search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young water"

    • தர்பூசணி, இளநீர் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.
    • இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் நடக்கிறது.

    அபிராமம்

    தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். மே மாத அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும்.

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி, கீழக்கரை, மண்டபம், ராமேசுவரம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி, அபிராமம், பார்த்திபனூர், நயினார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டை விட தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

    தாங்க முடியாத வெயில் கொடுமை காரணமாக பொதுமக்கள் சொல்ல முடியாத அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருப்பதால் மக்கள் திறந்த வெளிகளை தேடி தூங்க செல்கின்றனர்.

    கடும் வெயிலால் சாலை களில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. தற்போது 10-ம் வகுப்பு உள்பட பொது தேர்வும், பிற வகுப்புகளுக்கும் தேர்வு நடைபெறுவதால் பள்ளி மாணவ-மாணவிகள் வெயிலால் அவதியடைந்து வருகிறார்கள். சிறுவர்கள். வயதானவர்கள் வெயிலின் உச்சபட்ச தாக்கத்தை பார்த்து வெளியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள், முதியோர்கள் அனைவரும் பகல் நேரங்களில் சாலையில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    வெயில் கொடுமை காரணமாக உடலில் நீர்சத்து குறைவதால் அதனை ஈடு செய்யும் வகையில் பொதுமக்கள் வெப்பத்தை தணிக்கும் வகையில் குளிர்ச்சியான பானங்களை தேடி செல்கின்றனர். இதன் காரணமாக அபிராமம், முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, கமுதி பகுதியில் உள்ள சாலையோர தர்பூசணி, இளநீர் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    தர்பூசணி மற்றும் இளநீர் விலையும் உயர்ந்திருப்பதுடன் விற்பனையும் மும்முரமாக நடக்கிறது.

    • இளநீர் கடன் கேட்ட தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • இளநீர் கடனாக கேட்டுள்ளார் அப்போது பாபு தர மறுத்துவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே கண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் பாபு (வயது 38). இவர் அதே பகுதியில் சைக்கிளில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த விமல் என்பவர் இளநீர் கடனாக கேட்டுள்ளார். அப்போது பாபு தர மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று முன்விரோத காரணமாக விமல் தனது நண்பர் பிரேம் உடன் கண்ணாரப் பேட்டை பகுதியில் நின்று கொண்டிருந்த பாபுவை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விமல் (வயது 35) , பிரேம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விமலை கைது செய்தனர்.

    ×