என் மலர்
நீங்கள் தேடியது "உடற்பயிற்சி"
- புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை.
- ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம்.
புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை. இது தசைகளுக்கு வலுசேர்க்கிறது. செல்களை புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன், வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை. நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம். சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துக்கள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச்சத்தை பெறலாம்.
இயற்கை உணவைச் சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது போன்ற மற்ற சத்துக்களும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். செயற்கை பானங்களில் இருக்கிற புரதத்தை உடல் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரதச்சத்து சம்பந்தப்பட்ட பவுடரை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதுவும் தவறு.
உடற்பயிற்சி கூடத்துக்கு செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.
- முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
- படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும்.
அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் என உயரமான கட்டுமானங்களை கொண்ட இடங்களுக்கு செல்லும்போது பலரும் லிப்ட், எஸ்கலேட்டர் பயன்படுத்துகிறார்கள். முதல் தளத்திற்கு செல்வதற்கு கூட லிப்ட் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். நவீன சாதனங்களால் உடல் உழைப்பு குறைந்து கொண்டிருக்கும் நிலையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட தொழில்நுட்ப சாதனங்களை சார்ந்திருப்பது உடல் நலனை பலவீனப்படுத்திவிடும்.
சமீப காலமாக உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் சார்ந்த பிரச்சினைகள் விஸ்வரூபமெடுத்துக்கொண்டிருக்கின்றன. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது வேகமான நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இதயத்தின் ஆயுளை அதிகரித்து உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
தினமும் நடைப்பயிற்சிக்கு செல்ல போதிய நேரம் இல்லாவிட்டாலும், ஏதாவதொரு வகையில் உடல் இயக்கத்திற்கு முன்னுரிமை கொடுப்பது கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்கும். அதற்கான வழிகளில் ஒன்றாக, படிக்கட்டுகளை தேர்ந்தெடுக்கலாம். லிப்ட், எஸ்கலேட்டர் போன்றவற்றை தவிர்த்து படிக்கட்டுகளை பயன்படுத்துவது பல்வேறு வகைகளில் இதயத்திற்கு பலன் அளிக்கும். அது குறித்து பார்ப்போம்.
இதயத் துடிப்பு
நீங்கள் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கும்போது, தசைகள் வேலை செய்ய அதிக ஆக்சிஜன் தேவைப்படும். அதன் தேவையை பூர்த்தி செய்ய இதய துடிப்பு அதிகரிக்க தொடங்கும். அதனால் இதயம் ரத்தத்தை வேகமாக பம்ப் செய்யும். அப்போது தசைகளுக்கு ஆக்சிஜன் மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
ஆற்றல்
படிக்கட்டுகளில் நடக்க தொடங்கியதும் இதய துடிப்பு ஒவ்வொரு முறை அதிகரிக்கும்போதும் இதயத்தின் தசை சுவர்கள் அதிக அளவு ரத்தத்தை அழுத்துவதற்கு அதிக ஆற்றலுடன் சுருங்குகின்றன. இப்படி அதிக ஆற்றல் வெளிப்படுவது கால் தசைகள் உள்பட உடலின் திசுக்களுக்கு போதுமான ரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவும்.
ரத்த நாளங்கள்
படிக்கட்டு ஏறும்போது ரத்த ஓட்டத்திறன் அதிகரிக்கும். அது ரத்த நாளங்கள் விரிவடைவதற்கு வித்திடும். உடல் முழுவதும் ரத்த ஓட்டத்திற்கான தேவை பூர்த்தி செய்யப்படும். இதனால் மற்ற சமயங்களில் ரத்த ஓட்டம் எளிதாக நடப்பதற்கு வழி செய்கிறது. தசைகளுக்கு போதுமான ரத்தம் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.
ரத்த ஓட்டம்
ஒரு நிமிடத்திற்கு இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு 'கார்டியாக் அவுட்புட்' என குறிப்பிடப்படுகிறது. படிக்கட்டு ஏறும்போது இதயம் பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். உடலின் ஆக்சிஜன் தேவையையும் பூர்த்தி செய்துவிடும். உடல் உறுப்புகள் அனைத்திற்கும் ரத்தம் சென்றடைவதை உறுதி செய்வதாகவும் அமைந்துவிடும்.
