என் மலர்
நீங்கள் தேடியது "முகமது ஷமி"
- 2025 மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இவரை வாங்க இரு அணிகளுக்கும் இடையில் வர்த்தகம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந்தேதி நடக்கிறது. நாளைக்குள் 10 அணிகளும் எந்தெந்த வீரர்களைகள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டார்கள் மற்றும் வெளியேற்றப்பட்டார், வர்த்தகம் நடைபெற்றது என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.
அதன்வகையில் ஒரு அணியில் இருந்து மற்றொரு வீரர்கள் வர்த்தகம் ஆவது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் 2025 மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்கிறது.
இரு அணிகளும் இதை ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சராசரி 56.16 ஆகும், எகானமி ரேட் 11.23 ஆகும்.
உடற்தகுதி விவகாரம் தொடர்பாக ஷமி இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருக்கிறார். கடைசியாக மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடினார்.
- வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2014-ம் ஆண்டு ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.
- நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.
2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் 2018 இல் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் தனக்கும் தனது மகளுக்கும் ஜீவனாம்ச தொகையை அதிகரிக்கக் கோரி ஹசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
முகமது ஷமியின் வருமானம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று அவர் ஹசின் ஜஹான் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவைத் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.
தொடர்ந்து முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்து தொடரின்போது உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அணியில் இடம் பிடித்திருப்பார்.
- ரஞ்சி டிராபியில் எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.
இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஆஸ்திரேலியா தொடருக்கான ஒயிட்பால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ரஞ்சி டிராபியில் விளையாடும்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடியாது?. உடற்தகுதிக்கா இந்திய அணி என்னை அழைக்கவில்லை என முகமது ஷமி இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி.டி.வியின் உலக மாநாடு 2025-ல் அஜித் அகர்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது முகமது ஷமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அவர் என்னிடம் சொல்லியிருந்தால், நான் பதில் அளித்திருப்பேன். அவர் இங்கு இருந்திருந்தால், அவருக்கு பதில் கூறியிருப்பேன். அவர் சமூக ஊடகத்தில் என்ன சொன்னார் என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. நான் படித்திருந்தால், அவருக்கு போன் செய்திருக்கலாம். இருந்தபோதிலும், பெரும்பாலான வீரர்களுக்கு எனது போன் எப்போதும் தயாராக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவருடன் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், இங்கே அதை தலைப்பு செய்தியாக்க விரும்பவில்லை.
அவர் இந்தியாவுக்கான அற்புதமான வீரர். அவர் சொன்னதை, என்னிடம் சொல்லியிருக்கலாம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கூட, அவர் உடற்தகுதியின் இருந்தால், இங்கிலாந்துக்குச் செல்வார் என நாங்கள் கூறியிருந்தோம். துரதிருஷ்டவசமாக அவர் உடற்தகுதி பெறவில்லை.
தற்போது உள்ளூர் தொடர் தொடங்கியுள்ளது. அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க இருக்கிறோம். தற்போது முதல்சுற்று போட்டி நடைபெறுகிறது. இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளை பார்க்க வேண்டும். அவர் சிறப்பாக பந்து வீசினால், ஷமியை போன்றவர்களை ஏன் விரும்பாமல் இருக்க வேண்டும். இந்த வருடம் 8 மாதங்களுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா தொடரில் கூட, அவர் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், அவர் உடதற்குதியுடன் இல்லை. அடுத்த சில மாதங்களாக அவருடைய உடற்தகுதியை நிலைத்து வைத்திருந்தால், கதை மாறியிருக்கலாம். இந்த கணக்கில், எனக்குத் தெரிந்தவரை, அவர் அந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு போதுமான அளவு பொருத்தமாக இல்லை.
இவ்வாறு அஜித் அகர்கர் தெரிவித்தார்.
- உடற்தகுதிக்காக என்னை இந்திய அணி தொடர்பு கொள்ளவில்லை.
