என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Orange Juice"

    • ஆரஞ்சு தோல் பொடி இயற்கையிலேயே பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது.
    • ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம்.

    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சரும அழகையும் கூட்டுகிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழத்தை பயன்படுத்துவதால் சருமம் அடையும் நன்மைகள் குறித்து பார்ப்போம். 

    முகப்பரு தடுப்பு

    ஆரஞ்சு தோல் பொடி முகப்பருவைக் குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இது இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும் ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் அமிலம் முகப்பருவை உலர்த்தவும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் முகத்துளைகளில் உள்ள அழுக்கை அகற்றுகிறது. இறந்த செல்களை அகற்றி, கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது. 

    வயதாகும் அறிகுறிகளை கட்டுப்படுத்தும்

    ஆரஞ்சில் நிறைந்துள்ள வைட்டமின் சி ஹைப்பர் பிக்மென்டேஷன், கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

    நச்சுத்தன்மை வெளியேற்றம்

    ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இதனால் சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.

    நீரேற்றம் 

    ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இது சருமத்திற்கு அவசியம். இதில் உள்ள வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு, மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

    பிரகாசம்

    ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி மற்றும் இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை பிரகாசமாக்கி இயற்கையான பளபளப்பை அளிக்கின்றன. இது இறந்த சரும செல்களை மெதுவாக நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கிறது. சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது சரும அமைப்பை மென்மையாக்கவும் செம்மைப்படுத்தவும் உதவுகிறது. அதுபோல இதில் உள்ள வைட்டமின் சி, உங்கள் சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவுகிறது.


    ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி & இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன

    வீக்கத்தை குறைக்கும்

    ஆரஞ்சில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அவை பல்வேறு காரணிகளால் ஏற்படும் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குணப்படுத்த உதவுகின்றன. 

    புத்துணர்ச்சி அளிக்கும்

    ஆரஞ்சு எப்போதும் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது. ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி முகத்துளைகளை இருக்குகிறது.

    ஆக்ஸிஜனேற்ற பண்புகள்

    ஆரஞ்சுகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. 

    சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழத்தை சேர்ப்பது எப்படி?

    தினசரி உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். ஆரஞ்சில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஆதரிக்கிறது. அல்லது காலையில் ஆரஞ்சை சாறாக எடுத்துக்கொள்ளலாம். சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும் வைட்டமின் சி கிடைக்கும். சாற்றின் சக்கையை ஸ்கரப்பராகவும் முகத்தில் பயன்படுத்தலாம். அது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். அல்லது ஆரஞ்சு துண்டுகளை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ஒரு நல்ல வழியாகும். 

    முகத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம்?

    ஆரஞ்சு கலந்த ஃபேஷ் வாஷ்களை பயன்படுத்தலாம். ஆரஞ்சு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து, அதனை தயிர் போன்ற மற்ற அழகுக்கு நன்மை பயக்கும் பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சு சாற்றை தேன் அல்லது தயிருடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் போடலாம். ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து மாஸ்க்காக பயன்படுத்தலாம். 

    • பளபளப்பான, தெளிவான முகம் உடல்நலனை பிரதிபலிக்கிறது
    • அனைத்து தோல் நோய்களுக்கும் மஞ்சள் தீர்வாக உள்ளது.

    நமது சருமம், நாம் எப்படி இருக்கிறோம் என்பதை தாண்டி, நமது ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை காட்டும். பளபளப்பான மற்றும் தெளிவான முகம் உங்கள் உடல்நலனை பிரதிபலிக்கிறது. மன அழுத்தம், மாசுபாடு மற்றும் மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பாதிக்கின்றன. நமது சருமம் பெரும்பாலும் இதன் விளைவுகளை பிரதிபலிக்கிறது. பளபளப்பான சருமத்தைப் பராமரிப்பது என்பது தோற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல. ஆரோக்கியத்தை பற்றியதும். சரும ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் இடையிலான ஆழமான தொடர்பைப் புரிந்துகொள்வதன் மூலம், உங்கள் உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ள முடியும். என்னதான் நாம் சந்தையில் கிடைக்கும் சரும பராமரிப்பு பொருட்களை அழகுக்காக வாங்கி பயன்படுத்தினாலும், இயற்கை பொருட்கள் தரும் அழகை அதனால் ஈடுகொடுக்க முடியாது. அந்த வகையில் இயற்கை நமக்கு அளித்த முக்கிய மூலப்பொருட்கள் குறித்து பார்ப்போம்.

