search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Danish Kaneria"

    • பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா.
    • சுழற்பந்து வீச்சாளரான கனேரியா 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தானுக்காக விளையாடிய 2-வது இந்து கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்த கனேரியா, 15 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

    இந்நிலையில், டேனிஷ் கனேரியா தனது சக வீரரான ஷாகித் அப்ரிடி மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    பாகிஸ்தான் அணிக்காக டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 4-வது வீரர் நான் தான். கவுண்டி கிரிக்கெட்டிலும் சிறப்பாகவே செயல்பட்டேன். இன்சமாம்-உல்-ஹக், சோயப் அக்தர் போன்ற வீரர்களின் ஆதரவு எனக்கு இருந்தது. ஒரு கேப்டனாக என்னை ஆதரித்த ஒரே நபர் இன்சமாம் தான்.

    ஆனால் ஷாகித் அப்ரிடி மற்றும் பிற வீரர்கள் என்னை மிகவும் பாகுபாடோடு நடத்தினார்கள். அவர்கள் என்னுடன் அமர்ந்து உணவு கூட உண்டதில்லை. மதமாற்றம் செய்வது குறித்து என்னிடம் ஷாகித் அப்ரிடி அதிகமாக பேசுவார். என்னை கட்டாயப்படுத்தி இஸ்லாத்திற்கு மாற்ற முயன்றார். ஆனால் இன்சமாம் உல் ஹக் அப்படி ஒருபோதும் கூறியதில்லை.

    மேலும், கனேரியா தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ஷாகித் அப்ரிடி முன்பு பேசியிருந்த வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், ஷாகித் அப்ரிடியின் மகள் வீட்டிலிருக்கும் டி.வி.க்கு இந்து பூஜையான ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மகள் இந்து பூஜை செய்ததற்காக டி.வி.யை உடைத்ததை குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

    • ஷ்ரேயஸ் அய்யரின் உடற்தகுதி கவலை அளிக்கிறது.
    • இந்திய அணி சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளது. ஆனால், இன்னும் அவர்கள் தயாரா இல்லை.

    கராச்சி:

    இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இழந்தது. இதையடுத்து இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்றி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐசிசி நடத்தும் ஒரு தொடரில் இந்திய அணி கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை டோனி தலைமையில் கைப்பற்றியது. அதன் பின்னர் நடைபெற்ற தொடர்களில் இந்தியா கோப்பையை வென்றதில்லை.

    இந்நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தயாரகவில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது:- 

    விராட் கோலி தனது பழைய பார்முக்கு திரும்ப நிறைய காலம் எடுத்தார். அவர் கோலி என்பதால் அணியில் எந்த மாற்றமும் இல்லை. சூர்யகுமார் யாதவை ஏன் வீணடிக்க வேண்டும்? சஞ்சு சாம்சனை ஏன் வீணடிக்க வேண்டும்? ஷ்ரேயஸ் அய்யரின் உடற்தகுதி கவலை அளிக்கிறது. அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் உடற்தகுதியை எட்டுவாரா? இல்லையா?.

    இந்தியா என்ன செய்ய போகிறது? இந்திய அணி சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளது. ஆனால், அவர்கள் இன்னும் தயாரா இல்லை. இந்தியா மோசமாக கிரிக்கெட்டை ஆடுகிறது. ஆஸ்திரேலிய அணி சிறந்த அணியை போல் விளையாடியது.

    ஸ்டீவ் ஸ்மித் தனது கேப்டன்ஷிப் திறமைக்காக நிறைய பாராட்டுக்கு தகுதியானவர். அவர் கேப்டன் பதவிக்காக உருவாக்கப்பட்டவர். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்தது. ஆனால், அவர்கள் போராடிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. அவர்கள் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தினர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார்.
    • பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது.

    அஷ்வினை சைன்டிஸ்ட் என்று சேவாக் சமீபத்தில் பாராட்டியிருந்த நிலையில், அஷ்வினுக்கு பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வங்கதேசத்திற்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் அஷ்வின், இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

    2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன் 54 ரன்களை எடுத்தார். குறிப்பாக 2-வது இன்னிங்சில் ஷ்ரேயாஸ் உடன் இணைந்து அஷ்வின் அமைத்த பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. வெற்றிக்கு 145 ரன்கள் தேவை என்ற நிலையில் இந்திய அணி 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன்பின்னர் இணைந்த அஷ்வின் - ஷ்ரேயாஸ் இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது.