காற்றில் இருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து ரத்த ஓட்டத்தில் கலக்க செய்வதற்கு நுரையீரல் கடினமாக உழைக்கிறது. இந்த ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் பின்னர் இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு தசைகளுக்கு செலுத்தப்படுகிறது. இது உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க பயன்படுகிறது.
ரத்த உறைவு
படிக்கட்டு ஏறுவதும் கார்டியாக் உடற்பயிற்சிகளின் ஒரு அங்கம்தான். தசை வலிமையை அதிகரிக்க செய்யும். எலும்புகளை வலுப்படுத்தும். மேலும் படிக்கட்டுகளில் ஏறும்போது உடலில் கலோரிகள் எரிக்கப்படும்.
படிக்கட்டு போன்ற பயிற்சியின் காரணமாக இதயத் துடிப்பு அதிகரிக்கும். அப்போது தமனிகளின் சுவர்களை தளர் வடைய செய்யும். வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை ரத்தக்குழாயில் அடைப்பதை தடுக்கும். அதனால் ரத்த உறைவு பிரச்சினை தவிர்க்கப்படும்.
- மாலை நேர பயிற்சிகள் நல்லதொரு புத்துணர்ச்சியை தரும்.
- உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைகிறது.
ஸ்டிரெஸ் குறைகிறது:
நாள் முழுவதும் வேலைப்பளு மற்றும் மனரீதியாக நெருக்கடி என்று சோர்ந்து போய் வருகின்ற உங்களுக்கு மாலை நேர பயிற்சிகள் நல்லதொரு புத்துணர்ச்சியை தரும். மாலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைந்து, இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படுகிறது.
டென்ஷனை குறைக்கிறது:
பெரும்பாலான மக்கள் அலுவலகப் பணியாளர்களாக உள்ளனர் அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களாக இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது நம் தசைகளில் இறுக்கம் ஏற்படுகிறது. மாலையில் உடற்பயிற்சி செய்தால் உடலில் உள்ள சோர்வு நீங்கும் மற்றும் இரவில் தடையற்ற நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
பயிற்சி செய்ய கூடுதல் நேரம்:
காலையில் தூங்கி எழுந்து உடற்பயிற்சி செய்தால், மீண்டும் வந்து அலுவலகத்திற்கு புறப்பட வேண்டும் என்ற பரபரப்பு மனதுக்குள் இருந்து கொண்டிருக்கும். உங்களுக்கான கால அவகாசமும் குறைவு தான். ஆனால், மாலையில் உங்களுக்கு நீண்ட நேரம் கிடைக்கிறது. தினசரி பணிகள் பெரும்பாலும் பகல் பொழுதிலேயே முடிந்து விடுவதால் மாலையில் நீண்ட நேரம் கிடைக்கும்.
சிறப்பாக செயல்பட முடியும்:
காலை நேர உடற்பயிற்சிகளைக் காட்டிலும் மாலையில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். மாலையில் உங்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பெரும்பாலும் நிறைவு செய்யப்பட்டிருக்கும் என்பதால் மன நெருக்கடி ஏற்படாமல் உங்களால் பயிற்சிகளை செய்ய முடியும்.
கொழுப்பு மிகுதியாக கரையும்:
மாலையில் உடற்பயிற்சி செய்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களுக்கு தசைகளின் செயல்பாடுகள் விறுவிறுப்பு அடைகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்குமாம். ஆக, உடல் எடை குறைக்க விரும்பும் நபர்களுக்கு இது நல்வாய்ப்பாக அமையும்.
இறுதி முடிவு என்னவென்றால் உடற்பயிற்சி செய்ய சிறப்பான நேரம் எது என்பது ஒரு தனி நபருக்கு உள்ள நேர வாய்ப்புகள் மற்றும் அனுபவத்தைப் பொருத்து மாறுபடுகிறது. உங்கள் உடலுக்கும், இருக்கின்ற வாய்ப்புகளையும் பொருத்து, எந்த நேரம் சிறப்பாக அமையும் என்பது குறித்து ஆலோசனை செய்து கொள்ளலாம்.
- அனைத்து செல்களையும் புதுப்பிக்கக்கூடிய அதிஅற்புதமான முத்திரை.
