என் மலர்
நீங்கள் தேடியது "Sashti Viratham"
- கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள்.
- பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.
முருகப் பெருமான் அருளைப் பெறுவதற்கு வைகாசி விசாகம், தைப்பூசம், மாத சஷ்டி, கிருத்திகை என எத்தனையோ விரதங்கள் இருப்பினும் அதற்கெல்லாம் மணி மகுடம் போல இருப்பது மகா கந்த சஷ்டி விரதம். ஆம்! தீயவை அழியும் நல்லது நிலைத்திருக்கும் என்பதற்கு உதாரணமாக சூரபதுமன் அழிந்து தேவர்கள் வாழ்வு பெற்ற அந்த நிகழ்வினை நாம் சூரசம்ஹாரம் என்று கொண்டாடி வருகிறோம்.
தற்போது நாமும் சூரபதுமன் போன்ற கொடிய, தீய குணங்களால் சூழப்பட்டிருக்கிறோம். அதனைப் போக்குவதற்கு ஒரே வழி கந்தக் கடவுளிடம் சரணடைவதே. அதிலும் இந்த மகா கந்த சஷ்டி விரதம் என்பது நமது அகப் பகை மற்றும் புறப் பகைகளை அடியோடி நீக்கி நமக்கு நன்மை தரக்கூடியதாக அமைந்துள்ளது.
மகா கந்த சஷ்டி எல்லா முருகப் பெருமானின் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருச்செந்தூரில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவதற்கான காரணம் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்வதற்கு முன் இங்கு படை வீடு அமைத்து தங்கினார். சூரனை சம்ஹாரம் செய்த பின்னரும் பஞ்ச லிங்கங்கள் அமைத்து தனது தந்தையான சிவபெருமானை இத்தலத்தில்தான் முருகப்பெருமான் வழிபட்டார். எனவே திருச்செந்தூரில் நடைபெறும் சூர சம்ஹாரம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.
உலகெங்கும் இருந்து பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து கடலில் நீராடி, பின் முருகன் வேலினால் உண்டாக்கிய நாழிக்கிணற்றிலும் நீராடி, பச்சை நிற ஆடை உடுத்தி, 6 முதல் 7 நாட்கள் தங்கி விரதம் இருந்து தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறப் பெற்று மகிழ்ச்சியுடன் திரும்பச் செல்கிறார்கள்.

தேச மங்கையர்க்கரசி
முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு அடுத்த நாளில் தன்னிடம் இருந்து பிரிந்திருந்த இச்சா மற்றும் கிரியா சக்தியான வள்ளி, தெய்வானையை மணம் புரியும் நாளாகிய 7-ஆம் நாளில் அதாவது வள்ளி தேவசேனா திருக்கல்யாண தினத்தில் விரதம் நிறைவு செய்வது மிகவும் சிறப்பானது என்று எனது குருநாதர் வள்ளல் வாரியார் சுவாமிகள் சொல்லுவார்கள். ஏனென்றால் திருமணக் கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் புரியும் விதமாக முருகப் பெருமான் காட்சி தரும் நேரத்தில் நாம் எதற்காக விரதம் இருந்தோமோ அது 100% நிறைவேறும் என்பது நம்பிக்கை.
மகா கந்த சஷ்டி விரதமானது கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும் என உறுதியிட்டு சொல்லும் அளவுக்கு நற்பலன்களை அள்ளித்தரும் விரதம். முருகன் என்றாலே இளமை. இளமை என்றால் அழகு. புற அழகல்ல அக அழகு. மனதில் கவலை இல்லாமல் இருக்கும்போதுதான் அகமும், புறமும் அழகாக இருக்கும்.
கவலைகளுக்கான காரணம் என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான காரணங்கள். வேலை, திருமணம், குழந்தைப்பேறு, வறுமை, நோய் போன்ற பல காரணங்களால் பலரும் அல்லல் உற்று மனக்கவலைகளுடன் வாழ்கின்றனர். அந்த மனக் கவலைகளை தீர்க்கும் மாமருந்தே முருகன்தான். முருகனிடம் நம் கவலைகளை எல்லாம் சொல்லி சரணாகதி அடைந்து இந்த கந்த சஷ்டி காலத்தில் வழிபட்டால் அனைத்து நலன்களும் கிடைக்கும்.
