என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முஸ்தாபிஜுர் ரகுமான் விசயத்தை பிசிசிஐ தந்திரமாக கையாண்டிருந்தால்..! ஐசிசி முன்னாள் தலைவர் சொல்வது என்ன?
    X

    முஸ்தாபிஜுர் ரகுமான் விசயத்தை பிசிசிஐ தந்திரமாக கையாண்டிருந்தால்..! ஐசிசி முன்னாள் தலைவர் சொல்வது என்ன?

    • KKR அணியில் இருந்து முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார்.
    • இதனால் வங்கதேச அணி இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்தது.

    வங்கதேசத்தில இந்து நபர்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழும்பியது. மேலும், வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படும்போது, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் விளையாடுவதா? எனவும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா அணி அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், கொல்கத்தா அணியிடம் முஸ்தாபிஜுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.

    அதனடிப்படையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் அதிருப்தியடைந்தது. வருகிற 7-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் எனவும், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.

    வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்தது. அதனடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக லீக் தொடர் போட்டியை புறக்கணிக்கிறோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுத்துள்ளது.

    இந்த நிலையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விவகாரத்தை பிசிசிஐ இன்னும் தந்திரமாக கையாண்டிருந்தால் டி20 உலகக் கோப்பையில் புறக்கணிப்பு குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என ஐசிசி முன்னாள் தகவல் தொடர்பு தலைவர் சமி-அல்-ஹசன் பர்னி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பர்னி கூறியதாவது:-

    நான் சொல்ல வருவது என்னவென்றால், கிரிக்கெட் நிர்வாகிகள் அல்லது போட்டிக்கான பொறுப்பாளர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, முஸ்தாபிஜுர் ரகுமானை கே.கே.ஆர். அணியில் இருந்து வெளியிடுவது போன்ற பொதுவெளி அறிக்கையை தவிர்த்திருந்தால், இதுபோன்ற குழப்பமான விசயங்களை தவிர்த்திருக்கலாம்.

    அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிடத் தேவையில்லை. அவர்கள் தனிப்பட்ட முறையில் கே.கே.ஆர் அணியிடம் வீரரை ரிலீஸ் செய்ய சொல்லியிருக்கலாம். அப்படி இருந்திருந்தால் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்காது. சுமூகமாக சென்றிருக்கும்.

    சில சமயங்களில் நீங்கள் தீர்ப்பில் தவறு செய்து, சில விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அறிக்கையை வெளியிட்டுவிடுகிறீர்கள். எனவே, ஜனவரி 3 ஆம் தேதி அறிவிப்பு ஒரு தூண்டுதலாக அமைந்தது.

    இவ்வாறு பர்னி தெரிவித்துள்ளார்.

    ஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட போர்டின் மீடியா டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார்.

    Next Story
    ×