- நான் வலியில் விளையாடவோ அல்லது அணியை துன்பப்படுத்தவோ விரும்பவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
இந்த இரு தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஒருநாள் அணியில் சீனியர் வீரர்கள் ரோகித், விராட் கோலி மட்டுமே இடம்பெற்றனர். மற்ற சீனியர் வீரர்களான ஜடேஜா, முகமது சமி ஆகியோர் இந்த அணி இடம் பிடிக்கவில்லை.
2023 உலகக் கோப்பைக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஷமி, அதன்பிறகு காயத்தில் இருந்து மீண்டார். 35 வயதான அவர் சிறிது காலமாக 3 வடிவிலான எந்த அணியிலும் இடம்பெறவில்லை. குறிப்பாக இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. கடைசியாக ஜூன் 2023-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார். இந்தியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஷமி விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏன் விளையாட முடியாது என தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கரிடம் முகமது ஷமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் முன்பே சொல்லிருக்கேன். தேர்வு என்பது என் கையில் இல்லை. உடற்தகுதி பிரச்சினை இருந்தால், நான் இங்கே பெங்கால் அணிக்காக விளையாடக்கூடாது.
உடற்தகுதிக்காக என்னை இந்திய அணி தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சி போட்டியில் விளையாட முடியும் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏன் விளையாட முடியாது.
நான் வலியில் விளையாடவோ அல்லது அணியை துன்பப்படுத்தவோ விரும்பவில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வந்து வலுவான மறுபிரவேசம் செய்ய விரும்பினேன். நானும் அதையே செய்ய முயற்சிக்கிறேன்.
அவர்கள் (தேர்வுக்குழுக்கள்) என்னை எப்போது தேர்வு செய்ய விரும்புகிறார்களோ அப்போது நான் செல்ல தயாராக இருக்கிறேன்.
என முகமது ஷமி கூறினார்.
இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை.
- என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன்.
இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முகமது ஷமி. இவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. முகமது ஷமி பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடுகிறார். நாளை ரஞ்சி டிராபி தொடங்குகிறது.
இந்த நிலையில் இந்திய அணி உடற்தகுதிக்காக தன்னை தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சியில் விளையாட முடியும் என்றால். ஒருநாள் போட்டியில் ஏன் விளையாட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-
உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை. என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன். அவர்கள்தான என்னிடம் கேட்க வேண்டும். என்னால் நான்கு நாள் கிரிக்கெட் விளையாட முடியும் என்றால், பின்னர் ஏன் 50 ஓவர் போட்டியில் விளையாட முடியாது?. நான் உடற்தகுதியாக இல்லை என்றால், என்சிஏ-வில் இருந்திருப்பேன். ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது.
இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது குறித்து எனது கருத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள்.
- தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை.
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம் பெறவில்லை.
இதனையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இரு அணிகளுக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் முகமது ஷமி இடம்பெறவில்லை.
காயம் காரணமாக சில தொடர்களில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து காயத்தில் இருந்த மீண்ட அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார். ஆனாலும் இந்திய அணிக்கான தேர்வில் அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் அணியில் இடம்பெறாதது என் கையில் இல்லை என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறாதது குறித்து எனது கருத்தை மக்கள் அறிய விரும்புகிறார்கள். தேர்வு செய்வது என்னுடைய கைகளில் இல்லை. தேர்வு செய்வது தேர்வு குழு, பயிற்சியாளர், கேப்டனின் வேலை.
நான் அங்கு இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் என்னைத் தேர்ந்தெடுப்பார்கள். அல்லது இன்னும் சிறிது நேரம் தேவை என்று அவர்கள் உணர்ந்தால், அது அவர்களின் கைகளில் உள்ளது.
இவ்வாறு முகமது ஷமி கூறினார்.
கிட்டதட்ட முகமது ஷமியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கிரிக்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- முகமது ஷமி இந்திய டெஸ்ட் அணியில் விளையாடாமல் உள்ளார்.
- ஆகாஷ் தீப் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார்.
