என் மலர்
நீங்கள் தேடியது "Arjuna award"
- மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
- தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
புதுடெல்லி:
சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு தயான் சந்த் விருதும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.
இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார். இதில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு தியான்சந்த் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று மகளிருக்கான உதவி பயிற்சியாளர் சந்தியா குருங் மற்றும் முன்னாள் மகளிர் தலைமை பயிற்சியாளர் சிவ் சிங் ஆகியோரின் பெயர்களை துரோணாச்சார்யா விருதுக்கு பரிந்துரைத்து உள்ளது. #GauravBidhuri #AmitPanghal
இந்த விருதுகளுக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெயர்களை அந்தந்த விளையாட்டுத்துறை மத்திய அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யும். அதன்படி இன்று இந்திய மல்யுத்த பெடரேசன் கேல் ரத்னா விருதுக்கு வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.

வினேஷ் போகத்
ராகுல் அவேரா, ஹர்ப்ரீத் சிங், திவ்யா கக்ரன், பூஜா தண்டா ஆகியோர் பெயர்களை அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது. விரேந்தர் குமார், சுஜீத் மான், நரேந்திர குமார் மற்றும் விக்ரம் குமார் ஆகியோர் பெயர்களை துரோணாச்சாரியார் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.
நேற்றுடன் முடிவடைந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் குத்துச் சண்டை போட்டியில் தனது திறமையை கொண்டு தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர், இதுவரை 17 தங்கங்களும், ஒரு சில்வர் மற்றும் 5 வெண்கல பதக்கங்களும் வென்றுள்ளார்.

இதுகுறித்து வீரர் தினேஷ் குமார் கூறுகையில், தற்போதைய மத்திய அரசோ அல்லது முந்தைய மத்திய அரசோ தமக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை எனவும், தற்போது அரசின் உதவியை நாடி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர் தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக ஐஸ்கிரீம் விற்று வருவது, இந்தியாவில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #DineshKumar #ArjunaAward #Haryana

மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையே, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் மேலும் பல வெற்றிகளை குவித்து சாதனை சிகரங்களை தொட அன்பான வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். #ArjunaAward | #SathiyanGnanasekaran #EdappadiPalaniswami
மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
இதற்கிடையே, தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

மேலும், நீரஜ் சோப்ரா, ஹீமா தாஸ், ஜின்சன் ஜான்சன், நிலாகுருதி சிக்கி ரெட்டி, சுபேதார் சதீஷ்குமார், ஸ்மிருதி மந்தானா, போபண்ணா, ஸ்ரீ சுமித், சுபாங்கர் சர்மா ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவை டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது. #Satyanarayanan #SmritiMandhana #HimaDas #ArjunaAward
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். பாரா பேட்மிண்டன் வீரரான இவர் கடந்த 2015ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக சாமியன்ஷிப் தொடரில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
அந்த ஆண்டு விளையாட்டு துறை அமைச்சகம் வழங்கிய அர்ஜுனா விருது பெற்றோருக்கான பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. இதையடுத்து, அவர் டெல்லி ஐகோர்ட்டில் விளையாட்டு துறை அமைச்சகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். விசாரணை முடிவில் ராஜ்குமாருக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.

அர்ஜூனா விருது பெற்றது குறித்து ராஜ்குமார் கூறுகையில், நான் இந்த விருதை பெறுவதற்கு மிக்க உதவியாக இருந்த எனது பயிற்சியாளருக்கு இந்த எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Arjuna Award #RajKumar #RajyavardhanSinghRathore
ஜூனியர் உலக தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவரும், சமீபத்தில் இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளிப்பதக்கம் வென்றவருமான இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் உள்பட 20 பேரின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு விருது கிடைப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்ட நிலையில் அசாமை சேர்ந்த 18 வயதான ஹிமா தாஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்த ஆண்டுக்கான அர்ஜூனா விருதுக்கு எனது பெயர் தேர்வு செய்யப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு எனது பெயர் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படலாம் என்று நினைத்தேன். எனக்குரிய இந்த ஆண்டு போட்டிகள் நிறைவு பெற்று விட்டது. அடுத்த ஆண்டில் தெற்காசிய விளையாட்டு போட்டி, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவை நடக்க இருக்கிறது. அதற்கு தகுந்தபடி திட்டமிட்டு தயாராகுவேன்’ என்று தெரிவித்துள்ளார். #ArjunaAward #HimaDas