எம் தாயும் எனக்கு அருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள்
கந்தா, கதிர் வேலவனே, உமையாள்
மைந்தா, குமரா, மறை நாயகனே.
குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பெற்றோரின் இல்லம் தேடி வந்து தங்கி இருந்து தன் பிரச்சனைகளை சொல்லி அதற்கான தீர்வைக் கண்டு திரும்புவது பிள்ளைகளின் வழக்கம். நமக்கு முருகனே தாயும், தந்தையும்; நாம் அனைவரும் அவருக்கு பிள்ளைகள்; அவன் உறையும் இடமே நாம் கதி என செல்லும் வீடு. இந்த சஷ்டி காலத்தில் செந்திலம்பதி என்ற வீட்டில் வந்து தங்கியிருந்து தனது துன்பங்களை எல்லாம் அவனிடம் சொல்லி அதைத் தீர்க்க வழியும் கண்டறிந்து திரும்பும் பிள்ளைகளாகவே நாம் இன்றும் வாழ்ந்து வருகிறோம். முருகனின் பதம் பணியாமல் வாழ்பவர்களை அருணகிரிப் பெருமான் கடுமையாகவே சாடுகிறார்.
'கோழிக்கொடியன் அடிபணியாமல் குவலயத்தே
வாழக் கருதும் மதியிலிகாள் உங்கள் வல்வினைநோய்
ஊழின் பெருவலி உண்ண ஒட்டாது உங்கள் அத்தம் எல்லாம்
ஆழப்புதைத்து வைத்தால் வருமோ நும் அடிப் பிறகே?'
முருக வழிபாடு என்பது அருணகிரிநாதரைப் பொறுத்தவரை ஒரு சாதாரண வழிபாடு மட்டுமல்ல. முருகனே எல்லாம் என்ற சரணாகதி நிலை வேண்டும் என்கிறார் அருணகிரிநாதர். அந்த பக்குவம் வருவதற்கு துணை செய்வது இந்த கந்த சஷ்டி விரதம்.
தங்கத்தை ஆபரணம் ஆகும் வரை அடித்து துன்புருத்தினால்தான் அது விலை மதிப்பு பெறும். அடிக்கு பயந்து அது மண்ணிலேயே இருந்து விட்டால் அதன் மதிப்பு இழந்து போகும். முருகனை வழிபட்டால் சோதிக்கின்றானே என்று சொல்பவர்களுக்குத்தான் இந்த வரிகள். சோதனைக்கு உட்பட்டால்தான் மாணவன் மருத்துவன் ஆகலாம், விஞ்ஞானி ஆகலாம், பொறியாளர் ஆகலாம். சோதனையைத் தவிர்க்க நினைப்பவன் அறிவற்ற வனாகவே இருப்பான்.
வருவது வரட்டும், வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. குகனுண்டு குறைவில்லை என்று சொல்லி கந்தன் கழலடியே கதி என்று நம்பி வருவோரை அவன் வாரி அனைத்து அருளை மாரி எனத் தருவதில் செந்தில் ஆண்டவர் வல்லவர். தேவர் சிறை மீட்ட வேலன் நம்மையும் காத்து அருளும் பாலன். இந்த சஷ்டி காலத்தில் அவரை வழிபட்டு எல்லோரும் எல்லா நலனும் பெற்று மகிழலாம்.
- மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
- வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
முருகப்பெருமானின் அருளைப் பெற அனைவரும் கடைபிடிக்கும் விரதம் தான் சஷ்டி விரதம். பெரும்பாலான முருக பக்தர்கள் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதம்தோறும் வரும் சஷ்டியிலும் மனதார விரதமிருந்து முருகனுடைய அருளைப் பெறுவார்கள்.
