என் மலர்
நீங்கள் தேடியது "Asia Cup hockey"
- முதல் போட்டியில் கொரியாவை 4-2 என இந்தியா வீ்ழ்த்தியிருந்தது.
- கடைசி போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி இன்று சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 1-4 என மோசமான தோல்வியை சந்தித்தது. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் கொரியாவை இந்தியா 4-2 என வீழ்த்தியிருந்தது. குரூப் சுற்றில் இந்தியா 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு டிரா மூலம் முதலிடம் பிடித்தது.
தற்போது சூப்பர் 4 சுற்றில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2ஆவது இடத்திலும் உள்ளது. கடைசி போட்டியில் நாளைமறுநாள் ஜப்பான் அணியை எதிர்கொள்கிறது. அதேவேளையில் கொரியா சீனாவை எதிர்கொள்கிறது.
கொரியா தோல்வியடைந்து, ஜப்பானுக்கு எதிராக இந்தியா டிரா செய்தாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். ஒருவேளை சீனாவுக்கு எதிராக கொரிய வெற்றி பெற்றால், ஜப்பானுக்கு எதிராக இந்தியா கட்டாயம் வெற்றி பெற்று கோல் வித்தியாசத்தில் கொரியாவை விட முன்னணியில் பெற வேண்டும்.
- ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.
ராஜ்கிர்:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்4 சுற்று முடிவில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி (2 வெற்றி, ஒரு டிரா) முதலிடமும், நடப்பு சாம்பியன் தென்கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இதில் நேற்று இரவு நடந்த மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் நிமிடத்திலேயே இந்திய அணி வீரர் சுக்ஜீத் சிங் கோலடித்தார். மற்றொரு இந்திய வீரர் தில்பிரீத் சிங் 27-வது மற்றும் 44-வது நிமிடத்தில் கோல் போட்டார். 50-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை இந்திய அணி வீரர் அமித் ரோஹிதாஸ் கோலாக்கினார். இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.
51-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தென்கொரியா அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி வீரர் டெயின் சன் இந்த கோலை அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் 5 முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தியது.
இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் இந்த வெற்றி, இந்திய ஹாக்கி மற்றும் விளையாட்டுத் துறைக்கு பெருமை சேர்க்கும் என பிரதமர் மோடி பாராட்டி உள்ளார்.
- தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
- நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
பீகாரில் நடந்த ஆக்கி ஆடவர் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.
இதன்மூலம், ஆசிய கோப்பை தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
ஆசியகோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் 2026-ல் நடைபெறும் ஆக்கி உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
- அடுத்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
- மாலை 5 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ள இந்தியா, நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, சீனா அணிகள் தங்களுக்குள் மோதுகின்றன. இதில் இன்று நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீனாவுடன் (இரவு 7.30 மணி) மல்லுக்கட்டுகிறது.
லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்த சுற்றில் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவுடன் டிரா கண்டது. அடுத்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. சூப்பர்4 சுற்றில் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட முடியும்.
சீனா அணியை பொறுத்தமட்டில் ஒரு தோல்வி (மலேசியாவுக்கு எதிராக), ஒரு வெற்றியுடன் (தென்கொரியாவுக்கு எதிராக) 3 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. லீக் சுற்றில் இந்திய அணி, சீனாவை (4-3) வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா-மலேசியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றை எட்டியது.
- இதே பிரிவில் ஜப்பான்-சீனா அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ராஜ்கிர்:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதின.
4-வது நாளான நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் 'பி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் தென்கொரியா 5-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேத்தை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது.
இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 15-0 என்ற கோல் கணக்கில் சீன தைபேயை ஊதிதள்ளியது. மலேசிய அணியில் 6 பேர் கோல் போட்டனர். இவர்களில் அகிமுல்லா அனார் 5 கோலும், அஷ்ரன் ஹம்சானி 4 கோலும், நோர்ஷியாபிக் சுமாந்திரி 3 கோலும் அடித்ததும் அடங்கும். மலேசியா அணி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பதிவு செய்தது. சீன தைபேவுக்கு 3-வது தோல்வியாகும்.
லீக் சுற்று முடிவில் 'பி' பிரிவில் மலேசியா (9 புள்ளி) முதலிடமும், தென்கொரியா (6 புள்ளி) 2-வது இடமும் பிடித்து சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. வங்கதேசம் (3 புள்ளி), சீன தைபே (0) 3-வது மற்றும் கடைசி இடத்தை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தன.
'ஏ' பிரிவில் நடந்த இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியனான இந்திய அணி, கஜகஸ்தானை சந்தித்தது. ஒரு தலைபட்சமாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணியினர் கோல் மழையால் ரசிகர்களை குஷிப்படுத்தினர். ஆனால் எதிரணியால் கடைசி வரை ஒரு பந்தை கூட வலைக்குள் திருப்ப முடியவில்லை.
