என் மலர்
நீங்கள் தேடியது "Orange Facial"
- ஆரஞ்சு தோல் பொடி இயற்கையிலேயே பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது.
- ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, சரும அழகையும் கூட்டுகிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழத்தை பயன்படுத்துவதால் சருமம் அடையும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
முகப்பரு தடுப்பு
ஆரஞ்சு தோல் பொடி முகப்பருவைக் குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும். இது இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும் ஆரஞ்சில் உள்ள சிட்ரிக் அமிலம் முகப்பருவை உலர்த்தவும், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் முகத்துளைகளில் உள்ள அழுக்கை அகற்றுகிறது. இறந்த செல்களை அகற்றி, கரும்புள்ளிகளை குறைக்க உதவுகிறது.
வயதாகும் அறிகுறிகளை கட்டுப்படுத்தும்
ஆரஞ்சில் நிறைந்துள்ள வைட்டமின் சி ஹைப்பர் பிக்மென்டேஷன், கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவுகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
நச்சுத்தன்மை வெளியேற்றம்
ஆரஞ்சுப் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், சருமத்தில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன, இதனால் சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கப்படுகின்றன.
நீரேற்றம்
ஆரஞ்சு பழத்தில் உள்ள அதிக நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இது சருமத்திற்கு அவசியம். இதில் உள்ள வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு, மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
பிரகாசம்
ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி மற்றும் இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை பிரகாசமாக்கி இயற்கையான பளபளப்பை அளிக்கின்றன. இது இறந்த சரும செல்களை மெதுவாக நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கிறது. சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவது சரும அமைப்பை மென்மையாக்கவும் செம்மைப்படுத்தவும் உதவுகிறது. அதுபோல இதில் உள்ள வைட்டமின் சி, உங்கள் சருமத்தில் மெலனின் உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் ஹைப்பர் பிக்மென்டேஷனைக் குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு தோல் பொடியில் வைட்டமின் சி & இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்கள் நிறைந்துள்ளன
வீக்கத்தை குறைக்கும்
ஆரஞ்சில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அவை பல்வேறு காரணிகளால் ஏற்படும் சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குணப்படுத்த உதவுகின்றன.
புத்துணர்ச்சி அளிக்கும்
ஆரஞ்சு எப்போதும் சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கிறது. ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி முகத்துளைகளை இருக்குகிறது.
ஆக்ஸிஜனேற்ற பண்புகள்
ஆரஞ்சுகளில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை உங்கள் சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
சருமப் பராமரிப்பில் ஆரஞ்சுப் பழத்தை சேர்ப்பது எப்படி?
தினசரி உணவில் ஆரஞ்சு பழத்தை சேர்த்து கொள்ளுங்கள். ஆரஞ்சில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஆதரிக்கிறது. அல்லது காலையில் ஆரஞ்சை சாறாக எடுத்துக்கொள்ளலாம். சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும் வைட்டமின் சி கிடைக்கும். சாற்றின் சக்கையை ஸ்கரப்பராகவும் முகத்தில் பயன்படுத்தலாம். அது சருமத்தை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். அல்லது ஆரஞ்சு துண்டுகளை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ஒரு நல்ல வழியாகும்.
முகத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம்?
ஆரஞ்சு கலந்த ஃபேஷ் வாஷ்களை பயன்படுத்தலாம். ஆரஞ்சு ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். ஆரஞ்சு தோலை காயவைத்து அரைத்து, அதனை தயிர் போன்ற மற்ற அழகுக்கு நன்மை பயக்கும் பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தலாம். ஆரஞ்சு சாற்றை தேன் அல்லது தயிருடன் கலந்து ஃபேஸ் மாஸ்க் போடலாம். ஆரஞ்சு சாற்றை கற்றாழையுடன் சேர்த்து மாஸ்க்காக பயன்படுத்தலாம்.
சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்.
1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.
ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து அதனுடன் ஆரஞ்சு சாறு கலந்து,முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணி 15 நிமிடம் கழித்து நன்கு கழுவ வேண்டும்.
வாரத்திற்கு ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பியூட்டிபார்லர் போகாமல் பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும்.
ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் ஸ்பூன், கசகசா விழுது ஒரு ஸ்பூன், சந்தனத்தூள் கால் ஸ்பூன் அனைத்தையும் சேர்த்து கெட்டியான விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.
தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் அப்ளை பண்ணி காய்ந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.






