search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Murugar"

    • மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
    • சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.

    ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.

    கந்த சஷ்டி கவம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.

    இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.

    கவசத்தின் முதல் பாடலில் துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும் என்கிறார்.

    அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.

    காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்மை உண்டாகும்.

    மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.

    சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.

    குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.

    • சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது கட்டுப்பாடு தான். உணவு கட்டுப்பாடுதான்.
    • உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.

    * கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.

    * பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து "துதிப்போருக்கு வல்வினை போம்" என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

    * ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

    * மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம். ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

    சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது கட்டுப்பாடு தான். உணவு கட்டுப்பாடுதான்.

    உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.

    மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது.

    குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.

    பெண்களின் பாதுகாப்புக்கு

    கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!

    • சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
    • அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.

    விநாயகர் சதுர்த்தியன்று காரிய சித்திமாலை பாடல்களை பாடி அவரை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

    கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன் அமர்ந்து உள்ளம் ஒன்றி பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.

    சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.

    அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும்.

    எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

    சங்கட ஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டு முறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும்.

    தினமும் 21 முறை இப்பாடலை பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம்.

    • பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார்.
    • கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான்.

    இந்திரனது சபையில், மகாஞானியான வாமதேவரை கிரௌஞ்சகன் என்ற கந்தருவன் அவமதித்து பேசிவிட்டான்.

    அதனால் வெகுண்ட அவர் அவனை எலியாக மாற சாபம் தந்தார்.

    எலியாக மாறிய கந்தருவன் சீற்றம் கொண்டு முனிவர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தான். பராசர முனிவரின் ஆசிரமத்தை பாழ்படுத்தி விட்டான்.

    பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூபத்தில் இருந்த கந்தருவனின் கொட்டத்தை அடக்கினார்.

    கர்வம் நீங்கப் பெற்ற கந்தர்வன் விநாயகப் பெருமானுக்கு எலி வடிவில் வாகனமாக ஆனான்.

    அன்று முதல் விநாயகர் பெருமானுக்கு "மூஷிக வாகனன்" என்று பெயர் வந்தது.

    உகந்த இலைகள்

    முல்லை, எருக்கு இலை, கரிசலாங்கண்ணி, மருத இலை, வில்வம், விஷ்ணு கிரந்தி, ஊமத்தை, மாதுளை, இலந்தை, தேவதாரு, வெள்ளை அருகம்புல், மருவு, வன்னி, அரசு, நாயுருவி, ஜாதி மல்லிகை, கண்டங்கத்தரி, தாழை, அரளி, அகத்தி இவற்றின் இலைகளை கொண்டும் அர்ச்சிக்கலாம்.

    • பஞ்ச பூதங்களையும் தன்னுள் கொண்டவர் என்ற தத்துவத்தை விநாயகருடைய திருமேனி காட்டுகின்றது.
    • நாம் விநாயகர் உருவத்தை பார்க்கும் பொழுது பஞ்ச பூதங்களாக குறிக்கும் அடையாளங்கள் காணப்படுகின்றன.

    தலை என்பது மூளை, கண், காது, வாய், மூக்கு என முக்கியமான உறுப்புகளை தன்னுள் கொண்ட ஒரு கூட்டமைப்பு.

    அறிவின் இருப்பிடத்தை விசாலமான நுண்ணறிவை, பேரறிவை, காக்க அமைந்ததே யானைத்தலை.

    யானைத் தலையானின் தலையில் கிரீடம் சூடி அவரை வணங்கும் மக்களுக்கு ராஜ போக வாழ்வு கிடைக்கும்.-அபிராமி பட்டர்.

    உருவ தத்துவம்

    பஞ்ச பூதங்களையும் தன்னுள் கொண்டவர் என்ற தத்துவத்தை விநாயகருடைய திருமேனி காட்டுகின்றது.

    நாம் விநாயகர் உருவத்தை பார்க்கும் பொழுது பஞ்ச பூதங்களாக குறிக்கும் அடையாளங்கள் காணப்படுகின்றன.

