என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mohammad Shami"

    • உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை.
    • என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன்.

    இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முகமது ஷமி. இவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் இடம் கிடைக்கவில்லை. முகமது ஷமி பெங்கால் அணிக்காக ரஞ்சி டிராபியில் விளையாடுகிறார். நாளை ரஞ்சி டிராபி தொடங்குகிறது.

    இந்த நிலையில் இந்திய அணி உடற்தகுதிக்காக தன்னை தொடர்பு கொள்ளவில்லை. ரஞ்சியில் விளையாட முடியும் என்றால். ஒருநாள் போட்டியில் ஏன் விளையாட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-

    உடற்தகுதி குறித்து இந்திய அணி என்னை தொடர்பு கொள்ளவில்லை. என்னுடைய உடற்தகுதி குறித்து அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்கமாட்டேன். அவர்கள்தான என்னிடம் கேட்க வேண்டும். என்னால் நான்கு நாள் கிரிக்கெட் விளையாட முடியும் என்றால், பின்னர் ஏன் 50 ஓவர் போட்டியில் விளையாட முடியாது?. நான் உடற்தகுதியாக இல்லை என்றால், என்சிஏ-வில் இருந்திருப்பேன். ரஞ்சி போட்டியில் விளையாட முடியாது.

    இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    • ரம்ஜான் மாதத்தின்போது நடைபெற்ற போட்டியின்போது, எனர்ஜிக்காக பானம் அருந்தியதை ரசிகர்கள் விமர்சித்தினர்.
    • சமூக வலைத்தளங்களில் வெறுப்பு கருத்துகளை பதிவிட்டதுடன், ட்ரோல் செய்து வந்தனர்.

    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின், சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது. அப்போது ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.

    ஆனால், முகமது ஷமி போட்டியின்போது எனர்ஜிக் பானம் அருந்தினார். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முகமது ஷமி, நோன்பு நேரத்தின்போது எப்படி பானம் அருந்தலாம் என இணைய தளத்தில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தினர். அவருக்கு எதிராக வெறுப்பு கருத்து பதிவிட்டு, ட்ரோல் செய்தனர்.

    இதை தான் எப்படி எதிர்கொண்டேன் என்பது முகமது ஷமி விவரித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-

    நாங்கள் 42 அல்லது 45 டிகிரி வெயில் வெப்பத்தில் விளையாடி கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களை தியாகம் செய்கிறோம். நாட்டிற்காக ஏதாவது செய்தல் அல்லது பயணம் போன்றவைகளுக்கு, எங்களுடைய சட்டத்தில் (இஸ்லாம்) விதிவிலக்கு உள்ளது. இந்த விசயங்களை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் மற்றும் மக்கள் மற்றவர்களை முன்மாதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அந்த நபர் என்ன செய்கிறார், யாருக்காக செய்கிறார் என்பதையும் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

    நமது சட்டம் கூட சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறது. அதற்காக நாம் அபராதம் செலுத்தலாம் அல்லது பின்னர் அதற்கு ஈடுசெய்யலாம். அதை நான் செய்தேன்.

    சிலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள, இதுபோன்ற விசயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள். நான் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் படிப்பதில்லை. என்னுடைய குழு எனது கணக்குகளை நிர்வகிக்கிறது.

    இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • அர்ஜூனா விருது வென்ற வைஷாலி செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.

    புதுடெல்லி:

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் 2-வது உயரிய விருதாக அர்ஜூனா விருது கருதப்படுகிறது.

    சமீபத்தில் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை தொடரில் 7 இன்னிங்சில் ஆடிய முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சிறந்த பந்துவீச்சாக 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன்மூலம் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற விருதை சமி தட்டிச் சென்றார்.

    இதற்கிடையே, விளையாட்டு அமைச்சகத்திடம் பிசிசிஐ சிறப்பு கோரிக்கையாக முகமது ஷமியின் பெயரை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்திருந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

    மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது டேபிள் டென்னிஸ் வீரர்களான சிராக் சந்திரசேகர் ஷெட்டி, சாத்விக் ஜெயராஜ் ஜோடிக்கு அளிக்கப்படுகிறது.


    இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி உள்பட 26 பேர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி, ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உரையாடல்களை டிரஸ்ஸிங் ரூம் அல்லது ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் கூட பரவாயில்லை.
    • களத்தில் கோடிக்கணக்கானோர் முன்னிலையில் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது?

