என் மலர்
நீங்கள் தேடியது "தர்பூசணி"
- வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும்.
- தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி கீற்று -3
பாசிப் பருப்பு - 100 கிராம்
சிறிய வெங்காயம் - 4
தேங்காய் - 1/2 மூடி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை எண்ணெய்- சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
தர்பூசணி கீற்றுகளின் பழுத்த பகுதிகளை நீக்கி விட்டு, பச்சைப்பகுதிகளை சீவி விட்டு இடைப்பட்ட சதைப்பகுதிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை வெட்டிவைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவிவைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை ஊறவைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை உருவிவைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அத்துடன், வெட்டி வைத்துள்ள தர்பூசணித் துண்டுகள், ஊற வைத்துள்ள பாசிப்பருப்பு, மஞ் சள்தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.
தர்பூசணி காய் நன்கு வெந்ததும் தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
தர்பூசணி பாசிப்பருப்பு கூட்டு தயார். சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- நாளுக்கு நாள் அதிரித்து வரும் பரோட்டா மோகத்திற்கு பல வகை ருசிகளில் ஓட்டல்களில் விற்பனையாகிறது.
- வாழை இலை பரோட்டா, சாக்லேட் பரோட்டா என எத்தனையோ வந்துவிட்டது.
மதுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பரோட்டாவின் ருசிக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. டிபன் வகைகளில் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல் என்று அனைத்து வீட்டிலேயே தயாரித்து அடிக்கடி வழங்கும் நிலையில், ஓட்டலில் தயாராகும் புரோட்டாவுக்கு தனி மவுசு உண்டு.
அனைவருக்கும் பிடித்த உணவாகிப்போன பரோட்டா உடலுக்கு கேடு என்றும், அது தொடர்பாக பல்வேறு டாக்டர்களின் விமர்சனங்கள் வந்தபோதிலும் வாய்க்கு பூட்டு போட யாரும் விரும்பவில்லை. நாளுக்கு நாள் அதிரித்து வரும் புரோட்டா மோகத்திற்கு பல வகை ருசிகளில் ஓட்டல்களில் விற்பனையாகிறது.
விருதுநகர் பொரிச்ச பரோட்டாவில் தொடங்கி, மதுரை பன் புரோட்டா, லேயர் லேயராக வரும் நூல் பரோட்டா, முட்டை பரோட்டா, வீச்சு பரோட்டா, முட்டை லாப்பா பரோட்டா, முட்டை கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, கைமா பரோட்டா, சிலோன் பரோட்டா, வாழை இலை பரோட்டா, சாக்லேட் பரோட்டா என எத்தனையோ வந்துவிட்டது.
இதற்கெல்லாம் மகுடம் சூட்டியதுபோல் மதுரையில் மற்றுமொரு சுவையாக தர்பூசணி பரோட்டாவை ஒரு தனியார் ஓட்டல் அறிமுகம் செய்துள்ளது.
மதுரையில் உள்ள ஒரு பிரபல ஓட்டல் நிர்வாகம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நித்தியானந்தா கைலாச நாடு என அறிவித்த நிலையில் கைலாசா நாட்டில் தனது உணவகத்தை அறிமுகம் செய்ய அனுமதி வேண்டி கடிதம் எழுதி அதன் நிர்வாகி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் முகக்கவசம் போன்ற வடிவில் பரோட்டா உருவாக்குவது என வித்தியாசமான முறையில் உணவகத்திற்கு வருபவர்களை ஈர்ப்பதற்காக சமூக வலைதளங்கள் மூலமாக இந்த ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து வருகிறது. தற்போது தர்பூசணி விவகாரத்தில் மேலும் ஒரு விவாதத்திற்குரிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் தங்கள் உணவகத்தின் சார்பில் வெயிலுக்கு அறிமுகம், அடிக்கிற வெயி
லுக்கு ஆனந்தமாய் சுவைத் திட குளு குளு தர்பூசணி பரோட்டா என்ற வாசகத்து
டன் கூடிய விளம்பரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதற்கு அவரது ஆதரவாளர்கள் சிலர் சூப்பர், ஆகா, ஓகோ, அருமை என்று கூறி அந்த ஓட்டலை குஷிப்படுத்தி ஆடியோ வெளியிட்டு வரு
கின்றனர்.
