபாடும், ஒழுக்கமும் அதில் அதிகம் தேவைப்படும். அவ்வளவு எளிதாக கிரியா பயிற்சி இருக்காது.

    ஆனால் இரக்கத்துடனும் பொறுமையுடனும் செய்தால், உங்கள் மனதின் உள்ஞானத்தை உண்மையிலேயே ஒளிரச் செய்யலாம். கிரியா யோகாவை மேற்கொள்ள எளிய முறைகளை கீழே கூடுத்துளோம். அவற்றை சிறந்த நிபுணரின் வழிகாட்டுதல் மூலமாக மேற்கொள்வது அவசியம்.

     கிரியா யோகா செய்யும் முறை:

    * முதலில் நின்றபடி, கைகளை ஒன்று சேர்த்து மார்பினை ஒட்டி வணங்கிய நிலையில் அரை வினாடிகள் கண்களை மூடி நிற்க வேண்டும்.

    * அதன் பிறகு, முட்டிக் கால் இட்டு, முன்புறமாக கைகளை ஒன்று சேர்த்து வணங்க வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

    * அடுத்து, கைகளை பக்கவாட்டில், வைத்து உள்ளங்கைகளை நெஞ்சுக்கு நேரே குவித்து இருக்குமாறு வணங்க வேண்டும். அந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும்.

    * மீண்டும், கைகள் இரண்டையும் முன்புறமாக கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் இருந்தபடியே கால் பாதங்கள் இரண்டையும் மேலும் கீழும் மூன்று முறை அசைக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.

    * நின்றபடி, நமக்கு பிடித்த தெய்வத்தை மனதில் கொள்ள வேண்டும்.

    * மண்டியிடும் போது யோகா குருவினை மனதில் கொள்ள வேண்டும்.

    யோகாசனம் செய்வதற்கு முன்பாக, நாம் நம் உடலை எளிய பயிற்சிகள் மூலம் ஆயத்தப்படுத்துதல்

    * நம் கால்களை 'V' வடிவில் விரித்து நிற்க வேண்டும்.

    * கைகளை முன்புறமாக தோள்பட்டை அளவிற்கு உள்ளங்கைகளைச் சேர்த்து நீட்ட வேண்டும்.

    * பக்கவாட்டில், நம்முடைய உள்ளங்கைகள் பூமியை நோக்கி இருக்குமாறு விரித்து வைக்க வேண்டும்.

    * இவ்வாறு மேற்குறிப்பிட்ட நிலையில், பத்து எண்ணிக்கை மனதில் கொண்டு முன்புறமாகவும், பக்கவாட்டிலும் மாறி மாறி கைகளை மாற்றி, சாதாரண பயிற்சி செய்ய வேண்டும்.

    • சைவ உணவுதான் ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
    • நாள்பட்ட நோய் பாதிப்புகளை குறைக்க முடியும்.

    சைவ உணவுதான் ஒட்டுமொத்த உடலுக்கும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. அதனை சாப்பிடுவதன் மூலம் பல நாள்பட்ட நோய் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்புகிறார்கள். அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை தேர்ந்தெடுப்பவர்கள் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

    அசைவ உணவு பிரியர்களுக்கு அதனை கைவிடுவது கடினமானதாகத் தோன்றலாம். ஒரு மாதம் மட்டும் ஒட்டுமொத்தமாக அசைவ உணவையும் புறக்கணித்துவிட்டு சைவ உணவை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    ஒரே மாதிரியான சத்துகள்:

    அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏதேனும் உடல்நல காரணங்களுக்காக சைவ உணவுக்கு மாறும்பட்சத்தில் சில நாட்களை கடப்பதற்கு கடினமாகவே இருக்கும். அசைவ உணவுகளில் கிடைக்கும் சத்துக்களை சைவ உணவுகளில் இருந்தும் பெறலாம். இரண்டு உணவுத் திட்டங்களிலும் ஒரே மாதிரியான சத்துகளே கிடைக்கும். உணவு தேர்வு முறையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    செரிமான செயல்முறை:

    சைவ உணவு தாவர அடிப்படையிலானது. அதில் நார்ச்சத்து நிறைந்திருக்கும் உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது செரிமான செயல்முறையை மேம்படுத்தும். மேலும் தாவர அடிப்படையிலான சைவ உணவு மலச்சிக்கல் பிரச்சினையை கட்டுப்படுத்தும். குடல் இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு வழிவகை செய்யும்.

