search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Asian Champions Trophy"

    • இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
    • சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்தார்.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி 4-வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் திரில்லிங்கான ஆட்டத்தைப் பார்த்தேன்! இடைவேளை நேரத்தில் 1-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த மென் இன் ப்ளூ, 4-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-3 என்ற கணக்கில் வென்றது உண்மையிலேயே வியப்பாக இருந்தது. அது போட்டியின் கடைசி நேரம் வரை எங்களை இருக்கைகளின் நுனியில் வைத்திருந்தது. இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் வெற்றியில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியா 4-3 என்ற கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.
    • இதன்மூலம் இந்தியா 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    புதுடெல்லி:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ஆசிய சாம்பியன்ஷிப்பில் அற்புதமான வெற்றியைப் பெற்ற ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள்! இது இந்தியாவின் 4-வது வெற்றியாகும். இது நமது வீரர்களின் அயராத அர்ப்பணிப்பு, கடுமையான பயிற்சி மற்றும் தளராத உறுதியை வெளிப்படுத்துகிறது. அவர்களின் அசாதாரண செயல்பாடு நாடு முழுவதும் மகத்தான பெருமை கொள்ள வைத்துள்ளது. எங்கள் வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

    • முதல் பாதியில் மலேசியா 3-1 என முன்னிலை வகித்தது.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 3 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இறுதிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் மலேசியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 3 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    • ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.
    • ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று மாலை 6 மணிக்கு நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தென் கொரியாவை மலேசியா வீழ்த்தியது. இரவு 8.30 மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி போட்டியில் ஜப்பானை ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதுகின்றன. இதில் மலேசியாவை வீழ்த்தி

    ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் இந்தியா உள்ளது.

    இறுதிப்போட்டியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாகூர் பங்கேற்க உள்ளார் என்றும், அனுராக் தாகூர் இறுதிப் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியானது.

    ஏற்கனவே 2011, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.
    • இரண்டாவது பாதியில் இந்தியா 5 கோல்களை அடித்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஜப்பானுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

    இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் 5 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்கிறது.

    • மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை வீழ்த்தியது.
    • மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.

    ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி தொடரில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் தென்கொரியா- மலேசியா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மலேசிய அணி 6-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    மலேசிய அணி தரப்பில் அஸ்ராய் (3வது நிமிடம்), ஜஸ்லான் (9 மற்றும் 21வது நிமிடம்), சாரி (19வது நிமிடம்), சில்வரியஸ் (47 மற்றும் 48வது நிமிடம்) கோல் அடித்தனர். தென் கொரிய அணியில் ஜி 2வது நிமிடத்திலும், ஜாங் 14வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. 

    • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி எழும்பூரில் நடைபெற்று வருகிறது.
    • இத்தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெறுகின்றன.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்துடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன.

    இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா முதல் இடத்தையும், மலேசியா 2-வது இடத்தையும் பிடித்தன. தென் கொரியா 3-வது இடத்தையும், ஜப்பான் 4-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் மோதுகின்றன.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    முன்னதாக, மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 5-வது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், சீனா அணிகள் மோதுகின்றன.

    • இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் சிறப்பாக விளையாட ஊக்கமிளிக்கிறது என தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தொடர்ச்சியான வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. விளையாடும் போது கார்த்திக் கார்த்திக் என்று சொல்லும் போது உத்வேகமாக இருந்தது. அடுத்தடுத்து இன்னும் நிறைய விளையாட வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியிலும் இந்தியா கோல் மழை பொழிந்தது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    இதன் மூலம் 13 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் தொடரில் இருந்து வெளியேறியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    • லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
    • கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    சென்னை:

    சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று கடைசிகட்ட லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். இப்போட்டியில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஜப்பான் அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்கொரியா, பாகிஸ்தான் அணிகளும் 5 புள்ளிகளுடன் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன. சீனா ஒரு புள்ளி மட்டுமே பெற்று கடைசி இடத்தில் (6வது இடம்) உள்ளது.

    லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் வெற்றி பெற்றபோதிலும், -2 என்ற குறைவான கோல் வித்தியாசத்தின் காரணமாக அரையிறுதிக்கு முன்னேறுவது அடுத்த போட்டிகளின் முடிவை சார்ந்துள்ளது.

    இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலோ அல்லது தென் கொரியா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலோ ஜப்பான் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

    இந்நிலையில், தென்கொரியா-மலேசியா அணிகளுக்கிடையிலான போட்டியில் மலேசிய அணி 1-0 என வெற்றி பெற்றது. முதல் பாதியில் 22வது நிமிடத்தில் மலேசியா பீல்டு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. அடுத்து இரு அணிகளும் கடைசி வரை போராடியும் கோல்கள் அடிக்கப்படவில்லை. இந்த வெற்றியின் மூலம் மலேசிய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    எனவே, ஜப்பான் அணியின் அரையிறுதி வாய்ப்பு, கடைசி லீக் போட்டியை சார்ந்துள்ளது. கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஜப்பான் அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
    • 59வது நிமிடத்தில் ஜப்பானின் தடுப்பாட்டத்தை முறியடித்த சீனா ஆறுதல் கோல் அடித்தது.

    சென்னை:

    ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்குமே இது கடைசி லீக் ஆட்டம். இப்போட்டியின் துவக்கம் முதலே ஜப்பான் அணி ஆதிக்கம் செலுத்தியது. ஜப்பான் அணிக்கு 8வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் யமடா கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தில் முதல் பாதியில் ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதியில் ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது. பதில் கோல் அடிக்கும் முயற்சியில் சீன வீரர்கள் முன்னேறினர். ஆனால் அவர்களின் முயற்சியை ஜப்பான் வீரர்கள் முறியடித்தனர். இரு தரப்பிலும் மாறி மாறி வாய்ப்புகள் கிடைத்தும் கோலாக்க முடியவில்லை.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ஜப்பான் வீரர் புகுடா கோல் அடித்து அசத்தினார். அதன்பின் 59வது நிமிடத்தில் ஜப்பானின் தடுப்பாட்டத்தை முறியடித்த சீனா ஆறுதல் கோல் அடித்தது. இந்த கோலை சோஜு பதிவு செய்தார். இறுதியில் 2-1 என ஜப்பான் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் ஜப்பான் அணி 5 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தென்கொரியா, பாகிஸ்தான் அணிகளும் 5 புள்ளிகளுடன் முறையே 3 மற்றும் 4வது இடத்தில் உள்ளன. சீனா ஒரு புள்ளி மட்டுமே பெற்று 6வது இடத்தில் உள்ளது.

    லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இன்றைய ஆட்டத்தில் ஜப்பான் வெற்றி பெற்றபோதிலும், -2 என்ற குறைவான கோல் வித்தியாசத்தின் காரணமாக முதல் நான்கு இடங்களுக்கு வெளியே உள்ளது. அடுத்து வரும் இரண்டு போட்டிகளின் முடிவைப் பொருத்து ஜப்பான் அணிக்கான அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.

    இன்று நடைபெறும் போட்டியில் இரண்டு கோல்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலோ அல்லது தென் கொரியா இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலோ ஜப்பான் அரையிறுதிக்கு முன்னேறும். 

    • முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
    • இரண்டாவது பாதியிலும் இந்தியா கோல் மழை பொழிந்து அசத்தியது.

    சென்னை:

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது.

    ஆட்டத்தின் முதல் பாதியில் 18-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 4 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

    ×