search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U19 World Cup"

    • முதலில் ஆடிய இந்தியா 297 ரன்கள் குவித்தது.
    • இதில் இந்திய வீரர்கள் 2 பேர் சதமடித்து அசத்தினர்.

    புளோம்பாண்டீன்:

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா இடம் பெற்றிருந்தது. முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை 214 ரன் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

    இந்நிலையில், இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் நேற்று நேபாளத்துடன் மோதியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது. சச்சின் தாஸ் 116 ரன்னும், உதய் சஹாரன் 100 ரன்னும் குவித்தனர்.

    நேபாள அணி சார்பில் குல்சன் ஜா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் களமிறங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நேபாளம் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இந்தியா சார்பில் சவுமி பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
    • இதில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது

    ப்ளூம்போன்டைன்:

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.

    சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய முஷீர் கான் 131 ரன்கள் குவித்தார்.

    நியூசிலாந்து சார்பில் மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், நியூசிலாந்து 28.1 ஓவரில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்திய அணி சார்பில் சாமி பாண்டே 4 விக்கெட்டுகளும், ராஜ் லிம்பானி, முஷீர் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியின்முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    ×