என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Duleep Trophy"

    • வடக்கு மண்டல அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக அங்கித் குமாரும் நியமிக்கப்பட்டனர்.
    • துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி தொடங்குகிறது.

    துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த தொடரில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கித் குமார் தலைமையில் வடக்கு மண்டல அணி விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், வரவிருக்கும் ஆசியக் கோப்பைக்கு அவர் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து எந்தக் கவலையும் இல்லை.

    • சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) இந்த மாதம் 28-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடகிழக்கு மண்டலங்கள் காலிறுதியில் மோதுகின்றன. தெற்கு மற்றும் மேற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதியில் விளையாட உள்ளன.

    இந்நிலையில் இந்த தொடருக்கான வடக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், அங்கித் குமார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் அந்த அணியில் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    வடக்கு மண்டல அணி விவரம் பின்வருமாறு:-

    சுப்மன் கில் (கேப்டன்), அங்கித் குமார் (துணை கேப்டன்), சுபம் கஜுரியா, ஆயுஷ் பதோனி, யாஷ் துல், அங்கித் கல்சி, நிஷாந்த் சந்து, சாஹில் லோத்ரா, மயங்க் தாகர், யுத்வீர் சிங் சரக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், ஆக்கிப் நபி, கன்ஹையா வாத்வான்

    • இங்கிலாந்து தொடரில் முகமது ஷமிக்கு இடமில்லை.
    • இந்த நிலையில் துலீப் டிராபி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    துலீப் டிராபி 2025 சீசனுக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலம் (East Zone) அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த முகமது ஷமி அணியில் இடம் பிடித்துள்ளார். இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி Standy player ஆக இடம் பிடித்துள்ளார்.

    கிழக்கு மண்டலம் (East Zone) அணி விவரம்:-

    இஷான் கிஷன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அபிமன்யு ஈஸ்வரன் (துணைக் கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டெனிஸ் தாஸ், ஸ்ரீதாம் பாம், ஷரன்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உட்கார்ஷ் சிங், மணிஷி, சுராஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், முகமது ஷமி

    Standy players:- முக்தார் ஹுசைன், ஆசர்வாத் ஸ்வெயின், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வாஸ்டிக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங்.

    கிழக்கு மண்டலம் அணி முதல் போட்டியில் ஆகஸ்ட் 28ஆம் தேதி வடக்கு மண்டலம் அணியை எதிர்கொள்கிறது.

    • மத்திய மண்டலம் முறையே 122 மற்றும் 239 ரன்கள் சேர்த்தது
    • கிழக்கு மண்டலம் முறையே 122 மற்றும் 129 ரன்களில் ஆல்அவுட் ஆனது

    துலீப் கிரிக்கெட் தொடரின் முதல் காலிறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம்- கிழக்கு மண்டலம் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த மத்திய மண்டலம் அணி 182 ரன்னில் சுருண்டது. பின்னர் கிழக்கு மண்டலம் 122-ல் ஆல்அவுட் ஆனது. 60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய மத்திய மண்டலம் அணி 239 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    ஒட்டுமொத்தமாக 299 ரன்கள் முன்னிலைப் பெற்றதால், கிழக்கு மண்டலம் அணிக்கு 300 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் முதல் இன்னிங்சில் 122 ரன்கள் எடுத்த கிழக்கு மண்டலம், 2-வது இன்னிங்சில் 129 ரன்னில் சுருண்டது. இதனால் மத்திய மண்டலம் 170 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    ஜூலை 5-ந்தேதி தொடங்கும் அரையிறுதி ஆட்டத்தில் மத்திய மண்டலம் அணி மேற்கு அல்லது தெற்கு மண்ட அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

    முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டும் வீழ்த்திய சவுரப் குமார் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • இந்தியா- வங்கதேசம் டெஸ்ட் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி தொடங்குகிறது.
    • இதற்கு பயிற்சியாக இருக்கும் என்பதால் சின்னசாமி மைதானத்தில் போட்டியை நடத்த பிசிசிஐ கேட்டுள்ளது.

    இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் முக்கியமானதில் ஒன்று துலீப் டிராபி. இந்தத் தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்க இருக்கிறது.

