என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் ஹாக்கி அணி"

    • ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.
    • ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.

    சென்னை:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை பீகார் மாநிலம் ராஜ்கிரியில் நடைபெறுகிறது.

    இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, தென் கொரியா, ஜப்பான், சீனா, ஓமன், சீன தைபே ஆகிய 8 நாடுகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    பகல்காம் தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் இந்தியா வருவதற்காக பாகிஸ்தான் சீனியர் அணி 18 வீரர்கள் மற்றும் 7 துணை ஊழியர்களை கொண்ட குழு விசாவுக்கு விண்ணப்பித்தது. இதனால் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று ஹாக்கி இந்தியா அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அணி போட்டியில் இருந்து விலகி உள்ளது.

    பாதுகாப்பு காரணங்களுக்காக ஆசிய கோப்பையில் விளையாட இயலாது என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் ஆசிய ஹாக்கி கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளது.

    பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்க மத்திய அரசு தயாராக இருந்த போதிலும் அவர்கள் இந்தியாவுக்கு வர மறுத்து விட்டனர். பாகிஸ்தானுக்கு பதிலாக வங்காள தேசத்தை அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆசிய கோப்பை போட்டி 2026 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியாகும்.

    • எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களைச் சந்திக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்.
    • இந்தத் தொடருக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை.

    கராச்சி:

    இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் தங்கள் அணியை அனுப்புவது கடினம் என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்திடம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமே இதற்குக் காரணம் என்று அது கூறியுள்ளது.

    இது குறித்து பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் தாரிக் புக்தி கூறியதாவது:-

    தற்போதைய சூழலில், எங்கள் அணி இந்தியாவில் விளையாடும்போது பாதுகாப்பு அபாயங்களைச் சந்திக்கும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். இந்தியாவில் எங்கள் வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும், போட்டியில் முழு கவனம் செலுத்துவதற்கும் என்ன உத்தரவாதம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுள்ளோம். இந்தத் தொடருக்காக இந்தியாவிற்கு பயணம் செய்ய பாகிஸ்தான் வீரர்களும் ஆர்வம் காட்டவில்லை.

    என தாரிக் புக்தி கூறினார்.

    இந்த ஆசிய கோப்பை, உலகக் கோப்பைக்கான நேரடித் தகுதிப் போட்டியாக இருப்பதால், இது ஒரு முக்கியமான தொடர். ஹாக்கி உலகில் சக்திவாய்ந்த அணியாக இருந்த பாகிஸ்தான், தற்போது உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒலிம்பிக்கின் ஹாக்கியில் பாகிஸ்தான் அணி 3 முறை தங்கம் வென்றுள்ளது.
    • தற்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் நிதி சிக்கலில் இருந்து வருகிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அணியின் தேசிய விளையாட்டாக ஹாக்கி ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இதுவரை ஒலிம்பிக் போட்டியில் 3 முறை தங்கப் பதக்கம் பெற்றுள்ளது. தற்போது பாகிஸ்தான் ஹாக்கி அணி கடும் நிதி சிக்கலில் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, ஆசிய சாம்பியன் கோப்பை அடுத்த மாதம் சீனாவில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி அணி சீனாவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட கடனில் வாங்கிய டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இதுதொடர்பாக பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன தலைவர் தாரிக் புக்டி கூறுகையில், இந்த தேசிய விளையாட்டிற்கு உரிய அந்தஸ்தும் மரியாதையும் ஹாக்கிக்கு வழங்கப்படவில்லை. இப்போது தேசிய விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வளர்ந்து வரும் நிதிச் சிக்கல்களுக்கு மத்தியில், நாட்டின் ஹாக்கி திட்டத்தை புதுப்பிக்க சிறப்பு மானியம் வழங்கவேண்டும் என பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பிடம் வலியுறுத்தி உள்ளார்.

    ×