அதன்படி அந்த ஓட்டலில் திடீரென தர்பூசணி பரோட்டா என அறிமுகப்படுத்தப்பட்டு அந்த வீடியோவில் தர்பூசணி பழத்தை பரோட்டாமாவின் மீது வைத்து, அதன் மீது எண்ணெய் ஊற்றி, அதனை பொறித்து பீட்சா போல வெட்டிக் கொடுப்பது போன்ற வீடியோ பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் என உணவகங்கள் செய்தாலும் கூட அதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் உரிய அனுமதி பெற்ற பின் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதற்கிடையே மதுரை கூடல்நகர் பகுதியில் ஒரே மாதத்தில் பரோட்டா தயாரிக்கும் பயிற்சியும் ஒரு குழுவால் அளிக்கப்பட்டு வருகிறது.
- தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
- சதீஷ்குமார் பேச்சால் தர்பூசணி விற்பனை அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர்.
சென்னை:
சென்னை மண்டல உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமாரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் போஸ் சென்னை மண்டலத்தை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்பூசணியில் ரசாயனம் சேர்க்கப்படுவதாக சதீஷ்குமார் கூறியிருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள், பாதிக்கப்பட்டுள்ள தர்பூசணி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.
மேலும், சதீஷ்குமார் பேச்சால் தர்பூசணி விற்பனை அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து இருந்தனர்.
இதனை தொடர்ந்து சதீஷ்குமார் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
- தற்போதுதான் மக்களுக்கு மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும் - அக்கறையும் அதிகரித்து வருகிறது.
சென்னை :
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தர்பூசணி குறித்த தவறான தகவல்களைப் பரப்பியதால், விற்பனை குறைந்து தர்பூசணி விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
ஒரு சில விசமிகள் தர்பூசணியில் செயற்கை இரசாயனம் கலக்கின்றனர் என்ற புகாரில், ஒட்டுமொத்த தர்பூசணி விவசாயிகளும் பாதிக்கப்படும் வகையில் பொய்யான தகவல்களைப் பரப்பிய தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
கோடைக்காலத்தில் மட்டுமே நடைபெறும் பெருமளவு விற்பனையை நம்பியே நுங்கு, இளநீர், பதநீர், வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்ட தாகம் தணிக்கும் இயற்கை பானங்களையும் - பழங்களையும் உள்நாட்டு ஏழை விவசாயிகள் விளைவிக்கின்றனர்.
நம் நாட்டில் உடலுக்கு கேடு விளைவிக்கும், விலை அதிகமான பன்னாட்டு பெருநிறுவனங்கள் தயாரிக்கும் செயற்கை குளிர்பானங்கள் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையில் பளப்பளப்பாகப் பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால், நம் நாட்டு விவசாயிகள் வெயிலிலும், மழையிலும் வெம்பாடுபட்டு விளைவிக்கும் இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரி போன்றவை இன்றளவும் தெருவோரத்தில் கிடக்கிறது என்பதுதான் வேதனை நிறைந்த உண்மை.
தற்போதுதான் மக்களுக்கு மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு, இயற்கை உணவுகள் மீதான ஆர்வமும் - அக்கறையும் அதிகரித்து வருகிறது. உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது, நலம்தரும் சத்துகள் நிறைந்த இயற்கை பானங்களையும், பழங்களையும் அதிகளவில் விற்பனையாக ஊக்கப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையாகும். ஆனால், அதற்கு நேர்மாறாக இயற்கையாக விளைவிக்கப்படும் பழங்களில் செயற்கை இரசாயனங்கள் கலக்கப்படுவதாக அரசு அதிகாரிகளே வதந்தியைப் பரப்பி, மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தி, தர்பூசணி விளைவித்த விவசாயிகளுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியருப்பது சிறிதும் அறமற்ற கொடுஞ்செயலாகும்.
தவறு செய்பவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதை விடுத்து தமிழ்நாட்டு தர்பூசணி விவசாயிகள் அனைவரையும் அரசு தண்டித்திருப்பது எவ்வகையில் நியாயமாகும்?
அரசு அதிகாரிகளின் இத்தகைய அவதூறு பரப்புரைகளுக்குப் பின்னால் பன்னாட்டு செயற்கை குளிர்பான நிறுவனங்களின் திட்டமிட்ட சதி இருப்பதாக தமிழ்நாட்டு விவசாயிகள் சந்தேகிப்பது மிக மிக நியாயமானதாகும்.
ஆகவே, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் பொய்ப்பரப்புரையால் தர்பூசணி விற்பனை பெருமளவு குறைந்து பெரும் நட்டத்திற்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை.
- நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்திருக்கிறது. மழையில் நனைந்ததால் நெல் மூட்டைகளின் விலை வீழ்ச்சியடையும் என்றும், அதைப் பாதுகாக்க குடோன்கள் இல்லாததால் வெட்டவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்ததால் மழையில் நனைந்து சேதமடைந்ததாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், இதைப்போல் கோடைக்காலத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை செய்யும் இந்த நேரத்தில் கலப்பட சாயம் கலந்தாக ஒரு சர்ச்சையை எழுப்பி அதை மக்களும் நம்பி தர்பூசணி பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது விவசாயிகளுக்கு நஷ்டத்தையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபோல ஒரு சர்ச்சையை எழுப்பி மக்களையும் குழப்பி ஒட்டுமொத்தமாக விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிப்படையச் செய்வது ஏற்புடையது அல்ல.
விவசாயிகளைக் காக்க வேண்டியது அரசின் கடமை. விவசாயிகளுக்குத் துணை நிற்போம் அவர்களை காப்போம். மேலும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க உடனடியாக குடோன்கள் அமைத்துத் தந்து, நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.
- தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.
தர்பூசணி பழங்களில் ரசாயனங்கள் கலப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்பாதீர்கள் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.
நல்ல தர்பூசணிக்கும் ரசாயன நிறம் கலந்த தர்பூசணிக்கும் உள்ள வேறுபாடு குறித்து அவர் விளக்கினார்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் கூறியிருப்பதாவது:-
தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை. தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.
சென்னையில் ஊசி மூலமாக ரசாயனம் செலுத்தி செயற்கையாக நிறமூட்டப்படுவதாக எங்கும் கண்டறியப்படவில்லை.
சென்னையின் ஒரு சில இடங்களில் கெட்டுப் போன பழங்கள் விற்கப்படுவது மட்டுமே ஆய்வில் கண்டறியப்பட்டது. எல்லா இடங்களிலும் தர்பூசணிகளில் நிறமூட்டி பயன்படுத்துவதாக கருதுவது தவறு.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது.
- கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தளி:
கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் ஆகிய பொருள்கள் பொது மக்களுக்கு தரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என சோதனைகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓசூர், சூளகிரி, தளி கெலமங்கலம் போன்ற பகுதிகளில் உணவு பொருட்கள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தேன்கனிக்கோட்டை பகுதியில் ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முத்து மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் பிரகாஷ் மற்றும் சந்தோஷ் மற்றும் உணவு பகுப்பு ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் இருந்த 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அதன் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
- இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து தற்போது தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.
இன்று 20 லாரிகளில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.8 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி விற்பனை தற்போது சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது. இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் தர்பூசணி விற்பனை சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-
இந்த ஆண்டு விவசாயிகள் வழக்கத்தை விட தர்பூசணியை அதிகளவில் பயிரிட்டு உள்ளனர். பனிப்பொழிவு காரணமாக தர்பூசணி பழங்களை அறுவடை செய்வதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் தர்பூசணி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் தர்பூசணி உற்பத்தி 2 மடங்காக அதிகரித்து உள்ளதால் கடந்த ஆண்டை காட்டிலும் தர்பூசணி விலை கணிசமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாகர்கோவில் மற்றும் பண்ருட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பலாப்பழம் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது.
தற்போது ஒரு கிலோ பலாப்பழம் ரகத்தை பொறுத்து ரூ.40 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது.
தற்போது 400 முதல் 500 எண்ணிக்கையில் மட்டுமே பலாப்பழம் விற்பனைக்கு வருகிறது. அடுத்த மாதம் முதல் இதன் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
- தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துவரும் வேளையில், விலையும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
- தர்பூசணி அளவில் சற்று பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு பழமும் அதிக எடை கொண்டதாக இருக்கிறது.
சென்னை:
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே, சென்னையில் பல்வேறு இடங்களில் தர்பூசணிக்கு விற்பனை சூடுபிடித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில தினங்களாக நண்பகல் வேளைகளில் வெயில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மக்கள் தாகத்தைத் தணிக்க குறைந்த விலை பழமான தர்பூசணியை நாடத்தொடங்கி யுள்ளனர். இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் தர்பூசணி கடை வைத்திருக்கும் வியாபாரி கூறுகையில், "தர்பூசணி பழங்களின் விற்பனை மார்ச் - ஏப்ரல் மாதங்களில் விறுவிறுப்படையும். ஆனால், உடல் வெப்பத்தைக் குறைத்து, சீரான வெப்ப நிலையில் வைக்கிறது. மேலும், வைட்டமின் ஏ, சி இருப்பதால் உடல் சோர்வைப் போக்கக்கூடியதாக விளங்குகிறது.