    சதுரமான பகுதி -பூமி

    வட்டமான பகுதி -நீர்

    முக்கோணப்பகுதி -தீ

    அரைவட்டப் பகுதி -காற்று

    நடுவே வளைந்த கோடு-ஆகாயம்

    • விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார்.
    • இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரை பிரதிஷ்டை செய்யலாம்.

    அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது.

    பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது கிடைக்கும் காற்று பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கக்கூடியது.

    எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள்.

    கிராமத்தில் இருப்பவர்கள் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தை சுற்றி பிள்ளையாரை வணங்கி செல்வதால் அவர்களுக்கு கர்ப்பப்பை குறைபாடுகள் பெரும்பாலும் வருவதில்லை.

    விநாயகரும் 5 விதமான மரங்களும்

    விநாயகர் பெரும்பாலும் அரச மரத்தடியிலேயே இருப்பார்.

    இது தவிர வாதராயண மரம், வன்னி, நெல்லி, ஆல மரத்தின் கீழும் இவரை பிரதிஷ்டை செய்யலாம்.

    இந்த ஐந்து மரங்களும் பஞ்சபூத தத்துவத்தை விளக்குகிறது.

    அரச மரம் ஆகாயத்தையும், வாதராயண மரம் காற்றையும், வன்னி மரம் அக்கினியையும், நெல்லி மரம் தண்ணீரையும், ஆலமரம் மண்ணையும் குறிக்கும்.

    இந்த ஐந்து மரங்களும் விநாயகர் கோவிலில் நடப்பட்டால் அது முழுமை பெற்ற கோவிலாக இருக்கும்.

    • நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும்.
    • அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யானை அக்திணைப் பொருள்.

    யானைத்தலை, கழுத்துக்குக் கீழே மனித உடல், மிகப் பெரிய வயிறு, இடது பக்கம் நீண்ட தந்தம், வலது பக்கம் சிறிய தந்தம் ஆகியவை உள்ளன.

    நீண்ட தந்தம் ஆண் தன்மையையும், சிறிய தந்தம் பெண் தன்மையையும் குறிக்கும்.

    அதாவது ஆண், பெண் ஜீவராசிகள் அவருள் அடக்கம். யானை அக்திணைப் பொருள்.

    மனிதர் உயர்திணை. ஆக, அக்திணை, உயர்திணை அனைத்தும் கலந்தவர். பெரும் வயிறை கொண்டதால் பூதங்களை உள்ளடக்கியவர்.

    அவரே அனைத்தும் என்பதே இந்த தத்துவம்.

    • எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.
    • வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களை தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம், அமாவாசை கழித்து வரும் வளர்பிறை சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி பூஜை கொண்டாடப்படுகிறது.

    விநாயகரின் உருவத்தை மரம், செம்பு முதலியவற்றாலும், மண், பசுஞ்சாணி, மஞ்சள், மாக்கல், கருங்கல், வெள்ளை சலவைக்கல், முத்து, பவழம், யானை தந்தம், வெள்ளெருக்கின் வேர், அத்திமரம், அரைத்த சந்தனம், சர்க்கரை போன்ற ஏதேனும் ஒன்றால் செய்து வழிபடலாம்.

    அந்த பிம்பத்தை 21 அருகம்புற்களால் விநாயக பெருமானின் பலவித பெயர்களை சொல்லியும், விநாயகரின் அஷ்டோத்திரத்தை சொல்லியும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    விநாயகர் சதுர்த்தியன்று கொழுக்கட்டை பிடித்து நிவேதனம் செய்வது முக்கியமானது.

    எள் கொழுக்கட்டை சனி பீடையையும், உளுந்தம் கொழுக்கட்டை ராகு தோஷத்தையும், வெளியே உள்ள அரிசி மாவு குரு சுக்கிர ப்ரீதியை பெற்றுத் தரும்.

    எக்காலத்திலும் விநாயகரை வணங்குபவர்கள் தம் கஷ்டங்கள் யாவும் நீங்கப் பெறுவார்கள்.