2025-26 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் பெங்கால் கிரக்கெட் சங்கம் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பெங்கால் அணியை அறிவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விக்கெட் கீப்பர் அபிஷேக் பொரேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனுஸ்டப் மஜும்தார், சுதீப் சட்டர்ஜி போன்ற மூத்த வீரர்களும், சுதீப் குமார் கராமி, ராகுல் பிரசாத், சவுரப் குமார் சிங், விஷால் பாட்டி போன்ற இளைஞர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
பெங்கால் அணி எலைட் குரூப் சி-யில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் குஜராத், அரியானா, சர்வீசஸ், ரெயில்வேஸ், திரிபுரா, உத்தரகாண்ட், அசாம் அணிகள் இடம் பிடித்துள்ளன. ஈடன் கார்டனில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் போட்டியில் உத்தரகாண்ட் அணியை பெங்கால் எதிர்கொள்கிறது.
ரஞ்சி டிராபில் 38 அணிகள் விளையாடுகின்றன. 32 அணிகள் எலைட் டிவிசனில் நான்கு குரூப்புகளாக பிரிக்கப்படும். 8 அணிகள் பிளேட் டிவிசனில் இடம் பெறும். எலைட் குரூப்பில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். பிளேட் டிவிசனில் இருந்து நான்கு அணிகள் நாக்அவுட் போட்டிக்கு முன்னேறும்.
- ரம்ஜான் மாதத்தின்போது நடைபெற்ற போட்டியின்போது, எனர்ஜிக்காக பானம் அருந்தியதை ரசிகர்கள் விமர்சித்தினர்.
- சமூக வலைத்தளங்களில் வெறுப்பு கருத்துகளை பதிவிட்டதுடன், ட்ரோல் செய்து வந்தனர்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின், சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது. அப்போது ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.
ஆனால், முகமது ஷமி போட்டியின்போது எனர்ஜிக் பானம் அருந்தினார். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முகமது ஷமி, நோன்பு நேரத்தின்போது எப்படி பானம் அருந்தலாம் என இணைய தளத்தில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தினர். அவருக்கு எதிராக வெறுப்பு கருத்து பதிவிட்டு, ட்ரோல் செய்தனர்.
இதை தான் எப்படி எதிர்கொண்டேன் என்பது முகமது ஷமி விவரித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-
நாங்கள் 42 அல்லது 45 டிகிரி வெயில் வெப்பத்தில் விளையாடி கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களை தியாகம் செய்கிறோம். நாட்டிற்காக ஏதாவது செய்தல் அல்லது பயணம் போன்றவைகளுக்கு, எங்களுடைய சட்டத்தில் (இஸ்லாம்) விதிவிலக்கு உள்ளது. இந்த விசயங்களை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் மற்றும் மக்கள் மற்றவர்களை முன்மாதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அந்த நபர் என்ன செய்கிறார், யாருக்காக செய்கிறார் என்பதையும் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது சட்டம் கூட சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறது. அதற்காக நாம் அபராதம் செலுத்தலாம் அல்லது பின்னர் அதற்கு ஈடுசெய்யலாம். அதை நான் செய்தேன்.
சிலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள, இதுபோன்ற விசயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள். நான் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் படிப்பதில்லை. என்னுடைய குழு எனது கணக்குகளை நிர்வகிக்கிறது.
இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
- ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது.
- பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார். 2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் ஷமிக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜகான் மீண்டும் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆர்யாவின் நலன்களைப் புறக்கணித்து, காதலியின் மகளுக்கும் குடும்பத்திற்கும் முகமது ஷமி முன்னுரிமை அளித்தார். ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது. இதைத் தடுக்க சில எதிரிகள் முயற்சித்தனர். காதலி மற்றும் அவரது மகளுக்காக ஏராளமாகச் செலவு செய்யும் ஷமி, தனது சொந்த மகளைப் பற்றி கவலைப்படவில்லை.
எனது மகளின் தந்தை ஒரு கோடீஸ்வரராக இருந்த போதிலும் எனது வாழ்க்கையில் விளையாடுகிறார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. பெண்களை ஏமாற்றுபவர்.
இவ்வாறு ஹசின் ஜகான் கூறியுள்ளார்.
- இங்கிலாந்து தொடரில் முகமது ஷமிக்கு இடமில்லை.
- இந்த நிலையில் துலீப் டிராபி அணியில் இடம் பிடித்துள்ளார்.