சஷ்டி விரதம் என்றாலே குழந்தை வரம் வேண்டுபவர்கள் தான் இருப்பார்கள் என சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. உடல்நல பாதிப்பு, தொழில் பாதிப்பு, திருமணத் தடை என எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் சரி, சஷ்டி விரதமிருந்து மனமுருகி அந்த வேலவனை நினைத்தாலே எல்லாவற்றையும் அவன் தீர்த்து வைப்பான் என்பது பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.
மாதம்தோறும் வரும் சஷ்டி விரதம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என பார்க்கலாம்.
* மாதம்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரு சஷ்டி திதிகளிலும் விரதம் இருக்கலாம்.
* நாளை தேய்பிறை சஷ்டி விரதம். அதிகாலையில் எழுந்து நீராடி, ஐயன் முருகப்பெருமானின் திருவுருவப் படத்தை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
* வீட்டில் வேல் இருந்தால் முருக வேலுக்கு பால் அபிஷேகம் அல்லது திருநீறு அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
* கந்த சஸ்டி கவசம், முருகப் பெருமானுக்குரிய மந்திரங்கள், கந்தபுராணத்தை கேட்பது அல்லது முருகனைப் போற்றும் பாடல்களைப்பாடி, விளக்கேற்றி மனமுருகி வழிபட வேண்டும்.
* விரதம் இருக்க முடிந்தவர்கள் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். முடியாதவர்கள் பால், பழம் மட்டும் சாப்பிடலாம்.
* சஷ்டி விரதம் இருக்கும் போது அன்றைய நாள் முழுவதும் முருகப்பெருமானின் பக்திப் பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் மனநிறைவைத் தரும்.
* சஷ்டி நாட்களில் முடிந்தவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று முருகனை வழிபட்டு, அன்னதானம் அல்லது தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்யலாம்.

குறிப்பாக முருகப்பெருமானின் அருள் வேண்டி நிற்கும் அனைத்து பக்தர்களும் சஷ்டி விரதம் மேற்கொள்ளலாம்.
இப்படி மாதம்தோறும் வரும் சஷ்டி நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபட்டால் நிச்சயமாக வாழ்வில் அமைதியும், வளமும் நிலைத்து நிற்கும்.
- கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும்.
- பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.
சஷ்டி விரதம் கடைபிடிப்பது எவ்வாறு?
* கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.
* பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து 'துதிப்போருக்கு வல்வினை போம்'என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
* ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்ச் சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.
* மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
*ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.
சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது உணவு கட்டுப்பாடுதான். உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.
மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.
பெண்களின் பாதுகாப்புக்கு கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!
ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.
கந்த சஷ்டி கவம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.
இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.
கவசத்தின் முதல் பாடலில், "துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும்" என்கிறார். அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.
காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்டாகும்.
மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.
குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.
- சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
- ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
கந்த சஷ்டிவிரதம்
கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.
சஷ்டி என்றால் ஆறு என்று பொருள் ஆகும்.
ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.
இந்த ஆறு நாளையும் பக்தர்கள் விரத நாட்களாக கடைபிடிக்கின்றனர்.
செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.
தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி, ஆறு தினங்களும் உபவாசம் இருப்பது வழக்கம்.
இவ்விரத முறைமையை அனுசரிக்க இயலாதவர்கள் ஐந்து தினங்கள் ஒரு வேளை பால், பழம் மட்டும் அருந்தி, ஆறாம் நாள் உபவாசம் இருத்தலும் நடைமுறையாக உள்ளது.
ஏழாம் நாள் பாரணை அருந்தி விரதத்தை நிறைவேற்றுவர்.
தொடக்க தினத்தில் ஆலயத்தில் தர்ப்பை அணிந்து 'காப்புக்கட்டல்' அதாவது சங்கற்பம் செய்தல் வழக்கம்.
பக்தர்கள் ஆறு தினங்களும் முருகன் ஆலயத்தில் இறைவழிபாடு, புராணபாடனம், போன்ற புனிதச் செயல்களில் ஈடுபடுவர்.
