என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "England test series"

    • இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 271 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

    முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் பெற்ற 'மிகப்பெரிய வெற்றி' என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

    • இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 407 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    180 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது.

    மதிய தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மன் கில் 100 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    பின் இறுதியில் ஒட்டுமொத்தமாக இந்தியா 607 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து இறுதி நாளான இன்று விளையாடிய இங்கிலாந்து அணி 68.1 ஓவருக்கு அனைத்து விக்கெட் இழப்பிற்கு வெறும் 271 ரன்களே எடுத்தது.

    இதன்மூலம், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

    முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 23 வயதான சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.
    • சிறந்த உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆட்டக்காரர்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு 18 வீரர்களை அறிவித்தது.

    சுப்மன்கில் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்சர்மா ஓய்வு பெற்றதால் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. ரிஷப்பண்ட் துணை கேப்டனாக தேர்வாகி உள்ளார்.

    தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன், கருண் நாயர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர் பிராஸ் அகமது, முகமது ஷமிக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    23 வயதான சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.

    சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கபட்டதை குறித்து தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் கூறியதாவது:-

    இங்கிலாந்து லயன்ஸ் அணி (இங்கிலாந்து ஏ) இந்தியா வந்த போது சாய் சுதர்ஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல். செயல்பாடு காரணமாக அவரை அணியில் தேர்வு செய்யவில்லை. சிறந்த உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆட்டக்காரராக அவர் உள்ளார்.

    இவ்வாறு அகர்கர் கூறினார்.

    சாய் சுதர்ஷன் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 13 ஆட்டங்களில் விளையாடி 638 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இங்கி லாந்து கவுன்டி போட்டியில் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு. சர்ரே அணிக்காக 2023 மற்றும் 2024 சீசன் என மொத்தம் 8 இன்னிங்சில் 281 ரன்கள் எடுத்துள்ளார்.

    மேலும் உள்ளூர் போட்டியிலும் சாய் சுதர்ஷ னின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. 29 முதல் தர போட்டிகளில் 1,957 ரன் கள் எடுத்துள்ளார்.

    இந்திய அணிக்காக 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.

    • பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயங்கியது.
    • துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தீவிரமாகத் தேடி வந்தது.

    அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை தேடியது.

    அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டி வந்த நிலையில் சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடியுள்ளார்.

    இந்நிலையில் ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். 

    இந்திய அணி விவரம்:

    சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    • பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது.
    • நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பு பிசிசிஐ தலையில் விழுந்துள்ளது.

    அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை தேடி வருகிறது. அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிகின்றன.

    பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டுகிறது.

     இதற்கிடையே நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடியுள்ளார்.

    எனவே ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் அவரை கேப்டனாக்க பிசிசிஐ முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது. 

    • இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான்.
    • இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும்.

    ஐபிஎல் 18ஆவது சீசன் முடிந்தப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

    முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் இந்தியா தோற்றது. இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய மண்ணில் 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரில் இந்தியா தோற்றது.

    இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது 2007ஆம் ஆண்டில்தான். இந்நிலையில் வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணி வீர்ர்களை பிசிசிஐ சல்லடை போட்டு தேர்ந்தெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மே மாதம் 2வது வாரத்திற்குள் அணிகள் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. தகவலின்படி, இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிக்காக 35 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா கேப்டனாகவும், சாய் சுதர்சன் மாற்று வீரராகவும்  இருக்க வாய்ப்புள்ளது.

    5-6வது இடத்தில் பட்டீதர் & கருண் நாயர் இடம் பெற்றுள்ளனர் என்றும் குல்தீப் யாதவ் மீண்டும் அணிக்குத் திரும்ப உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    மற்றபடி, உத்தேசமாக, ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், துரூவ் ஜோரல், ஷ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ரெட்டி, ஜடேஜா, ஷமி, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெறுவர்.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஜூன் 20ஆம் தேதி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன் என்று கங்குலி கூறியுள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    புதுடெல்லி:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர்களாக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தவானின் மோசமான ஆட்டம் காரணமாக இந்த கேள்வி எழுகிறது.

    எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தவான் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இரண்டு இன்னிங்சிலும் அவர் ‘டக்’ அவுட் ஆனார். பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளத்தில் அவர் சிறப்பாக ஆட முடியாததால் ஏமாற்றமே.

    இந்த பயிற்சி ஆட்டத்தில் முரளிவிஜய், வீராட்கோலி தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதம் அடித்து இருந்தனர்.

    தவானின் மோசமான ‘பார்ம்’ காரணமாக அவர் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவாரா? என்ற கேள்வி இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளி விஜய்யையும், லோகேஷ் ராகுலையும் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனை யாளருமான கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வெளிநாடுகளில் தவான் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியது இல்லை. அவர் ரன்களை குவித்ததில்லை என்று சாதனைகள் சொல்கிறது.

    தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா எதுவாக இருந்தாலும் அவர் சரியாக ஆடவில்லை. தவானை பொறுத்தவரை ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்.

    டெஸ்ட் போட்டியில் அவர் உள்நாட்டில் மட்டுமே தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இந்திய மண்ணில் சதம் அடித்ததை வைத்து அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்குவது சுவாரசியமே.


    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    இதேபோல 3-வது வரிசையில் ஆடும் புஜாராவும் திணறி வருகிறார். 11 பேர் கொண்ட அணிக்கு அவர் தகுதியானவர் என்று இங்கிலாந்து முன்னாள் தொடக்க வீரர் டாரன்காக் தெரிவித்துள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடும் நோக்கத்தில், வீரர்கள் குடும்பத்தை விட்டு விலகியிருங்கள் என அணி நிர்வாகம் அட்வைஸ் செய்துள்ளது. #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அயர்லாந்துடன் இரண்டு டி20, இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி20, மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி முடித்துள்ளது.

    ஆகஸ்ட் 1-ந்தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்திய வீரர்கள் சுமார் 70 நாட்களுக்கு மேல் இங்கிலாந்தில் விளையாடுகிறார்கள். இதனால் விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், உமேஷ் யாதவ் மேலும் சிலர் தங்களது மனைவி, காதலிகள், குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்துச் சென்றுள்ளனர். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களுடன் பொழுது போக்கி வருகிறார்கள்.

    டி20, ஒருநாள் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வருகிறது. நாளை மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த ஆட்டம் செல்ம்ஸ்ஃபோர்டில் நடக்கிறது.



    முந்தைய காலக்கட்டத்தில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் விளையாடும்போது வீரர்கள் தங்களது குடும்பத்துடன் சென்றுள்ளனர். அப்போது தொடரில் மோசமான தோல்வியை சந்திக்கும்போது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டனர்.

    அதேபோல் தற்போது நடந்து விடக்கூடாது என்பதற்காக 3-வது டெஸ்ட் முடியும் வரை வீரர்கள் குடும்ப உறுப்பினர்களை விட்டு தள்ளியிருங்கள் என்று அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் டெஸ்ட் தொடங்குகிறது. 3-வது டெஸ்ட் ஆகஸ்ட் 22-ந்தேதி முடிவடைகிறது.
    ×