- உத்திரபோதி முத்திரை நுரையீரலையும், பெருங்குடலையும் வலுப்படுத்துகிறது.
உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பிக்கக்கூடிய அதிஅற்புதமான முத்திரை இந்த உத்திரபோதி முத்திரை என்று போகர் சித்தர் கூறி உள்ளார்.
முதலில் முத்திரைகளை செய்வதற்கு முன்னால் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமில்லாமல் மனதில் நம்பிக்கையுடனும், மன ஒருமைப்பாட்டுடனும் செய்யும் போதுதான் முத்திரையின் பலன்களாக இருந்தாலும், யோகா, தியானத்தினுடைய பலன்களாக இருந்தாலும் நமக்கு கிடைக்கும்.
உத்திரபோதி முத்திரை நுரையீரலையும், பெருங்குடலையும் வலுப்படுத்துகிறது. உத்திரபோதி முத்திரையை எப்படி செய்ய வேண்டும் என்றால் இரண்டு கைவிடல்களிலும் உள்ள கட்டைவிரலும், ஆள்காட்டி விரலும் மட்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும் மற்ற விரல்கள் அனைத்தும் கோர்த்துக்கொண்டு இருக்க வேண்டும். ஆள்காட்டிவிரல் மேல் பார்த்தவாறு இருக்க வேண்டும். கட்டைவிரல் கீழ்நோக்கி இருக்க வேண்டும். இதற்கு தான் உத்திரபோதி முத்திரை என்று பெயர்.
இந்த முத்திரையை தினமும் 20 நிமிடம் செய்யலாம். இந்த முத்திரையை உட்கார்ந்துகொண்டும், நடந்துகொண்டும் செய்யலாம். பெரும்பாலும் முத்திரைகளை உட்கார்ந்து செய்வது தான் உடலுக்கு நல்லது.
உத்திரபோதி முத்திரையை நாம் தொடர்ந்து செய்துகொண்டு வரும்போது நமது உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உடலும், மனதும் சோர்ந்துபோய் இருக்கும் போது நமக்கு நியாபகம் வரக்கூடிய முத்திரை இந்த உத்திரபோதி முத்திரை. எப்போதெல்லாம் நாம் சோர்ந்துபோய் இருக்கிறோமோ அல்லது கொஞ்சம் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த உத்திரபோதி முத்திரையை செய்யலாம்.
ஏதாவது ஒரு விஷயத்தை நாம் கையாளும் போது நான் என்னசெய்வது என்று தெரியாமல் பரபரப்பாக காணப்படுவோம். அவ்வாறு இருக்கும் போது இந்த உத்திரபோதி முத்திரையை செய்தால் கண்டிப்பாக மனதுக்குள் ஒரு அமைதியும், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
நாம் முத்திரையை செய்யும் போது மூச்சு உள்வாங்கப்படும்போது நம் மனதில் உள்ள ஸ்டிரெஸ் (மன அழுத்தம்) குறைகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள் பரீட்சைக்கு போகும்போது வரக்கூடிய பயத்தை போக்குவதற்கும், மேடை ஏறி பேசுவதற்கு பயப்படுகிறவர்கள் அதுமட்டுமில்லாமல் இண்டர்வியூக்கு செல்லும் போது ஏற்படக்கூடிய பயத்தையும் போக்குவதற்கு இந்த உத்திரபோதி முத்திரை உதவுகிறது.
இந்த உத்திரபோதி முத்திரையை நாம் செய்யும் போது அவர்களுக்கு நிதானமும், படித்ததை பரிட்சையில் எழுதுவதற்கோ அல்லது இண்டர்வியூவை சரியாக கையாள்வதற்கோ அவர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது.
ஒருசிலர் மேடையில் ஏறி பேசுவதற்கே பயப்படுவார்கள். ஏனென்றால் ஒருவித பயத்துடனேயே காணப்படுவார்கள். இவர்கள் இந்த உத்திரபோதி முத்திரையை தொடர்ந்து செய்துகொண்டு வரும் போது மேடைபேச்சில் சிறந்துவிளங்குவார்கள்.