முடிவில் இந்தியா 15-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை பந்தாடி தொடர்ந்து 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) பெற்றது. இந்திய அணியில் அபிஷேக் (4), சுக்ஜீத் சிங் (3), ஜூக்ராஜ் சிங், ஹர்மன்பிரீத் சிங் (தலா 2), அமித் ரோஹிதாஸ், ரஜிந்தர் சிங், சஞ்சய், தில்பிரீத் சிங் (தலா 1) கோல் போட்டனர். இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றை எட்டியது.
முன்னதாக இதே பிரிவில் ஜப்பான்-சீனா அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. தொடக்கத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த சீனா தனது தாக்குதல் ஆட்ட வேகத்தை அதிகரித்து சரிவில் இருந்து மீண்டு டிரா செய்தது.
சீனா, ஜப்பான் அணிகள் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகளுடன் சமநிலை வகித்தாலும், கோல் வித்தியாசம் அடிப்படையில் ஜப்பானை பின்னுக்கு தள்ளிய சீனா 2-வது இடத்தை வசப்படுத்தி சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றது. 3-வது இடம் பெற்ற ஜப்பான், கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட கஜகஸ்தான் (0) அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்தன.
இந்த போட்டி தொடரில் இன்று ஓய்வு நாளாகும். சூப்பர் 4 சுற்று ஆட்டம் நாளை தொடங்குகிறது. சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்கொரியாவுடன மோதுகிறது.
- ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடந்து வருகிறது.
- இந்திய அணி 2வது லீக் போட்டியில் ஜப்பானை வெற்றி பெற்றது.
பாட்னா:
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடந்து வருகிறது. ஏ பிரிவில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் சீனாவை 4-3 என வீழ்த்தியது.
இந்நிலையில், இந்திய அணி 2வது லீக் போட்டியில் ஜப்பான் அணியுடன் இன்று மோதியது.
முதல் பாதியில் இந்திய அணி 2 கோல்களை அடித்து 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் ஜப்பான் 2 கோல்கள் அடித்தது. இந்தியா மேலும் ஒரு கோல் அடித்து 3-2 என வெற்றி பெற்றது.
ஹர்மன்பிரீத் சிங் 2 கோலும், மன்தீப் சிங் ஒரு கோலும் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
இதன்மூலம் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.
- இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது.
- சீனா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் ஏ பிரிவில் உள்ளன.
12-வது ஆசிய கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நேற்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் 8 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. சீனா, ஜப்பான், கஜகஸ்தான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.
நேற்றைய தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் சீனாவை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் மலேசியா 4-1 என்ற கோல் கணக்கில் வங்காள தேசத்தையும், தென் கொரியா 7-0 என்ற கணக்கில் சீன தைபேயையும் (பி பிரிவு), ஜப்பான் 7-0 என்ற கணக்கில் கஜகஸ்தானையும் வீழ்த்தின.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஜப்பானை நாளை எதிர்கொள்கிறது. மாலை 3 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது. நாளை நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் சீனா- கஜகஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் வங்காள தேசம்-சீனதைபே, தென் கொரியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.
- முதல் 15 நிமிடத்தில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது.
- 30 நிமிட ஆட்ட முடிவில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.
8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் இன்று பீகாரில் உள்ள ராஜ்கிரில் தொடங்கியது. "ஏ" பிரிவில் இந்தியா, ஜப்பான், சீனா, கஜகஸ்தான் அணிகள் இடம் பிடித்துள்ளன. "பி" பிரிவில் தென்கொரியா, மலேசியா, வங்கதேசம், சீன தைபே அணிகள் இடம் பிடித்துள்ளன.
இன்று இந்தியா முதல் ஆட்டத்தில் சீனாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இந்தியா நாளைமறுநாள் தனது 2ஆவது போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது.
இதில் முதல் இடம் பிடிக்கும் அணி, அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெறும். ஹர்மன்ப்ரீத் சிங் 20, 33, 47 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்தார். ஜுக்ராஜ் சிங் 18ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். சீனா 12, 35, 41 ஆவது நிமிடங்களில் கோல் அடித்தது.
ஆட்டத்தின் முதல் கால்பகுதி நேரத்தின்போது, 12ஆவது நிமிடத்தில் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி ஷியாயோ டு கோல் அடித்தார். இதற்கு பதிலடியாக இந்திய வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் 15 நிமிடத்தில் சீனா 1-0 என முன்னிலைப் பெற்றது.
2ஆவது 15ஆவது நிமிடத்தில் இந்தியா இரண்டு கோல் அடித்தது. 18ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஜுக்ராஜ் சிங் கோல் அடித்தார். 20ஆவது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, இதை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் 30 நிமிட ஆட்டத்தில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இந்தியா 3-1 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் சீனாவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க 35ஆவது நிமிடத்தில் பென்ஹாய் சென் கோல் அடித்தார். 41ஆவது நிமிடத்தில் சீன வீரர் ஜியேஷெங் கயோ கோல் அடிக்க, ஸ்கோர் 3-3 என சமநிலைப் பெற்றது.
