search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இந்தியா செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது- பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து
    X

    இந்தியா செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது- பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து

    • ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளதால் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது.

    அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் காயத்தால் விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் மீண்டும் திரும்பியுள்ளனர். ரவீந்திர ஜடேஜா காயத்தால் வெளியேறியுள்ளார்.

    இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் சமீப காலங்களில் சுமாரான பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட்டை மீண்டும் மீண்டும் தேர்வு செய்து தேர்வுக்குழு அதே தவறை செய்து வருவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் தினேஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது யூடியூப் பக்கத்தில் அவர் கூறியதாவது:-

    இந்தியா செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது. ஆஸ்திரேலியாவில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளதால் ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அவருடைய பார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை.

    இவருக்கு பதிலாக உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்காக விளையாட காத்துக்கிடக்கும் சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களுக்கு வேதனையாக அமைந்து வருகிறது.

    மேலும் அவர்கள் தினேஷ் கார்த்திக்கை அணியில் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை எனில் அவரை தேர்வு செய்ததில் எந்த பயனுமில்லை. அதற்கு பதிலாக கூடுதல் பந்து வீச்சாளரை சேர்த்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×