ஒரு சிலர் காரணமே இல்லாமல் எல்லாவற்றுக்கும் பயந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் இந்த உத்திரபோதி முத்திரை ஒரு சிறந்த தீர்வினை அளிக்கிறது. இதுகூடவே நாம் தியானமும் செய்து வந்தால் மிகவும் நல்லது.
இந்த முத்திரை தொடர்ந்து செய்யும் போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிகளிலும் உள்ள செல்களை புதுப்பித்து நம் மூளையை புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. நம் மனதில் உள்ள பிரச்சினைகளை சுத்தப்படுத்தி நம்முடைய மூளைக்கு தெளிவாக முடிவு எடுக்கக்கூடிய சக்தியை கொடுக்கிறது.
- உடல் உழைப்பானது மிகவும் குறைந்துவிட்டது.
- உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கிறோம்.
தற்போதைய தொழில்நுட்ப மயமான வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது மிகவும் குறைந்துவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உலகம் முழுவதிலுமே தற்போது தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தி குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். இது உடல் பருமனில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுக்குள் அடங்காத வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் அல்லது உடற் கொழுப்பு என்று கூறுகிறோம்.
உயிரை பறிக்கும் உடல்பருமன்
2016-ல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கைல் 1980-ம் ஆண்டுக்கு பின்னர் உடல் பருமன் உள்ளோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் உடல் நிறை குறைவினால் ஏற்படும் மரணங்களை விட உடல் பருமனால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
உடல் பருமன் என்பது தடுக்கப்பட வேண்டிய நிலை எனவும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் 30 சதவீதமான மக்கள் குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் சிறுகுழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தொலைக்காட்சி மற்றும் செல்போன் பார்ப்பதிலேயே அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது உடல் பருமன் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.
முந்தைய காலங்களில் குழந்தைகள், இளைஞர்கள் மாலை நேரங்களில் வீதிகளில் விளையாடுவதை காணமுடிந்தது. ஆனால் இன்று அத்தகைய நிலை மாறி விளையாடுவதும் கூட செல்போனிலும், கம்ப்யூட்டரிலும் என்ற அவல நிலை ஏற்பட்டுவிட்டது.
மேலும் அதிக உடல் எடையானது மனிதர்களில் பல்வேறு மாற்றங்களுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கிறது. முக்கியமாக உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மூச்சுத்திணறல், மூட்டுவலி, முதுகு வலி, மாரடைப்பு, மார்பக புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடல் இறக்கம், மலட்டுத்தன்மை போன்ற நோய்கள் உடல் பருமன் அதிகரிப்பால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் என்பது நம்மில் பலரும் அறியாத விசயம்.
மிகவும் சிலருக்குதான் அது மரபு வழியாகவும் சில மருத்துவ காரணங்களினாலும் சில உளப்பிரச்சினைகளாலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும் போதிய தூக்கம் இன்மை, நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் பாதிப்புகள், அதிக புகைப்பழக்கம், தாமதமான குழந்தை பேறு போன்ற காரணங்களும் உடல் பருமனுக்கு வழிவங்குகின்றது.
உலகளாவிய அளவில் தடுக்கக் கூடிய நோயினால் மனிதர்கள் இறப்பதில் உடல் பருமன் முதன்மை வகிப்பது மிகவும் வருந்தத்தக்கது. உடல் பருமன் என்பது உடல் அளவில் மட்டுமன்றி மனதளவிலும் மனிதர்களை பாதிப்படைய செய்கின்றது.
தெருவுக்கு மூன்று ஜிம்கள் முளைப்பதற்கும் உடல் பருமன் முக்கிய காரணமாக உள்ளது. உடல் பருமனை காட்டுப்படுத்த அனைவரும் ஜிம்மின் உதவியை நாட ஆரம்பித்துவிட்டனர். இதற்கெல்லாம் காரணம் நாம் உடல் பருமன் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் தான்.
அழகும் ஆரோக்கியமும் எப்போதும் ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது. ஆரோக்கியம் இல்லாத அழகு அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போன்றது. உடல் பருமனை கட்டுக்குள் வைப்பதற்கு நாம் எப்போதும் ஆரோக்கியமான முறைகளையும், உணவுகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இப்போதெல்லாம் மனிதர்களுக்கு எதிலும் பொறுமை என்பதே இருப்பதில்லை. உடல் பருமனை குறைக்கவும் உடனடி தீர்வையே நாடுகின்றனர். இது முற்றிலும் தவறானது. உடனடியாக கிடைக்கும் தீர்வு நிலையானதாக இருக்காது.
