என் மலர்
நீங்கள் தேடியது "duleep Cup"
- துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.
- இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளன.
அதேவளை, வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் போட்டிகளில் விளையாடவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மத்திய மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு சுழற்பந்து வீச்சாளார் குல்தீப் யாதவ், வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சஹார், கலீல் அகமது உள்ளிடோருக்கும் இந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய மண்டல அணி: துருவ் ஜூரல், ரஜத் படிதார், ஆர்யன் ஜூயல், டேனிஷ் மாலேவார், சஞ்சித் தேசாய், குல்தீப் யாதவ், ஆதித்யா தாக்கரே, தீபக் சாஹர், சரண்ஷ் ஜெயின், ஆயுஷ் பாண்டே, சுபம் ஷர்மா, யாஷ் ரத்தோர், ஹர்ஷ் துபே, மானவ் சூதர்.
கூடுதல் வீரர்கள்: மாதவ் கௌசிக், யாஷ் தாக்கூர், யுவராஜ் சவுத்ரி, மஹிபால் லோம்ரோர், குல்தீப் சென், மற்றும் உபேந்திர யாதவ்.
- இந்தியா பி அணியில் முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
துலிப் கோப்பையில் சுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ அணியும் ஈஸ்வரன் தலைமையிலினா இந்தியா பி அணியும் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்தியா பி அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து முஷீர் கான் மற்றும் சைனி ஜோடி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஷீர் கான் சதமும் சைனி அரை சதமும் விளாசினர். இந்த ஜோடி 205 ரன்கள் சேர்த்தது. இரட்டை சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட முஷீர் கான் 181 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷ் தயாள் 10, சைனி 56 என விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.
இறுதியில் இந்தியா பி அணி 116 ஓவரில் 321 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ஏ அணி தரப்பில் ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






