search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bcci"

    • இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும்.
    • ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர், சிறப்பாக செயல்பட்டால் அவருக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கலாம்.

    மும்பை:

    ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் வரும் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் வீரர்களை ரீடெய்ன் செய்வதற்கான விதிகள், ஆர்டிஎம், இம்பேக்ட் பிளேயர் விதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

    ஆர்டிஎம் விதி என்பது, ஒரு அணி ஏலத்திற்கு முன்பு 3 வீரர்களை ரீடெய்ன் செய்து கொள்ளலாம். அதன் பிறகு ஏலத்தின் போது மற்ற அணி வீரர்கள் தங்களது வீரர்களை அதிக விலைக்கு எடுக்கும் போது ஆர்டிஎம் முறைப்படி அந்த வீரரை தனது அணிக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    இந்த முறையை பயன்படுத்தி ஒவ்வொரு அணியும் 4 முதல் 5 வீரர்களை ஆர்டிஎம் முறைப்படியும் சில அணிகள் 8 வீரர்களை ஆர்டிஎம் முறைப்படி எடுத்துக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் இதுவரை நடந்த ஆலோசனை கூட்டத்தில் கேகேஆர் அணி தரப்பில் ஒரு வீரரை மட்டும் ரீடெய்ன் செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, 8 ஆர்டிஎம் வாய்ப்புகளை அளிக்கலாம். இதன் மூலமாக இந்திய வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்று, அவர்களின் தகுதிக்கேற்ற ஊதியத்தை பெற முடியும் என்று பரிந்துரை அளிக்கப்பட்டது. அதேபோல் மும்பை அணி தரப்பில் 5 அல்லது 6 வீரர்களை ரீடெய்ன் செய்ய அனுமதிக்க கோரிக்கை விடுத்தது.

    இதனிடையே பஞ்சாப், டெல்லி, லக்னோ போன்ற அணிகள் 3 வீரர்களுக்கு மேல் ரீடெய்ன் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்று கூறி வருகின்றனர். அதேபோல் இந்த அணிகள் இளம் வீரர்களை பாதுகாக்கவும், அவர்கள் நன்றாக செயல்பட்டால் ஊதியத்தை அதிகரிக்க பிசிசிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    ஏனென்றால் இளம் வீரர் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டால், அவரின் ஊதியம் அடுத்த மெகா ஏலம் வரை ரூ.20 லட்சமாகவே இருக்கும். இதனால் அந்த வீரர் மீண்டும் ஏலத்திற்கு செல்ல விரும்புவார். மும்பை போன்ற அணிகள் அவரை அணுகும் போது, சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

    இதனால் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டால், அவரின் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க அனுமதிக்க பல்வேறு அணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். உதாரணமாக ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் வீரர், அந்த சீசனில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் அளிக்கலாம் என்று அனுமதி கோரப்பட்டுள்ளது.

    அதேபோல் மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளின் பர்ஸ் வேல்யூவையும் ரூ.130 கோடி முதல் ரூ.140 கோடியாக அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பர்ஸ் தொகையாக ரூ.100 கோடி வரை அனுமதிக்கப்பட்டது. சுமார் ரூ.30 கோடி முதல் ரூ.40 கோடி வரை அதிகரித்தால், வீரர்களின் மதிப்பும் ஊதியமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்படுகிறார்.
    • இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று இலங்கை சென்றடைந்தது. இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் கம்பீர் தலைமையில் முதல் வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். சஞ்சு சாம்சன் மற்றும் துபே ஆகியோருக்கு கம்பீர் ஆலோசனகளை வழங்கினார். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்திய அணின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ளார். 

    • அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது.
    • நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.

    மும்பை:

    நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் (இந்தியா தகுதி பெற்றால்) விராட் மற்றும் ரோகித் கண்டிப்பாக விளையாடுவார்கள் என பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

    இந்நிலையில் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோகித் சர்மா உடல்தகுதியுடன் இருந்தால் விளையாடுவார்கள் என இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் கவுதம் கம்பீர் கூறியதாவது:-

    ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் இருவரிடமும் இன்னும் நிறைய கிரிக்கெட் உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி விரைவில் வருகிறது. ஆஸ்திரேலியாவில் பெரிய டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாடுவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் இருப்பார்கள்.