உடல் பருமனை குறைக்க நாள் முழுவதும் ஜிம்மில் கிடப்பதும், மெடிக்களில் ஆலோசனை இன்றி உடலை குறைக்க மருந்துக்களையும், பானங்களையும் உபயோகித்து குறைப்பது மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. இதன் விளைவுகள் எவ்வளவு அபாயகரமாக இருக்கும் என்பது குறித்து பலரும் அக்கறை செலுத்துவதில்லை. உடல் பருமன் உடனடியாக தோன்றுவது அல்ல. கொழுப்பு என்பது உடலுக்கு ஆற்றல் தேவைப்படும் போது எடுத்துக்கொள்ள வைத்திருக்கும் தேக்கம் ஆகும்.
பெண்களுக்கு 20 முதல் 25 சதவீதமும், ஆண்களுக்கு 12 முதல் 15 சதவீதமும் உடலில் கொழுப்பு காணப்படுகிறது. பெண்களுக்கு அவர்களின் மகப்பேறுக்காக மார்பகம், கூபகம், தொடை பகுதிகளில் 12 சதவீதம் கூடுதலாக அத்தியாவசிய கொழுப்பு காணப்படுகின்றது. ஆண்களுக்கு இது 3 சதவீதம் தான் காணப்படும். உடல் பருமன் தேக்கி வைத்துள்ள கொழுப்பு அதிகரிப்பத்தால் மட்டுமே உருவாகின்றது. கூடுதல் உணவு, குறைந்த உடல் உழைப்பு, சில நேரங்களில் பரம்பரை காரணங்கள் போன்ற காரணங்களால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
குறைவான கலோரியில் நிறைவான நார்சத்து கொண்ட உணவை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். கடைகளில் கிடைக்கும் ஜங்க்புட் வகைகளை நாடுவதை உடல் பருமன் உடையவர்கள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
மேலும் தொடர் உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றுடன் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தால் மட்டுமே உடல் பருமனை எளிதாக விரட்டியடிக்க முடியும்.
- நமது கலாரத்தில், பண்டிகைகளும் விசேஷங்களும் அதிகமாக நடக்கும்.
- பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நமது கலாரத்தில், பண்டிகைகளும் விசேஷங்களும் அதிகமாக நடக்கும். அனைத்து பண்டிகைகளும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கக் கூடியவை. அதேசமயம் பண்டிகைக்கு தயாரிக்கும் பலகாரங்கள், உடல் எடையை அதிகரிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். பண்டிகை நாட்களில் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றி, உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு சில குறிப்புகள்:
பண்டிகைக்கால பரபரப்பில் பலரும் காலை உணவை தவிர்த்து விடுவார்கள். அதனால் மதியம் உணவு சாப்பிடும் அளவு அதிகரிக்கும். இடையில் நொறுக்குத்தீனிகள் சாப்பிடும் எண்ணம் உண்டாகும். அதன் காரணமாக பண்டிகை பலகாரங்களை கட்டுப்பாடு இல்லாமல் சாப்பிடுவீர்கள்.
பண்டிகை நாட்களில் உடல் எடையை குறைப்பது சாத்தியம் இல்லாதது. உறவினர்களும், நண்பர்களும் இனிப்புகளை வழங்கும்போது உங்களால் சாப்பிடாமல் இருக்க முடியாது. எனவே உடல் எடையை குறைக்கும் எண்ணத்தைத் தவிர்த்து, தற்போது இருக்கும் எடையை அதிகரிக்காமல் பராமரிப்பதற்கான வழிகளை கடைபிடியுங்கள்.
பண்டிகை நாட்களிலும் உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள். மிதமான உடற்பயிற்சிகள், உடங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு மன நிறைவையும் உண்டாக்கும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல் வதற்கு முன்பு, குறைந்த அளவு உணவு சாப்பிட்டு விட்டு செல்லுங்கள். காய்கறி சாலட், ஆரோக்கிய மான சிற்றுண்டி போன்றவற்றை சாப்பிடும்போது வயிறு சற்றே நிறைந்து இருக்கும். இதனால் விருந்தில் இருக்கும் தின்பண்டங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டாமல் தடுக்க முடியும். குளிர்பானங்கள் குடிப்பதில் சற்றே கவனமாக இருங்கள்.
