search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shakib Al Hasan"

    • சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர்.
    • வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

    வங்கதேசத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டைப் பொறுத்த வரை மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்படுகிறார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் மிகவும் மோசமான ஒரு நபராக இருந்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நடைபெற்ற சாதாரண உள்ளூர் தொடரில் தமக்கு சாதகமான தீர்ப்பு வழங்கவில்லை என்பதற்காக நடுவர் முன்பிருந்த ஸ்டம்பை எட்டி உதைத்து பிடுங்கி எறிந்த ஷாகிப் அவரை மோசமான வார்த்தைகளால் திட்டியது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    அந்த நிலைமையில் கடந்த வருடம் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் மேத்யூஸ் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதாக நடுவர்களிடம் கூறிய ஷாகிப் அல் ஹசன் அவருக்கு அவுட் கொடுக்குமாறு கேட்டு வாங்கியது மற்றுமொரு மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    இந்நிலையில் வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் சமீபத்தில் போட்டியிட்ட சாகிப் அல் ஹசன் அதில் வெற்றியும் கண்டுள்ளார். அவருக்கு எதிராக போட்டியிட்டவரை விட 1.50 லட்சம் வாக்குகள் பெற்று சாகிப் எம்.பி. ஆனார். இந்நிலையில் ரசிகர் ஒருவரை சாகிப் கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது வழக்கம் போல நிறைய ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு செஃல்பி எடுக்க முயற்சித்தார்கள். அப்போது ஒரு ரசிகர் அவரை மிகவும் நெருங்கி புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார். ஆனால் அதற்காக கோபப்பட்ட சாகிப் அந்த ரசிகரின் கன்னத்தில் பளார் என வேகமாக அறைந்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    இது மட்டுமல்லாமல் மற்றுமொரு தேர்தல் விழா மேடையில் அமர்ந்திருந்த சாகிப்பை நிறைய பெண் ரசிகர்கள் செஃல்பி எடுத்துக் கொள்ள முயற்சித்தனர். அப்போது வேண்டா வெறுப்பாக சாகிப் அமர்ந்திருந்தார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்றதுமே எங்களை மறந்து திமிராக நடந்து கொள்கிறீர்களா நீங்கள் எல்லாம் மனிதரா என்று ரசிகர்கள் தற்போது அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

    • ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.
    • வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார்.

    வங்காளதேச அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசன். வங்காளதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இவர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இவர் தலைமையில் வங்காளதேசம் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை சந்தித்தது. ஆனால் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது.

    இதனையடுத்து தாயகம் திரும்பிய ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார். ஷாகிப் அல் ஹசனை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி தயாராக உள்ளது.

    இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உலகக் கோப்பையில் வங்காளதேசம் அணி மோசமான தோல்வியை சந்தித்ததால் அவரை ரசிகர்கள் தாக்கியதாக செய்தி பரவியது. அந்த வீடியோவில் ரசிகர் கூட்டத்திற்குள் அவர் தடுமாறி வருகிறார். அதில் ஒரு ரசிகர் அவரை சட்டையை பிடித்து இழக்கிறார். அந்த கூட்டத்திற்குள் இருந்து வெளியே வந்த ஷாகிப் பதட்டத்துடன் காணப்பட்டார்.

    இதன் உண்மை தன்மை என்னவென்றால், துபாயில் உள்ள ஒரு நகைக்கடையின் தொடக்க விழாவிற்கு ஷாகிப் அல் ஹசன் வருகை தந்துள்ளார். ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் வந்ததால் அவ்வாறு செய்திகள் பரவியிருந்தது.

    • ஆளும் வங்காளதேசம் அவாமி லீக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
    • ஜனவரி மாதம் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

    வங்காளதேச அணியின் நட்சத்திர வீரர் சாகிப் அல் ஹசன். வங்காளதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை இவர் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இவர் தலைமையில் வங்காளதேசம் அணி உலகக் கோப்பை தொடரை சந்தித்தது. இருந்தபோதிலும் வங்காளதேச அணி சோபிக்க தவறிவிட்டது.

    இலங்கை வீரர் மேத்யூஸ் "டைம் அவுட்" முறையில் ஆட்டமிழந்த விவகாரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானார்.

    தற்போது ஷாகிப் அல் ஹசன் அரசியல் கட்சியில் இணைந்துள்ளார். வங்காளதேசத்தின் ஆளும் கடசியான வங்களாதேசம் அவாமி லீக்கில் இணைந்துள்ளார். ஷாகிப் அல் ஹசனை வேட்பாளராக நிறுத்த அக்கட்சி தயாராக உள்ளது.