    கொழுப்பைக் குறைக்கும்:

    இறைச்சி உணவுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடியவை. அதே சமயம் தாவர அடிப்படையிலான சைவ உணவுகளில் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது. கெட்ட கொழுப்பை வெளியேற்றுவதற்கு உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. சைவ உணவை சாப்பிடுவதன் மூலம் கொலஸ்டரால் அளவை சீராக பேண முடியும்.

    நாள்பட்ட நோய்களை குறைக்கும்:

    சைவ உணவை உண்பதால் இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயங்களைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்கள் உறுதிபட கூறுகிறார்கள்.

    அழற்சியை கட்டுப்படுத்தும்:

    இறைச்சி சார்ந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அழற்சி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உட்கொள்பவர்களுக்கு பல நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும். சைவ உணவை சாப்பிடுவது அழற்சி சார்ந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்த உதவும்.

    உடல் எடையை குறைக்கும்:

    உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு சைவ உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாவர அடிப்படையிலான இந்த உணவுகள், விலங்கு வகை இறைச்சி உணவுகளுடன் ஒப்பிடும்போது குறைந்த கலோரிகளை கொண்டுள்ளன. மேலும் சைவ உணவு வயிற்றுக்கு நிறைவாக சாப்பிட்ட உணர்வை தரும். அதனால் பசியை குறைக்க உதவும்.

     ஆற்றலை அளிக்கும்:

    தாவர அடிப்படையிலான சைவ உணவுகளில் ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை உடலிலின் ஆற்றல் அளவை அதிகரிக்கச்செய்யும். ஆனால் அசைவ உணவுகள், குறிப்பாக `ரெட் மீட்' எனப்படும் சிவப்பு இறைச்சி வகைகளை அதிகம் சாப்பிடுவது

    புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்க செய்யும். அதிலும் பன்றி இறைச்சி மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை தொடர்ந்து அதிகம் சாப்பிடுவது மலக்குடல் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். மாட்டிறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கக்கூடும்.

    • தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுகிறது.
    • சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும்.

    சைவ இறைச்சி என்பது தாவர இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தாவரங்களில் இருந்து, சில கூறுகள் எடுக்கப்பட்டு, இதன் மூலம் சிறப்பு தொழில்நுட்பம் மூலம் சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது

    மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியைப் போலவே தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுவதை 'தாவர இறைச்சி' அல்லது 'சைவ இறைச்சி' என்று அழைக்கிறோம். இதன் சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும். தாவர இறைச்சி பெரும்பாலும் சோயா, காளான், பீன்ஸ், கோதுமை ஆகிய மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

    இறைச்சியின் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்க இதனுடன் மாதுளைப்பொடி, பீட்ரூட் சாறு, சோயா லெகிமோ குளோபின் போன்ற நிறமிகள் கலக்கப்படுகின்றன.

    சமீபகாலமாகவே தாவர இறைச்சியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையிலும் இதற்கு வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், தாவர இறைச்சி உடலுக்கு நல்லதா என்ற கேள்வியும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் இங்கே...

    மாமிச உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கும், உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் அசைவ பிரியர்களுக்கும் தாவர இறைச்சி ஒரு மாற்று உணவாகும். விலங்குகளின் மூலம் கிடைக்கும் இறைச்சியின் ருசியையும் இது ஈடுசெய்யும். தாவர இறைச்சியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் நார்ச்சத்து, வைட்டமின் சி. பிளேவனாய்டுகள் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கின்றன. அதேசமயம் விலங்கு இறைச்சியில் இருந்து பெறப்படும் இரும்பு, வைட்டமின் டி துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர இறைச்சியில் குறைந்த அளவே உள்ளன.

    எனவே தாவர இறைச்சி சாப்பிடும் நாட்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. இவ்வாறு சாப்பிடும்போது தாவர இறைச்சியில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை மற்ற உணவுகள் சமன் செய்யும்.

