என் மலர்
நீங்கள் தேடியது "ஹர்ஷித் ராணா"
- மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ராணா Flying kiss கொடுத்து கொண்டாடுவார்.
- இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா இந்த தொடரின் போது சர்ச்சையில் சிக்கினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அவரது முகத்துக்கு முன்னாள் Flying kiss கொடுப்பார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை வைத்து ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலை கிண்டலடிப்பார். இது தொடர்பான வீடியோ கூட டிரெண்டானது. இப்படி இந்த ஐபிஎல் தொடரில் பேசுபொருளான Flying kiss குறித்து ஹர்ஷித் ராணா வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அப்போதைய நேரத்திற்கு Flying kiss கொடுத்து அந்த தருணத்தை கொண்டாட வேண்டும் என தோன்றியது. எந்த போட்டிகளிலும், வீரருக்கு எதிராகவும் இப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என நான் திட்டமிடவில்லை. கோலியின் மீதுள்ள மரியாதை காரணமாகவே அவரின் விக்கெட்டை வீழ்த்தியபோதும் கொண்டாட்டத்தை தவிர்த்தேன்.
இவ்வாறு ராணா கூறினார்.
- அடிலெய்டு டெஸ்டில் இந்திய அணி ஹர்ஷித் ராணா உடன் களம் இறங்கும் என எதிர்பார்ப்பு.
- அதேவேளையில் ஆகாஷ் தீப் உடனம் களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை அடிலெய்டில் தொடங்குகிறது. இது பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்த போட்டியில் பிங்க்-பால் பயன்படுத்தப்பட இருக்கிறது. பிங்க்-பால் இரவு நேரத்தில் லைட் வெளிச்சத்தில் அதிக அளவில் ஸ்விங் ஆகும்.
இந்தியா முதல் (பெர்த்) டெஸ்டில் பும்ரா, ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. நிதிஷ் ரெட்டி ஆல்-ரவுண்டர் வேகப்பந்து வீச்சாளரான அணியில் உள்ளார். அறிமுகமான பெர்த் டெஸ்டில் ஹர்ஷித் ராணா சிறப்பாக பந்து வீசினார். பிங்க்-பால் பயிற்சி ஆட்டத்திலும் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனால் நாளை தொடங்கும் டெஸ்ட் போட்டியில் ஹர்ஷித் ராணா களம் இறங்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் பிங்க்-பால் போட்டியில் ஆகாஷ் தீப்பை களம் இறக்க வேண்டும் என ரவி சாஷ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரவி சாஷ்திரி கூறுகையில் "ஒரு முக்கியமான விசயம் என்றவென்றால், இது பிங்க்-பால் டெஸ்ட் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஹர்ஷித் ராணா அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார் என்பது எனக்குத் தெரியும்.
ஆனால் பிங்க் பால் சற்று கூடுதல் அரக்கு- வார்னீஷ் (Lacquer) இருக்கும். இதனால் பந்து ஸ்விங் செய்யவும், சீம் செய்யவும் கொஞ்சம் கடினமாக இருக்கும். இதனால் ஆகாஷ் தீப் அணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.
- ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார்.
- பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா (கேப்டன்), 2. சுப்மன் கில் (துணை கேப்டன்) 3. விராட் கோலி 4. ஷ்ரேயாஸ் ஐயர் 5. கேஎல் ராகுல் 6. ஹர்திக் பாண்ட்யா 7. குல்தீப் யாதவ் 8. அக்சர் படேல் 9. வாஷிங்டன் சுந்தர் 10. பும்ரா (உடற்தகுதியுடன் இருந்தால்) 11. முகமது சமி 12. அர்ஷ்தீப் சிங் 13. ஜடேஜா 14. ரிஷப் பண்ட் 15. ஜெய்ஸ்வால் 16. ஹர்ஷித் ராணா (இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும்)
இதனிடையே இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் குறைந்தது முதல் 2 போட்டிகளில் பும்ரா காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
பும்ராவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகவுள்ளார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கடைசி ஆட்டத்தில் பும்ரா காயமடைந்தார். இதனால் பும்ரா உடற்தகுதியுடன் இருந்தால் தான் சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது நியூசிலாந்தை சேர்ந்த மருத்துவர் ரோவன் ஸ்கௌடன் உதவியுடன் பும்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னாள் பும்ரா 100% உடற்தகுதியுடன் இருந்தால் அது ஒரு அதிசயம் என்று பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
பும்ராவின் மருத்துவ அறிக்கைககள் மருத்துவர் ரோவன் ஸ்கௌடனிடம் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதனை பொறுத்து சிகிச்சைக்காக பும்ராவை நியூசிலாந்திற்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக பும்ரா உடற்தகுதி பெறாவிட்டால் ஹர்ஷித் ராணா அல்லது சிராஜ் ஆகியோரில் யாராவது ஒருவர் அணியில் இடம்பெறுவர் என்று சொல்லப்படுகிறது.
- துபேவுக்கு பதிலாக மாற்றுவீராக ஹர்ஷித் ராணா களமிறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டுவரப்பட்டது நியாயமான மாற்று கிடையாது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இந்நிலையில், இரு அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது.