    இதனால் ஷாகிப் அல் ஹசன் தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை தொடங்க இருக்கிறார். வங்காளதேசத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளன. அப்படி புறக்கணித்தால் ஷேக் ஹசினா 4-வது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கைக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் ஆட்டநாயகனான தேர்வு செய்யப்பட்டார்.
    • வங்காளதேசம் தனது கடைசி லீக் போட்டியில் நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதுகிறது.

    சிட்டகாங்:

    டெல்லியில் நேற்று நடந்த உலக கோப்பை லீக் தொடரில் வங்காளதேசம், இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இலங்கை 279 ரன்களில் ஆல் அவுட்டானது. அடுத்து ஆடிய வங்காளதேசம் 41.1 ஓவரில் 282 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தப் போட்டியின்போது ஷகிப் அல் ஹசனுக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் 3 முதல் 4 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து, உலக கோப்பை 2023 தொடரில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகியுள்ளார்.

    நவம்பர் 11-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷகிப் அல் ஹசன் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.
    • ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

    இந்நிலையில் வங்காளதேச அணி கேப்டன் யார் என்பது குறித்து பிசிபி இன்னும் வரை அறிவிக்கவில்லை. அந்த பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

    இது குறித்து பிசிபி தலைவர் நஸ்முல் கூறியதாவது:-

    இன்னும் சில நாட்களில் அணியை அறிவிப்போம். கேப்டனையும் அறிவிப்போம் என்றார். மேலும் ஷகிப்பை ஒருநாள் கேப்டனாக தேர்ந்தெடுப்பது எளிதான முடிவு என்றும் ஷகிப்பின் இறுதி முடிவுக்காக பிசிபி காத்திருக்கும் என்றும் கூறினார்.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேசம் 2-0 என கைப்பற்றியது.
    • ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

    சில்லெட்:

    ஆப்கானிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் 546 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது.

    அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-1 என கைப்பற்றி பதிலடி கொடுத்தது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மழையால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. அஸ்மதுல்ல 25 ரன்னும், இப்ராகிம் ஜட்ரன் 22 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், முஸ்தபிசுர் ரகுமான், ஷகிப் அல் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லித்தன் தாஸ் 35 ரன்னும், அபிப் ஹொசைன் 24 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வங்காளதேச அணி 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேசம் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது ஷகிப் அல் ஹசனுக்கு வழங்கப்பட்டது.

    • மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ஷகிப் அல் ஹசன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    • கேன் வில்லியம்சன், ஆசிப் கான் பெயர்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

    நியூசிலாந்தின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன், வங்காள தேசத்தின் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் மற்றும் யுஏஇ-யை சேர்ந்த ஆசிப் கான் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

    இந்த மூவரில் அதிக வாக்குகள் பெறுபவருக்கு ஐசிசி மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும்.

    இதேபோல், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு சிபோனா ஜிம்மி (பப்புவா நியூ கினியா), ஹென்றிட் இஷிம்வே (ருவாண்டா), ரவினா ஓ (பப்புவா நியூ கினியா) ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    • வங்கதேச கிரிக்கெட்டில் முறைகேடு நடப்பதால் தான் அவர் இப்படி தட்டி கேட்பதாக சகீப் அல் ஹசன் ரசிகர்கள் அப்போது விளக்கம் அளித்தனர்.
    • கடந்த சீசனில் தவறான முடிவு வழங்கிய நடுவரிடம் சண்டை போட்டு பிறகு ஸ்டம்பை உதைத்து சகீப் அல் ஹசன் அராஜகத்தில் ஈடுபட்டார்.

    டாக்கா:

    வங்கதேச கிரிக்கெட் வீரர் சகீப் அல் ஹசன் களத்தில் நடுவருடன் மோதுவதை ஒரு பொழுது போக்கு பழக்கமாக செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட வங்கதேச கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிபிஎல் குறித்து குற்றஞ்சாட்டினார்.

    இந்த நிலையில், டாக்காவில் நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய சகீப் அல் ஹசன், சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதலில் பேட் செய்த பாரிஷல் அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இதில் சகீப் அல் ஹசன் 32 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார்.

    இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 19 ஓவர் முடிவிலேயே வெற்றி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சகீப் அல் ஹசன் பேட்டிங் செய்யும் போது நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆட்டத்தின் 15.4 வது ஓவரில் ரிஜூர் வீசிய பந்து சகீப் அல் ஹசன் தலைக்கு மேல் சென்றது. இதற்கு நியாயப்படி ஓயிடு வழங்கி இருக்க வேண்டும்.

