search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Abhishekam to Murugan"

    • கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ, கேட்கவோ செய்ய வேண்டும்.
    • கந்தர் அலங்காரப் பாடலை பாராயணம் செய்யவும்.

    மங்கள வாரமான சனிக்கிழமையில் முருகனுக்குரிய சஷ்டி விரதம், மகாலட்சுமிக்குரிய பூரம் நட்சத்திரத்தில் வருவது விசேஷமானது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.

    காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின்போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். இந்த விரதத்தின் மூலமாக வீடு வாகன யோகங்களை பெறலாம். திருமணத் தடைகள் நீங்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். முருகனை நினைத்து உபவாசமிருந்து மாலை அருகிலுள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வணங்குங்கள். கீழ்க்கண்ட கந்தர், கந்தர் அலங்காரப் பாடலை பாராயணம் செய்யவும்.

    `சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்

    மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்

    வேல் பட்டு அழிந்தது வேலையும்

    சூரனும் வெற்பும் அவன்

    கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே'.

    ×