அதிகப்படியான சர்க்கரை ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் மதிய உணவில் அதிக கொழுப்பு உள்ள பொருட்களையும், இனிப்புகளையும் சாப்பிட்டீர்கள் என்றால். மற்ற நேரங்களில் எளிய உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு நாளுக்கு கூடுதலாக 500 கலோரிகள் எடுத்துக்கொண்டால். அது உங்கள் உடல் எடையில் விரைவாக எதிர்மறை மாற்றத்தை உண்டாக்கும். பண்டிகை நாட்களாகவே இருந்தாலும், ஆரோக்கிய மான உணவுகளை சாப்பிடும் வழக்கத்தை பின்பற்றுங்கள். எண்ணெய், கொழுப்பு நிறைந்த, மசாலா சேர்த்த உணவுகளை தவிர்த்து விடுவதே நல்லது.
- வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் வெரிகோஸ் வெயின்.
- வயதான காலத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்சனை.
வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் வெரிகோஸ் வெயின் என்று அழைக்கப்படுகின்றன. வயதாகும் போது பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
வெரிகோஸ் வெயின் நரம்புகள் வயதான காலத்தில் வரக்கூடிய பொதுவான பிரச்சனை. ஆனால் இவை எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். உடலில் கால்கள் மற்றும் முகம் போன்ற முக்கிய பகுதிகளில் ஏற்படும் போது இது சங்கடத்தை உண்டு செய்யும். சில சிலந்தி நரம்புகள் வெளிப்படையாக பார்க்க முடியும். இந்த வெரிகோஸ் வெயினுக்கு உரிய வீட்டு மருத்துவம் என்ன என்பதை பார்க்கலாம்.
வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் அல்லது வெரிகோஸ் வெயின் என்பது அடர் நீலம் அல்லது ஊதா நிறத்தை கொண்டிருக்கும். இது தோலின் அடியில் இருந்து வெளியேறலாம். இந்த நரம்புகளில் சிறிய வால்வுகள் பலவீனமடையும் போது வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள் உருவாகலாம். இது நரம்புகள் இரத்தம் பின்னோக்கி பாய்வதை நிறுத்துகின்றன. இவை சேதமடையும் போது ரத்தம் நரம்புகளில் தேங்கும். இதனால் நரம்புகளில் வீக்கம் உண்டு செய்கிறது.
நோயின் அறிகுறிகள்:
* கால்களில் எரியும் உணர்வு இருக்கும்
* கால்கள் கனமாக இருக்கும்
* தசைப்பிடிப்பு இருக்கும்
* இரவில் அதிகமாக இருக்கும்.
* கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கம்
* வீங்கி பருத்து வலிக்கும் நரம்புகள்
* நரம்புக்கு மேல் மெல்லியதாக தோன்றும்
* உலர்ந்த அல்லது அரிப்பு தோல்
உடற்பயிற்சி
வழக்கமான உடற்பயிற்சி கால்களில் சிறந்த ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது நரம்புகளில் தேங்கியிருக்கும் ரத்தத்தை வெளியேற்ற செய்கிறது. உடற்பயிற்சி செய்வதால் ரத்த அழுத்தம் குறைக்க உதவுவதோடு வீங்கி பருத்து வலிக்கும். தசைகள் அதிக சிரமமின்றி வேலை செய்ய பயிற்சிகள் உதவுகின்றன. நீச்சல், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், யோகா போன்றவற்றை செய்யலாம்.
உணவுவகைகள்
உப்பு அல்லது சோடியம் நிறைந்த உணவுகள் உடலில் தண்ணீரை தக்க வைக்கும். உப்பு உணவை குறைப்பதன் மூலம் நீர் தக்கவைப்பை குறைக்கலாம். பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள் நீர் தேக்கத்தை குறைக்க செய்யும். பாதாம் மற்றும் பிஸ்தா பருப்புகள், பருப்புகள், வெள்ளை பீன்ஸ், உருளைக்கிழங்கு, இலை காய்கறிகள், சால்மன் மற்றும் டுனா போன்ற சில மீன்கள் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளான கொட்டைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள், ஓட்ஸ், கோதுமை மற்றும் ஆளிவிதை, முழு தானிய உணவுகள் இதன் மூலம் எடையை கட்டுக்குள் வைக்கலாம். ஏனெனில் அதிக எடையுடன் இருக்கும் போது கால்கள் வீங்கி பருத்து நரம்புகள் வலிக்க வாய்ப்புகள் அதிகம்.