    ஒருவேளை பிட்னஸை தொடர்ந்து கடைபிடிக்கும் பட்சத்தில் 2027 உலகக் கோப்பையிலும் அவர்களால் விளையாட முடியும். அது அவர்களுடைய சொந்த முடிவு. எவ்வளவு காலம் அவர்களால் விளையாட முடியும் என்பதை என்னால் சொல்ல முடியாது. இருப்பினும் விராட் மற்றும் ரோகித் ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அவர்களிடம் இன்னும் ஆட்டம் இருக்கிறது.

    ரோகித் மற்றும் விராட் ஆகியோர் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்கள். இருப்பினும் அவர்கள் இந்தியாவுக்காக மற்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவார்கள். நல்ல பார்மில் இருந்தால் அனைத்து போட்டிகளிலும் கூட அவர்கள் விளையாடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஹர்திக் பாண்ட்யா விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.
    • காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். We want someone who can play a lot without injury.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

    டி20-யில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுமையான பிட்னஸ் கொண்டிருக்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதனாலயே சூர்யகுமாரை புதிய கேப்டனாக நியமித்ததாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    ஹர்திக் பாண்ட்யா இப்போதும் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். இருப்பினும் பிட்னஸ் என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது அவரை தேர்வு செய்ய பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழுவுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அவரது விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும்.

    ஏனெனில் நாங்கள் அடிக்கடி காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். அந்த வகையில் சூர்யகுமார் கேப்டனாக செயல்படுவதற்கு தேவையான தகுதிகளைக் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

    அதே சமயம் ஹர்திக் பாண்ட்யாவை நாங்கள் சிறப்பாக கையாள்வோம் என்று கருதுகிறோம். டி20 உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். கேப்டன்ஷிப் பற்றி ஹர்திக் பாண்ட்யாவிடமும் நாங்கள் பேசியுள்ளோம்.

    சூர்யகுமார் யாதவ் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர். நீங்கள் அனைத்து ஆட்டங்களிலும் விளையாடக்கூடிய ஒரு கேப்டனை விரும்புவது முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.

    இவ்வாறு அஜித் அகார்கர் கூறினார்.

    • பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது.
    • 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரிஸ் ஒலிம்பிக்ஸ் திருவிழா வரும் 26-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. ஜூலை 26-ல் தொடங்கும் 33-வது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்ட் 11-ம் தேதி முடிவடையும்.

    ஒலிம்பிக்ஸ் போட்டிகளை ஒட்டி செய்ன் நதிக்கரையில் 3 லட்சம் பேர் முன்னிலையில் பிரமாண்ட தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    206 நாடுகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில், 16 விளையாட்டுகளில் சுமார் 117 இந்திய வீரர்கள், வீராங்கனைகள் களமிறங்குகிறார்கள்.

    இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு உதவும் வகையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பிசிசிஐ சார்பில் ரூ. 8.5 கோடி வழங்கவுள்ளதாக செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜெய்ஷா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நம் விளையாட்டு வீரர்களுக்கு பிசிசிஐ ஆதரவளிக்கும் என்பதை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். இதற்காக, இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு ரூ. 8.5 கோடி நிதியுதவி வழங்குகிறோம் என்பதை பிசிசிஐ அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

    நம் முழு குழுவிற்கும் நல்வாழ்த்துக்கள். இந்தியாவை பெருமைப்படுத்துங்கள்! ஜெய் ஹிந்த்!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பிடித்துள்ளனர்.
    • இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

    புதுடெல்லி:

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இந்திய அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார்.

    இதற்கிடையே, ஆக்ரோஷமான விளையாட்டு காரணமாக விராட் கோலி, கவுதம் கம்பீர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது குறித்து ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், கவுதம் கம்பீருடன் பணியாற்றுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என பிசிசிஐயிடம் விராட் கோலி தெரிவித்தார்.

    விராட் கோலி கம்பீருடன் பணிபுரிய வசதியாக இருக்கிறார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பிசிசிஐ அதிகாரிகளிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்.

    கடந்த காலங்களில் ஐ.பி.எல். போட்டிகளின்போது கேமராக்களால் கைப்பற்றப்பட்ட கசப்பான மோதலால் குறிக்கப்பட்டது, முந்தைய சிக்கல்கள் டிரஸ்சிங் அறையில் அவர்களின் தொழில்முறை உறவைப் பாதிக்காது.

    இருவரும் நாட்டின் நலன்களுக்காகச் செயல்படுவதை அங்கீகரிக்கிறோம். முந்தைய கருத்து வேறுபாடுகளில் இருந்து முன்னேறத் தயாராக உள்ளோம் என சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உறுதியளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.
    • உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். கடின உழைப்பு ஒருபோதும் பலனளிக்காமல் போகாது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த உலகக்கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினார்.

    காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், காயத்திலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன் என்பதை பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "2023 உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு எனது பயணம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், எனது கடின உழைப்பிற்கான வெற்றி, எனக்கு டி20 உலக கோப்பையில் கிடைத்தது. உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம். கடின உழைப்பு ஒருபோதும் பலனளிக்காமல் போகாது. நம்மால் முடிந்தவரை முயற்சிக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
    • பாண்ட்யாவுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 27-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித், கோலி, ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டதால் இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

    இந்நிலையில், இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தேர்வுக்குழுவின் சில உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அடுத்த தேர்வுக்குழு கூட்டம் நாளை மறுநாள் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கம்பீர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய உதவியாளர்களை பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்தார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவரது உதவியாளர்களாக பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் பயிற்சியாளர் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ வெளியிடவில்லை.

    அவர் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய உதவியாளர்களை பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்தார். ஆனால் அவருடைய ஐந்து பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கலை பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்காக கம்பீர் பரிந்துரைத்தார். 

    இவருக்கு முன் முன்னாள் இந்திய வீரர் ஆர் வினய் குமார் மற்றும் பாலாஜி இருவரும் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்கேட் மற்றும் ஜான்டி ரோட்ஸ் ஆகியோரை கம்பீர் பரிந்துரைத்தார். இந்த ஐந்து பரிந்துரைகளும் பிசிசிஐ-யால் நிகராகரிக்கப்பட்டது.


    கம்பீரின் பரிந்துரைகளில், முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரான அபிஷேக் நாயர் மட்டுமே கம்பீரின் துணைப் பணியாளர்களில் ஒரே ஒருவராகத் இடம் பெறுகிறார்.

    • ரோகித், கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறவில்லை என்றால், உள்நாட்டு தொடரில் விளையாடுவதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெய்ஷா தெரிவித்தார். ஆனால் ரோகித், விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

    மேலும் வங்காள தேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னோடியாக துலீப் டிராபி பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய அணியில் இடம் பிடிக்காத மற்ற அனைத்து டெஸ்ட் வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது.

    இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:-

    இந்த முறை துலீப் டிராபிக்கு மண்டலத் தேர்வுக் குழு இல்லை. தேசிய தேர்வுக் குழு மட்டுமே துலீப் அணிகளைத் தேர்ந்தெடுக்கும். அனைத்து டெஸ்ட் அணி வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். ரோகித், விராட், பும்ரா ஆகியோர் விளையாடுவது அவர்களின் விருப்பம்.

    என கூறுகின்றது. 

    • 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.
    • 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 17 வருடங்களுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்தது.

    வெற்றிக் கோப்பையுடன் இந்தியா திரும்பிய வீரர்கள் திறந்தவெளி பஸ்சில் ஊர்வலமாக சென்றனர். பின்பு மும்பை மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு ரூ,125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து உலகக் கோப்பையில் இடம் பிடித்த வீரர்களுக்கு அவரது சொந்த மாநிலங்களில் வரவேற்பு மற்றும் வெகுமதிகளும் வழங்கப்பட்டன.

    அந்த வகையில் டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பின் முதல்முறையாக சொந்த ஊரான வதோதராவுக்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

    'ஹர்டிக் பாண்டியா வதோதராவின் பெருமை' என்ற திறந்தவெளி பஸ்சில் ஹர்திக் பாண்ட்யா வலம் வந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்தது. தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ந்தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவைத் தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது.

    20 ஓவர் உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    2013 ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கோப்பைக்கு அடுத்து 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.

    2019 ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி தான் ரோகித்திற்கு கேப்டன் பதவியை வழங்கினார். அப்போது இந்த முடிவு கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

    இந்நிலையில், ரோகித்தை கேப்டனாக்க முடிவு செய்தது குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

    "இந்திய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தபோது எல்லோரும் என்னை விமர்சித்தனர். தற்போது ரோகித் தலைமையில் இந்திய அணி உலக கோப்பை வென்றதும் அனைவரும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டனர். மேலும், நான்தான் ரோஹித்தை கேப்டனாக நியமித்தேன் என்பதையே அனைவரும் மறந்துவிட்டனர் என்று என்று சவுரவ் கங்குலி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

    ×