search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liton Das"

    • இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 4-ம் தேதி நடக்கிறது.
    • ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டாக்கா:

    இந்திய அணி வங்காளதேசம் சென்று 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இந்தியா, வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 4-ம் தேதி மிர்புரில் நடக்கிறது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு வங்காளதேச அணியின் கேப்டனாக லிட்டன் தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பயிற்சியின்போது வழக்கமான கேப்டன் தமீம் இக்பால் காயம் அடைந்ததால் அவர் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லிட்டோன் தாஸ் இந்தியாவுக்கு எதிராக 21 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • கே.எல். ராகுல் ரன்அவுட் ஆக்கியதாகல் இந்தியா வெற்றி பெற முடிந்தது.

    இந்தியா- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கடந்த 2-ந்தேதி அடிலெய்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 184 ரன்கள் குவித்தது. பின்னர் வங்காளதேசம் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது.

    இவ்வாளவு பெரிய ஸ்கோரை வங்காளதேசம் சேஸிங் செய்ய வாய்ப்பில்லை, வெற்றி இந்தியாவுக்கு என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வங்காளதேச அணியின் தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்தார்.

    அர்ஷ்தீப் வீசிய போட்டியின் 2-வது ஓவரில் 3 பவுண்டரிகள், புவி வீசிய 3-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ், ஷமி வீசிய 6-வது ஓவரில் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸ் என தெறிக்கவிட்டார். இதனால் வங்காள தேசம் 6 ஓவரில் 60 ரன்களை எட்டியது. அத்துடன் தாஸ் 21 பந்தில் அரைசதம் விளாசினார்.

    இதனால் இந்திய அணி தோல்வியடையும் நிலை ஏற்பட்டது. ஆனால், 7 ஓவர் முடிவில் மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியதும், லிட்டோன் தான் 27 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டு ரன்களுக்கு ஓடும்போது, பவுண்டரி கோடு அருகில் இருந்து கே.எல். ராகுல் வீசிய பந்து ஸ்டம்பை நேரடியாக தாக்கியதால் ரன்அவுட் ஆனார்.

    இந்திய பந்து வீச்சாளர்களை மிரள வைத்த லிட்டோன் தாஸ்க்கு இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி, பேட்டை பரிசாக வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் அணியின் செயல்பாடுகளின் சேர்மன் ஜலால் யூனுஸ் கூறியதாவது:-

    டைனிங் ஹாலில் நாங்கள் உட்கார்ந்து இருக்கும்போது, விராட் கோலி அங்கு வந்தார். அப்போது லிட்டோன் தாஸ்க்கு அவருடைய பேட்டை பரிசாக வழங்கினார். என்னைப் பொறுத்த வரையில், லிட்டோன் தாஸ்க்கு இது ஒரு உத்வேகத்திற்கான தருணம், என்றார்

    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.

    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

    17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.



    அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்கள் எடுத்த நிலையிலும், முஷ்பிகுர் ரஹிம் 5 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 4-வது விக்கெட்டாக களம் இறங்கிய முகமது மிதுரை மின்னல் வேகத்தில் ஜடேஜா ரன்அவுட் ஆக்கினார்கள்.

    இதனால் 39 ரன்னுக்குள் வங்காள தேசம் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. இதில் இருந்து பின்னர் வங்காள தேசத்தால் மீள இயலவில்லை. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் லிட்டோன் தாஸ் சதம் அடித்தார். சதம் அடித்த லிட்டோன் தாஸ், கேப்டன் மோர்தசா ஆகியோர் அசுர வேகத்தில் எம்எஸ் டோனி ஸ்டம்பிங் செய்து வேளியேற்றினார்.



    மெஹ்முதுல்லா 4 ரன்னிலும், சதம் அடித்த லிட்டோன் தாஸ் 121 ரன்னிலும் வெளியேறினார்கள். 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்த வங்காள தேசம் 44 ஓவரில்தான் 200 ரன்னைத் தொட்டது. சவுமியா சர்கர் கடைசி வரை போராடி 33 ரன்கள் அடிக்க வங்காள தேசம் 48.3 ஓவரில் 223 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுக்களும், கேதர் ஜாதவ் 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் வங்காள தேசம் 24 ஓவரில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 128 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்கியது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

    ‘சூப்பர் 4’ சுற்றில் வங்காள தேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா ஐந்து மாற்றங்களை செய்தது. ரோகித் சர்மா, மணிஷ் பாண்டே, சாஹல், பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, சித்தார்த் கவுல், கலீல் அகமது, தீபக் சாஹர் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர்.

    இதில் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கிய அரைசதம் அடித்தார். பரபரப்பான ஆட்டத்தில் போட்டி ‘டை’ ஆனது. இன்று நடைபெற்றும் வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் ஐந்து பேரும் நீக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கிய ஐந்து பேரும் சேர்க்கப்பட்டனர்.

    வங்காள தேச அணியின் லிட்டோன் தாஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மெஹிதி ஹசன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த லிட்டோஸ் தாஸ் அதிரடியா விளையாடி ரன் குவித்தார்.



    வங்காள தேசம் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் குவித்தது. லிட்டோன் தாஸ் 12-வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதே ஓவரின் 3-வது பந்தில் லிட்டோன் தாஸ் கொடுத்த கேட்சை சாஹல் பிடிக்க தவறினார்.

    17.5 ஓவரில் வங்காள தேசம் 100 ரன்னைத் தொட்டது. 21-வது ஓவரை கேதர் ஜாதவ் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மெஹிதி ஹசன் ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். வங்காள தேசம் முதல் விக்கெட்டுக்கு 20.5 ஓவரில் 120 ரன்கள் குவித்தது.

    2-வது விக்கெட்டுக்கு லிட்டோன் தாஸ் உடன் இம்ருல் கெய்ஸ் ஜோடி சேர்ந்தார். கெய்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். வங்காள தேசம் 24 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் குவித்துள்ளது. லிட்டோஸ் 92 ரன்னுடனும் விளையாடி வருகிறார்.
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்ற வங்காள தேசம் 2-1 என தொடரை அசத்தலாக கைப்பற்றியது. #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸும், 2-வது ஆட்டத்தில் வங்காள தேசமும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி அமெரிக்கா நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கியது. புளோரிடாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வங்காள தேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி லித்தோன் தாஸ், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தமிம் இக்பால் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். லித்தோன் தாஸ் 32 பந்தில் 61 ரன்கள் விளாசினார்.



    அதன்பின் வந்த ஷாகிப் அல் ஹசன் 24 ரன்களும், மெஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் அடிக்க வங்காள தேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

    பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க விக்கட்டுக்கள் சீரான இடைவெளில் சரிந்து கொண்டே வந்தது.

    அதிரடி மன்னன் அந்த்ரே ரஸல் பட்டாசாக வெடித்தார். அவர் 21 பந்தில் 47 ரன்கள் குவித்தார். அப்போது 17.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டு டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டது.



    இதில் வங்காள தேசம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. லித்தோன் தாஸ் ஆட்ட நாயகன் விருதையும், ஷாகிப் அல் ஹசன் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர். இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வங்காள தேசம் 2-0 எனக் கைப்பற்றியது. அதன்பின் ஒருநாள் மற்றும் டி20 தொடரை வங்காள தேசம் 2-1 எனக் கைப்பற்றியது.
    ×