தமிழகத்தில் சீர்காழி, சிதம்பரம், திண்டிவனம், திருவண்ணாமலை, வேலூர், ஆந்திர மாநிலம் சத்திய வேடு, நாகலாபுரம், மதனப்பள்ளி, சித்தூர் ஆகிய இடங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக வருகின்றன' என்றார்.
தர்பூசணி பழங்களின் வரத்து அதிகரித்துவரும் வேளையில், விலையும் உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், 'கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஒரு டன் தர்பூசணி ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த விலையில் கிலோ ரூ.15- க்கும், சில்லரை விற்பனையில் கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த முறை தர்பூசணி அளவில் சற்று பெரியதாக இருப்பதால் ஒவ்வொரு பழமும் அதிக எடை கொண்டதாக இருக்கிறது. எடைக்கு தகுந்தாற்போன்று, ஒரு பழத்தின் விலை ரூ.120 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது' என்று தெரிவித்தனர்.
- கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.
- வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது.
போரூர்:
சென்னையில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆங்காங்கே கடைகளில் விற்கப்படும் இளநீர், சர்பத், தர்பூசணி, ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.
இதில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படும் எலுமிச்சை பழம் உடலுக்கு நல்லது என்பதால் பொதுவாகவே கோடை காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் கூடுர் மற்றும் நெல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 50 முதல் 60 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.
இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரையிலும் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் 3 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழம் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது. கோடை வெயிலையொட்டி ஏராளமான குளிர்பான கடைகள் சாலை யோரங்களில் முளைத்து உள்ளன.
- கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளார்.
- தற்போது மொத்த விலை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
போரூர்:
கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் உடல் சூட்டை தணிக்கும் பழ ஜுஸ், மோர், தர்பூசணி, கிர்ணிபழம், இளநீர் உள்ளிட்டவற்றை அதிகம் வாங்கி பருகுகிறார்கள். இதனால் தற்போது சாலையோரங்களில் ஏராமான குளிர்பான கடைகள் முளைத்து உள்ளன.
அதிகமானோர் வெயிலுக்கு இதமாக தர்பூசணி பழங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். இதனால் கடைகளில் தர்பூசணி வியாபாரம் களை கட்டி வருகிறது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோயம்பேடு சந்தைக்கு திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வரும். தினமும் 120டன்னுக்கு மேல் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தர்பூசணி வரத்து மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளார். தற்போது மொத்த விலை கடைகளில் ஒரு கிலோ தர்பூசணி ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.10 வரை விற்பனை ஆகிறது.
இதுகுறித்து தர்பூசணி மொத்த வியாபாரி வடிவழகன் கூறியதாவது:-
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது தினமும் 120 டன்னுக்கு மேல் தர்பூசணிகள் விற்பனைக்கு வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள போதிலும் தர்பூசணி பழங்களின் விற்பனை இன்னும் எதிர்பார்த அளவு இல்லை. மொத்த விற்பனை கடைகளில் தர்பூசணி ஒரு கிலோ ரூ.7முதல் ரூ.10வரை மட்டுமே விற்கப்படுகிறது. இனி வரும் நாட்களில் மேலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தர்பூசணி பழங்களின் விலை 3 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தர்பூசணி, இளநீர் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
- இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் நடக்கிறது.
அபிராமம்
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ராமேசுவரம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
தாங்க முடியாத வெயில் கொடுமை காரணமாக பொதுமக்கள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் திறந்த வெளிகளை தேடி தூங்க செல்கின்றனர்.
கடும் வெயிலால் சாலை களில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. தற்போது 10-ம் வகுப்பு உள்பட பொது தேர்வும், பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலால் அவதியடைந்து வருகிறார்கள். சிறுவர்கள். வயதானவர்கள் வெயிலின் உச்சபட்ச தாக்கத்தை பார்த்து வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், முதியோர்கள் அனைவரும் பகல் நேரங்களில் சாலையில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
வெயில் கொடுமை காரணமாக உடலில் நீர்சத்து குறைவதால் அதனை ஈடு செய்யும் வகையில் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பானங்களை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக அபிராமம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதியில் உள்ள சாலையோர தர்பூசணி, இளநீர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
தர்பூசணி மற்றும் இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.






