search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "orange"

    • டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.
    • சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர்.

    ஏதென்ஸ்:

    ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்போனதாக விளங்கி வரும் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மையப்புள்ளியாக ஏதென்ஸ் விளங்குகிறது. நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமாக விளங்கும் இந்த நாட்டில் பல்வேறு சிறப்புவாய்ந்த நினைவு சின்னங்களும், புராதன கட்டிடங்களும் உள்ளன. பண்டைய காலம் முதலே வெளிநாட்டினரும் சுற்றுலா பயணிகளும் விரும்பி செல்லும் நகரமாக ஏதென்ஸ் விளங்குகிறது.

    இந்தநிலையில் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ் குன்றுகளை உள்ளடக்கிய பழைய அகோரா, புதிய அகோரா உள்பட ஏதென்ஸ் நகரமே ஆரஞ்சு நிறமாக மாறி காட்சியளித்தது.

    இதனால் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர். டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன.

    இந்தநிலையில் ஏதென்ஸ் நகரின் இந்த மாற்றத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

    அதாவது, வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தகாலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வாடிக்கைதான். இந்தநிலையில் அசாதாரணமாக இந்த மேக கூட்டத்துடன் சாகாரா பாலைவனத்தின் மண்துகள்கள் கலந்ததால் கிரீசை ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியதுபோல புழுதி புயல் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 2 நாட்களுக்கு இந்தநிலை நீடிக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்தநிலையில் ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரின் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

    • ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும்.
    • வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும்.

    காலையில் வயிறு காலியாக இருக்கும்போது உண்ணும் உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துகள் துரிதமாக உறிஞ்சப்பட்டுவிடும். குறிப்பாக பழங்களை வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துகளை குடல் உடனடியாக உறிஞ்சிவிடும். உடலின் அனைத்து உள் உறுப்புகளுக்கும் சத்துகளை கடத்தி உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக கொடுப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவிடும். காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் குறித்து பார்ப்போம்.

     1. வாழைப்பழம்:

    வாழைப்பழம் எளிதில் ஜீரணமாகக்கூடியது. மேலும் இதிலிருக்கும் இயற்கையான சர்க்கரை, உடலுக்கு விரைவான ஆற்றலை அளிக்கும். வாழைப்பழத்தில் பொட்டாசியமும் அதிகம் நிறைந்திருக்கும். அது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

     2. தர்பூசணி:

    தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது. கலோரிகளும் குறைவாகவே இருக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் வித்திடும்.

     3. பப்பாளி:

    பப்பாளியில் பப்பைன் போன்ற நொதிகள் நிறைந்துள்ளன. அவை செரிமானத்திற்கு உதவும். மலச்சிக்கல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். அத்துடன் வைட்டமின்கள் ஏ, சி போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளும் பப்பாளியில் உள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் வலு சேர்க்கக்கூடியவை.

     4. ஆரஞ்சு:

    வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் ஆரஞ்சு பழத்தில் மிகுந்திருக்கும். அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், செரிமான செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவிடும். வளர்சிதை மாற்ற செயல்பாடுகளையும் துரிதப்படுத்தும்.

     5. ஆப்பிள்:

    ஆப்பிளில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவி செய்யும். செரிமானம் சீராக நடைபெறவும் துணை புரியும். மேலும் ஆப்பிளில் இருக்கும் இயற்கை சர்க்கரை, உடலுக்கு தேவையான ஆற்றலை வெளியிடவும் உதவிடும்.

     6. அன்னாசி:

    அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இது செரிமானத்திற்கு உதவும். வீக்கத்தையும் குறைக்கும்.

     7. மாம்பழம்:

    வைட்டமின்கள், நார்ச்சத்துகள் மாம்பழத்தில் மிகுந்திருக்கும். அவை அன்றைய நாளை உற்சாகத்துடன் தொடங்குவதற்கு உதவி செய்யும்.