    தாவர இறைச்சியில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதன் மூலம் இதயநோய், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

     சோயா, காளான், பீன்ஸ் போன்றவை மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உருளைக் கிழங்கு. சிலவகை தாவர எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கலந்தும் தாவர இறைச்சி தயாரிக்கப்படுகிறது. எனவே தாவர இறைச்சியை வாங்கும்போது குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

    விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் உள்ள புரதத்தை மனித உடலால் குறைவான அளவே உட்கிரகிக்க முடியும். தாவர இறைச்சி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் அது செரிமானம் ஆகும் தன்மையானது.

    சமைக்கும் முறை, சமைப்பதற்காக தாவர இறைச்சியில் சேர்க்கப்படும் பொருட்கள். சாப்பிடுபவரின் செரிமான சக்தி ஆகியவற்றை பொறுத்து மாறக்கூடும். விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியுடன் ஒப்பிடும்போது. தாவர இறைச்சி சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

    • புரதச்சத்து குறைபாடு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
    • வே புரோட்டீன் சாப்பிட பயப்படுகிறார்கள்.

    உணவில் புரதச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் அது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தசைகளின் அடர்த்தி குறையும். எடையைக் குறைப்பது கடினமாகும்.

    புரோட்டீன் பவுடர் எடுக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், கடைகளில் கிடைக்கும் `வே புரோட்டீன்' போன்றவற்றை எடுத்துக்கொண்டால் பக்க விளைவுகள் வருமா என பயப்படுகிறார்கள். இன்னொரு பக்கம் அதன் விலை அதிகமாக இருப்பதால் எல்லோராலும் வாங்கி பயன்படுத்தவும் முடிவதில்லை.

    உணவில் புரதச்சத்துக் குறைபாடு ஏற்பட்டால் அது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தசைகளின் அடர்த்தி குறையும். எடையைக் குறைப்பது கடினமாகும். வே புரோட்டீன் சாப்பிட பயப்படுகிறவர்கள், வீட்டிலேயே புரோட்டீன் பவுடர் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

    வீட்டிலேயே நீங்கள்தான் தயாரிக்கப்போகிறீர்கள் என்பதால் அதில் செயற்கையான பொருள்களையோ, கெமிக்கலையோ சேர்க்கப்போவதில்லை. அதை செய்வதும் ரொம்பவே சிம்பிள். பட்ஜெட்டும் கம்மி.

     ஹோம் மேடு புரோட்டீன் பவுடர் தயாரிக்க வால்நட்ஸ், பாதாம், பூசணிவிதை, சூரியகாந்தி விதை, பொட்டுக்கடலை மற்றும் சியா சீட்ஸ் ஆகிய அனைத்திலும் தலா 60 கிராம் எடுத்துக்கொள்ளவும். ஒவ்வொன்றையும் வெறும் கடாயில் குறைந்த தணலில் வைத்து வறுத்தெடுக்கவும்.

     வறுத்த பொருட்களை ஒன்றாகக் கலந்து ஆறவைத்து மிக்சியில் நைசாகப் பொடித்துக்கொள்ளவும். இந்த பொடியில் 4 டீஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கவும். வொர்க் அவுட்டுக்குப் பிறகு, இதை குடிப்பது உங்கள் உடலுக்கான ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யும்.


    தினமும் குடித்து வந்தால் புரதச்சத்துக் குறைபாடும் நீங்கும். எடையைக் குறைப்பதும் எளிதாகும். எனவே வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். உடல் எடையை எளிதாக குறைத்துவிட முடியும்.

    • புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
    • டீ அருந்தினால் தான் உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும்.

    காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை அருந்துங்கள். அதில் சர்க்கரையை சேர்த்துக்கொள்ள கூடாது. காபி அல்லது டீ போன்ற காலைநேர குடிநீர் எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

    காலை உணவை அரசனைப்போல் உண்ண வேண்டும். புரோட்டீன் சத்துக்கள் நிறைந்த ஓட்ஸ் மற்றும் முட்டை, பழங்கள் உண்ணலாம்.

    உப்புமா, சிறுபருப்பு தோசை, எண்னெய் சேர்க்காத ரொட்டி, ஆம்லெட், பனீர் போன்றவற்றை தொட்டுக்கொள்ளலாம்.

