search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavani Devi"

    • ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் நடைபெறுகிறது.
    • இதில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்றார்.

    பீஜிங்:

    ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. பின், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை இத்தாலியில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவிற்காக தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். சிறப்பாக விளையாடி காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்தினார்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் 14-15 என்ற புள்ளிக்கணக்கில் பவானி தோல்வியடைந்தார். இதன்மூலம் பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கமங்கையாக ஜொலித்தார்.
    • ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்ற முதல்இந்தியர் என்ற சிறப்புக்குரிய தமிழகத்தின் பவானிதேவி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார்.

    ஆமதாபாத்:

    தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் பவானிதேவி, பிரவீன் சித்ரவேல் தங்கப்பதக்கம் வென்றனர்.

    36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், சர்வீசஸ் ஆகிய அணிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப்பிரிவில் எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மணிப்பூர் வீராங்கனை மீராபாய் சானு தங்கமங்கையாக ஜொலித்தார்.

    அவர் ஸ்னாட்ச் முறையில் 84 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 107 கிலோ என்று மொத்தம் 191 கிலோ எடை தூக்கி முதலிடத்தை பிடித்தார். மற்றொரு மணிப்பூர் வீராங்கனை சஞ்சிதா சானு (187 கிலோ) வெள்ளிப்பதக்கமும், ஒடிசாவின் சினேகா சோரன் வெண்கலப்பதக்கமும் (169 கிலோ) பெற்றனர்.

    பின்னர் மீராபாய் சானு கூறுகையில் 'சமீபத்தில் பயிற்சியின் போது இடது கைமணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. அதனால் 'ரிஸ்க்' வேண்டாம் என்று தான் இந்த போட்டியில் 3-வது முயற்சியை பயன்படுத்தவில்லை. அடுத்து டிசம்பரில் நடக்கும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராக வேண்டி இருக்கிறது' என்றார்.

    தடகளத்தில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்பில் (மும்முறை தாண்டுதல்) தமிழக வீரர் பிரவீன் சித்ரவேல் 16.68 மீட்டர் நீளம் தாண்டி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதற்கு முன்பு இந்த பந்தயத்தில் 2015-ம் ஆண்டு ரஞ்சித் மகேஷ்வரி 16.66 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது.

    அதனை முறியடித்து அசத்திய 21 வயதான பிரவீன் திருவாரூர் மாவட்டம் செட்டிசத்திரம் அருகே உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆவார். கேரளாவின் ஏ.பி.அர்ஜூன் வெள்ளிப்பதக்கமும் (16.08 மீட்டர்), பஞ்சாப்பின் அர்பிந்தர் சிங் வெண்கலப்பதக்கமும் (15.97 மீட்டர்) கைப்பற்றினர்.

    ஒலிம்பிக்கில் வாள்வீச்சுக்கு தகுதி பெற்ற முதல்இந்தியர் என்ற சிறப்புக்குரிய தமிழகத்தின் பவானிதேவி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். வாள்வீச்சு சாப்ரே பிரிவின் இறுதி ஆட்டத்தில் அவர் 15-3 என்ற புள்ளி கணக்கில் பஞ்சாப்பின் ஜக்மீத் கவுரை தோற்கடித்து 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.

    சென்னையில் வசிக்கும் 29 வயதான பவானிதேவி ஏற்கனவே 2011, 2015-ம் ஆண்டுகளில் நடந்த தேசிய விளையாட்டிலும் வாகை சூடியிருக்கிறார். இதன் ஆண்கள் பாயில் பிரிவில் தமிழக வீரர் வினோத்குமாருக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

    துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் குஜராத் வீராங்கனை இளவேனில் 16-10 என்ற கணக்கில் கர்நாடகாவின் திலோத்தமா சென்னை வீழ்த்தி தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இளவேனில் குஜராத் அணிக்காக களம் இறங்கினாலும் அவரது சொந்த ஊர் கடலூர் என்பது நினைவு கூரத்தக்கது.

    பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஸ்வப்னா பர்மன் (மத்தியபிரதேசம்) 1.83 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். கர்நாடகாவின் அபினயா ஷெட்டி வெள்ளிப்பதக்கமும் (1.81 மீட்டர்), தமிழகத்தின் கிரேஸ் மெர்லி (1.81 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். கிரேஸ் மெர்லி கன்னியாகுமாரியைச் சேர்ந்தவர்.

    20 கிலோமீட்டர் நடைபந்தயத்தில் உத்தரபிரதேச வீராங்கனை முனிதா பிரஜபதி போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். அவர் இலக்கை அடைய 1 மணி 38.20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.

    பெண்களுக்கான கபடியின் அரைஇறுதியில் தமிழக அணி 25-45 என்ற புள்ளி கணக்கில் மராட்டியத்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது.

    பதக்கப்பட்டியலில் மேற்கு வங்காளம் 5 தங்கம், ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என்று 11 பதக்கத்துடன் முதலிடத்திலும், அரியானா 8 பதக்கத்துடன் (4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) 2-வது இடத்திலும் உள்ளன. தமிழகம் 2 தங்கம், 4 வெண்கலம் வென்று 6 பதக்கத்துடன் 8-வது இடம் வகிக்கிறது.

    • 28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார்.
    • பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    லண்டன்:

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வாள் வீச்சு பந்தயம் 1950 முதல் 1970 வரை இடம் பெற்று இருந்தது. அதன் பிறகு அந்த போட்டி நீக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு முடிந்த பிறகு காமன் வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி தனியாக நடத்தப்படும்.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    எப்பி, பாய்ல், சேபர் பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதே போல ஜூனியர் கேடட், வெடரன் மற்றும் பாரா பிரிவுகளுக்கு வருகிற 16-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    நேற்று நடந்த சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார்.