    ஆனால், நடுவர் இதனை ஒரு ஓவருக்கு ஒரு ஷாட் பால் என்ற கணக்கில் சேர்த்து விட்டார். இதனால் கடுப்பான சகீப் அல் ஹசன், நடுவரை பார்த்து கத்தினார். பிறகு நடுவரிடம் அடிப்பது போல் நடந்து சென்று எதற்கு ஓயிடு பால் தரவில்லை என்று சண்டையிட்டார். அதற்கு நடுவரும், சக வீரரும் ஷகிபுல் ஹசனை சமாளித்து அனுப்பி வைத்தனர்.

    சகீப் அல் ஹசன் கோபப்படுவது இது ஒன்றும் புதிது அல்ல. கடந்த சீசனில் தவறான முடிவு வழங்கிய நடுவரிடம் சண்டை போட்டு பிறகு ஸ்டம்பை உதைத்து சகீப் அல் ஹசன் அராஜகத்தில் ஈடுபட்டார். பிறகு தன்னுடைய செயலுக்கு சகீப் அல் ஹசன் மன்னிப்பு கேட்டார்.

    வங்கதேச கிரிக்கெட்டில் முறைகேடு நடப்பதால் தான் அவர் இப்படி தட்டி கேட்பதாக சகீப் அல் ஹசன் ரசிகர்கள் அப்போது விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • லிட்டோன் தாஸ் கேப்டன் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார்.
    • சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.

    இந்தியா- வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.

    முதல்நாள் முதல் செசனில் மட்டும் வங்காளதேசம் சற்று ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் ஆகியோர் அரைசதம் விளாசினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட் சாய்த்தார்.

    இந்த நிலையில், வங்காளதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், கேப்டனுக்குரிய நபர் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா விமர்சனம் செய்துள்ளார்.


    டேனிஸ் கனேரியா கூறுகையில் ''லேசான காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் எபாடத் ஹொசைன் வெளியேறினார். எனினும், அதன்பின் களத்திற்குள் இறங்கிய அவருக்கு போதுமான அளவு பந்து வீசும் வாய்ப்பை சாகிப் அல் ஹசன் வழங்கவில்லை. மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கலித் அகமதுவை அவர் பயன்படுத்தவில்லை. அவருடைய கேப்டன்ஷிப் உயர்ந்த தரமாக இல்லை. வங்காளதேச வீரர்கள் அவரின் கேப்டன் பதவியின் கீழ் செயல்பட விரும்பவில்லை.

    லிட்டோன் தாஸ் சிறந்த தேர்வாக இருப்பார். அவர் ஒருநாள் தொடரை எப்படி வென்றாடுத்தார் என்பதை நாம் பார்த்தோம். சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.

    சட்டோகிராம் ஆடுகளம் வங்காள தேசத்தின் மற்ற ஆடுகளங்களை விட சற்று மாறுபட்டதாக உள்ளது. இங்கு வேகப்பந்து வீச்சு சற்று அதிகமாக எடுபடுகிறது. அவர் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் பந்து வீசுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவர் காயத்துடன் கட்டாயம் விளையாட வேண்டியது அவசியமா?. அவர்கள் இன்னும் ஒரு பந்து வீச்சாளருடன் களம் இறங்கியிருக்கனும்'' என்றார்.

    • இந்தியா- வங்காளதேச அணிகள் விளையாடிய போட்டி மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
    • மழைக்கு முன் வங்காளதேச அணியின் ஆட்டம் வெற்றி பெறுவதுபோல் இருந்தது.

    டி20 உலகக் கோப்பையில் இந்தியா- வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களம் இறங்கியது. ஒரு கட்டத்தில் வங்காளதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது.

    அப்போது, வங்காளதேசம் 49 ரன்கள் எடுத்திருந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவை விட 17 ரன்கள் அதிகமாக இருந்தது. மழை தொடர்ந்து பெய்ய வேண்டும். போட்டி அத்துடன் நிற்க வேண்டும் என வங்காள தேச வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

    ஆனால் மழை நின்று ஆட்டம் மீண்டும் தொடங்கியது. ஓவர்கள் குறைக்கப்பட்டது. 16 ஓவரில் 151 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வங்காளதேசம் அணியால் 145 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் இந்தியா 5 ரன்னில் வெற்றி பெற்றது.

    மழை நின்று மீண்டும் ஆட்டம் தொடங்குவதற்கு முன் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நடுவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

    போட்டி முடிந்த பின்னர் வங்காளதேச அணி கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் ஷாகிப் அல் ஹசன் ஷாக் ஆகிவிட்டார்.

