search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயன்கள்"

    • உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம்.
    • மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் ஆரஞ்சுக்கு இருக்கிறது.

    * உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.

    * காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் நிறைந்திருக்கின்றன.

    * தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பிரச்சினைக்கான வாய்ப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்க உதவும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது. அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். விரைவில் முதுமை நெருங்காமல் தடுக்கும்.

    * கோடை காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருக வேண்டும். கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு துளியும் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும்.

    * ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு பழத்தில் நரின்கைன், ஹெஸ்பிரிதின் போன்ற பிளாவோனாய்டுகள் இருக்கின்றன. அவை மூட்டு வலிக்கு நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. கால்சியம் ஆக்ஸலேட் எனும் கல் உருவாகுவதை தடுக்கும் தன்மை ஆரஞ்சுக்கு இருக்கிறது. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

    • அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு.
    • வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம்.

    பெருங்காய பொடியை கடைகளில் வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் அதன் வாசனை வலுவாக இருப்பதை பார்க்கலாம். பெருங்காயத்தூள் என்று வாங்கும் சில தயாரிப்புகள் கலப்படமாக இருக்கலாம். நறுமணம் குறைந்து இருக்கலாம். வீட்டில் பெருங்காயத்தூள் தயாரித்து பயன்படுத்தும் போது அதன் நறுமணம் நன்றாக இருக்கும்.

    கலப்படமில்லாத ஆரோக்கியமான தயாரிப்பை வீட்டிலேயே செய்ய முடியும் என்னும் போது செய்முறையை கற்றுகொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெருங்காய பொடியை வீட்டில் எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கட்டி பெருங்காயம் - 100 கிராம் ( நாட்டு மருந்துகடை அல்லது மளிகை கடைகளில் கிடைக்கும்)

    உப்பு - கால் டீஸ்பூன்

    செய்முறை:

    பாக்கெட்டில் வாங்க கூடிய இந்த கட்டி பெருங்காயம் சில நேரங்களில் மென்மையாக இருக்கும். சில நேரங்களில் கடினமாக இருக்கும். இதை பிரிப்பது கடினமாக இருக்கும். மென்மையாக இருந்தால் சிறு சிறு பகுதியாக பிரித்து வையுங்கள். கடினமாக இருந்தால் உரலில் இட்டு துண்டுகளாக இடித்துக் கொள்ளுங்கள்.

    இரும்பு வாணலில் மிதமான தீயில் இதை வைத்து லேசாக வறுத்து பெருங்காயம் பொரிந்து நிறம் மாறும். லேசான மஞ்சள் நிறமாக, அதன் மேல் வெள்ளை புள்ளிகளாய் (நன்றாக பொரிய வேண்டும்) வரும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    பெருங்காயத்தை கட்டியாக அப்படியே வாணலியில் சேர்த்தும் சூடு செய்யலாம். பிறகு இறக்கி அதை துண்டுகளாக பிரிக்கலாம். நன்றாக பொரிந்த காயத்துண்டுகளை இப்போது இறக்கி ஆறவையுங்கள். வாணலியில் உப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.

    பிறகு இந்த பெருங்காயத் துண்டுகளை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். அதன்பிறகு மிக்சியில் நைசாக அரைத்து பொடியாக்கி காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.

    பெருங்காயத்தின் பயன்கள்:

    மசாலாக்கள் நிறைந்த உணவுகள் அனைத்திலும் பெருங்காயம் சிட்டிகை சேர்ப்பது மணத்தை அதிகரிக்க செய்யும். பெருங்காயம் கடவுளின் அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இவை உணவை அமிர்தமாக்கும் வல்லமை கொண்டவை. ஆரோக்கியம் அளிப்பவை.

    அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. வாயுவை உண்டாக்கும் உணவுகளில் கண்டிப்பாக பெருங்காயம் சேர்க்க வேண்டும். வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம். உடனே நிவாரணம் கிடைக்கும்.