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கடந்த 8-ந்தேதி நடைபெற்ற 57-வது ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 9.4 ஓவரில் 167 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதையடுத்து, ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, அணியின் கேப்டனான கே.எல்.ராகுலிடம் கடிந்து கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோவை பார்த்த பலரும், டிரெஸிங் அறையில் நடக்க வேண்டிய விவாதங்கள் பொதுவெளியில் நடக்கிறது. சஞ்சீவ் கோயங்கா செய்தது சரியான செயல் அல்ல என்றும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதே போல் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு தற்போது காயத்தால் ஓய்வில் உள்ள இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    வீரர்களுக்கு மரியாதை உண்டு, உரிமையாளராக நீங்களும் மரியாதைக்குரிய நபர். பலர் உங்களைப் பார்த்து உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். இவையெல்லாம் கேமராக்களுக்கு முன்னால் நடந்தால்... அது வெட்கக்கேடான விஷயம். இதுபோன்ற உரையாடல்களை டிரஸ்ஸிங் ரூம் அல்லது ஹோட்டலில் தனிப்பட்ட முறையில் செய்திருந்தால் கூட பரவாயில்லை. களத்தில் கோடிக்கணக்கானோர் முன்னிலையில் அவர் தன்னை இப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது? இப்படி நடந்து கொண்டதன் மூலம் நீங்கள் ஒன்றும் செங்கோட்டையில் கொடி ஏற்றி விடவில்லை என்றார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முகமது சமி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • இந்திய அணியினருடன் இணைந்து முகமது சமி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக நீண்ட நாட்களாக அணியில் இல்லாமல் இருந்த முகமது சமி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்காக தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியினருடன் முகமது சமி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் முகமது சமி மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
    • இந்திய அணியினருடன் இணைந்து முகமது சமி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    இந்த டி20 போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு முகமது சமி களம் இறங்கவுள்ளார். இதற்காக சமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் முகமது சமியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அந்த ஸ்டோரியில், "சமி ஹீரோ டா.. ஹீரோ" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
    • நீங்கள் காயமடைந்தால், மீண்டு வந்து அணிக்காகவும், நாட்டுக்காகவும் விளையாட வேண்டும்.

    இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

    இந்த டி20 போட்டியில் நீண்ட நாட்களுக்கு பிறகு முகமது சமி களம் இறங்கவுள்ளார். இதற்காக சமி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், காயத்தில் இருந்து கம்பேக் கொடுத்தது குறித்து முகமது சமி பேசிய வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    அந்த வீடியோவில் பேசும் சமி, " நாம் சிறு பிள்ளையாக இருந்தபோது பெற்றோர் நமக்கு எப்படி நடக்க வேண்டும் என கற்றுத் தருவர். நாம் கீழே விழுவோம், மீண்டும் எழுவோம். ஆனால், நடக்க கற்றுக் கொள்வதை நிறுத்தவே மாட்டோம். அதேபோல தான் விளையாட்டிலும், நீங்கள் காயமடைந்தால், மீண்டு வந்து அணிக்காகவும், நாட்டுக்காகவும் விளையாட வேண்டும்.

    எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியம். நீங்கள் ரன்கள் அடிக்கும்போதும் விக்கெட்டுகள் எடுக்கும்போதும் அனைவரும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் கடினமான காலங்களில் யார் நம்முடன் இருக்கிறார்கள் என்பதை உணர்வதே உண்மையான சோதனையாகும். கடந்த ஓராண்டாக காத்திருந்து கடினமாக உழைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹானை போலீசார் கைது செய்தனர். #MohammadShami #HasinJahan
    அம்ரோஹா:

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் கடந்த ஆண்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், முகமது ஷமியும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் போலீசில் புகார் செய்தார். முகமது ஷமி தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. முகமது ஷமி மீது அவரது மனைவி தெரிவித்த சூதாட்ட புகாரில் உண்மை இல்லை என்பது தெரியவந்ததால் அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். முகமது ஷமியின் குடும்பத்தினர் உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவை அடுத்துள்ள அலிபுர் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டுக்கு நேற்று முன்தினம் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் சென்றார். முகமது ஷமியின் குடும்பத்தினர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து முகமது ஷமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். இதனை அடுத்து ஹசின் ஜஹானை கைது செய்த போலீசார் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் அவரை கோர்ட்டு ஜாமீனில் விடுவித்தது. அதன் பிறகு ஹசின் ஜஹான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘முகமது ஷமி எனது கணவர். அந்த வீட்டுக்குள் நுழைய எனக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் நான் எப்பொழுது அந்த வீட்டில் தங்க முயற்சித்தாலும், எனது மாமனாரும், மாமியாரும், என்னையும் என் குழந்தையையும் வெளியே தள்ள முயற்சிக்கின்றனர்’ என்று தெரிவித்தார். 
    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மனதளவிலும், உடலளவிலும் ஃபிட் ஆக இருக்க வேண்டும் என பிசிசிஐ விரும்புகிறது.
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. டெஸ்ட் போட்டியில் பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் வல்லவர். கடந்த சில மாதங்களாக அவர் குடும்ப பிரச்சினையில் சிக்கி தவித்தார். என்றாலும் ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் விளையாடினார்.

    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் வருகிற 14-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடித்திருந்தார். இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டுமென்றால் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும்.

    முகமது ஷமி பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற டெஸ்டில் தோல்வியடைந்தார். இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் முகமது ஷமி இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் நவ்தீப் சைனி இடம்பிடித்துள்ளார்.

    இந்தியா ஆகஸ்ட் 1-ந்தேதியில் இருந்து முக்கியமான கருதப்படும் இங்கிலாந்து தொடரில் விளையாட இருக்கிறார். இதில் முகமது ஷமியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கும். இதனால் முகமது ஷமி உடலளவிலும், மனதளவிலும் ஃபிட் ஆக வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி விரும்புகிறது.



    இதுகுறித்து அணி நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் கூறுகையில் ‘‘முகமது ஷமியின் கிரிக்கெட் திறமையில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். மனதளவிலும், உடலளவிலும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அணி விரும்புகிறது. இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்.

    அணி நிர்வாகம் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அவர் கிரிக்கெட்டில் இன்னும் ஆர்வமாக ஈடுபட வேண்டியது தேவை. ஒருமுறை பிட்னஸ் லெவலை அவர் அடைந்து விட்டால், அணிக்கு திரும்பிவிட முடியும்’’ என்றார்.
    ×