என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்பான்சர்ஷிப்"
- Dream 11 பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
- ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.
பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் Dream 11 மற்றும் MPL ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் நிஜ பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதிய ஆன்லைன் விளையாட்டுகள் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ட்ரீம் 11 நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதி சார்ந்த நிறுவனங் களான ஜெரோகா, ஏஞ்சல் ஒன், குரோவ், ஆட்டோ மொபைல், எப்.எம்.சி.ஜி. செக்டார், ரிலையன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்ற நிறுவனங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஸ்பான்சருக்கான போட்டியில் உள்ளன.
- ஒடிசா ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழ்கிறது.
- தங்களது ஸ்பான்சர்ஷிப்பை ஒடிசா மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்தது.
புவனேஸ்வர்:
இந்திய ஹாக்கி அணிக்கு 2018-ம் ஆண்டில் இருந்து ஒடிசா மாநில அரசு ஸ்பான்சர்ஷிப் வழங்கி வருகிறது. சமீபத்தில் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உலகக் கோப்பை ஹாக்கி, புரோ ஹாக்கி லீக் போன்ற பெரிய போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
இதற்கிடையே, ஹாக்கி விளையாட்டின் மையமாக திகழும் ஒடிசா தங்களது ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 10 ஆண்டுக்கு நீட்டித்தது. அதாவது 2023-ல் இருந்து 2033-ம் ஆண்டு வரை இந்திய ஆண்கள்-பெண்கள் ஹாக்கி அணிகளுக்கு (சீனியர் மற்றும் ஜூனியர்) வழங்கும் ஸ்பான்சர்ஷிப்பை நீட்டிப்பது என ஒடிசாவின் அப்போதைய முதல் மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் கடந்த ஏப்ரலில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒடிசா மாநில அரசு இந்திய ஹாக்கி அணியின் ஸ்பான்சர்ஷிப்பை மேலும் 3 ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. முதல் மந்திரி மோகன் சரண் மாஜி மற்றும் ஹாக்கி இந்தியா குழுவினர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.