இறுதி நாளில் காப்பை அவிழ்த்து, தட்சணையுடன் அர்ச்சகரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏழாம் நாள் அதிகாலை நீராடி அனுஷ்டானங்களை நிறைவேற்றி, பாரணைப் பூஜை முடிந்ததும் மகேஸ்வர பூசை செய்து விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
மனிதர்களின் உட்பகையாக உள்ள காமம், வெகுளி, ஈயாமை (உலோபம்), மயக்கம், செருக்கு, பொறாமை ஆகிய அசுரப் பண்புகளை அழித்து, அவர்கள் தெய்வீக நிலையில் பெருவாழ்வு வாழ அருள் பாலிக்கும் இறைவன் ஆற்றலின் பெருமை கந்த சஷ்டி உணர்த்தும் மெய்ப்பொருள் ஆகும்.
- அறுகோண வடிவிலான ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
- இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.
சஷ்டி யாகம்
திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) எழுந்தருளுவார்.
அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் துவங்கும்.
குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டத்திக்கு பாலகர்கள், துவார பாலகர்கள் என அனைத்து தெய்வங்கள், தேவதைகளை எழுந்தருளச் செய்வர்.
உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.
ஆறாம் நாளன்று வள்ளி, தெய்வானை இல்லாமல் தனித்து கடற்கரைக்கு எழுந்தளி சூரபத்மனை சம்ஹாரம் செய்வார்.
அதன்பின், வெற்றி வேந்தராக வள்ளி, தெய்வானையுடன் யாக சாலைக்கு திரும்புவார்.
கண்ணாடிக்கு அபிஷேகம்
ஜெயந்திநாதர், சூரபத்மனை சம்ஹாரம் செய்த பிறகு பிரகாரத்தில் உள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார்.
அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும்.
அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார்.
இதை 'சாயாபிஷேகம்' என்றார்கள். 'சாயா' என்றால் 'நிழல்' என்று பொருள்.
போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடத்தப்படுகிறது.
இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகுதான், முருகப்பெருமான் சன்னதிக்கு திரும்புவார் அத்துடன் சூரசம்ஹார வைபவமும் நிறைவடையும்.
ராஜகோபுரம் திறக்காதது ஏன்?
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
பிரதான கோபுரத்தை சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும்.
ஆனால், அந்த பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.
முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தை விட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது.
கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின் போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.
அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
- குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.
- கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.
கந்தசஷ்டி விரதத்தின் பலன்கள்
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று.
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும்.
சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம்.
இந்த விரதத்தை மனதில் கொண்டே "சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்'' என்ற பழமொழி எழுந்தது.
சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தை பேறு கிடைக்கும் என்பது பொருள். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.
கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும்.
கந்த சஷ்டி தினத்துக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரதத்தை இருப்பது ஒருமுறை.
அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒருமுறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.
உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. எனவே உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் அருந்தக்கூடாது.
விரத நாட்களில் அதிகாலையில் எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி,
தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும்.
ஏழாம் நாள் காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.
- ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.
- மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.
சஷ்டி விரதம் வழிமுறைகள்
கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி.
நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலிய சூரபதுமனை முருகவேளின் ஞான வேலினால் அழித்து, பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும்.
அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரதமாகும்.
கந்த சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் செகமாயை... என்று தொடங்கும் திருப்புகழைப் பாராயணம் செய்வோருக்கு குழந்தைப் பேறு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.,வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.
கந்த சஷ்டி விரதம் இருப்போருக்கு குடும்பத்தில் மன நிம்மதி உண்டாகும், எதிரிகள் தொல்லை நீங்கும்.
நன்மக்கட் பேறும் கிடைக்கும் என்பது உண்மை.
சஷ்டி ஆறு நாட்களும் கந்த புராணம் படிப்பது என்பது ஒருவகை வழிபாடாகும்.