182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.
இதனிடையே ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த சிவம் துபேவின் ஹெல்மெட்டில் பந்து வேகமாக மோதியது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் துபேவுக்கு பதிலாக மாற்றுவீராக ஹர்ஷித் ராணா களமிறங்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்நிலையில், துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணா மாற்றுவீராக களமிறங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீரருக்கு மாற்றுவீராக களமிறங்குவர் அவரை போன்ற வீரராக இருக்கவேண்டும். அதாவது ஒரு பேட்ஸ்மேனுக்கு பதிலாக இன்னொரு பேட்ஸ்மேனும் ஒரு பவுலருக்கு பதிலாக இன்னொரு பவுலரும் ஒரு ஆல் ரவுண்டருக்கு பதிலாக இன்னொரு ஆல் ரவுண்டரும் தான் களமிறங்க வேண்டும்.
ஆனால் ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா களமிறங்கியது நியாயம் கிடையாது என்று விமர்சனம் எழுந்தது. குறிப்பாக சிவம் துபேவுக்கு பதிலாக ரமன்தீப் சிங் தான் உள்ளே வந்திருக்க வேண்டும். அவர் தான் சரியான மாற்றுவீரர் என்று போட்டியை வர்ணனை செய்து வந்த ஹர்ஷா போக்ளே தெரிவித்தார்.
இதனிடையே போட்டி முடிவடைந்த பின்பு இந்த விவகாரம் குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், "காயம் ஏற்பட்ட ஷிவம் துபேவுக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணிக்குள் கொண்டுவரப்பட்டது நியாயமான மாற்று கிடையாது. துபேவும் வேகமாக பந்து வீசியதில்லை, ராணாவும் பேட்டிங்கில் பெரியதாக முன்னேறிவிடவில்லை. நாங்கள் பேட்டிங் களமிறங்கும்போது இந்திய அணியில் ஹர்ஷித் உள்ளதை பார்த்து கேட்டதற்கு, துபேவுக்கு மாற்றாக வந்துள்ளார் எனச் சொன்னார்கள். அப்போதே அதை ஏற்க மறுத்தேன். போட்டியின் நடுவர் இந்தியாவின் முடிவை ஏற்றுக்கொண்டதாக கூறியதால், எதுவும் செய்ய முடியவில்லை. இவையெல்லாம் ஆட்டத்தின் ஒரு பகுதிதான்" விரக்தியுடன் தெரிவித்தார்.
- ஹர்ஷித் ராணா 3-வது வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் வந்து பந்து வீசினார்.
- அவருடைய பந்து வீச்சு நம்பமுடியாத வகையில் பிரமிக்க வைத்தது.
புனே:
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது.
ஹர்திக் பாண்ட்யா 30 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிவம் துபே 34 பந்தில் 53 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ரிங்கு சிங் 26 பந்தில் 30 ரன்னும் ( 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சகீப் மக்மூத் 3 விக்கெட்டும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டும், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 166 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால்15 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
ஹாரி புரூக் அதிக பட்சமாக 26 பந்தில் 51 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), பென் டக்கெட் 19 பந்தில் 39 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரவி பிஷ்னோய், ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்த வெற்றி மூலம் இந்தியா டி20 தொடரை இந்தியா 3-1 என்ற கணக் கில் கைப்பற்றியது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தது மிகவும் மோசமானது. ஆனால் வீரர்கள் நம்பிக்கையுடன் அணியை சரிவில் இருந்து மீட்டார்கள். ஷிவம் துபேவும், ஹர்திக் பாண்ட்யாவும் இணைந்து தங்களுடைய அனுபவத்தை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் சரியான திசையை நோக்கி செல்கின்றோம். பவர் பிளேவுக்கு பிறகு 7 முதல் 10 ஓவரில் ஆட்டத்தை எங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியும் என்று நினைத்தேன்.
எங்கள் அணி வீரர்கள் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதே போன்று ஹர்ஷித் ராணா 3-வது வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் வந்து பந்து வீசினார். அவருடைய பந்து வீச்சு நம்பமுடியாத வகையில் பிரமிக்க வைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மேலும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தின் மூலம் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமாகி உள்ளார்.
- இந்த போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ரானா இடம்பிடித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலீப் சால்ட் ஜோடி அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இறுதியில் இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்நிலையில் இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி அவர் தனது 3-வது ஓவரில் 26 ரன்களைக் கொடுத்து, அறிமுக ஆட்டத்தில் ஒரே ஓவரில் அதிக ரன்களை கொடுத்த வீரர் எனும் மோசமான சாதனையை படைத்துள்ளார். இதன்மூலம் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
இருந்தாலும் பின்னர் கம்பேக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்களை கொடுத்த இந்திய வீரர்கள்
30 - யுவராஜ் சிங் vs டிமிட்ரி மஸ்கரென்ஹாஸ் (இங்கிலாந்து), தி ஓவல், 2007
30 - இஷாந்த் சர்மா vs ஜேம்ஸ் ஃபால்க்னர் (ஆஸ்திரேலியா), மொஹாலி, 2014
28 - குர்னால் பாண்டியா vs பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து), புனே, 2021
26 - ஹர்ஷித் ராணா vs பில் சால்ட் (இங்கிலாந்து), நாக்பூர், 2025*
26 - ரவி சாஸ்திரி vs மைக் கேட்டிங் (இங்கிலாந்து), ஜலந்தர், 1981
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ராணா அறிமுகமானார்.
- இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
நாக்பூர்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகினர்.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் ஜோடி அதிரடி தொடக்கத்தைக் கொடுத்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 75 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இறுதியில், இங்கிலாந்து அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில், மூன்று வித அறிமுக போட்டியிலும் தலா 3 விக்கெட் சாய்த்த முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ஹர்ஷித் ராணா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்டில் அறிமுகம் ஆன ஹர்ஷித் ராணா, முதல் இன்னிங்சில் 3 விக்கெட் சாய்த்தார்.
சமீபத்தில் புனேவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமான ஹர்ஷித் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதேபோல், நேற்று நடந்த நாக்பூர் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆன ஹர்ஷித் ராணா, 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.
- இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.
- ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. டி20 தொடரை போன்றே ஒருநாள் தொடரையும் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
நேற்றைய முதல் ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய ஒருநாள் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஹர்ஷித் ராணா அறிமுகமாகினர். இந்த நிலையில், அறிமுக போட்டியிலேயே ஒரு ஓவரில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணி பேட்டிங்கின் போது ஹர்ஷித் ராணா வீசிய ஒரே ஓவரில் 26 ரன்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் அறிமுக போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.
இது ஒருபக்கம் இருந்த போதிலும், நேற்றைய போட்டியில் ஹர்ஷித் ராணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற் சாதனையையும் ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.
- இங்கிலாந்தின் தொடக்க ஜோடி 6.2 ஓவரில் 60 ரன்கள் குவித்தது.
- அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க 214 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 356 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும் சுப்மன் கில் 112 ரன்கள், விராட் கோலி 52 ரன்கள், ஷ்ரேயாஸ் அய்யர் 78 ரன்கள், கே.எல். ராகுல் 40 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அடில் ரஷித் 10 ஓவர்கள வீசி 64 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினர்.
இதனால் ஜெட் வேகத்தில் ரன் உயர்ந்தது. 5.2 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. இந்த ஜோடியை அர்ஷ்தீப் சிங் பிரித்தார். 7-வது ஓவரின் 2-வது பந்தில் டக்கெட் 22 பந்தில் 34 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்தின் ஸ்கோர் 6.2 ஓவரில் 60 ரன்னாக இருந்தது.
அடுத்து ஜோ ரூட் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய பில் சால்ட் 21 பந்தில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவரது விக்கெட்டையும் அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார்.

பின்னர் இங்கிலாந்து வீரர்களால் நிலைத்துநின்று விளையாட முடியவில்லை. டாம் பாண்டன் 41 பந்தில் 38 ரன்கள் எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 24 ரன்கள் எடுத்த நிலையில் அக்சார் படேல் பந்தில் வெளியேறினார்.
ஹாரி ப்ரூக் (19), பட்லர் (6) ஆகியோரை ஹர்ஷித் ராணா வெளியேற்றினார். இறுதியாக இங்கிலாந்து 34.2 ஓவரில் 214 எடுத்து ஆல்அவுட் ஆனது.
இதனால் இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- புதிய பந்தில் ராணா எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஹர்ஷித் ராணா
- ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்று முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவை இந்திய அணிக்கு ஏற்படுத்திருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மேலும் பும்ராவுக்கு பதில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை தேர்வு செய்வேன் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
டி 20 கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு அபாரமாக பந்து வீசினார் என்று அனைவருக்கும் தெரியும். அர்ஸ்தீப் சிங்கிடம் நல்ல திறமை இருக்கிறது. பும்ரா போல் அவரால் பந்து வீச முடியும். புதிய பந்தையும், பழைய பந்தையும் பயன்படுத்தி அர்ஸ்தீப் சிங் சிறப்பாக செயல்படுவார். இதனால் பும்ராவுக்கு பதில் அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்த வேண்டும்.
இதற்காக ஹர்ஷித் ராணாவை நான் குறை சொல்லவில்லை. அவரிடமும் நிறைய திறமை இருக்கின்றது. புதிய பந்தில் அவர் எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆட்டத்தின் டெத் ஓவரில் பந்து வீச முடியாது என்பது உண்மையே. ஏனென்றால் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் முறை என்பது முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கும். அவர்களால் புதிய பந்தை சிறப்பாக பயன்படுத்த முடியும்.
அது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் வலது கை பேட்ஸ்மேன்கள், இடதுகை வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறுவார்கள். எனவே நான் கேப்டன் ஆக இருந்தால், அர்ஸ்தீப் சிங்கை தான் பயன்படுத்துவேன்.
என்று பாண்டிங் கூறியுள்ளார்.