    இந்த தொடரின் முதல் போட்டியில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. இந்த போட்டியை சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதன்படி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சின்னசாமி மைதானத்தில் நடத்துகிறது.

    வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கு சிறந்த பயிற்சி ஆட்டமாக துலீப் டிராபி இருக்கும் என பிசிசிஐ நினைக்கிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சர்வதேச வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு உள்நாட்டு போட்டியில் விளையாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சுப்மன் கில், ஆர் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இந்த போட்டியில் விளையாடுவாரக்ள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு விளையாட விருப்பம் இருந்தால் பங்கேற்கலாம் என ஆப்சன் வழங்கப்பட்டுள்ளது.

    ஹர்திக் பாண்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளார். இதனால் அவர் விளையாட வாய்ப்பில்லை. இஷான் கிஷன் நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் உள்ளார். இவரும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    • இந்தியா பி அணியில் முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    துலிப் கோப்பையில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியும் ஈஸ்வரன் தலைமையிலினா இந்தியா பி அணியும் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து முஷீர் கான் மற்றும் சைனி ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமும் சைனி அரை சதமும் விளாசினர். இந்த ஜோடி 205 ரன்கள் சேர்த்தது. இரட்டை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ் தயாள் 10, சைனி 56 என விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.

    இறுதியில் இந்தியா பி அணி 116 ஓவரில் 321 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



    • இந்தியா சி அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • அந்த அணி 61 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் எடுத்து வென்றது.

    அனந்தபூர்:

    துலீப் கோப்பை தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் கெய்வாட் தலைமையிலான இந்தியா சி அணி விளையாடியது.

    முதல் இன்னிங்ஸில் இந்தியா டி அணி 164 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அக்சர் படேல் 86 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா சி அணி 168 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பாபா இந்திரஜித் 72 ரன்கள் அடித்தார்.

    4 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா டி அணி 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தேவ்தத் படிக்கல் 56 ரன்னும், ஷ்ரேயாஸ் 54 ரன்னும் சேர்த்தனர்.

    இந்தியா சி அணி சார்பில் மனவ் சுதார் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    அடுத்து, 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்தியா சி அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்தியா சி அணி 6 விக்கெட்டுக்கு 233 ரன்கள் அடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. ஆர்யன் ஜுயல் 47 ரன்களும், கெய்க்வாட் 46 ரன்களும் அடித்தனர்.

    ஆட்ட நாயகன் விருது மனவ் சுதாருக்கு அளிக்கப்பட்டது.

    • பாபா இந்திரஜித் 78 ரன்களை அடித்தார்.
    • இஷான் கிஷன் 111 ரன்களை அடித்தார்.

    துலீப் கோப்பை தொடரின் 2 ஆம் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் விளையாடுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்தியா சி அணியில் இஷான் கிஷன் சேர்க்கப்படுவதாக பிசிசிஐ கடைசி நேரத்தில் அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கெய்க்வாட் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கினர்.

    இதில் கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் கை கோர்த்த சாய் சுதர்சன் - ரஜத் படிதார் இணை சிறப்பாக விளையாடி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

    இந்த ஜோடி முறையே 43 மற்றும் 40 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்த இஷான் கிஷன் 111 ரன்களை விளாசினார். பாபா இந்திரஜித் நிதானமாக விளையாடி 78 ரன்களை அடித்தார். இன்றைய நாளில் போட்டி முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா சி அணி 357 ரன்களை அடித்துள்ளது.

    இந்தியா பி சார்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி மற்றும் ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதே போன்று இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டியும் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணிக்கு சாம்ஸ் முலானி 88 ரன்களையும், தனுஷ் கோடியன் 53 ரன்களையும் அடித்தனர்.

    மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் அந்த அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 288 ரன்களை அடித்துள்ளது. 

    • இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.

    ஐதராபாத்:

    துலீப் கோப்பை தொடரின் 2-ம் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இந்தியா சி அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட் 2-வது பந்திலேயே காயத்தால் வெளியேறினார்.

    அடுத்து இறங்கிய ரஜத் படிதார் சாய் சுதர்சனுடன் சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். படிதார் 40 ரன்னும், சாய் சுதர்சன் 43 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.

