search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ரசிகர்களின் ஆரவாரம் சிறப்பாக விளையாட ஊக்கமளிக்கிறது- தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி
    X

    ரசிகர்களின் ஆரவாரம் சிறப்பாக விளையாட ஊக்கமளிக்கிறது- தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி

    • இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
    • அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இந்தியா 2 கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 2 கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அரையிறுதியில் இந்திய அணி ஜப்பானை எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் சிறப்பாக விளையாட ஊக்கமிளிக்கிறது என தமிழக ஹாக்கி வீரர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தொடர்ச்சியான வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக உள்ளது. விளையாடும் போது கார்த்திக் கார்த்திக் என்று சொல்லும் போது உத்வேகமாக இருந்தது. அடுத்தடுத்து இன்னும் நிறைய விளையாட வேண்டும் என்று சிந்திக்க வைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×