என் மலர்
நீங்கள் தேடியது "Guava"
- சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது.
- வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும்.
அனைத்து பருவகாலங்களிலும் ருசிக்கப்படும் பழங்களில் ஒன்றாக விளங்கும் கொய்யா, 100-க்கும் மேற்பட்ட ரகங்களை கொண்டது. ஆனாலும் வெள்ளை நிறம், சிவப்பு நிறம் மட்டுமே பலருக்கும் பரீட்சயமானவை. பரவலாக கிடைக்கக்கூடியவை, விரும்பி சாப்பிடக்கூடியவை. இவை இரண்டும் சத்தானவை என்றாலும், சுவை, ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கிய நன்மைகளில் வேறுபடுகின்றன.
வெள்ளை கொய்யா
சிவப்பு கொய்யாவை விட வெள்ளை கொய்யா சற்று இனிப்புச் சுவை கொண்டது. அதிக சர்க்கரை, ஸ்டார்ச், வைட்டமின் சி நிறைந்திருக்கும். சிவப்பு கொய்யாவை விட விதைகளும் அதிகமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக வெள்ளை கொய்யா குறிப்பிடப்படுகிறது.
நன்மைகள்:
* ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* செரிமானத்தை துரிதப்படுத்தும்.
* உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும்.
* சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
* ரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.
* மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும்.
* புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.
சிவப்பு கொய்யா
வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யா அதிக நீர் உள்ளடக்கம் கொண்டிருக்கும். ஆனால் சர்க்கரை, ஸ்டார்ச் மற்றும் வைட்டமின் சி குறைவாக இருக்கும். கரோட்டினாய்டுகள், குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டான லைகோபீன் போன்றவை சிவப்பு நிறத்துக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.
நன்மைகள்:
* இதில் இருக்கும் அதிக லைகோபீன் இதயத்தைப் பாதுகாக்க உதவிடும்.
* சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
* வைட்டமின் ஏ, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
* நார்ச்சத்தும் நிறைந்தது. செரிமானம் மற்றும் உடல் எடையை நிர்வகிக்க துணைபுரியும்.
* இதில் சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.
எது சிறந்தது?
இரண்டு கொய்யா ரகங்களும் ஆரோக்கியமானவை என்றாலும் அதிக ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின் ஏ, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து காரணமாக சிவப்பு கொய்யா முதலிடத்தை பெறுகிறது. குறிப்பாக இதய ஆரோக்கியம் காக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
அதேவேளையில் வெள்ளை கொய்யா ஊட்டச்சத்து மதிப்பில் குறைந்ததில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கும் சிறந்த தேர்வாக அமையும். அவரவர் உடல் நலனுக்கு எது ஏற்புடையது என்பதை முடிவு செய்து, ருசிக்கலாம்.
- கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.
- வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது.
போரூர்:
சென்னையில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் பலர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வெப்பத்தின் தாக்கத்தால் இருசக்கர வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
கோடை வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக ஆங்காங்கே கடைகளில் விற்கப்படும் இளநீர், சர்பத், தர்பூசணி, ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை குடித்து உடல் சூட்டை தணித்து வருகின்றனர்.
இதில் சர்பத் உள்ளிட்ட குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படும் எலுமிச்சை பழம் உடலுக்கு நல்லது என்பதால் பொதுவாகவே கோடை காலங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மாநிலம் கூடுர் மற்றும் நெல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 50 முதல் 60 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு வருகிறது.
கோடை வெயில் காரணமாக தேவை அதிகரிப்பால் எலுமிச்சை பழத்தின் விலை அதிகரித்து உள்ளது.
இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.80-க்கும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரையிலும் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட் மற்றும் காய்கறி கடைகளில் 3 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழம் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெயிலுக்கு இதமான கிர்ணிபழம், வெள்ளரிக்காய், தர்பூசணி வியாபாரமும் சூடுபிடித்து உள்ளது. கோடை வெயிலையொட்டி ஏராளமான குளிர்பான கடைகள் சாலை யோரங்களில் முளைத்து உள்ளன.
- ஒரு விவசாயிக்கு 51 தென்னை மரக்கன்றுகளை பசுமை பிறந்த நாளாக வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
- பயனாளிக்கு 6 அடி உயர ஒரு பலா, கொய்யா, நாவல் மரக்கன்றும், ஒரு தேக்கு மரக்கன்றும் வழங்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் தனியார் பள்ளிமுன்னாள் மாணவர்கள், ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து கோவில் பத்து கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயிக்கு 51 தென்னை மரக்கன்றுகளை பசுமை பிறந்த நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகளின் ஒருங்கிணைப்பாளர் கோவில்பத்து விவசாயிக்கு மாரியப்பன் பயனாளியை தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
சிட்டுக் குருவிக்கான கூண்டினை அழகேசன் வழங்கினார்.ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் சார்பில் பயனாளிக்கு 6 அடி உயர ஒரு பலா, கொய்யா, நாவல் மரக்கன்றும் ஒரு தேக்கு மரக்கன்றும் வழங்க ப்பட்டது.நிகழ்ச்சியில் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனர் ராஜ சரவணன் மற்றும் சங்கதினர் சார்பில் செந்தில் குமார் ராஜு ஒருங்கிணைத்தார்.
கொழுப்பைக் குறைக்கும் திறன் கொய்யாவுக்கு உண்டு. தினமும் 2 கொய்யாப்பழங்கள்சாப்பிட்டு வந்தால் தேவையில்லாத உடல் எடையைக் குறைக்க முடியும்.
சர்க்கரை நோயாளிகள் எல்லா பழங்களையுமே கண்டு அலறுவார்கள். ஆனால், கொய்யா அவர்களுக்கும் நண்பனே! காரணம், சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க கொய்யா உதவும். அதேபோல், தைராய்டு பிரச்னையைத் தடுக்கவும் கொய்யா மாமருந்து.
வைட்டமின் சி அதிகம் கொண்ட கனி இது. வைட்டமின் சி மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறவர்கள், அதற்குப் பதிலாக பக்கவிளைவற்ற… இயற்கையான கொய்யாவை முயற்சி செய்து பார்க்கலாம்.
சளித்தொல்லையிலிருந்தும், குடல் தொடர்புடைய குறைகளை நிவர்த்தி செய்யவும் கொய்யா சரியான சாய்ஸ். பார்வைத் திறனை மேம்படுத்த உதவும் வைட்டமின் ஏ-வும் கொய்யாப்பழத்தில் அதிகம்… அமோகம்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறவர்களும், பாக்டீரியா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரும்புகிறவர்களும் கொய்யாவோடு ஃப்ரண்ட்ஷிப் வைத்து கொள்வது நல்லது.
உடலின் திசுக்களைத் தாக்கும் புற்றுநோய்க்கு எதிராக சண்டையிடும் குணம் கொண்டது கொய்யா. கொய்யாவிலிருக்கும் Lycopene சத்துதான்அதன் ராஜ ரகசியம்.
Last but not least… கொய்யாப்பழத்தை வெட்டிச் சாப்பிடுவதைவிட கடித்துச் சாப்பிடுவதே முழுமையான பலனைத் தரும்.






