என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "U19 உலகக்கோப்பை"

    • இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது.
    • இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், 6வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

    இந்நிலையில் U19 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.7.50 கோடி பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளார்.

    பட்டம் வென்று தேசத்துக்கு பெருமை சேர்த்த இந்திய அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய சீனியர் வீரர் விராட் கோலி, பயிற்சியாளர் கம்பீர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.
    • சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஹராரே:

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நேற்று நடைபெற்றது.

    இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 411 ரன்கள் குவித்து அசத்தியது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியில் மிரட்டினார். அவர் 80 பந்தில் 15 சிக்சர், 15 பவுண்டரி விளாசி 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆயுஷ் மாத்ரே 53 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் பால்கெனர் தனி ஆளாகப் போராடினார். அவர் 67 பந்தில் 115 ரன்கள் எடுத்து அவுட்டானார். பென் டாக்கின்ஸ் 66 ரன்கள் எடுத்தார். இறுதியில், இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், U19 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷிக்கு அளிக்கப்பட்டது.

    சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்துக்கு முன்னாள், இந்நாள் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின .
    • முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.

    16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது.

    16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

    இதில் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1 மணி) மோதின .

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. இதையடுத்து 311 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது. 

    • இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும்.

    ஹராரே:

    16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1 மணி) மோதுகின்றன.

    5 முறை சாம்பியனான இந்திய அணி லீக்கில் அமெரிக்கா, வங்காளதேசம், நியூசிலாந்தையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே, பாகிஸ்தானையும் துவம்சம் செய்து அரைஇறுதியை எட்டியது.

    ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் அபிக்யான் குண்டு (199 ரன்), 'அதிரடி புயல்' வைபவ் சூர்யவன்ஷி (196), விஹான் மல்கோத்ரா (172), வேதாந்த் திரிவேதி சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் தொடக்கம் தான் திருப்திகரமாக இல்லை. தொடக்க விக்கெட்டுக்கு 50 ரன்களுக்கு மேல் ஒரு முறை கூட எடுக்கவில்லை. தொடர்ந்து சொதப்பும் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஜார்ஜ் நிலைத்து நின்று ஆட வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் ஹெனில் பட்டேல், அம்ப்ரிஷ் (தலா 11 விக்கெட்), ஹிலான் பட்டேல் பலம் சேர்க்கின்றனர். பந்து வீச்சில் நல்ல பங்களிப்பை அளிக்கும் ஆயுஷ் மாத்ரே பேட்டிங்கிலும் கணிசமாக ரன் எடுத்தால் பேட்டிங் மேலும் வலுவடையும்.

    ஆப்கானிஸ்தான் அணி லீக்கில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட்இண்டீஸ், தான்சானியாவையும், சூப்பர் சிக்ஸ் சுற்றில் அயர்லாந்தையும் வீழ்த்தியது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    ஆப்கானிஸ்தான் அணியில் பேட்டிங்கில் பைசல் ஷினோஜதா (325 ரன்), உஸ்மான் சதத் (183), கேப்டன் மக்பூப் கானும் (178), பந்து வீச்சில் நூரிஸ்டானி ஓமர்ஜாய், அப்துல் அஜிசும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

    வலுவான இந்திய அணி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைய தீவிரமாக உள்ளது. நடப்பு தொடரில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் சவாலை சமாளிப்பது ஆப்கானிஸ்தானுக்கு எளிதான விஷயமாக இருக்காது. அதேநேரத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 10-ல் இந்தியாவும், 2-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

    • ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசி வில் பைரோம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

    16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

    இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வீரர்கள், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 18.5 ஓவர்களில் இலங்கை அணி 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசி வில் பைரோம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 59 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.

    தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் ஏற்கனவே சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.

    ஜார்ஜியா:

    19 வயதுக்கு உட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7-ம் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். லீக் முடிவில் 4 பிரிவில் இருந்தும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் விளையாடும் 6 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இதன் முடிவில் 2 பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக 49 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபிக்யான் 80 ரன்னும், வைபவ் சூர்யவன்ஷி 72 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேச அணி சார்பில் அல் பஹத் 5 விக்கெட்டும், இக்பால் எமான், ஹக்கிம் தமிம் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. மழை மீண்டும் குறுக்கிட்டதால் வங்கதேச அணி 29 ஓவரில் 165 இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது.

    ஹக்கிம் தமிம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். ரிபாத் பெக் 37 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்கதேச அணி 28.3 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் விஹான் மல்கோத்ரா 4 விக்கெட்டும், கிலான் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை விஹான் மல்கோத்ரா வென்றார்.

    • ஆதர்ஷ் சிங் 76 ரன்களும், உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்தனர்.
    • சௌமி பாண்டே நான்கு விக்கெட்டுகள் சாய்த்தார்.

    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. "ஏ" பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா- வங்காளதேசம் அணிகள் இன்றைய ஆட்டத்தில் மோதின. இரு அணிகளுக்கும் இது முதல் போட்டி என்பதால் தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும் என நோக்கத்துடன் களம் இறங்கின.

    டாஸ் வென்ற வங்காளதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. தொடங்க ஆட்டக்காரர் ஆதர்ஷ் கிங் ஒரு பக்கம் சிறப்பாக விளையாட மறுபக்கம் அர்ஷின் குல்கர்னி (7), முஷீர் கான் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு ஆதர்ஷ் சிங் உடன் கேப்டன் உதய் சஹாரன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி ரன்னை உயர்த்தியது. ஆதர்ஷ் சிங் 76 ரன்களும், உதய் சஹாரன் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இருவரின் அரைசதங்களால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் சேர்த்தது. வங்காளதேச அணி சார்பில் மரூஃப் மிரிதா 5 விக்கெட் சாய்த்தார்.

    பின்னர் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களம் இறங்கியது. முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அரிஃபுல் இஸ்லாம் 41 ரன்களும், முகமது ஷிஹாப் ஜேம்ஸ் 54 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் 167 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன்காரணமாக இந்தியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சௌமி பாண்டே 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா 25-ந்தேதி அயர்லாந்தையும், 28-ந்தேதி அமெரிக்காவையும் எதிர்கொள்கிறது.

    ×