    மஞ்சள்

    மஞ்சள் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மஞ்சள் நிறத்திற்கு காரணமான இதில் இருக்கும் குர்குமின் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுவதுடன், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. மஞ்சள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கி, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தை மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கவும், முகத்திற்கு பளபளப்பை வழங்கவும், கண்ணின் கருவளையத்தை போக்கவும், வறண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கவும் மஞ்சள் முக்கிய பங்காற்றுகிறது.

    தேன்

    தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசராகும். தேனின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களைத் தடுக்கவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகின்றன. முகத்தில் உள்ள வடுக்களை மறைக்க தேன் உதவுகிறது. சருமத்தை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

    ஆரஞ்ச் ஜுஸ்

    ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது. தினமும் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ் சருமத்தை சுத்தம் செய்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.


    இயற்கை பொருட்கள் தரும் அழகை எதனாலும் ஈடுகொடுக்க முடியாது.

    எலுமிச்சை

    எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது, சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கிறது. இது நமது சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்து நமது சருமத்தை ஈரப்பதமாக்க உதவுகிறது.

    தயிர்

    லாக்டிக் அமிலம் நிறைந்த தயிர், சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்குகிறது. அதே நேரத்தில் பழுப்பு மற்றும் கருவளையங்களைக் குறைக்க உதவுகிறது. இது வெயிலில் ஏற்படும் தீக்காயங்களைத் தணித்து, ஆரோக்கியமான, பொலிவான சருமத்திற்கு ஒரு சிறந்த இயற்கை தீர்வாக அமைகிறது.

    பாதாம்

    பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. பாதாம் எண்ணெயைக் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வது நமது சருமத்தை பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். முகத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களைத் தடுக்கிறது.

    வாழைப்பழம்

    வாழைப்பழம் நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ மற்றும் பி நிறைந்துள்ளன. இவை நமது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகின்றன. 

    பப்பாளி

    பப்பாளியில் உள்ள பப்பைன் நொதி சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை முகத்திற்கு பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள கறைகள் மற்றும் வடுக்கள் குறையும். பப்பாளி ஒரு மென்மையான எக்ஸ்ஃபோலியேட்டராகவும் செயல்படுகிறது. மேலும் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் உதவுகிறது. சருமத்தை இளமையாகவும், ஆரோக்கியமாகவும், அழகான பளபளப்புடன் வைத்திருக்க பப்பாளி உதவுகிறது. 

    • உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம்.
    • மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் ஆரஞ்சுக்கு இருக்கிறது.

    * உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு இருக்கிறது.

    * காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் நிறைந்திருக்கின்றன.

    * தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பிரச்சினைக்கான வாய்ப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது. அதில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்க உதவும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது. அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். விரைவில் முதுமை நெருங்காமல் தடுக்கும்.

    * கோடை காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருக வேண்டும். கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு துளியும் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும்.

    * ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு பழத்தில் நரின்கைன், ஹெஸ்பிரிதின் போன்ற பிளாவோனாய்டுகள் இருக்கின்றன. அவை மூட்டு வலிக்கு நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. கால்சியம் ஆக்ஸலேட் எனும் கல் உருவாகுவதை தடுக்கும் தன்மை ஆரஞ்சுக்கு இருக்கிறது. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

    • தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஆனிஆஸ்போர்ன் என்பவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
    • வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பழச்சாறுகள் குடிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், 40 நாட்களாக பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு பெண் கூறியுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்லாந்தை சேர்ந்தவர் ஆனிஆஸ்போர்ன். இவர் தவக்காலத்தின் போது 40 நாட்களும் ஆரஞ்சு பழச்சாறு மட்டுமே குடித்து வந்ததாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அந்த அனுபவம் அற்புதமாக இருந்தது.

    உணர்ச்சி, உடல் மற்றும் ஆன்மீக நன்மைகளை அனுபவித்தேன். இந்த 'மோமோ டயட்' தனது நீண்ட கால உணவு பழக்கத்தோடு ஒத்துப்போகிறது என்று விளக்கி உள்ளார். அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் சுகாதார வல்லுனர்கள் சிலர் இத்தகைய கட்டுப்பாடான உணவுகள் பற்றிய சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

    பழங்களை மட்டுமே சாப்பிடுவதன் மூலம் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது என தெரிவித்துள்ளனர்.


    ×