நீண்ட நேரம் உட்காருவதை தவிர்ப்பதன் மூலம் வெரிகோஸ் வெயின் குறையலாம். இரத்த ஓட்டம் சீராக இருக்க, அவ்வபோது சுற்றி செல்ல அடிக்கடி எழுந்து செல்வது நிலையை மாற்றி வைப்பது நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். குறுக்கு கால்களில் உட்காரக்கூடாது. இது கால்களுக்கு ரத்தஓட்டத்தை மேம்படுத்தலாம். சுழற்சி சிக்கல்களை சேர்க்கலாம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை மெதுவாக மசாஜ் செய்வது நரம்புகள் வழியாக இரத்தத்தை நகர்த்த செய்யலாம். ஒரு நபர் உகந்த விளைவுகளை அறிய மென்மையான மசாஜ் எண்ணெய்கள் அல்லது மாய்சுரைசர் பயன்படுத்தலாம். நரம்புகளில் நேரடியாக அழுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது திசுக்களை சேதப்படுத்தும்.
- அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடம்.
- ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள்.
உலக அளவில் அதிக ஆயுளுடன் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது. ஐ.நா.வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரிவின் மதிப்பீடுகளின்படி ஜப்பானிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 83 ஆண்டுகள். அங்கு வசிக்கும் ௧௪௫௦ பேரில் ஒருவர் 100 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்பதை அந்நாட்டு சுகாதார அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஜப்பானியர்கள்தான் உலகிலேயே கட்டுக்கோப்பான உடல்வாகுவுடன் கூடிய ஆரோக்கியமான மக்களாக அறியப்படுகிறார்கள். அதன் பின்னணி ரகசியம் என்ன தெரியுமா? உடற்பயிற்சியும், உணவுப்பழக்கமும்தான். மற்ற நாட்டவர்களிடம் இருந்து வேறுபடும். அவர்களின் வாழ்க்கை முறை பற்றியும், அவர்களை நீண்ட காலம் வாழ வைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றியும் பார்ப்போம்.
கடல் உணவுகளும், இறைச்சி வகைகளும் ஜப்பானியர்களின் உணவு பட்டியலில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. அதே அளவுக்கு காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் பூமிக்கு அடியில் விளையும் வேர் காய்கறிகள்தான் அவர்களின் தேர்வாக இருக்கிறது. காய்கறிகள் மீதான அவர்களின் நாட்டம் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
கராத்தே, டேக் வாண்டோ, ஜூடோ, அக்கிடோ போன்ற தற்காப்புக் கலைகளின் பிறப்பிடமாக ஜப்பான் அறியப்படுகிறது. அந்த கலைகளின் முக்கியத்துவத்தை ஜப்பானியர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுகிறார்கள். தற்காப்பு கலை வடிவில் மூதாதையர்கள் கடைப்பிடித்த உடற்பயிற்சி பழக்கவழக்கங்களை இன்றைய தலைமுறையினர் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.
உடலை வலுவாக்கும் பயிற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள். ஜப்பானில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் டேக் வாண்டோ பயிற்சி பெற்றுள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அந்த அளவுக்கு அவர்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது.
ஜப்பானியர்கள் 5 வகையான உணவு தயாரிக்கும் முறைகளை பின்பற்றுகிறார்கள். முதல் முறைக்கு 'நமோ' என்று பெயர். அதற்கு பச்சையாக உண்பது என்று பொருள். சில காய்கறிகள், உணவு பதார்த்தங்களை பச்சையாக சாப்பிடும் வழக்கத்தை தொடர்கிறார்கள். இரண்டாவது முறை 'நிரு' எனப்படுகிறது. இது உணவு பொருட்களை துல்லியமாக சமைக்கும் சமையல் கலையாகும்.