    2-வது டெஸ்டில் பேட்டிங், பவுலிங் என அனைத்து டிபார்ட்மென்ட்டிலும் அஷ்வின் ஜொலித்தார். இதனை பாராட்டியிருந்த முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சேவாக் அஷ்வின் ஒரு சைன்டிஸ்ட் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அஷ்வினை பாராட்டி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-


     



    அஷ்வின் இன்னும் நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாடுவார். பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அவருக்கு நுணுக்கமான அறிவு உள்ளது. இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர்களில் அஷ்வினும் ஒருவர் என்று கருதுகிறேன்.

    வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் அவர் எடுத்த 42 ரன்களை சதத்துடன் நாம் ஒப்பிட வேண்டும். இந்திய அணியின் லெஜெண்ட் வீரர் அனில் கும்ப்ளேவைப் போன்றவர் அஷ்வின். இந்திய அணியின் நெருக்கடியான நேரங்களில் மிகவும் கூலாக அஷ்வின் பலமுறை செயல்பட்டார்.

    பந்து வீச்சில் மட்டுமின்றி, சில ஆட்டங்களில் சிறப்பான பேட்டிங் மூலம் அணியை அவர் வெற்றி பெற வைத்திருக்கிறார்.

    வங்கதேச அணியின் மோமினுல் ஹக் மிகச்சிறந்த ஆட்டக்காரர். துரதிருஷ்டவசமாக அஷ்வின் கொடுத்த கேட்ச்சை அவர் பிடிக்க தவறி விட்டார். இதற்கானபேரிழப்பை வங்கதேச அணி எதிர்கொண்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லிட்டோன் தாஸ் கேப்டன் பதவிக்கு சிறந்த தேர்வாக இருப்பார்.
    • சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.

    இந்தியா- வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 404 ரன்கள் குவித்தது. வங்காளதேசம் 150 ரன்னில் சுருண்டது.

    முதல்நாள் முதல் செசனில் மட்டும் வங்காளதேசம் சற்று ஆதிக்கம் செலுத்தியது. அதன்பின் இந்திய அணி ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் இன்னிங்சில் புஜாரா, ஷ்ரேயாஸ் அய்யர், அஸ்வின் ஆகியோர் அரைசதம் விளாசினர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட் சாய்த்தார்.

    இந்த நிலையில், வங்காளதேச கேப்டன் சாகிப் அல் ஹசன், கேப்டனுக்குரிய நபர் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா விமர்சனம் செய்துள்ளார்.


    டேனிஸ் கனேரியா கூறுகையில் ''லேசான காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் எபாடத் ஹொசைன் வெளியேறினார். எனினும், அதன்பின் களத்திற்குள் இறங்கிய அவருக்கு போதுமான அளவு பந்து வீசும் வாய்ப்பை சாகிப் அல் ஹசன் வழங்கவில்லை. மேலும், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் கலித் அகமதுவை அவர் பயன்படுத்தவில்லை. அவருடைய கேப்டன்ஷிப் உயர்ந்த தரமாக இல்லை. வங்காளதேச வீரர்கள் அவரின் கேப்டன் பதவியின் கீழ் செயல்பட விரும்பவில்லை.

    லிட்டோன் தாஸ் சிறந்த தேர்வாக இருப்பார். அவர் ஒருநாள் தொடரை எப்படி வென்றாடுத்தார் என்பதை நாம் பார்த்தோம். சாகிப் அல் ஹசன் பெரிய வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால், அவர் கேப்டனுக்கான நபர் இல்லை.

    சட்டோகிராம் ஆடுகளம் வங்காள தேசத்தின் மற்ற ஆடுகளங்களை விட சற்று மாறுபட்டதாக உள்ளது. இங்கு வேகப்பந்து வீச்சு சற்று அதிகமாக எடுபடுகிறது. அவர் காயம் ஏற்பட்டிருப்பதால், அவர் பந்து வீசுவார் என்பதை எதிர்பார்க்க முடியாது. அவர் காயத்துடன் கட்டாயம் விளையாட வேண்டியது அவசியமா?. அவர்கள் இன்னும் ஒரு பந்து வீச்சாளருடன் களம் இறங்கியிருக்கனும்'' என்றார்.

    • ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளதால் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது.

    அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளனர். ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியுள்ளார்.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் சுமாரான பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வு செய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் தினேஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் அவர் கூறியதாவது:-

    இந்தியா செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது. ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளதால் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய பார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

    இவருக்கு பதிலாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாட காத்துக்கிடக்கும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது.