    மதியம் நிச்சயமாக உங்களுக்கு அளவுகடந்த பசி எடுக்கலாம். அப்போது ஒரு பவுல் நிறைய பழங்கள் அல்லது காய்கறிகள் நிறைந்த சாலட் வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

     கார்போஹைட்ரேட் நிறைந்த சிகப்பு அரிசி, முட்டை, வேகவைத்த சிக்கன் என புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

    எண்ணெய் சேர்க்காத கோதுமை ரொட்டி மற்றும் பருப்பு குழம்பு போன்றவற்றையும் உண்ணலாம்.

    மாலையில் ஒரு கப் காபி அல்லது டீ அருந்தினால் தான் உடலுக்கு புத்துணர்ச்சியாக இருக்கும். இருப்பினும் எண்ணெயில் வறுத்த சமோசா, பஜ்ஜி என உண்பதை தவிர்த்துவிடுங்கள். அதற்கு பதில் ஆப்பிள், நட்ஸ் வகைகள், வேகவைத்த கடலைகள் போன்றவற்றை உண்ணலாம்.

    இரவு உணவிற்கு என தனியாக சமைக்க வேண்டாம். மதியம் என்ன உணவு சாப்பிட்டீர்களோ அதையே இரவும் சாப்பிடலாம். தூங்குவதற்கு முன்பு பசி இருந்தால் சூடாக ஒரு டம்ளர் பால் குடிக்கலாம்.

    இந்த டயட்டை நீங்கள் தினமும் பின்பற்றினால் போதும் உங்களது கண்களை நீங்களே நம்ப முடியாத அளவுக்கு உடல் எடையில் நிச்சயம் நல்ல மாற்றம் இருக்கும்.

    • தற்போது பிரபலமாக இருக்கும் சிகிச்சை முறைதான் ஐஸ் தெரபி.
    • ஐஸ் கட்டியை தேய்க்கும்போது சருமத்தில் உள்ள திசுக்கள் சுருங்க ஆரம்பிக்கும்.

    உடலில் ஆங்காங்கே படிந்து இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை குறைப்பதன் மூலம், உடல் எடையை விரைவாக குறைக்க முடியும். இதற்கு உதவும் வகையில் தற்போது பிரபலமாக இருக்கும் சிகிச்சை முறைதான் ஐஸ் தெரபி.

    உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு மென்மையாக தேய்த்து மசாஜ் செய்யும்போது படிப்படியாக கொழுப்பு குறையும்.

     ஐஸ் கட்டியை தேய்க்கும்போது சருமத்தில் உள்ள திசுக்கள் சுருங்க ஆரம்பிக்கும். இதன் மூலம் அங்கே படிந்திருக்கும் கொழுப்பு கரையும். அதுமட்டு மில்லாமல் அறுவை சிகிச்சை மூலம் உண்டாகும் தழும்பு களையும், ஸ்டிரெட்ச் மார்க்குகளையும் இந்த முறையின் மூலம் குறைக்க முடியும்.

     கைகள், தொடைகள், வயிறு போன்ற பகுதிகளில்தான் கொழுப்பு அதிக அளவில் படிந்து இருக்கும். இதனால், அந்த பகுதிகளில் சதை தொங்கத் தொடங்கும். அத்தகைய இடங்களில் ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும் அரை மணி நேரம் வரை மசாஜ் செய்து வரலாம். இதன் மூலம் சருமத்திசுக்கள் இறுக்கம் அடைந்து உறுதியாகும்.

    ஐஸ் தெரபியோடு, ஊட்டச்சத்து நிறைந்த சரியான உணவுமுறை மற்றும் மிதமான உடற்பயிற்சி களையும் பின்பற்றி வந்தால் முழு பலனையும் அடைய முடியும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். கீரைகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரலாம். சர்க்கரை, இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    ஐஸ் தெரபி செய்யும் முறை:

    தற்போது சந்தைகளில், இதற்காக பல்வேறு வகையான மூலிகைகள் அடங்கிய ஐஸ் பேக்குகள் கிடைக்கின்றன. வீட்டில் தயாரிப்பதாக இருந்தால் ரோஸ்மேரி இலைகள், கிரீன் டீ பேக்குகள் 12 ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆற வைக்க வேண்டும். இதை ஐஸ் டிரேயில் ஊற்றி பிரீசரில் வைக்க வேண்டும். இந்த ஐஸ் கட்டிகளை உடலில் கொழுப்பு அதிகம் உள்ள இடங்களில் தேய்த்து வரலாம்.