     8. பெர்ரி:

    ஸ்ட்ராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கின்றன. வைட்டமின்களும், நார்ச்சத்துகளும் அதிகம் நிரம்பியுள்ளன. அறிவாற்றல் திறனுக்கும், இதய நலனுக்கும் வலு சேர்க்கும்.

     9. கிவி:

    கிவி பழத்தில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இவை செரிமானத்திற்கும் நலம் பயக்கும்.

     10. திராட்சை:

    திராட்சையில் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுக்கக்கூடியது.

    • வைட்டமின் சி நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்து.
    • பிளாக் காபி குடிப்பது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.

    நாம் உண்ணும் உணவு, நம்முடைய உடலில் உள்ள செல்லில் ஆற்றலாக மாற்றப்படும் செயல்பாடுகளை மெட்டபாலிசம் (வளர்சிதை மாற்றம்) என்று அழைக்கின்றோம்.

    மெட்டபாலிசம் உடலில் சீராக இருந்தால் உடல் எடையை குறைக்க உதவி செய்யும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. உடலில் மெட்டபாலிசம் அதிகரிப்பது என்றால் ஜீரண மண்டலமும் சீராக செயல்படுகிறது என்று அர்த்தம். அதனால் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளும்போது அது எடையை குறைக்கவும் உதவியாக இருக்கும். அப்படி உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்திருக்க உதவி செய்யும் பானங்கள் பற்றி பார்க்கலாம்.

    நாம் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றுகின்ற ரசாயன மாற்றத்தை தான் மெட்டபாலிசம் என்கிறோம். இந்த செயல்பாட்டின் மூலம் உடல் கலோரிகளை எரிக்கும் வேலையை செய்யும். இதற்கு நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளும் சில ஆரோக்கியமான பானங்களும் உதவுகின்றன. அதனால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையையும் சீராக வைத்திருக்கச் செய்யும்.

    கிரீன் டீயில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் தன்மை அதிகம். இதிலுள்ள கேட்டசின் என்னும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து கலோரிகளை எரிக்க உதவி செய்கிறது. அதனால் தினமும் க்ரீன் டீ அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு எடை குறைதல் மிக வேகமாக நடக்கும்

    காபி யாருக்குதான் பிடிக்காது. காலையில் எழுந்ததும் நாம் குடிக்கும் முதல் பானமே அதுதான். ஆனால் காபியில் பால் சேர்த்து குடிக்காமல் பிளாக் காபியாக (சர்க்கரையும் சேர்க்காமல்) குடிப்பது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.

    மெட்டபாலிசத்தையும் அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான எனர்ஜியையும் கொடுக்கிறது. அதனால் பிளாக் காபியில் சிறிது இலவங்கப்பட்டை பொடி அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்து வர மெட்டபாலிசமும் அதிகரிக்கும். உடல் எடையும் குறையும்.

    நம்முடைய உணவுகளில் ஃபிளேவர்களை அதிகரிக்க நாம் பட்டை, சோம்பு கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருள்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த மசாலாக்கள் நம்முடைய உடலின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும் உதவி செய்கிறது.

    இந்த மசாலாக்கள் பசியை கட்டுப்படுத்தி கலோரிகளின் அளவை குறைப்பதோடு மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கச் செய்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவி செய்கிறது.

    உடல் எடையை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பலரும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் எலுமிச்சை பழம் மட்டுமின்றி வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப் ஃப்ரூட் ஆகிய அனைத்துமே உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடியவை தான்.

    வைட்டமின் சி நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்தும் கூட. அதோடு கொழுப்புகளை எரித்து, உடலில் உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கச் செய்கிறது. இதனால் தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.

    புரதம் நம்முடைய உடலின் இயக்கத்துக்கு தேவையான அவசியமான, அடிப்படையான ஊட்டச்சத்து ஆகும். இந்த புரதச்சத்து தான் தசைகளின் வளர்ச்சியை மேம்படுத்தவும் சாப்பிட்ட திருப்தியையும் திசுக்களில் ஏற்படும் சேதத்தை ரிப்பேர் செய்யவும் உதவி செய்கிறது.