    வினைப் பயன்களால் உண்டாகும் நோய்கள் அவர்களை தீண்டாது. விநாயகரின் அருளால் விக்னங்கள் யாவும் அகலும்.

    குழந்தை சவுபாக்கியத்துடன் அனைத்து கலைஞானமும் பெற்று ஆரோக்கியமாய் அரும்பெரும் வாழ்வு வாழ கணபதியின் திருவருள் துணை நிற்கும்.

    • விநாயகர் சிலையை பட்டீஸ்வரத்திற்கு எடுத்து செல்ல பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.
    • இறுதியில் அங்கேயே விநாயக பெருமான் கலியுக கர்ணாமூர்த்தியாக அருள் புரிந்து வருகிறார்.

    கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பண்டீஸ்வர சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரையில் இருந்து 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்கிரகம் ஒன்றை வண்டியில் வைத்து எடுத்து வந்தார்கள்.

    அப்போது வண்டியின் அச்சு முறிந்து விநாயகர் சிலை தற்போது ஈச்சனாரி விநாயகர் ஆலயம் எழுந்தருளி இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்துவிட்டதாம்.

    விநாயகர் சிலையை பட்டீஸ்வரத்திற்கு எடுத்து செல்ல பக்தர்கள் எவ்வளவோ முயன்றும் விநாயகரை அசைக்கக்கூட முடியவில்லை.

    இறுதியில் அங்கேயே விநாயக பெருமான் கலியுக கர்ணாமூர்த்தியாக அருள் புரிந்து வருகிறார்.

    • அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி.
    • இவரது அங்குசமோ மனம் என்ற யானையை கட்டிப்போடும் வல்லமை படைத்தது.

    விநாயகருக்கு தும்பிக்கையுடன் சேர்ந்து ஐந்து கரங்கள் இருக்கிறது. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார்.

    பின் வலது கைகளில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன்பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்த கலசமாகிய மோதகம் ஆகியவை இருக்கும்.

    புனித நீர்க்குடம் கொண்டு உலக வாழ்வில் உழன்று தத்தளித்து களைத்து தன்னை சேரும் மக்களின் தாகம் தணித்து களைப்பை போக்கி பிறப்பற்ற நிலையை அளிக்கிறார்.

    அங்குசம் யானையை அடக்க உதவும் கருவி. இவரது அங்குசமோ மனம் என்ற யானையை கட்டிப்போடும் வல்லமை படைத்தது.

    அதனால் தான் முகம் யானை வடிவில் இருக்கிறது.

    பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளை கட்டிப்போடுகிறார்.

    ஒடித்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியை பெற வேண்டும் என்பதை குறிக்கிறது.

    இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது.

    உலகம் உருண்டை. மோதகமும் உருண்டை.

    உலகத்துக்குள் சகல உயிர்களுக்கும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதை காட்டுகிறது.

    • அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் “பூமி குமாரன்” என்ற பெயரும் உண்டு.
    • அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.

    விநாயகரின் பரமபக்தரான பரத்துவாச முனிவர் தலயாத்திரை சென்றபோது நர்மதை நதியில் நீராடினார்.

    அங்கே ஒரு கந்தர்வ மங்கையைக் கண்டார்.

    அவள் மேல் அன்பு கொண்டு வாழ்ந்தார்.

    இவ்விருவருக்கும் சிவந்த நிறத்தில் குழந்தை ஒன்று பிறந்தது. செந்நிறம் கொண்டிருந்ததால் "அங்காகரன்" என்று குழந்தைக்கு பெயர் சூட்டப்பட்டது.

    அக்குழந்தையைப் பூமாதேவி எடுத்து வளர்த்ததால் "பூமி குமாரன்" என்ற பெயரும் உண்டு.

    அங்காரகர் சிறந்த விநாயகர் பக்தர்.

    அவருடைய பக்தித்திறத்தை மெச்சிய விநாயகர் அங்காரகன் வேண்டிக் கொண்டபடி தேவர்களைப் போல் வாழவும், நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பெரும்பேற்றினையும் பெற்றார்.