    ஐஸ் கட்டிகளை நேரடியாக சருமத்தின் மீது தடவக்கூடாது. அதை பருத்தி துணியில் சுற்றி பயன்படுத்த வேண்டும். நேரடியாக தடவும்போது. சருமத்தில் எரிச்சல் உண்டாகக்கூடும். ஒவ்வாமை ஏற்படுவது தெரிந்தால், இந்த தெரபியை தொடர்வதைத் தவிர்க்கலாம்.

    • மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
    • கர்பப்பை அழுக்கை வெளியேற்றும்.

    குழந்தைப்பேறு அளிக்கும் சாலியா விதை

    சாலியா விதை மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை லட்டை சாப்பிடுபவர்கள் கர்பப்பை அழுக்கை வெளியேற்றும். கர்பப்பையில் உள்ள நீர்க்கட்டி சரியாகும். கண்டிப்பாக கழிவுகள் வெளியாவது உறுதி. கண்டிப்பாக குழந்தை பிறக்கும்.

    ஒரு கப் சாலியா விதையை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சாலியா விதையை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். அதே கப் அளவுக்கு கருப்பட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனையும் பொடித்து சாலியா விதை பொடியுடன் சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்து கலந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

    இந்த உருண்டைகளை மாதவிடாய் நாளில் முதல் நாளில் இருந்தே இந்த உருண்டைகளை சாப்பிட வேண்டும். முதல் நாளில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு உருண்டை. அதுமட்டுமில்லாமல் ஒரு நாட்டுக்கோழி முட்டையும் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாட்களின் போது மூன்று அல்லது ஐந்து நாட்களும் உருண்டைகளும் மற்றும் நாட்டுக்கோழி முட்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

    சாலியா விதையில் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது. இது ஆங்கிலத்தில் garden cress seeds என அழைக்கப்படுகிறது. இவ்விதையில் வைட்டமின் ஏ, இ, சி, நார்சத்துகள், புரதசத்துகள், இரும்பு சத்துகள் உள்ளது.

    ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

    சாலியா விதைகளில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சாலியா உதவுகிறது. ஒரு தேக்கரண்டி சாலியா விதைகளில் 12 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.

    தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும்

    சாலியா விதைகளில் புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், அவை ஆற்றல்மிக்க பால்சுரப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பாலூட்டி சுரப்பிகளில் இருந்து தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டவும், பராமரிக்கவும் மற்றும் அதிகரிக்கவும் இந்த விதை உதவுகிறது.

    மாதவிடாயை சீராக்கும்

    மாதவிடாயை சீராக்க உதவுகின்றன. கர்ப்பத்தை திட்டமிட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. சாலியா விதைகளில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் பின்பற்றுகிறது, இது ஒழுங்கற்ற மாதவிடாய்களை சீராக்க உதவுகிறது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளை இயல்பாக்குவதற்கும் ஒரு இயற்கையான வழியாகும்.

    உடல்எடையை குறைக்கும்

    சாலியா விதைகளில், நார்ச்சத்து மற்றும் புரதத்தின் வளமான ஆதாரங்களாக இருப்பதால், பசியின்மை மற்றும் அதிகப்படியான உணவைத் தவிர்க்க உதவுகின்றன. இந்த விதைகளில் உள்ள நல்ல புரதச்சத்து, உடலின் தசைகளை பராமரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    ஃபிளாவனாய்டுகள் (ஆன்டிஆக்சிடன்ட்கள்), ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ உள்ள சாலியா விதைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும், இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் போன்ற பல்வேறு தொற்றுகளை தடுக்க உதவுகிறது.

    மலச்சிக்கலைப் போக்கும்

    சாலியா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து, சீரான குடல் இயக்கத்தை உருவாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு மற்றும் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளை போக்க உதவுகின்றன. சாலியா விதைகள் ஊட்டச்சத்துக்களின் சக்தியாக இருப்பதால் அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. சாலியா விதைகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின ஆலோசனையை மேற்கொண்டு உடல் பிரச்சினைக்கு தகுந்தார்போல் பயன்படுத்திக் கொள்ளாலாம்.

