search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dietary"

    பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள கற்பூரவல்லி மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது.

    சளி, இருமலால் அவதிப்படும்போது சிரப், டானிக் போன்றவற்றைக் கொடுப்பது தற்போது வழக்கமாக இருக்கிறது. இவையெல்லாம் பயன்பாட்டுக்கு வராத காலக்கட்டத்தில் நமது முன்னோர்கள் இதுபோன்ற பல பிரச்னைகளுக்குக் கற்பூரவல்லி மூலிகையைப் பயன்படுத்தி பக்கவிளைவுகள் இல்லாமல் அவற்றை குணப்படுத்தியிருக்கிறார்கள்.

    பழங்காலத்தில் இருந்து நம்முடைய முன்னோர்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில் மூலிகைச் செடிகளை வளர்ப்பதை முக்கிய வழக்கமாக கொண்டு இருந்தனர். அவற்றுள் ஒன்றுதான் கற்பூரவல்லி என்ற இந்தப் பச்சிலை. இச்செடி வீடுகளில் இயல்பாக வளரக்கூடிய தன்மை உடையது.

    பல்வேறு மருத்துவ குணங்களைத் தன்னிடம் கொண்டுள்ள இந்த மூலிகைச்செடிக்கு பெரியவர்களால் செய்யப்படும் கை வைத்தியத்தில், சிறப்பான பங்கு இருந்து வந்தது. ஏனென்றால், குழந்தைப் பருவம் தொடங்கி முதுமைப் பருவம் வரை ஏற்படுகிற அனைத்துவிதமான உடல் நலக்குறைபாடுகளை சரி செய்யும் தன்மை இந்தப் பச்சிலைக்கு உள்ளது.

    குறிப்பாக குழந்தைப் பருவத்தில் ஏற்படுகிற சுவாசக் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், மாந்தம், வாந்தி எடுத்தல், பசியின்மை, சளி, செரிமான குறைபாடு போன்ற பிரச்சனைகளைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு. வீட்டு மருத்துவத்தில் சிறந்து விளங்கும் இந்த கற்பூர வல்லியினை மழைக்காலம், பனி மற்றும் குளிர்காலங்களில் அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்குகிற நெஞ்சு சளி, சாதாரண காய்ச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ‘‘கற்பூரவல்லியின் 2 அல்லது 3 இலைகளை 150 மில்லி லிட்டர் அளவு தண்ணீரில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், அதனுடன் தேன் கலந்து அருந்தலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு கற்பூரவல்லியின் ஓர் இலையை குக்கரில் இருந்து வெளிப்படும் ஆவியில் பல தடவை காட்டி, அதில் இருந்து வடியும் சாறை தாய்ப்பாலுடன் கலந்து ஒரு சங்கு பருக தர வேண்டும்.

    5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என்றால், 30 மில்லி கிராம் அதாவது கால் டம்ளர் புகட்டலாம். ஐந்தில் இருந்து 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு கற்பூரவல்லி சாறை அரை டம்ளர் தருவது நல்லது. இவ்வாறு தினமும் உணவு வேளைக்குப் பின்னர் காலை, மாலை என இரண்டு வேளை கொடுத்து வந்தால், வீஸிங் உட்பட சுவாசப் பாதை கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.

    மருத்துவ குணம் நிறைந்த இந்தப் பச்சிலையை முதுமைப் பருவத்தினரும் கஷாயமாக குடிக்கலாம். வயோதிக காலத்தில் சர்க்கரை நோய் பொதுவாக காணப்படக்கூடிய பாதிப்பு என்பதால், முதியவர்கள் 5 இலையை நன்றாக நீரில் கொதிக்க வைத்து, தேன் கலக்காமல் 200 மில்லிகிராம் அளவு பருகலாம். இது மட்டுமில்லாமல் கற்பூரவல்லி இலையை உணவு பதத்திலும் சாப்பிடலாம்.

    இம்மூலிகையைப் பயன்படுத்தி குழம்பு, ரசம், சூப் செய்யலாம். கடலை மாவில் இந்த இலையைத் தோய்த்து பஜ்ஜி செய்தும் உண்ணலாம். இந்த கற்பூரவல்லி சைனஸ் நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற உணவாகும்.

    வாரத்தில் 2 நாட்கள் இவற்றை உணவுக்குப் பின், எடுத்துக்கொண்டால் வாய் மற்றும் மூக்கு வழியாக சளி படிப்படியாக வெளியேறும். உணவுப்பதத்தில் இந்த மூலிகையைப் பயன்படுத்துவதோடு கொதிக்கும் தண்ணீரில் சுக்கு, மஞ்சள், கற்பூரவல்லி மூலிகை போட்டு ஆவி பிடிப்பதும் பயன் தரும்!’’
    சத்துகள் நிறைந்த சாத்துகுடி சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும்.
    சாத்துகுடி பழத்தில் அபரிமிதமான விட்டமின்-சி சத்து நிறைந்துள்ளது. இது உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. சாத்துகுடியில், நார்சத்து நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை நீக்க உதவுகிறது. எலும்புகளுக்கு வலுவூட்டுவதுடன், வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்கிறது.