    அதோடு நம்முடைய உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் ஜீரணத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலை கொடுக்கவும் இந்த புரதச்சத்துக்கள் உதவி செய்கின்றன.

    காலையில் முதல் உணவாக புரதங்கள் நிறைந்த ஸ்மூத்தியை எடுத்துக் கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வும் கிடைக்கும். கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கலாம். இவை மெட்டபாலிசத்தை தூண்டி உடல் எடை இழப்புக்கும் உதவி செய்யும்.

    குறிப்பாக காலையில் ப்ரோ - பயோடிக் நிறைந்த யோகட், தாவர மூலங்களில் இருந்து தயாரித்த புரோட்டீன் பவுடர் (சோயா, பாதாம், ஓட்ஸ்) ஆகியவற்றுடன் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றலாம்.

    உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள இளநீர் மிகச்சிறந்த பானமாக இருக்கும். இளநீரில் உள்ள இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

    உடலின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கவும் ஆரோக்கியமான மெட்டபாலிசத்துக்கும் தேங்காய் தண்ணீர் உதவி செய்யும். அதிலும் உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும் ஆற்றல் இழப்பை சரிசெய்ய இளநீர் உதவி செய்யும். உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும் அதன்மூலம் உடல் எடையை குறைக்கவும் இளநீர் உதவும்.

    மூலிகைகள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் டீ வகைகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி செய்யும். குறிப்பாக பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் டீ உடலின் ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உடல் எடையை குறைக்கவும் உதவி செய்யும். அதிலும் கெமோமில் டீ, பெப்பர்மிண்ட் டீ, புதினா டீ ஆகியவை உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை எரித்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். எடையும் குறையும்.

    வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து உண்டாகும். அதோடு புதினா, வெள்ளரிக்காய், எலுமிச்சை துண்டுகள், இஞ்சி என மூலிகைகளை தண்ணீருக்குள் போட்டு வைத்துக் குடிப்பதன் மூலம் நீர்ச்சத்தோடு சேர்த்து அந்த பொருள்களில் உள்ள மினரல்களும் சேர்த்து நமக்குக் கிடைக்கும்.

    நீர்ச்சத்து குறைபாடு உடலில் ஏற்பட்டால் மெட்டபாலிசத்தின் வேகமும் குறையும். அதனால் எடை குறைவது சிரமமாகி விடும். அதனால் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் எடையை வேகமாக குறைக்கவும் இந்த தண்ணீர் உதவி செய்யும்.

    குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும்.
    குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சரும ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும்.

    குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதிலும் ஆரஞ்சு பழத்தின் பங்களிப்பு இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும். கலோரியும் செலவாகும். ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து ஜூஸாக்க வேண்டும். அதில்தான் அதிக நார்ச்சத்து இருக்கிறது. குளிர்காலத்தில் சளி பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு பழம் சளி தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ளவும் உதவும்.

    ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சளிக்கு நிவாரணம் தரும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க இதய நோய்த்துறை அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின் படி, பக்கவாத பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதில் இருக்கும் பிளாவனாய்டுகள் இதய நோய்கள் வராமலும் காக்க உதவுகிறது.

    ரத்த நாளங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணைபுரிகிறது. சிட்ரேட் குறைபாடு இருப்பதுதான் சிறுநீரக கல் பிரச்சினைக்கு காரணம். ஆரஞ்சு பழத்தில் இயற்கையாகவே சிட்ரேட் அமிலம் நிறைந்திருக்கிறது.

    ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருகுவதன் மூலம் சிறுநீர கல் படிவதை கட்டுப்படுத்தலாம். சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் ஆரஞ்சு ஜூஸ் பருகி வரலாம்.
    ×