என் மலர்
நீங்கள் தேடியது "ஹசின் ஜகான்"
- வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 2014-ம் ஆண்டு ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.
- நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார்.
2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் 2018 இல் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் தனக்கும் தனது மகளுக்கும் ஜீவனாம்ச தொகையை அதிகரிக்கக் கோரி ஹசின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
முகமது ஷமியின் வருமானம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று அவர் ஹசின் ஜஹான் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவைத் விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "மாதத்திற்கு ரூ. 4 லட்சம் என்பது பெரிய பணம் இல்லையா?" என்று ஆச்சர்யம் தெரிவித்தனர்.
தொடர்ந்து முகமது ஷமி மற்றும் மேற்கு வங்க அரசுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். அடுத்த விசாரணை டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது.
- பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த 2014-ம் ஆண்டு அவர் ஹசின் ஜகானை திருமணம் செய்து கொண்டார். 2015-ல் அவர்களுக்கு ஆர்யா என்ற மகள் பிறந்தார். பின்னர் குடும்பப் பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு ஹசின் ஜகான் பலமுறை ஷமிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.
ஹசின் ஜகானுக்கும் அவரது மகளுக்கும் முகமது ஷமி மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதில் ரூ.2.5 லட்சம் மகளின் கல்விச் செலவுகளுக்கானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் ஷமிக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜகான் மீண்டும் பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆர்யாவின் நலன்களைப் புறக்கணித்து, காதலியின் மகளுக்கும் குடும்பத்திற்கும் முகமது ஷமி முன்னுரிமை அளித்தார். ஆர்யாவுக்கு ஒரு முன்னணிப் பள்ளியில் சேர்க்கை கிடைத்தது. இதைத் தடுக்க சில எதிரிகள் முயற்சித்தனர். காதலி மற்றும் அவரது மகளுக்காக ஏராளமாகச் செலவு செய்யும் ஷமி, தனது சொந்த மகளைப் பற்றி கவலைப்படவில்லை.
எனது மகளின் தந்தை ஒரு கோடீஸ்வரராக இருந்த போதிலும் எனது வாழ்க்கையில் விளையாடுகிறார். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. பெண்களை ஏமாற்றுபவர்.
இவ்வாறு ஹசின் ஜகான் கூறியுள்ளார்.
தனக்கும், தனது மகளுக்கும் குடும்ப செலவாக முகமது ஷமி மாதம் ரூ.10 லட்சம் தர வேண்டும் என்றும் ஏப்ரல் மாதம் ஹசின் ஜகான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இதை தொடர்ந்து முகமது ஷமி ரூ.1 லட்சத்துக்கு செக் கொடுத்து இருந்தார்.
ஆனால் இந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது இதை தொடர்ந்து அவர் மீது செக் மோசடி வழக்கை அவர் தொடர்ந்தார். இந்த வழக்கில் முகமது ஷமிக்கு கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.
செப்டம்பர் 20-ந்தேதி முகமது ஷமி ஆஜராக கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை ஹசின் ஜகானின் வக்கீல் ஜாகீர் உசேன் தெரிவித்துள்ளார்.
27 வயதான முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் உடல் தகுதி பெறாததால் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டார். ஆனால் தற்போது இங்கிலாந்து டெஸ்டில் இடம் பெற்றுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. #MohammedShami #HasinJahan