உணவை சரியான பதத்தில் வேகவைத்து சுவையை கூட்டுகிறார்கள். அடுத்து, வறுத்தல் முறையை 'யாகு' என்று குறிப்பிடுகிறார்கள். கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றியோ அல்லது சிறு தீயில் நேரடியாக உணவு பொருட்களை வறுத்தெடுத்தோ ருசிக்கிறார்கள். நான்காவது முறையான 'மூசு' நீராவி மூலம் சமைக்கும் செயல்முறையை கொண்டது.
ஐந்தாவது முறைக்கு 'அஜெரு' என்று பெயர். இது அதிக வெப்பநிலையில் உணவு பொருட்களை வறுத்தெடுக்கும் முறையாகும். இந்த உணவுப்பழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் கட்டுடல் அழகை பேண வழிவகை செய்கின்றன.
ஜப்பானியர்கள் கிரீன் டீ பருகும் பழக்கத்தை தவறாமல் பின்பற்றுகிறார்கள். காலையிலும், மதிய உணவுக்கு, முன்னும் பின்னும் அவர்களின் விருப்பமான பானமாக இது பரிமாறப்படுகிறது.
ஜப்பானியர்கள் தங்கள் உணவில் சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற மீன்களை தவறாமல் சேர்த்துக்கொள்கிறார்கள். அவை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.
- இளம் வயதினரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.
- இஞ்சியும் மூட்டு வலியை விரட்டும் ஆற்றல் கொண்டது.
மூட்டு வலி வயதானவர்களைத்தான் பாதிக்கும் என்ற நிலைமை மாறிவிட்டது. இளம் வயதினரும் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, ஜாக்கிங், ரன்னிங் பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்களும், உடற்பயிற்சிக்காக சைக்கிள் ஓட்டும் இளைஞர்களும், மூட்டு வலி சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே ஒரு சில பழக்கவழக்கங்களை கடைப்பிடித்து வந்தால் மூட்டுவலி பிரச்சினை தலைதூக்காமல் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு இளைஞர்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள்:
* ஆப்பிள் சிடர் வினிகர் மூட்டுவலியை குறைக்கும் தன்மை கொண்டது. அதனுடன் தேங்காய் எண்ணெய்யையும் சம அளவு
சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.
* இஞ்சியும் மூட்டு வலியை விரட்டும் ஆற்றல் கொண்டது. இஞ்சி எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் போதும். நல்ல மாற்றம் தெரியும்.
* இஞ்சியை டீயாகவும் பருகிவரலாம். இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.
* இஞ்சியுடன் மஞ்சளையும் சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.
* பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகி வரலாம். தொடர்ந்து பருகிவந்தால் மூட்டுவலி பிரச்சினை நிரந்தரமாக நீங்கிவிடும்.
* எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ பருகி வரலாம். இதுவும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியது.
- உடல் பலவீனமாக இருக்கும்போது, உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.
- உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும்.
உங்கள் உடல் கட்டுமஸ்தானதாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க, தினமும் உடற்பயிற்சி அவசியம்.
தினசரி உடற்பயிற்சி என்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஏரோபிக் பயிற்சிகளை தினசரி 45 நிமிடங்கள் செய்தால் தொற்றுநோய் பிரச்சினை குறையும் என்பது ஆய்வு ரீதியாக கண்டறியப்பட்ட உண்மை. ஆனால், உடல் பலவீனமாக இருக்கும்போது, உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது என்கிறார்கள், மருத்துவர்கள்.
"ஒருவரின் உடல் காய்ச்சல் அல்லது சளியினால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்திருக்கும் நிலையில் உடற்பயிற்சி செய்வது, உடல் நோயில் இருந்து மீண்டு வருவதை தாமதமாக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி, தொற்றுநோய் கிருமிகளை எதிர்த்து தாக்கிக் கொண்டிருக்கும்போது உடலை வருத்தும் உடற்பயிற்சிகள், உடல் நிலையை இன்னும் மோசமாக்கும். எனவே உடல் சற்று சீரடைந்த பின்னரே உடற்பயிற்சி செய்வது பயனளிக்கும். இல்லையேல், லேசான உடற்பயிற்சிகளை செய்யலாம்'' என்கிறார்கள், மருத்துவர்கள்.