    வாழைப்பழத்தை தோல் உரித்து பழத்தின் மேல் பெருங்காய பொடியை வைத்து பல்லில் படாமல் விழுங்கினால் வாயு கழியும் என்பார்கள் வீட்டு பெரியவர்கள். மோரில் பெருங்காயம் சேர்த்தும் குடிக்கலாம். அன்றாட உணவு முறையில் ஏதாவது ஒரு வகையில் பெருங்காயம் சேர்ப்பது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும்.

    • மூட்டுகளை இலகுவாக்குகிறது. எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.
    • நல்ல தூக்கம் வர உதவுகிறது. கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

    உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

    நடைப்பயிற்சி, நம் உள் உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அளித்து உடல் உறுப்புகளை சீராக செயல்பட உதவுகிறது.

    நடைபயிற்சி மேற்கொள்வதால், இடுப்பளவு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதை பகுதியை குறைக்க உதவுகிறது.

    தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    நடைப்பயிற்சி ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

    ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்

    தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

    உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும்.

    நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

    நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.

    நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.

    அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.

    முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.

    அடிவயிற்றுத் தொப்பையை குறைக்கிறது.

    மூட்டுகளை இலகுவாக்குகிறது.

    எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.

    கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.

    'கொலஸ்ட்ரால்' அளவைக் குறைக்கிறது.

    மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

    உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.

    நல்ல தூக்கம் வர உதவுகிறது.

    கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

    உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும்

    ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.

    சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்

    நடைபயிற்சியின்போது செய்ய கூடாதவை

    ஒரு கையால் செல்போனில் பேசிக்கொண்டும், மறுகையை பாக்கெட்டில் சொருகிக்கொண்டும் நடப்பதால் எந்த பயனும் இல்லை.

    இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்து வேகமாக நடைபோடுவதுதான் உண்மையான பயிற்சி.

    உடல் எடை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை

    அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல.

    மேடு, பள்ளம் உள்ள இடத்தில நடைபயிற்சி மேற்கொள்ளகூடாது..

    எவ்வாறு நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

    நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தவாறு நடக்க வேண்டும்.

    நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களை சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருக்க வேண்டும்..

    கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு நடக்க வேண்டும்.

    உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன் புறம் சாய்த்தவாறு நடக்க வேண்டும்.

    ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

    நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித்தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் நடக்க வேண்டும்.

    இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள்.

    நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள் ளுங்கள்.

    நடைபயிற்சியின் அவசியம்

    அதிகாலையில் நடப்பது மிகவும் நல்லது.அந்த நேரத்தில் நடப்பதால் தூய்மையான காற்றினை நாம் சுவாசிக்க முடியும்.

    அதிகாலையில் நடக்க முடியாதவர்கள் இரவு உணவுக்கு பின் அரை மணி நேரம் நடக்கலாம்.

    எக்காரணம் கொண்டும் வெறும் வயித்துல நடக்கக் கூடாது.

    அதிகாலையில் நடக்கிறவங்க, அதுக்கு முன்னாடி அரை லிட்டர் தண்ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிக்கலாம்.

    உடற்பயிற்சி துவக்கமாக ஒரே வேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் நடந்து பின்னர் கைகால்களை நீட்டவும். இதன்மூலம் நரம்புகளில் ஏதும் சோர்வோ அல்லது வீக்கமோ ஏற்படுவதில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

    • தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி.
    • ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் இந்தாண்டு பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், உதவி இயக்குனர் இளவரசன் ஆலோசனையின்படி,

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க நிகழ்ச்சி கொறுக்கை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமையில், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் பனைவிதை நடும்பணியை தொடக்கி வைத்தார்.

    தோட்டகலை அலுவலர் மதுமிதா திட்டம் குறித்து கூறும்போது:- பனை மரத்தை பாதுகாக்கவும், அதன் பயன்களை நம் சந்ததிகளுக்கு கிடைக்கும் வகையில், தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகளை 32 ஊராட்சிகளில் நடும் பணி செயல்படுத்தப்படவுள்ளது.

    அரசுக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் தோட்டகலை உதவி அலுவலர் கார்த்தி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்,

    ×