கடைசி கால் பகுதி ஆட்டத்தின்போது, இந்தியா இரண்டுக்கும் அதிகமான பெனால்டி கார்னர் வாய்ப்பை பெற்றது. அதில் ஒன்றை (47) நிமிடத்தில் ஹர்மன்ப்ரீத் சிங் கோலாக மாற்றினார். இதனால் இந்தியா 4-3 என வெற்றி பெற்றது.
- இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
- ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.
புதுடெல்லி:
12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, வங்காளதேசம், சீனதைபே அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.
இந்த போட்டியில் மகுடம் சூடும் அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்து, பெல்ஜியத்தில் நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்து விட்டது.
இந்த நிலையில் ஆசிய போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் தொடருகிறார். நடுகள வீரர் ரஜிந்தர்சிங், முன்கள வீரர்கள் ஷில்லானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் இடத்தை தக்க வைத்துள்ளனர்.
அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கூறுகையில், 'ஆசிய கோப்பை தொடர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொறுமை, சரிவில் இருந்து மீளும் மனவலிமை, களத்தில் எப்படி திறமையை வெளிப்படுத்துவது என்பதை அறிந்த வீரர்கள் தான் தேவை. அப்படிப்பட்ட வீரர்களைத் தான் அணிக்கு எடுத்துள்ளோம். சரியான கலவையில் தரமான அணியாக அமைந்திருப்பது திருப்தி அளிக்கிறது. தற்காப்பு, நடுகளம், தாக்குதல் ேபான்ற ஒவ்வொரு வரிசைக்கும் எங்களிடம் தலைவர்கள் உள்ளனர். இந்த கூட்டு வலிமை தான் என்னை உற்சாகப்படுத்துகிறது. இந்த அணி ஒருங்கிணைந்து விளையாடும் விதம் எங்களது வலுவான சொத்தாக இருக்கும்' என்றார்.
ஆசிய ேபாட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
கோல் கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுராஜ் கர்கெரே,
தற்காப்பு ஆட்டக்காரர்கள்: சுமித், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோகிதாஸ், ஜூக்ராஜ் சிங்.
நடுகள வீரர்கள்: ரஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத்.
முன்கள வீரர்கள்: மன்தீப் சிங், ஷில்லானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங்.
மாற்று வீரர்கள்: நிலம் சஞ்ஜீப் செஸ், செல்வம் கார்த்தி.
- பாகிஸ்தான் அணி பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி இந்தியா வர மறுத்தது.
- இந்த தொடரில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.
புதுடெல்லி:
8 அணிகள் இடையிலான 12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் அணி பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி இந்தியா வர மறுத்தது.
இதனால் அந்த அணிக்கு பதிலாக வங்கதேசம் கலந்து கொள்கிறது. அத்துடன் ஓமன் அணியும் கடைசி நேரத்தில் விலகி இருக்கிறது. அந்த அணிக்கு மாற்றாக கஜகஸ்தான் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி 29-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.
- ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
- ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.
சென்னை:
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடைபெறுகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சீனா, ஓமன், சீன தைபே ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இந்தியா வருவதற்காக பாகிஸ்தான் சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழு விசாவுக்கு விண்ணப்பித்தது. இதனால் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அணி போட்டியில் இருந்து விலகி உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பையில் விளையாட இயலாது என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.
பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இருந்த போதிலும் அவர்கள் இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். பாகிஸ்தானுக்கு பதிலாக வங்காள தேசத்தை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.
- 12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பா் 7 வரை பீகாரில் நடைபெறுகிறது.
- ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
பீகார், தமிழ்நாட்டில் நடைபெறும் ஆசிய,ஜூனியர் உலக கோப்பையில் பாகிஸ்தான் ஹாக்கி அணி பங்கேற்கும் விசாவுக்கு விண்ணப்பித்து இருப்பதாக ஆக்கி இந்தியா உறுதிப்படுத்தியது
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடக்கிறது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டிகளுக்கு அணிகளை அனுப்புவது இல்லை என்று பாகிஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இது தொடர்பாக சர்வதேச மற்றும் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப் படுகிறது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் ஜூனியர் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என்று ஹாக்கி இந்தியா உறுதிப்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக ஹாக்கி இந்தியா பொருளாளரும், தமிழ்நாடு ஆக்கி அமைப்பின் தலைவருமான சேகர் மனோகர் கூறியதாவது:-
பாகிஸ்தான் சீனியர் மற்றும் ஜூனியர் அணிகள் நிச்சயமாக இந்தியா வரும். அவர்கள் ஏற்கனவே விசா விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழுவுடன் விண்ணப்பித்துள்ளது.
உலக கோப்பைக்கான இந்திய ஜூனியர் அணியை தயார்படுத்துவதற்கான பயிற்சி முகாம் அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