பாம்பன் ஸ்ரீமத் குமர குருபரதாச சுவாமிகள், கந்த புராணத்தின் சுருக்கமாக `முதல்வன் புராண முடிப்பு' என்னும் பத்து பாடல்களை அருளியுள்ளார்.
இதனைப் பாராயணம் செய்தால் முழு கந்த புராணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.
மேலும் குமர குருபர சுவாமிகள் பாடியுள்ள கந்தர் கலிவெண்பாவும் கந்த புராணத்தின் சாரமாகும்.
பிரதமை தொடங்கி சஷ்டி முடிய ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, வள்ளி மணவாளனை பூஜை செய்பவர்களும் உண்டு.
ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சஷ்டி அன்று மட்டுமாவது எதுவும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
மற்ற தினங்களில் பால், பழம் சாப்பிடலாம்.
முருகனுக்காக வெள்ளிக் கிழமை விரதம் இருப்பவர்கள், அதை ஐப்பசி மாத முதல் வெள்ளிக் கிழமையன்று தொடங்குவது சிறப்பு.
அதிகாலையில் எழுந்து நீராடி, அன்றைய பூஜை முதலானவற்றை முடித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பிறகு முறைப்படி முருகப்பெருமானின் விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.
வீட்டில் பூஜையை முடித்தபின், கோயிலுக்குச் சென்று, அங்கும் சிறப்பு தூப, தீப, நைவேத்தியங்களுடன் வழிபாடு செய்ய வேண்டும்.
இரவில் பால் பழம் மட்டும் அருந்தலாம்.
சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், சண்முக சட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் முதலான நூல்களை ஆறு நாட்களும் பாராயணம் செய்வது விசேஷம்.
- காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
- பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.
சஷ்டி விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?
கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின்சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.
பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர்.
ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும்.
கந்தசஷ்டிவிரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும்.
காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.
ஆனால், வயோதிகர்கள்,நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.
காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
காலை, மாலை வழிபாட்டின் போதுஅவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோசெய்ய வேண்டும்.
ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.
மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவதுநன்மை தரும்.
சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர்வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.
பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள்.
பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதாரவேண்டுங்கள்.
அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லதுசிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.
பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்குபொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.
பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம்ஒன்றினை ஏற்றுங்கள்.
ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.
மனம் முழுவதும் அந்தமயில் வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம்,கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.
ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்றுஉங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள்.
முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம்முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.
நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும்.
எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான்.
ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.
அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர்.
மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராட வேண்டியது அவசியம்.
அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன்கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
வேறுசிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடைநைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.
வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு,நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டியயாவும் நிச்சயம் கைகூடும்.
நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில்நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.
- கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ, கேட்கவோ செய்ய வேண்டும்.
- கந்தர் அலங்காரப் பாடலை பாராயணம் செய்யவும்.
மங்கள வாரமான சனிக்கிழமையில் முருகனுக்குரிய சஷ்டி விரதம், மகாலட்சுமிக்குரிய பூரம் நட்சத்திரத்தில் வருவது விசேஷமானது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.
காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின்போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். இந்த விரதத்தின் மூலமாக வீடு வாகன யோகங்களை பெறலாம். திருமணத் தடைகள் நீங்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். முருகனை நினைத்து உபவாசமிருந்து மாலை அருகிலுள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வணங்குங்கள். கீழ்க்கண்ட கந்தர், கந்தர் அலங்காரப் பாடலை பாராயணம் செய்யவும்.
`சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும்
சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே'.
- சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது கட்டுப்பாடு தான். உணவு கட்டுப்பாடுதான்.
- உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.
* கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.
* பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து "துதிப்போருக்கு வல்வினை போம்" என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
* ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.
* மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம். ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.
சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது கட்டுப்பாடு தான். உணவு கட்டுப்பாடுதான்.
உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.
மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது.
குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.
பெண்களின் பாதுகாப்புக்கு
கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!