    ஷாகிப் அல் ஹசனுக்கும், பத்திரிகையாளருக்கும் இடையில் நடைபெற்ற சுவாரஸ்யமான உரையாடல் பின்வருமாறு:-

    பத்திரிகையாளர்: மழைக்குப்பின் நீங்கள் உண்மையிலேயே விளையாடாமல் இருக்க முயற்சித்தீர்களா?

    ஷாகிப்: எங்களுக்கு ஏதாவது ஆப்சன் இருக்கிறதா?

    பத்திரிகையாளர்: இல்லை. அது ஒரு காரணம்தான். இருந்தாலும், அவர்களை சம்மதிக்க வைக்க முயற்சித்தீர்களா?

    ஷாகிப்: யாரை சம்மதிக்க வைப்பது?

    பத்திரிகையாளர்: நடுவர்கள் மற்றும் ரோகித் சர்மா

    ஷாகிப்: நடுவரை சம்மதிக்க வைக்கும் திறன் என்னிடம் உள்ளதா?

    பத்திரிகையாளர்: அது சரிதான்... அப்படியென்றால் நீங்கள் வங்காளதேச ஆறுகளைப் பற்றியா விவாதித்துக் கொண்டிருந்தீர்கள்?

    ஷாகிப்: .... (பதில் அளிக்க முடியாமல் திகைத்து அப்படியே இருந்தார்.)

    பத்திரிகையாளர்: நீங்கள் வங்காளதேச ஆறுகள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தீர்களா? அல்லது வேறு ஏதாவது பற்றி விவாதித்தீர்களா? என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்? அதை வெளிப்படுத்த முடியுமா?

    ஷாகிப்: தற்போது நீங்கள் சரியான கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். நடுவர் இரு நாட்டு கேப்டன்களையும் அழைத்து டார்கெட், இன்னும் எத்தனை ஓவர் வீச வேண்டும், கடைபிடிக்க வேண்டிய விதிமுறை குறித்து பேசினார்.

    பத்திரிகையாளர்: அவ்வளவுதான்... நீங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டீர்களா?

    ஷாகிப்: ஆமாம்.

    பத்திரிகையாளர்: அற்புதம்... நன்றி...

    • இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி 17 ரன்களை எக்ஸ்ட்ராகளாக வழங்கியிருந்தது.
    • சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம்

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியகோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் – இலங்கை அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றும் அணீ சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும் என்ற அழுத்தமான நிலையில் இரு அணிகளும் மோதின.

    இதில் 184 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை 19.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்றது. வங்கதேச அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. இதனால் தொடரில் இருந்து வெளியேறியது. இலங்கைக்கு எதிராக வங்கதேச அணி 17 ரன்களை எக்ஸ்ட்ராகளாக வழங்கியிருந்தது.

    இதில் 4 நோ-பால்கள் அடங்கும். முக்கியமாக ஆட்டத்தின் 20-வது ஓவரில் இலங்கை அணிக்கு கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் மெஹிதி ஹசன் நோ-பால் வீசினார். இதன் வாயிலாக 3 ரன்களை எளிதாக பெற்று வெற்றியை வசப்படுத்திய இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

    இது குறித்து வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்ஹசன் கூறும்போது:-

    பேட்டிங்கை பொறுத்தவரையில் நாங்கள் கூடுதலாக 10 முதல் 15 ரன்களை எடுத்தோம். மெஹிதி ஹசன் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எந்த ஒரு கேப்டனும் நோ-பால் வீசுவதை விரும்ப மாட்டார்கள். நாங்கள் நிறைய நோ-பால் மற்றும் அகலப்பந்துகளை வீசினோம்.

    இது சிறந்த பந்துவீச்சு அல்ல. சுழற்பந்து வீச்சாளர்கள் நோ-பால் வீசுவது குற்றம் ஆகும். நாங்கள் அழுத்தத்தில் இருந்ததாக நினைக்கிறேன். உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். படிப்படியாக முன்னேற்றம் காண விரும்புகிறோம். இறுதி கட்ட ஓவர்களில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல் பட வேண்டும் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் ஷாகிப் அல் ஹசன்.
    துபாய்:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை போட்டியில் குரூப் 1 பிரிவில் வங்காளதேசம் இடம்பிடித்துள்ளது.
    அந்த அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோதவுள்ளது.

    இந்நிலையில், வங்காளதேசத்தின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக டி20 உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    சமீபத்தில் ஷார்ஜாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் ஷாகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

    ×