என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சம்பங்கி"

    • கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.
    • பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி பூக்கள் பயிரிடப்படுகின்றன. நாள்தோறும் 5 டன் பூக்களுக்கு மேல் விளைகிறது. அவைகளை விவசாயிகள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள்.

    சத்தியமங்கலம் , பவானிசாகர், புளியம்பட்டி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் பூக்கள் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக சம்பங்கி பூக்கள் விளைச்சல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. திருமண சீசன் போது கிலோ ரூ.500-க்கு விற்பனையான சம்பங்கி பூக்கள் கடந்த சில வாரங்களாக கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ 50 ரூபாயாக சரிந்தது. இதற்கிடையே கடந்த 3 நாட்களாக ஒரு கிலோ சம்பங்கி பூக்கள் ரூ.10-க்கு விற்பனையானது.

    இதனால் கடும் வேதனை அடைந்த விவசாயிகள் விரக்தி காரணமாக சம்பங்கி பூக்களை பறித்து வாகனங்களில் ஏற்றிக் கொண்டு நீரோடைகளில் டன் கணக்கில் கொட்டி வருகிறார்கள். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, சம்பங்கி பூக்கள் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளது.

    இதை பயிரிட ஆயிரம் கணக்கில் செலவு செய்தோம். தற்போது சம்பங்கி பூ விலை கிலோ ரூ.10-க்கு சரிந்துள்ளதால் நாங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டால் மறுபடியும் பூ பூக்காது. தற்போது 10 டன் சம்மங்கி பூக்களை பறித்து ஓடைகளில் கொட்டி அழித்து வருகிறோம் என்று வேதனையுடன் கூறினர். மேலும் எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இதனை “கைலாய மலையின் பனித்தூறல்” என்று வர்ணிப்பவர்களும் உண்டு.
    • சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    மனதை அமைதிப்படுத்தும் நில சம்பங்கி

    வெள்ளைநிறம் உடைய மலர்கள் சாத்வீக குணத்தை கொண்டவை. மீண்டும் மீண்டும் சாத்வீகமான மலர்களை நாம் இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபாடு செய்து தரிசிக்கும்போது, அந்த வெள்ளை மலர்களில் உள்ள சாத்வீக குணம் நமக்குள்ளும் வந்துவிடும்.

    அத்தகைய சாத்வீக குணத்தை தரும் மலர்களில் ஒன்றாக நில சம்பங்கி மலர் உள்ளது. இந்த நில சம்பங்கி மலர்களுக்கு மற்ற மலர்களை விடக் கூடுதலான ஒரு அம்சம் உண்டு.

    அதாவது நில சம்பங்கி மிகமிக வலிமையான பிரத்யேகமான வாசனை கொண்டது.

    நில சம்பங்கி மாலையை மற்ற மலர்களைபோல கட்டுவது போல் இல்லாமல் ஊசியில் நூல் கோத்து, நீள நீளமாகக் கோத்து, மிக மெல்லிய, நளின மாலைகளை அணிவது இன்றும் வழக்கம்.

    இதைவிட ஆலயங்களில் செய்யப்படும் அனைத்து அலங்காரங்களுக்கும் அதிகம் பயன்படும் மலர் இதுதான்.

    இந்தப் பூவின் வெண்மைநிறம் மற்றும் மெல்லிய நீண்ட குழல் போன்ற வடிவத்தின் காரணமாக, இதனை "கைலாய மலையின் பனித்தூறல்" என்று வர்ணிப்பவர்களும் உண்டு.

    இந்த மலர்மாலை அனைத்து ஆலயங்களிலும் அனைத்து தெய்வங்களுக்கும் எப்போதும் அணிவிக்கப்படும் மாலையாக உள்ளது.

    சகஸ்ரநாம அர்ச்சனைகளுக்கு ஏராளமான பூக்கள் தேவைப்படும்போது வாசனைமிக்க மலர் என்ற ஒரே காரணத்திற்காக அதிகம் இடம்பெறும் மலர் சம்பங்கிதான்.

    மல்லிகை சாகுபடி செய்யும் மதுரை விவசாயிகள் சமீபகாலமாக நிலசம்பங்கி சாகுபடிக்கு வெகுவாக மாறியுள்ளனர்.

    "இரவு ராணி" என்று நம் விவசாயிகள் இந்தப்பூவை சொல்வ துண்டு. சந்தை விற்பனையில் அதிகலாபம் பெற்றுக் கொடுப்பதால் இந்த மலர் பூ வியாபாரிகளின் செல்வம் ஆகவும் கருதப்படுகிறது.

    சிவபெருமானுக்கு பொதுவாக வெள்ளை நிற மலர்கள் மிகவும் படிக்கும்.

    அவனுக்குகந்த நாட்களிலும், நேரங்களிலும் கைநிறைய அள்ளி அள்ளி அர்ச்சித்து வணங்கினால் மனத்தூய்மை பெருகும்.

    உங்களைச்சுற்றி எது நடந்தாலும் பதற்றம் அடைய மாட்டடீர்கள். நிதானமான மனதுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

    நிலசம்பங்கிப்பூக்களை "புதிய சிருஷ்டி" என்று புதுச்சேரி அன்னை வர்ணித்துள்ளார். எனவே சம்பங்கி மலர்கள் நமக்குள்ள திறனை அதிகப்படுத்தவும், இல்லாத அம்சங்களை உருவாக்கவும் உதவுகின்றன.

    ×