    சாத்துகுடியில் பொட்டாசியம், பாஸ்பரஸ், மினரல்கள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் சாத்துகுடி ஜூஸ் குடிப்பதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெறமுடியும். உடலில் புதிய ரத்தம் விருத்தியாக தினம் இரண்டு சாத்துகுடி பழச்சாறு அருந்தவேண்டும். உடல் அசதி பறந்துவிடும். அதனால்தான், நோயுற்றவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த தரப்படுகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ரத்த சோகை உள்ளவர்கள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்தலாம்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கும், பெரியவர்களின் எலும்புகளின் வலுவிற்கும் இன்றியமையாதது கால்சியம் சத்து. எனவே குழந்தைகள் தினசரி சாத்துகுடி ஜூஸ் அருந்த நல்ல வளர்ச்சி பெறுவர். பெரியவர்கள் மற்றும் பெண்களின் எலும்பு தேய்மானம் மற்றும் வலுவற்ற எலும்பிற்கு வலு சேர்க்க சாத்துகுடி ஜூஸ் சிறந்த பலனை தரும்.பெரியவர்களுக்கு ஞாபகமறதி என்பது பெரிய தொந்தரவாக உள்ளது.

    ஞாபக திறனை மேம்படுத்தி நினைவாற்றலுடன் செயல்பட சாத்துகுடி பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. பசி எடுக்கவில்லை என்பவர்களுக்கு சாத்துகுடி ஜூஸ் அருந்த கொடுக்க பசித்தீயை தூண்டி, உணவு உண்ண வகை செய்யும். அத்துடன் சீரான ஜீரண சக்தியை அளிப்பதுடன், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளுக்கும் நல்ல தீர்வாக அமைகிறது. சாத்துகுடி பழமா? என சாதாரணமாக கேட்கும் பலருக்கு, அதன் பெருமை தெரியவில்லை. சாத்துகுடி, சத்துகள் நிறைந்து சகல நோய்களை தீர்க்கும் சஞ்சீவினியாக திகழ்கிறது.

    சூரிய ஒளியில் சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் ரத்த அணுக்களில் உள்ள வைட்டமின் டி அளவை அதிகரிக்க செய்யலாம்.
    உடல் உறுப்புகளின் அத்தியாவசியமான செயல்பாட்டுக்கு வைட்டமின் டி அவசியமானது. சூரிய ஒளியில் சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் ரத்த அணுக்களில் உள்ள வைட்டமின் டி அளவை அதிகரிக்க செய்யலாம். இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ஆண்டு முழுவதும் போதுமான அளவு சூரிய ஒளி தடையின்றி கிடைக்கிறது. எனினும் நமது நாட்டில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை அதிகளவில் இருக்கிறது. 65 முதல் 70 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    உலகளவில் 100 கோடி பேருக்கு வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை இருக்கிறது. தாமதமாக தூங்க செல்வது, காலை வேளையில் சூரிய வெளிச்சம் உடலில் படாமல் இருப்பது, குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் செலவிடுவது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தவறான உணவு பழக்கம் போன்றவை வைட்டமின் டி பற்றாக் குறைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மற்ற வைட்டமின்களை போல் அல்லாமல் வைட்டமின் டி உடலில் உள்ள உயிரணுக்கள், ஹார்மோன்களின் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது.

    முதுகுவலி தசை வலி, சோர்வு, மன அழுத்தம், முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை கள் வைட்ட மின் டி பற்றாக் குறையால் ஏற்படுவ தாகும். அதிக எடை, உடல் பருமன் கொண்டவர்கள், போதுமான அளவு மீன், பால் பொருட்களை சாப்பிடாதவர்கள், சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பவர்கள், வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து உள் அறைகளிலேயே தங்கி இருப்பவர்கள் வைட்டமின் டி குறைபாடுக்கு ஆளாக நேரிடும்.
    குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும்.
    குளிர்காலத்தில் அவசியம் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். சரும ஆரோக்கியமும் பாதிப்புக்குள்ளாகும். அவற்றை சீராக பராமரிக்க ஆரஞ்சு பழம் உதவும்.

    குளிர்காலத்தில் செரிமான செயல்பாடுகளும் மந்தமாக இருக்கும். அதனை துரிதப்படுத்துவதிலும் ஆரஞ்சு பழத்தின் பங்களிப்பு இருக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் தவறாமல் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்தும். கலோரியும் செலவாகும். ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருக விரும்புபவர்கள் தோலையும் சேர்த்து ஜூஸாக்க வேண்டும். அதில்தான் அதிக நார்ச்சத்து இருக்கிறது. குளிர்காலத்தில் சளி பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆரஞ்சு பழம் சளி தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ளவும் உதவும்.

    ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சளிக்கு நிவாரணம் தரும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க இதய நோய்த்துறை அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வின் படி, பக்கவாத பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்து கொள்ளவும் ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. அதில் இருக்கும் பிளாவனாய்டுகள் இதய நோய்கள் வராமலும் காக்க உதவுகிறது.

    ரத்த நாளங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் துணைபுரிகிறது. சிட்ரேட் குறைபாடு இருப்பதுதான் சிறுநீரக கல் பிரச்சினைக்கு காரணம். ஆரஞ்சு பழத்தில் இயற்கையாகவே சிட்ரேட் அமிலம் நிறைந்திருக்கிறது.

    ஆரஞ்சு பழத்தை ஜூஸாக பருகுவதன் மூலம் சிறுநீர கல் படிவதை கட்டுப்படுத்தலாம். சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் ஆரஞ்சு ஜூஸ் பருகி வரலாம்.
    ×