search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uses"

    • உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம்.
    • மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் ஆரஞ்சுக்கு இருக்கிறது.

    * உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.

    * காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் நிறைந்திருக்கின்றன.

    * தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பிரச்சினைக்கான வாய்ப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்க உதவும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது. அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். விரைவில் முதுமை நெருங்காமல் தடுக்கும்.

    * கோடை காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருக வேண்டும். கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு துளியும் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும்.

    * ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு பழத்தில் நரின்கைன், ஹெஸ்பிரிதின் போன்ற பிளாவோனாய்டுகள் இருக்கின்றன. அவை மூட்டு வலிக்கு நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. கால்சியம் ஆக்ஸலேட் எனும் கல் உருவாகுவதை தடுக்கும் தன்மை ஆரஞ்சுக்கு இருக்கிறது. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

    • இதனை “கைலாய மலையின் பனித்தூறல்” என்று வர்ணிப்பவர்களும் உண்டு.
    • சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    மனதை அமைதிப்படுத்தும் நில சம்பங்கி

    வெள்ளைநிறம் உடைய மலர்கள் சாத்வீக குணத்தை கொண்டவை. மீண்டும் மீண்டும் சாத்வீகமான மலர்களை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்து தரிசிக்கும்போது, அந்த வெள்ளை மலர்களில் உள்ள சாத்வீக குணம் நமக்குள்ளும் வந்துவிடும்.

    அத்தகைய சாத்வீக குணத்தை தரும் மலர்களில் ஒன்றாக நில சம்பங்கி மலர் உள்ளது. இந்த நில சம்பங்கி மலர்களுக்கு மற்ற மலர்களை விடக் கூடுதலான ஒரு அம்சம் உண்டு.

    அதாவது நில சம்பங்கி மிகமிக வலிமையான பிரத்யேகமான வாசனை கொண்டது.

    நில சம்பங்கி மாலையை மற்ற மலர்களைபோல கட்டுவது போல் இல்லாமல் ஊசியில் நூல் கோத்து, நீள நீளமாகக் கோத்து, மிக மெல்லிய, நளின மாலைகளை அணிவது இன்றும் வழக்கம்.

    இதைவிட ஆலயங்களில் செய்யப்படும் அனைத்து அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படும் மலர் இதுதான்.

    இந்தப் பூவின் வெண்மைநிறம் மற்றும் மெல்லிய நீண்ட குழல் போன்ற வடிவத்தின் காரணமாக, இதனை "கைலாய மலையின் பனித்தூறல்" என்று வர்ணிப்பவர்களும் உண்டு.

    இந்த மலர்மாலை அனைத்து ஆலயங்களிலும் அனைத்து தெய்வங்களுக்கும் எப்போதும் அணிவிக்கப்படும் மாலையாக உள்ளது.

    சகஸ்ரநாம அர்ச்சனைகளுக்கு ஏராளமான பூக்கள் தேவைப்படும்போது வாசனைமிக்க மலர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் இடம்பெறும் மலர் சம்பங்கிதான்.

    மல்லிகை சாகுபடி செய்யும் மதுரை விவசாயிகள் சமீபகாலமாக நிலசம்பங்கி சாகுபடிக்கு வெகுவாக மாறியுள்ளனர்.

    "இரவு ராணி" என்று நம் விவசாயிகள் இந்தப்பூவை சொல்வ துண்டு. சந்தை விற்பனையில் அதிகலாபம் பெற்றுக் கொடுப்பதால் இந்த மலர் பூ வியாபாரிகளின் செல்வம் ஆகவும் கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    அவனுக்குகந்த நாட்களிலும், நேரங்களிலும் கைநிறைய அள்ளி அள்ளி அர்ச்சித்து வணங்கினால் மனத்தூய்மை பெருகும்.