    அதனுடன் அங்காரகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியில் விநாயகரின் திருவடிகளைப் பணிவோரின் பிணிகளைத் தீர்க்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்.

    இதன் காரணமாகச் செவ்வாய்க்கிழமை சதுர்த்தி விரதம் இருந்து விநாயகப் பெருமானின் திருவருளைப் பெறுவோர் உடல் பிணிகள் யாவும் நீங்கப் பெறுவர்.

    செவ்வாய் தோஷமுள்ளவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நீங்கி திருமண பாக்கியம் உண்டாகும்.

    • 5 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள்.
    • மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்று தமிழ்நாட்டில் அனேக இனத்தவர்கள் இவ்விரதத்தைப் போற்றி வருகின்றனர்.

    தை, ஆடி மாதங்களில் வரும் செவ்வாய்க் கிழமைகளில், பெண்கள் பிள்ளையார் விரதத்தை தொடங்குவார்கள்.

    பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை இருப்பார்கள், ஆண்கள் இவ்விரதத்தில் கலந்து கொள்ளக் கூடாது.

    ஆண்கள் அநேகமாக இந்த விரதம் நடக்கும் போது வீட்டை விட்டு வெளியிலோ அல்லது வெளியூருக்கோ சென்று விடுவார்கள்.

    5 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள்.

    மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்று தமிழ்நாட்டில் அனேக இனத்தவர்கள் இவ்விரதத்தைப் போற்றி வருகின்றனர்.

    பெண்கள் எழுந்து நீராடித் தூய்மையான ஆடைகளை அணிந்து நெல் குத்துவார்கள்.

    பிறகு குத்தின அரிசியை மா இடித்து, அதை உப்பில்லாமல் பிசைந்து, தேங்காய் துண்டுகளை அதில் போட்டு இளநீரை விட்டு நன்றாகப் பிசைவார்கள்.

    அடையும் உருண்டையுமாகச் செய்து நீராவியில் வைக்கோலைப் பரப்பி அதன் மேல் வைத்து ஆவி போகா வண்ணம் மூடி வேகவைப்பார்கள்.

    பிறகு ஈனக்கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து புங்க இலை, புளிய இலை ஆகியவற்றைக் கொண்டு சூழல் அமைத்து, அதன் நடுவே பிள்ளையாரை எழுந்தருளச் செய்வார்கள்.

    பிறகு தேங்காய், பழம், பாக்கு வெற்றிலையை பரப்பி, கொழுக்கட்டைகளையும் பரப்பித் தூபமிட்டு, பிரார்த்தனை செய்து, ஒளவையார் பூஜை செய்யும் வழிமுறையை விளக்கிய கதையை அதன் பயனை கதையைச் சொல்லத் தொடங்குவார்கள். (இந்த கதை பெண்களுக்கு மட்டுமே தெரியும்).

    கதை முடிந்ததும் கற்பூர தீபாராதனை காட்டி, நைவேதியம் செய்து, பிறகு அனைவரும் கூடி அவரவர்களுக்குரிய அடைகளை உண்பார்கள். (இரவில் அல்லது மாலை நேரத்தில் தான் செய்வார்கள்).

    பொழுது விடியுமுன் நான்கு நாழிகைக்கு முன்பே எழுந்து, இரவு கொழுக்கட்டை வேகவைத்த வைக்கோல் மற்றும் புங்க இலை, புளிய இலை, பூஜை செய்த பூ எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய் ஆற்றிலோ, குளத்திலோ போட்டு விட்டு பிள்ளையாரையும் வழியனுப்பி விட்டு வாய் பேசாமல் நிறை குடத்துடன் மஞ்சள், குங்குமம் அணிந்து வெற்றிலை மென்றபடி வீடு திரும்புவார்கள்.

    அன்று முழுவதும் யாருக்கும் காசு, தானியம் ஏதும் கொடுக்க மாட்டார்கள்.

    பெண்களால் செய்யப்படும் இவ்விரதம் இன்றும் சிறப்பாக செய்யப்படுகின்றது.

    ×