    28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார். இதில் பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    சென்னையை சேர்ந்த பவானி தேவி காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளார். சேபர் தனி நபர் பிரிவில் அவர் 2-வது முறையாக பதக்கம் பெற்றுள்ளார். ஒட்டு மொத்தத்தில் காமன்வெல்த் சாம்பியன் ஷிப்பில் அவர் 4-வது முறையாக பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.

    பவானி தேவி இதற்கு முன்பு 2009 ஆண்டு மலேசி யாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் சேபர் அணிகள் பிரிவில் வெண்கலமும், 2012-ம் ஆண்டு அமெரிக்கா வில் நடந்த போட்டியில் சேபர் அணிகள் பிரிவில் வெள்ளியும், சேபர் தனி நபர் பிரிவில் வெண்கலமும் பெற்று இருந்தார்.

    இது தவிர ஆசிய சாம்பி யன் ஷிப், சேட்டிலைட் சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் டோக்கியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஆவார். அவர் 2-வது சுற்று வரை முன்னேறி இருந்தார். அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கால் இறுதிக்கு நுழைந்ததன் மூலம் அவர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்று இருந்தார்.

    காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பவானி தேவிக்கு பாராட்டுகள் குவிகிறது. 

    விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் கேல் ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கும் விழா வரும் 13-ம் தேதி டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் மேஜர் தயான்சந்த் கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருது பட்டியலை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

    விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு 35 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருதுடன் ரூ.15 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

    அர்ஜூனா விருதுக்கு தேர்வாகியுள்ளவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

    அர்பிந்தர்சிங் (தடகளம்), சிம்ரன்ஜித் கவுர் (குத்துச்சண்டை), ஷிகர் தவான் (கிரிக்கெட்), பவானி தேவி (வாள்சண்டை), மோனிகா, வந்தனா கட்டாரியா (இருவரும் ஹாக்கி), சந்தீப் நார்வால் (கபடி), ஹிமானி உத்தம் பராப் (மல்லர்கம்பம்), அபிஷேக் வர்மா (துப்பாக்கி சுடுதல்), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), தீபக் பூனியா (மல்யுத்தம்), தில்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், ருபிந்தர்பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா, சுமித், நீல கண்ட ஷர்மா, ஹர்திக் சிங், விவேக் சாகர், குர்ஜந்த்சிங், மன்தீப்சிங், ஷம்சிர் சிங், லலித்குமார் உபாத்யாய், வருண் குமார், சிம்ரன்ஜித் சிங் (16 பேரும் ஆக்கி), யோகேஷ் கதுனியா, நிசாத் குமார், பிரவீன்குமார், ஷரத் குமார் (4 பேரும் பாரா தடகளம்), சுஹாஸ் யதிராஜ் (பாரா பேட்மிண்டன்), சிங்கராஜ் அதானா (பாராதுப்பாக்கி சுடுதல்), பவினா பட்டேல் (பாரா டேபிள் டென்னிஸ்), ஹர்விந்தர் சிங் (பாரா வில்வித்தை).

    சென்னையைச் சேர்ந்த 28 வயதான பவானி தேவி, ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட முதல் இந்திய வாள்சண்டை வீராங்கனை என்ற சிறப்புக்குரியவர் ஆவார். 

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தங்கப் பதக்கத்தை அர்ப்பணிப்பதாக சென்னை திரும்பிய வாள் சண்டை வீராங்கனை பவானிதேவி தெரிவித்தார். #BhavaniDevi

    சென்னை:

    காமன்வெல்த் வாள் சண்டை போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெராவில் சமீபத்தில் நடந்தது.

    இதன் சீனியர் ‘சேபர்’ பிரிவில் பங்கேற்ற சென்னை வீராங்கனை பவானி தேவி தங்கம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் இங்கிலாந்து வீராங்கனை எமிராக்சை 15-12 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

    இதன்மூலம் காமன் வெல்த் வாள் சண்டையில் சீனியர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பவானி தேவி படைத்தார்.

    தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அவர் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் பவானி தேவிக்கு பெற்றோர், நண்பர்கள், பயிற்சியாளர்கள், வீரர், வீராங்கனைகள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

     


    சர்வதேச போட்டிகளில் வெல்லும் எனது முதல் தங்கப்பதக்கம் ஆகும். எனவே மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதோடு மட்டுமின்றி இந்தியாவில் இருந்து ஒருவர் வெல்லும் முதல் தங்கப்பதக்கம் ஆகும். அந்த சாதனையும் எனக்கு கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்.

    கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு இந்த தங்கப் பதக்கத்தை அர்ப்பணிக்கிறேன். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவால் நான் எஸ்.டி.ஏ.டி.யின் எலைட் திட்டத்தில் சேர்க்கப்பட்டேன். இதனால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும், வெளிநாடுகளில் பயிற்சி பெறவும் உதவிகரமாக உள்ளது. இதற்கு தமிழக அரசு பெரிதும் உதவி வருகிறது.

    தமிழக முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத் துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    காமன்வெல்த் தங்கப் பதக்கம், அடுத்த சர்வதேச போட்டிகளில் பங்கேற்க எனக்கு பெரிதும் ஊக்குவிப்பாக உள்ளது. எதிர்வரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு பவானிதேவி கூறினார். #BhavaniDevi

    ×