என் மலர்
நீங்கள் தேடியது "U19 உலக கோப்பை"
- தொடக்க நாளில் இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.
- ஆயுஷ் மாத்ரே தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது
19 வயதுக்குட்பட்டவருக்கான ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 1988-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது.
இதுவரை 15 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2024-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது.
16-வது ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்டவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 2 நாடுகள் இணைந்து நடத்துகிறது.இந்தப் போட்டி நாளை (15- ந் தேதி) தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறு கிறது.
இதில்16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள நாடுகள் விவரம்:-
ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜப்பான் (ஏ பிரிவு), இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து, அமெரிக்கா (பி பிரிவு), இங்கிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து (சி பிரிவு), தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா (டி பிரிவு).
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும்.
இந்த சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளில் 3 ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொள்கிறது. ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி தொடரில் இந்திய அணி 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது.
நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் - தான் சானியா அணிகள் மோதுகின்றன.
- உலக கோப்பை தொடருக்கு முன்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி விளையாடுகிறது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சூர்யவன்ஷி செயல்படுவார்.
மும்பை:
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நடக்கவுள்ளது. இந்த தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடரில் வைபவ் சூர்யவன்ஷி கேப்டனாகவும் ஆரோன் ஜார்ஜ் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஏனெனில் ஆயுஷ் மாத்ரே மற்றும் விஹான் மல்ஹோத்ரா காயம் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தவறவிடுகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பெனோனியில் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
U19 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு (விக்கெட் கீப்பர்), ஹர்வன்ஷ் சிங் (விக்கெட் கீப்பர்), ஆர்எஸ் அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ படேல், மொஹமத் சிங் ஏனான், டிஹில், குமார், டெனில், ஹெனில்.
- மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
- இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது.
19 வயதுக்குட்பட்ட வருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. ஆயுஸ்மாத்ரே தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 234 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை தோற்கடித்தது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொண்டது. மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி 16 ஓவர் வீசி முடிக்கப்பட்ட போது 3 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்து இருந்தது. ஆயுஸ்மாத்ரே 38 ரன்னிலும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யவன்ஷி 5 ரன்னிலும், மல்கோத்ரா 12 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து இந்த ஆட்டத்தின் முடிவில், 46.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 240 ரன்களை எடுத்தது. இதனால், 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.
- சூப்பர் சிக்ஸ் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
- இதில் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது
ப்ளூம்போன்டைன்:
15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென் ஆப்பிரிக்காவில் நடந்துவருகிறது. நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்று தொடங்கியது.
சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 295 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய முஷீர் கான் 131 ரன்கள் குவித்தார்.
நியூசிலாந்து சார்பில் மேசன் கிளார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து. இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி விரைவில் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், நியூசிலாந்து 28.1 ஓவரில் 81 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 214 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் சாமி பாண்டே 4 விக்கெட்டுகளும், ராஜ் லிம்பானி, முஷீர் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணியின்முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.