    உங்களைச்சுற்றி எது நடந்தாலும் பதற்றம் அடைய மாட்டடீர்கள். நிதானமான மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

    நிலசம்பங்கிப்பூக்களை "புதிய சிருஷ்டி" என்று புதுச்சேரி அன்னை வர்ணித்துள்ளார். எனவே சம்பங்கி மலர்கள் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தவும், இல்லாத அம்சங்களை உருவாக்கவும் உதவுகின்றன.

    • இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.
    • சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    கடன்களை தீர்க்கும் செவ்வரளி

    "அரளி" பூக்களில் எத்தனையோ வகைகள் உள்ளன. ஆனால் அரளி என்று சொன்னதும் சாதாரணமாக நம்மால் அழைக்கப்படும் மலர் செவ்வரளிதான்.

    சிவந்த அரளிப் பூ எங்கும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும் வளரக்கூடிய ஓரடுக்கு மலராகும்.

    இதுகெட்டி அரளி எனப்படும் ஈரடுக்கு மலராகவும் நமக்கு கிடைக்கிறது.

    ஆனால்பெரும்பாலான பக்தர்களால் விரும்பி வாங்கப்படுவது செவ்வரளிப்பூதான்.

    மகாவாராஹிக் குரிய மலர்களில் செவ்வரளி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

    அனைவருக்கும் கிடைக்கக்கூடிய எளிய மலர் செவ்வரளி, இம்மலர் சோலை, நந்தவனம், தோட்டம், பாதையோர பாலைவனம் என்ற பாகுபாடுகளின்றி, எங்கும் மிக எளிமையாக பூத்துக்குலுங்கும் அற்புத குணம் உடையது.

    சகாரா பாலைவனத்தில் கூட செவ்வரளி பூப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மலருக்கு விஞ்ஞான பூர்வமாக, காற்றிலுள்ள கார்பனின் அளவைக்குறைக்கக்கூடிய ஆற்றல் உண்டு.

    அதனால்தான் நமது தேசிய நெடுஞ்சாலைகளில் நாற்கரசாலைகளில் அக்கறையுடன் இந்த மலர் அதிகமாக வளர்க்கப்படுகின்றன.

    அம்மனை வழிபடும்போது நமது மனதை அம்மன் மீது ஒரு நிலைப்படுத்தி சிவப்பு அரளி கொண்டு பூஜை செய்தால், குடும்பச் சச்சரவுகள் மறைந்து ஒற்றுமை ஏற்படும்.

    மனம் திறந்து கடன் பிரச்சினைகளை கடவுளிடம் சமர்ப்பித்தவிட்டு மஞ்சள் அரளி கொண்டு பூஜை செய்தால் கடன் தொல்லை காணாமல் போகும்.

    வேதனை மிகுதியால் சஞ்சலப்படுபவர்கள், வெள்ளை அரளி கொண்டு வேதபிரானை அர்ச்சித்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும்.

    இத்தகைய பெருமை மிகு அரளிப்பூ, அனைத்து ஆலயங்களின் நந்தவனங்களிலும் செல்லக் குழந்தையாகவே வளர்க்கப்பட்டு வருகிறது.

    திருக்கரவீரம் மற்றும் திருக்கள்ளில் ஆகிய புண்ணிய தலங்களில் தல விருட்சமாகத் திகழகூடிய பெருமையையும் அரளி பெற்றுதுள்ளது.

    உத்திர நட்சத்திரக்காரர்கள் அரளிச்செடிகளை நடுவதும் வளர்ப்பதும் மிகவும் அல்லது என சொல்லப்படுகிறது.

    • காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
    • பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

    சஷ்டி விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

    கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின்சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.

    பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர்.

    ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும்.

    கந்தசஷ்டிவிரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும்.

    காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.

    ஆனால், வயோதிகர்கள்,நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.

    காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.

    காலை, மாலை வழிபாட்டின் போதுஅவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோசெய்ய வேண்டும்.

    ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.

    மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவதுநன்மை தரும்.

    சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர்வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

    பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.

    பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதாரவேண்டுங்கள்.

    அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லதுசிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.

    பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்குபொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

    பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம்ஒன்றினை ஏற்றுங்கள்.

    ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.

    மனம் முழுவதும் அந்தமயில் வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம்,கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

    ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்றுஉங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள்.

    முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம்முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.

    நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும்.

    எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான்.

    ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.

    அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர்.

    மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராட வேண்டியது அவசியம்.

    அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    வேறுசிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடைநைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.

    வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு,நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும்.

    நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில்நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

    • ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.
    • மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.

    சஷ்டி விரதம் வழிமுறைகள்

    கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.

    நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.

    அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.

    கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.,வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.

    கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.

    நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.

    சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.

    பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார்.

    இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.

    மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும்.

    பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு.

    ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

    மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.

    முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு.

    அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.

    அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.

    இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம்.

    சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.

    • குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.
    • கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.

    கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள்

    குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று.

    "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.

    எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.

    சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

    முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.

    இந்த விரதத்தை மனதில் கொண்டே "சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்'' என்ற பழமொழி எழுந்தது.

    சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

    கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.

    கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.

    அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

    உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.

    விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி,

    தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.

    ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.

    • அறுகோண வடிவிலான ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
    • இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.

    சஷ்டி யாகம்

    திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார்.

    அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.

    குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டத்திக்கு பாலகர்கள், துவார பாலகர்கள் என அனைத்து தெய்வங்கள், தேவதைகளை எழுந்தருளச் செய்வர்.

    உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.

    ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தளி சூரபத்மனை சம்ஹாரம் செய்வார்.

    அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாக சாலைக்கு திரும்புவார்.

    கண்ணாடிக்கு அபிஷேகம்

    ஜெயந்திநாதர், சூரபத்மனை சம்ஹாரம் செய்த பிறகு பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார்.

    அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும்.

    அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார்.

    இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.

    போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது.

    இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.

    இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான், முருகப்பெருமான் சன்னதிக்கு திரும்புவார் அத்துடன் சூரசம்ஹார வைபவமும் நிறைவடையும்.

    ராஜகோபுரம் திறக்காதது ஏன்?

    திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

    பிரதான கோபுரத்தை சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.

    ஆனால், அந்த பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

    முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.

    கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.

    அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

    • சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
    • ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

    கந்த சஷ்டிவிரதம்

    கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.

    சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.

    ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

    இந்த ஆறு நாளையும் பக்தர்கள் விரத நாட்களாக கடைபிடிக்கின்றனர்.

    செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

    தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருப்பது வழக்கம்.

    இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது.

    ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.

    தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து 'காப்புக்கட்டல்' அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.

    பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர்.

    இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.

    மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.

    • தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணி.
    • ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை மூலம் இந்தாண்டு பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

    அதன்படி, திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன், உதவி இயக்குனர் இளவரசன் ஆலோசனையின்படி,

    திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க நிகழ்ச்சி கொறுக்கை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் ஜானகிராமன் தலைமையில், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது.

    வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் பனைவிதை நடும்பணியை தொடக்கி வைத்தார்.

    தோட்டகலை அலுவலர் மதுமிதா திட்டம் குறித்து கூறும்போது:- பனை மரத்தை பாதுகாக்கவும், அதன் பயன்களை நம் சந்ததிகளுக்கு கிடைக்கும் வகையில், தோட்டகலைத்துறை மூலம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பத்தாயிரம் பனை விதைகளை 32 ஊராட்சிகளில் நடும் பணி செயல்படுத்தப்படவுள்ளது.

    அரசுக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால், குளம், சாலையோரங்களில் நட்டு பராமரிக்கப்படவுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில் தோட்டகலை உதவி அலுவலர் கார்த்தி மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர், பணித்தள பொறுப்பாளர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்,

    ×