    • அதிக அளவு புரதமும், இரும்பு சத்தும் உள்ளது.
    • விட்டமின்-இ கண்கள் மற்றும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

    நம் உடல் எடையை குறைக்கவும், நம் அழகை பராமரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் உணவு பொருட்களில் இந்த கருப்பு கவுனி அரிசியும் ஒன்று. அரிசி உணவுகளுக்கு பதிலாக சிறுதானியங்கள், மருத்துவ குணங்கள் உள்ள மற்ற அரிசி வகைகள் என எடுத்துக்கொள்ளும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில், ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

    கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்முறை:

    கருப்பு கப்வுனி அரிசியை இரண்டு, மூன்று தடவை நன்றாக கழுவி அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த அரிசியை நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த அரிசியை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். வறுத்த மாவை ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

    கஞ்சி செய்வதற்கு ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் கருப்பு கவுனி அரிசி மாவினை போட்டு கஞ்சி பதத்திற்கு காய்ச்ச வேண்டும். (குறிப்பு ஒரு பங்கு மாவிற்கு 5 பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்) காய்ச்சிய கஞ்சியில் காரம், அல்லது இனிப்பு சுவையுடன் பரிமாறலாம். இந்த கஞ்சியை தொடர்ந்து ஒரு மாதம் காலையும், மாலையும் குடித்து வந்தால் நிச்சயமாக ஒரே மாதத்தில் உடல் எடைகுறைவதை நீங்களே உணரலாம்.

    கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்

    மற்ற அரிசி வகைகளான வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசி போன்றவற்றில் இருப்பதை விட கருப்பு கவுனி அரிசியில் குறைந்த அளவு மாவுச்சத்தும், அதிக அளவு புரதமும், இரும்பு சத்தும் உள்ளது. இதில் உள்ள விட்டமின்-இ கண்கள் மற்றும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

    முக்கியமாக கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து உணவுக்குப் பின் ரத்த சர்க்கரை அளவு உயராமல் சீராக இருக்க உதவுவதுடன், செரிமானப் பிரச்சினைகள், வாயு சம்பந்தப்பட்ட பிரச்சினை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையையும் சரி செய்யக்கூடியது. கூடவே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள சக்தி வாய்த்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நீரிழிவு, இதய நோய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்கவல்லது.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம்.
    • உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    தேவையான பொருட்கள்:

    வரகு அரிசி- 50 கிராம்

    பாசிபருப்பு- 25 கிராம்

    வெந்தயம்- கால் டீஸ்பூன்

    சீரகம்- கால் டீஸ்பூன்

    சின்ன வெங்காயம்- ஒரு கப்

    பட்டை- ஒரு துண்டு

    பிரிஞ்சு இலை- 1

    பூண்டு- 4 பல்

    செய்முறை:

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் வரகு அரசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு இந்த இரண்டையும் நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் நெய் ஊற்ற வேண்டும். இதில் வெந்தயம், சீரகம், சேர்த்து பொரிந்ததும் அதில் பட்டை, பிரிஞ்சு இலை, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும். அதனுடன் ஏற்கனவே களைந்து வைத்துள்ள அரிசியையும், பருப்பையும் சேர்க்க வேண்டும்.

    மேலும் கஞ்சி என்பதால் இதற்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். கஞ்சி நன்றாக வந்ததும் இதில் கொத்தமல்லி தலை, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் உடல் எடையை குறைக்கக்கூடிய வரகு அரிசி கஞ்சி தயார்.

    இந்த மாதிரி நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் கெட்ட நீரினை வெளியேற்ற உதவும். இதை உங்களது டயட்டிலும் சேர்த்துக்கொள்ளலாம். அதிகநேரம் பசிக்காது. பசியை அதிக நேரம் தாங்கும். உடல் எடையை குறைக்கவும் இந்த கஞ்சி பயன்படுகிறது.

    இதே செய்முறையில் நீங்கள் காய்கறிகளை சேர்த்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செய்து கொடுக்கலாம்.

    ×