search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்- டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இலங்கை
    X

    இந்திய வீரர்கள்

    இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்- டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இலங்கை

    • இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
    • குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது.

    மும்பை:

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா அணியை வழிநடத்துகிறார். இந்திய அணியில் சிவம் மவி, ஷூப்மான் கில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.

    குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதால், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்திருக்கிறது. எனவே, முதலில் ஆடும் இந்தியா அதிக ரன்ரேட் வைத்தால் மட்டுமே வெற்றியை வசமாக்க முடியும் என்ற நிலை உள்ளது.

    Next Story
    ×