என் மலர்
நீங்கள் தேடியது "U19 உலகக் கோப்பை"
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 277 ரன்கள் சேர்த்தது.
புலவாயோ:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் தாமஸ் ரூ பொறுப்புடன் ஆடி சதமடித்தார். காலேப் பல்கனர் 40 ரன்கள் எடுத்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 135 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர் நிதேஷ் சாமுவேல் 47 ரன்கள் எடுத்தார். ஆர்யன் ஷர்மா 34 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் ஆலிவர் பீக் நிதானமாக ஆடி சதமடித்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஆஸ்திரேலிய அணி 47.3 ஓவரில் 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இத்னால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
- குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளியுடன் அரையிறுதியில் நுழைந்தது.
- சூப்பர் சிக்ஸ் சுற்று இன்றுடன் முடிகிறது.
புலவாயோ:
19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டன.
கடந்த 23-ம் தேதி லீக் ஆட்டங்கள் முடிந்தன. இதன் முடிவில் ஜப்பான், அமெரிக்கா, ஸ்காட்லாந்து, தான்சானியா ஆகிய 4 நாடுகள் வெளியேற்றப்பட்டன.
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு 12 நாடுகள் தகுதி பெற்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டன. குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும் இடம் பெற்றன.
குரூப் 1 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தையும், ஆப்கானிஸ்தான் 2-வது இடத்தையும் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து 8 புள்ளிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டது. 2-வது அணி எது என்பது இன்று தெரியும்.
சூப்பர் சிக்ஸ் சுற்று இன்றுடன் முடிகிறது. புலவாயோவில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவில் 2-வதாக அரை இறுதிக்கு நுழையும் அணி எது என்பது தெரியவரும்.
இந்திய அணி 6 புள்ளியுடன் இருக்கிறது. பாகிஸ்தானை வீழ்த்தினால் 8 புள்ளியுடன் தகுதி பெறும்.
பாகிஸ்தான் 4 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி வெற்றி பெற்றால் இரு அணிகளும் சம புள்ளிகள் பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு நாடு தகுதி பெறும். பாகிஸ்தானை விட இந்தியா ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.
இந்திய அணி இந்தத் தொடரில் தோல்வியை தழுவவில்லை. லீக் சுற்றில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், வங்க தேசத்தை 18 ரன் வித்தியாசத்திலும், நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், சூப்பர் 6 சுற்றில் ஜிம்பாப்வேயை 204 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்துள்ளது.
பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகளை வென்றது. இங்கிலாந்திடம் 36 ரன்னில் தோற்றது. சூப்பர் சிக்ஸ் சுற்றில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
- மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
- ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது.
ஹசாரே:
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் சூப்பர்6 சுற்றுக்கு தகுதி பெற்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் குரூப்2-ல் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி ஏற்கனவே லீக் சுற்றில் நியூசிலாந்து, வங்காளதேசத்தை வீழ்த்தி இருப்பதால் அந்த வெற்றிக்குரிய புள்ளி சூப்பர்6 சுற்றில் கணக்கில் கொள்ளப்படும். அவற்றுடன் இனி மோத வேண்டியதில்லை.
போட்டி விதிப்படி சூப்பர் 6 சுற்றில் இந்திய அணி, இன்னொரு பிரிவில் இருந்து வந்த 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்த அணிகளுடன் மட்டுமே மோத வேண்டும். இதன்படி ஜிம்பாப்வே மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது.
ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி சூப்பர்6 சுற்றில் இன்று போட்டியை நடத்தும் ஜிம்பாப்வேயை (பிற்பகல் 1 மணி) புலவாயோவில் எதிர்கொள்கிறது. லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி இந்த ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் சந்திக்கின்றன.
இதற்கிடையே நேற்று நடந்த ஆட்டங்களில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும், இலங்கை 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் (குரூப்1) தோற்கடித்தது.
- நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணியை எதிர்கொண்டது.
- ஆஸ்திரேலியா வீரர் வில் மலாஜ்சுக் 102 ரன்கள் விளாசினார்.
வின்ட்ஹோக்:
16-வது இளையோர் (19 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.
வின்ட்ஹோக்கில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஜப்பான் அணியை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ஜப்பான் அணி 8 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 29.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது. வில் மலாஜ்சுக் 102 ரன்னும் (55 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) நிதேஷ் சாமுவேல் 60 ரன்னும் திரட்டி வெற்றியை எளிதாக்கினர். முன்னதாக மலாஜ்சுக் 51 பந்துகளில் சதத்தை கடந்து, இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார்.
இதற்கு முன்னர் 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை ஆஸ்திரேலியா வீரர் முறியடித்துள்ளார்.
- இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார்.
- அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
கொழும்பு:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2 வெற்றி, 7 தோல்வியுடன் வெளியேறியது. இதையடுத்து, இலங்கை கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்து அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி ரோஷன் ரணசிங்கே உத்தரவிட்டார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் புதிய இடைக்கால குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிரடியாக இடைநீக்கம் செய்தது. கிரிக்கெட் அமைப்பு அரசாங்கத்தின் தலையீடு இன்றி தன்னாட்சியுடன் செயல்பட வேண்டும் என்ற அடிப்படை விதிமுறையை மீறியிருப்பதால் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி.யின் உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதனால் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது. அந்த வாய்ப்பு தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் உள்ள அணிகள் நான்கு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஏ பிரிவில் இந்தியா, வங்காளதேசம், அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து. சி பிரிவில் ஆஸ்திரேலியா இலங்கை, ஜிம்பாப்வே, நமீபியா. டி பிரிவில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, நேபாளம் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளது.
- இந்தியாவின் முஷீர் கான் அதிரடியாக ஆடி 118 ரன்களும் எடுத்தார்.
- அடுத்து ஆடிய அயர்லாந்து 100 ரன்களில் சுருண்டது.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. முதல் லீக் போட்டியில் வங்காளதேசத்தை இந்தியா வென்றது.
இந்நிலையில், இந்திய அணி தனது 2வது லீக் போட்டியில் அயர்லாந்து அணியுடன் மோதியது. டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முஷீர் கான் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 118 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் உதய் சஹாரன் அரை சதம் கடந்து 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 301 ரன்கள் குவித்தது.
அயர்லாந்து அணி சார்பில் ஆலிவர் ரிலே 3 விக்கெட்டும், ஜான் மெக்நல்லி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் இறங்கியது. இந்திய வீரர்களின் துல்லிய பந்துவீச்சால் அயர்லாந்து 100 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்தியா 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் நமன் திவாரி 4 விக்கெட்டும், சவுமி பாண்டே 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 6 வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
இந்தியா வரும் 28-ம் தேதி அமெரிக்காவை எதிர்கொள்கிறது.