துலீப் டிராபி 2025 சீசனுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலம் (East Zone) அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி Standy player ஆக இடம் பிடித்துள்ளார்.
கிழக்கு மண்டலம் (East Zone) அணி விவரம்:-
இஷான் கிஷன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன் (துணைக் கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டெனிஸ் தாஸ், ஸ்ரீதாம் பாம், ஷரன்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உட்கார்ஷ் சிங், மணிஷி, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், முகமது ஷமி
Standy players:- முக்தார் ஹுசைன், ஆசர்வாத் ஸ்வெயின், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வாஸ்டிக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங்.
கிழக்கு மண்டலம் அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வடக்கு மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.
- கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை ரகானே பதிவிட்டு வருகிறார்.
- குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
அதில் கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை அவர் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் போட்டி குறித்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே அஸ்வின், முகமது ஷமி ஆகியோர் யூடியூப் சேனல் தொடங்கி கிரிக்கெட் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்காளதேச அணிக்கெதிராக 3 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்
உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழுவில் முகமது ஷமிக்கு முதலில் இடம் கிடைக்கவில்லை. அவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விளையாடவில்லை.
உலகக்கோப்பை நெருங்கியதால், முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகினார்.
பும்ராவுக்குப் பதிலாக தீபக் சாஹர் அல்லது அவேஷ் கான் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ விரும்பியது. ஆனால் அவர்களின் பந்து வீச்சு சரியான முறையில் இல்லாத காரணத்தினால், முகமது ஷமியை பிசிசிஐ தேர்வு செய்தது.
டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசும் முகமது ஷமியால் டி20-யில் சிறப்பாக பந்து வீச முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களில் ஷமி சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். அந்த அனுபவத்தை வைத்து பிசிசிஐ அவரை ஆடும் லெவன் அணியில் சேர்த்தது.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளிலும் முகமது ஷமி அபாரமாக பந்து வீசியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 4-25-1 எனவும், நெதர்லாந்துக்கு எதிராக 4-27-1 எனவும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-13-1 எனவும், 3-25-1 எனவும் அசத்தியுள்ளார்.
டி20-யில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் சேர்த்த உடனேயே சிறப்பாக பந்து வீசுவதற்கான காரணம் குறித்து அவர் விவரித்துள்ளார்.
இதுகுறிதது அவர் கூறியதாவது:-
எல்லாமே முன்னேற்பாடை சார்ந்தது. எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என அணி நிர்வாகம் என்னிடம் சொல்லியுள்ளது. அணிக்கு தேவைப்படும்போது உங்களுக்கு அழைப்பு வரும். இதைத்தான் நாங்கள் எப்போதுமே சொல்வோம். நீங்கள் என்னுடைய வீடியோவை பார்த்தீர்கள் என்றால், நான் எப்போதுமே பயிற்சியை விட்டது கிடையாது, என்னுடைய பயிற்சி தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.
ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு வடிவ கிரிக்கெட்டிற்கு மாறுவது, அதாவது ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு மாறுவது எப்போதுமே எளிதானது அல்ல.
நான் டி20 உலகக் கோப்பைக்குபின் தற்போது டி20-யில் விளையாடுகிறேன். ஒரு வீரரருக்கு என்ன நிறம் பந்து என்பதை விட, நம்பிக்கை தேவை என்பது ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு நிச்சயமாக பயிற்சி தேவை.
புதுப் பந்து, பழைய பந்து ஆகியவற்றில் பந்து வீசுவது அனுபவத்தின் காரணமாகத்தான். போட்டியை என்னைப் பார்த்தீர்கள் என்றால், நான் புதுப் பந்தில்தான் பந்து வீசுவேன். ஆநால், பயிற்சியின் போது, நான் வழக்கமாக பழைய பந்து அல்லது ஓரளவிற்கு தேய்ந்த புதுப்பந்து ஆகியவற்றைதான் பயன்படுத்துவேன்.
கடந்த வருடம் உலகக் கோப்பை தொடரின்போது, பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய இப்திகாரை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.