    மேலும் அவர்கள் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் அவரை தேர்வு செய்ததில் எந்த பயனுமில்லை. அதற்கு பதிலாக கூடுதல் பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • ரோகித் சர்மா தொடக்க வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
    • கேஎல் ராகுல் கீழ் வரிசையில் ஆட வேண்டும் என்று பாகிஸ்தான் வீரர் விருப்பம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தொடங்கவுள்ளது. இந்த ஆசிய கோப்பை போட்டி இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் ஆகிய அணிகளுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்த தொடர் முக்கியமானதாக இருக்கும்.

    இந்திய கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் ஆகஸ்ட் 28-ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குரூப் ஏ போட்டியில் மோதுகின்றன. கடைசியாக இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 2021 டி20 உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தார், ஆனால் தற்போது ரோகித் சர்மா தலைமை வகிக்கிறார்.

    ரோகித் சர்மா தொடக்க வீரராகவும் கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் காயத்தில் இருந்து மீண்டும் அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல் அவருடன் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ள நிலையில் ரோகித் சர்மாவுடன் சூர்ய குமார் யாதவ் விளையாடலாம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தினேஷ் கனேரியா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    ரோகித் சர்மாவுடன், சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டக்காரராக தொடர விரும்புகிறேன். தொடக்க ஆட்டக்காரராக ரோகித்துடன் நிலைத்து நின்று சிறப்பாக ஆடுகிறார்.

    கேஎல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்புகிறார். அவர் கீழ் வரிசையில் ஆட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் வெவ்வேறு சூழ்நிலைகளில் பேட்டிங் செய்துள்ளார் மற்றும் அவர் எல்லா சூழ்நிலைகளிலும் ரன்களை குவித்துள்ளார்.

    எனவே, கேஎல் ராகுலுக்கு பதிலாக சூர்ய குமார் யாதவ் ரோகித்துடன் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினால் அணிக்கு பலம் சேர்க்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி சராசரியை விட குறைவாக உள்ளது.
    • ஒரு விக்கெட் கீப்பராக பண்ட் தனது உடல் தகுதியை அதிகரிக்க வேண்டும்.

    இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. கீப்பிங்கில் சரியாக செயல்படுவதில்லை. பேட்டிங்கில் அவரது சாட் தேர்வு தவறாக உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் கவலை அளிக்கும் விதத்தில் இருந்தது. இவரையடுத்து ரோகித் சர்மாவும் பேட்டிங்கில் சோபிக்கவில்லை.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான டேனிஷ் கனேரியா இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், ரோகித் சர்மா உடல்தகுதி குறித்து விமர்சித்துள்ளார்.

    இது குறித்து டேனிஷ் கனேரியா கூறியதாவது:-

    டேனிஷ் கனேரியா

    டேனிஷ் கனேரியா

     ரிஷப் பண்ட்டின் உடல்தகுதி சராசரியை விட குறைவாக உள்ளது. இது என்னோட கருத்து. கோலி கேப்டனாக பொறுப்பேற்றதும், அணியின் உடற்தகுதி தேவைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. ஆனால் மற்ற வீரர்களுடன் ஒப்பிடும் போது ரிஷப் பண்ட் பின்தங்கியே உள்ளார்.

    ரோகித் ஷர்மா பெரிய அளவில் பார்மில் இல்லாவிட்டாலும் அவர் ஒரு பேட்ஸ்மேன் என்பதால் அவருக்குப் பரவாயில்லை. இருப்பினும், ஒரு விக்கெட் கீப்பராக பண்ட் தனது உடல் தகுதியை அதிகரிக்க வேண்டும்.

    இளம் வீரரான ரிஷப் பண்ட் சமீபகால ஆட்டங்களில் சரியாக குனிந்து நிமிர முடியவில்லை என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவரது உடல் எடை பிரச்சினையே இதற்கு காரணமாகும். மன உறுதியையும் முதிர்ச்சியையும் வளர்ப்பதற்கான ஒரே வழி உடற்தகுதியாகும்.

    இவ்வாறு டேனிஷ் கனேரியா கூறினார்.

    பாகிஸ்தானில் சூதாட்ட புகாரில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா தான் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். #DanishKaneria #Pakistan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் டேனிஷ் கனேரியா. பாகிஸ்தான் அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முன்னணி வீரராக திகழ்ந்து வந்தார்.

    இந்த நிலையில், இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ஸெக்ஸ் அணிக்கு விளையாடியபோது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது புகார் சுமத்தப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதனால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.



    இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கூறிவந்த டேனிஷ் தற்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இத்தனை நாட்கள் தனது தந்தைக்காகவே இந்த உண்மையை மறைத்து வந்ததாகவும், பொய்களுடன் நீண்ட நாட்கள் வாழ வலிமை இல்லாததால் தற்போது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #DanishKaneria #Pakistan
    ×