    கடைசி கட்டத்தில் அணியில் இணைந்த இஷான் கிஷன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்னில் அவுட்டானார். பாபா இந்திரஜித் அரை சதமடித்து 78 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா சி அணி 5 விக்கெட்க்கு 357 ரன்களை எடுத்திருந்தது.

    இந்நிலையில், இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. கெய்க்வாட், மனவ் சுதார் இருவரும் அரை சதம் கடந்தனர். கெய்க்வாட் 58 ரன்னும், மனவ் சுதார்82 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா பி சார்பில் முகேஷ் குமார், ராகுல் சஹார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதேபோல், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம்ஸ் முலானி 88 ரன்னும், தனுஷ் கோடியன் 53 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா டி அணி சார்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், காவரப்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 92 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா ஏ அணி சார்பில் கலீல் அகமது, அக்யூப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஏ அணி இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 222 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • 3ம் நாள் முடிவில் இந்தியா பி அணி 309 ரன்கள் எடுத்துள்ளது.
    • அந்த அணியின் அபிமன்யு சதமடித்து ஆடி வருகிறார்.

    ஐதராபாத்:

    துலீப் கோப்பை தொடரின் 2-ம் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்தியா சி அணி முதல் இன்னிங்சில் 525 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இஷான் கிஷன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்னில் அவுட்டானார். மனவ் சுதார் 82 ரன், பாபா இந்திரஜித் 78 ரன், கெய்க்வாட் 58 ரன், ரஜத் படிதார் 40 ரன், சாய் சுதர்சன் 43 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா பி சார்பில் முகேஷ் குமார், ராகுல் சஹார் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 124 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன், ஜெகதீசன் ஆகியோர் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஜெகதீசன் 70 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அபிமன்யு பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் இந்தியா பி அணி 7 விக்கெட்டுக்கு 309 ரன்கள் எடுத்துள்ளது. அபிமன்யு 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதேபோல், இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் இடையிலான போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா டி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாம்ஸ் முலானி 88 ரன்னும், தனுஷ் கோடியன் 53 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா டி அணி சார்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங், காவரப்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    அடுத்து ஆடிய இந்தியா டி அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல் 92 ரன்னில் அவுட்டானார்.

    இந்தியா ஏ அணி சார்பில் கலீல் அகமது, அக்யூப் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய இந்தியா ஏ அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 380 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பிரதம் சிங் சதமடித்து 122 ரன்னும், மயங்க் அகர்வால் 56 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். திலக் வர்மா பொறுப்புடன் ஆடி சதமடித்து 111 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 64 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 486 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா டி அணி களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா டி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் 426 ரன்கள் எடுத்தால் இந்தியா டி அணி வெற்றி பெறும்.

    • இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.
    • இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்தியாவில் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து வந்த இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.

    இதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணி 380 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 487 எனும் கடின இலக்கை துரத்திய இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இந்தியா டி அணிக்கு ரிக்கி புய் 113 ரன்களையும், அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 41 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு களமிறங்கியவர்களில் சௌரப் குமார் 22 ரன்களையும், ஹர்ஷித் ராணா 24 ரன்களையும் எடுத்தனர்.

    இந்தியா ஏ அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய தனுஷ் கொடியன் 4 விக்கெட்டுகளையும், ஷாம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இந்தியா பி முதல் இன்னிங்சில் 332 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 157 ரன்கள் குவித்தார்.

    அனந்தபூர்:

    துலீப் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நேற்று நிறைவடைந்தன.

    கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா டி அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்தியா பி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா சி 525 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா பி 332 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 157 ரன்கள் குவித்தார்.

    இந்தியா சி அணி சார்பில் அன்ஷுல் கம்போஜ் 8 விக்கெட் வீழ்த்தினார்.

    193 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது இந்தியா சி அணி. நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 128 ரன்கள் எடுத்தது. ருத்ராஜ் அரை சதமடித்தார். இதனால் இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகன் விருது இந்தியா சி அணியின் அன்ஷுல் கம்போஜ்க்கு வழங்கப்பட்டது.

    ×